search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Travelers"

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது.
    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்க ளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் .

    ஏற்காட்டில் சாரல் மழை

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை சாரல் மழை யாக நீடித்தது.இதனால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    இதை தொடர்ந்து சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சாரை சாரையாக வர தொடங்கினர். குடும்பம் , குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அள வில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமை யாளர்கள் மற்றும் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேட்டூர் அணை

    விடுமுறை நாட்களில் வழக்கமாக மேட்டூர் அணை பூங்காவிற்கு சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதன்படி மேட்டூர் அணை பூங்காவிலும் இன்று காலை முதலே சுற்றுலா பய ணிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனி யப்பனை தரிசனம் செய்து மீன் இறைச்சிகளை வாங்கி சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள பாம்புகள் , முதலைகளையும் ஆர்வத்து டன் பார்வையிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியியில் குடும்பத்துடன் உற்சாகமாக ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

    உயிரியல் பூங்கா

    இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் காலை முதலே சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் காதல் ஜோடிகள் அதிக அள வில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள குரங்கு கள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பட்டாம்பூச்சி பூங்கா, செயற்கை அருவி முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    • சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
    • பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரெயில் நிலையங்களில் உள்ள பொது இருக்கை பெட்டிகளுக்கு அருகில் உள்ள நடைமேடைகளில் குறைந்த விலை சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், ராயகடா, கோராபுட் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் முதல்கட்டமாக பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    மேலும் ரெயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, விரைவில் பொது வகுப்புப் பெட்டிகளில் குறைந்த விலை உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளன.

    "பொது பெட்டிகள் ரெயிலின் இரு முனைகளிலும் அமைந்திருப்பதால், பயணிகள் தங்கள் தேவைகளுக்கு விரைந்து செல்ல வேண்டும்.

    எனவே பயணிகளின் சிக்கனமான உணவு, தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் சேவையை எளிதாக்கும் வகையில் இந்த பெட்டிகளின் இருப்பிடங்களுக்கு அருகில் ஸ்டால்கள் அமைக்க சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் இதுபோன்ற ஸ்டால்களை அமைப்பதில் போதுமான கவனம் செலுத்துமாறு அனைத்து துறைகளுக்கும் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • 3 நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ராஜகம்பீரம் மற்றும் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள பைபாஸ் ரோடு, மானாமதுரை பிருந்தாவனம்-பரமக்குடி ரோடு ஆகிய 3 இடங்களில் புதிதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ராஜகம்பீரம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. 3 இடங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார். பின்னர் பெண் முதியோர்களுக்கு சேலைகள் வழங்கினார்.

    மதுரையில் இருந்து ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வரை பஸ் விடவேண்டும். புதிதாகஅமைக்கப்பட்ட பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழரசி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். விழாவில் மானாமதுரை நகராட்சிஆணையாளர் கண்ணன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ரகுமான், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதால், இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காட்டிற்கு வர தொடங்கினர். ஏற்காட்டின் ரம்மியமான சூழலையும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும், சிலு சிலு காற்றையும் அவர்கள் அனுபவித்து மகிழந்தனர். மேலும் இங்குள்ள பூங்காக்களை கண்டுகளித்தும், ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து குதூகலித்தனர்.

    வெயிலின் தாக்கமில்லாமல் நிலவும் அருமையான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ரோஜா தோட்டத்தில் பூத்துள்ள வண்ண மலர்களையும், அண்ணா பூங்காவில் உள்ள வண்ணமயமான மலர்களையும், லேடிசீட், பக்கோடா பாயின்ட் போன்ற காட்சி முனைகளுக்கும் சென்று இயற்கையின் அழகை ரசித்தனர். சேர்வராயன் கோவில், ஐந்திணை பூங்கா, பீக்கு பார்க் போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    அதிகமான சுற்றுலா பயணிகளிள் வருகையால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தது. சிலர் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல், இரவு முழுவதும் காரில் தங்கும் நிலையும் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    • பஸ்சில் பயணித்த 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.

    அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க, முயற்சித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.தொடர்ந்து பேருந்து முகப்பு மற்றும் சன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து பேருந்தில் பயணித்த 9 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் அன்பரசன் உட்பட பயணியான தெற்குப்பொய்கை நல்லூரைச் சேர்ந்த வசந்தி ஆகியோர் கால் மற்றும் தலையில் லேசான காயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்துகிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு பேருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பேருந்து மீட்கப்பட்டது. இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    • வெளிநாட்டு பயணிகளுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
    • மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுரை

    புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதார துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார் அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலைய சுகாதார துறை மேற்பார்வையாளர் தங்கச்சாமியின் தலைமையில் சுகாதாரத் துறையினர் மதுரை வரும் விமான பயணிகளிடம் பரிசோதனை செய்கின்றனர்.

    அரசு அறிவித்துள்ள விதிகளின்படி விமான பயணிகள் 2 தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை வரும் வெளிநாட்டு விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் கொரோனா தொற்று இருந்தால் அனைத்து பயணிகள் இருப்பிடத்திற்கு சென்று சுகாதாரத்துறை யினரால் தனிமைப்ப டுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் 187 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் கொரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இன்று (25-ந்தேதி) கொழும்பில் இருந்து மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
    • ரெயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் மிகப் பழமையான ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். தஞ்சை ரெயில் நிலையம் கடந்த 2-12-1861-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரெயில் சேவை வழங்கி வருகிறது.

    இன்றுடன் தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இதனை கொண்டாடும் வகையில் இன்று தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பார்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே சீப் கமர்சியல் இன்ஸ்பெக்டர் மோகன், ரயில்வே நிலைய அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ரெயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் கண்ணன், வழக்கறிஞர்கள் உமர் முக்தர், முகமது பைசல், பேராசிரியர்கள் திருமேனி, செல்ல கணேசன், பாபநாசம் ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க செயலாளர் சரவணன், நிர்வாகிகள் சோமநாதராவ், சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும்.
    • ரெயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வெளியூர் பயணங்களுக்கு அதிக அளவில் ெரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும். இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ெரயில் சேவை இல்லாததால் இரண்டு ெரயில்கள் மாறி மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது, இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு ெரயில் சேவை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கூட சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூர் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதே போன்று கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உடுமலை-பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொள்ளாச்சி - திண்டுக்கல் ெரயில்பாதை அகல ெரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி 2017ல் நிறைவடைந்தது.ஆனால் மீட்டர்கேஜ் காலத்தில் பொள்ளாச்சி வாயிலாக இயக்கப்பட்ட கோவை- ராமேஸ்வரம், கோவை- தூத்துக்குடி, கோவை-கொல்லம், கோவை - திண்டுக்கல் போன்ற ெரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.

    இந்த ெரயில்களை இயக்க வேண்டும் என, ரெயில்வே பயணிகள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உட்பட பலரும், அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை.கொரோனா பரவலுக்கு முன் காலை மற்றும் இரவு நேரங்களில், கோவை மாவட்ட பயணிகள் வசதிக்காக கோவை-பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி - கோவை ெரயில்கள் இயக்கப்பட்டன. அவை இப்போது இயக்கப்படுவதில்லை.

    இதனுடன் கோவை, பொள்ளாச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் - தாம்பரம், தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட திருநெல்வேலி, டானாபூர், வாரம் ஒரு முறை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ெரயில்களை, தினசரி ெரயில்களாக இயக்க வேண்டும்.

    பாலக்காடு - திருநெல்வேலி செல்லும் பாலருவி விரைவு ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

    மேலும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், வேலை நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - கோவை மெமூ ெரயிலையும், பொள்ளாச்சி வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

    இவற்றுடன் திருவனந்தபுரம் - மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ெரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும், பொள்ளாச்சி வழியாக கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ெரயிலை இயக்கவும், ெரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. அந்த பணிகள் கூட இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

    அதேபோல், அமிர்தா ரெயிலின் மூன்று படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை, கொரோனாவுக்கு முன்பிருந்ததை போலவே அமரும் வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு உடுமலை, பொள்ளாச்சி பகுதி மக்களின் ரெயில்வே சேவை குறித்த கோரிக்கைகள் ஏராளமாக உள்ள நிலையில் அதை பாலக்காடு கோட்ட நிர்வாகமும், தெற்கு ெரயில்வேயும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.தெற்கு ெரயில்வே நிர்வாகம், இந்த கோரிக்கைகளில் கவனம் செலுத்தி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ெரயில்பாதையாகவும், மின்மயமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ள உடுமலை, பொள்ளாச்சி ெரயில் வழித்தடத்தில், மக்கள் எதிர்பார்க்கும் ெரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ெரயில்வே ஆர்வலர்கள் பிரதமருக்கு மனுவாக அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கோவை - பொள்ளாச்சி ரெயில் காலை, 5:45 மணிக்கு கோவையில் புறப்பட்டு, பொள்ளாச்சி வரும். அதேபோல் இரவு 8:30 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு கோவை செல்லும். இதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதி பயணிகளுக்கு செம்மொழி, ஆலப்புழா மற்றும் நீலகிரி ஆகிய விரைவு ெரயில்களை பிடிக்கவும், பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை பிடிக்கவும், இணைப்பு ெரயிலாக இருந்தது.அதேபோல் பொள்ளாச்சி - கோவை ெரயில், சென்னை, நீலகிரி, சேரன், பெங்களூரு, யஷ்வந்த்பூர் ஆகிய ெரயில்களுக்கு இணைப்பு ெரயிலாக இருந்தது.கொரோனா பரவலின்போது இந்த இரண்டு ெரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, இந்த ெரயில்களை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலி வரை வாராந்திர விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    ெரயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது. ஆனால், கிணத்துக்கடவில் இந்த ெரயில் நிற்காததால், இப்பகுதி மக்கள் பொள்ளாச்சி அல்லது போத்தனூர் சென்று, இந்த ெரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது.தெற்கு ரயில்வே நிர்வாகம், திருநெல்வேலி ெரயிலை கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய ரெயிலுக்கு ரெயில் பயணிகள் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் இணைந்து வரவேற்பு அளித்தனர்.
    • ரெயிலின் கார்டு சேகருக்கு மாலை, சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    பாபநாசம்:

    கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் தஞ்சை திருச்சி மதுரை வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதை அடுத்து தனது முதல் பயணத்தை தொடங்கிய வண்டிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டா டப்பட்டது.

    டெல்டா பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறை கும்பகோ ணம் பாபநாசம் வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

    தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ராஜபாளையம், தென்காசி சங்கரன்கோவில் பகுதிகளை சேர்ந்த பயணிகள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே புதிய ரயில் வண்டி இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதை அடுத்து செங்கோட்டை விரைவு ரயில் முதல் சேவை மயிலாடுதுறையில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக பாபநாசத்திற்கு பகல் 13.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    புதிய ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வணிகர் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து வரவேற்பு அளித்தனர்.

    முன்னதாக வண்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ராஜராஜன் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி குழுத்தின் நெறியாளர் எஸ்.கே.ஸ்ரீதர் ரயில் வண்டியின் ஓட்டுனர்கள் மது, விஸ்வநாதன் மற்றும் ரயில் வண்டியின் கார்டு சேகர் ஆகியோருக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    மேலும் திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன், சங்க தலைவர் சோமநாதராவ், செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சாமிநாதன், சங்கர், பாபநாசம் வணிகர் சங்க செயலாளர் கோவிந்தராஜன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், அசோகன் ஆகியோரும் ஓட்டுனர்களுக்கு சால்வை கள் அணிவித்து சிறப்பு செய்தனர்.

    நிகழ்ச்சியில் பாபநாசம் நகர தி.மு.க செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பூம்புகார் கைவினை கழகத்தின் முன்னாள் தலைவர் சுவாமிமலை ஸ்ரீகண்டன் ஸ்தபதி, பாபநாசம் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சம்மந்தம், பாபநாசம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செந்தில்நாதன், பிரான்சிஸ்சேவியர், வெங்கடேசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர் அலி, பிரகாஷ், முத்துமேரிமைக்கேல்ராஜ், தேன்மொழிஉதயக்குமார், அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ஓய்வு பெற்ற செய்திதுறை இணை இயக்குனர் கண்ணதாசன், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    இந்த செங்கோட்டை விரைவு ரயில் வண்டி பாபநாசம் ரயில் நிலைத்திற்கு பகல் 12.20 மணிக்கு வந்து தஞ்சை, திருவெறும்பூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், தென்காசி வழியாக இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் செங்கோட்டை வழியாகவும், குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் தென்காசி வழியாகவும், வியாபார நிமித்தமாக அடிக்கடி செல்லும் வணிகர்களுக்கு உதவியாக மதுரை, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளுக்கு செல்லமுடியும்.

    குறைவான கட்டணத்தில் பாதுகாப்போடு பயணம் செய்யும் விதத்தில் பயணிகள் அனைவரும் இந்த ரயில் வண்டியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • வண்டி ஓட்டுனர்களுக்கு பொன்னாடை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
    • பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி கூறினர்.

    தஞ்சாவூர்:

    செங்கோட்டையில் இருந்து மதுரைக்கும், மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல்லுக்கும் இயங்கி வந்த இரு ரெயில்களை இணைத்து செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயிலாக, தீபாவளி நாளான நேற்று முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

    அதன்படி தீபாவளி நாளான நேற்று மயிலாடு துறை- செங்கோட்டை ரெயில் சேவை (வண்டி எண் 16847) தொடங்கியது.

    மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடு துறை (வண்டி எண் 16848) ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

    இந்த ரெயில் தினமும் மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு குத்தாலம், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருச்சி, மதுரை ,விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடைகிறது.

    இதே போல் தினமும் செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு சென்று அடைகிறது.

    இந்த நிலையில் தீபாவளி நாளான நேற்று முதல் தொடங்கிய இந்த ரெயில் சேவையானது மயிலாடுதுறையில் புறப்பட்டு மதியம் 12.45 தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்து ஓரிரு நிமிடம் நின்றது.

    அப்போது ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தி ன் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், நிர்வாகிகள் வழக்கறிஞர் உமர் முக்தார், பேராசிரியர்கள் திருமேனி, செல்வ கணேசன், ஹாஜா மொகைதீன் தலைமையில் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் வண்டி ஓட்டுன ர்களுக்கு பொன்னாடை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி கூறினர்.

    இது குறித்து சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறும்போது,

    கோவிட் 19 காலத்திற்கு முன்பு தஞ்சாவூர் தடத்தில் இயங்கிய பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இவற்றை திரும்ப இயக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை பிரிவில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தோம்.

    தொடர்ந்து அண்மையில் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பு மயிலாடுதுறை- திண்டுக்கல் தடத்தில் இயக்கிய ரெயில் செங்கோட்டை - மயிலாடுதுறை - செங்கோட்டை தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    • பாலங்களில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை உள்ளது.
    • குழந்தைகளுடன் கல்லணையை சுற்றி பார்க்க வருபவர்கள் அச்சமடைகின்றனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான கல்லணையை சுற்றி பார்க்க தினமும் மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கல்லணை பாலங்கள், குழந்தைகள் பூங்கா, கரிகாலன் பூங்கா,கரிகாலன் மணிமண்டபம் ,ஆகிய இடங்களை பார்வையிட்டு மகிழ்வர்.கல்லணை பாலங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

    பாலங்களில் நடந்து வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நடந்து வரும் நிலை உள்ளது.

    நாய்கள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு அங்குமிங்கும் ஓடுவதால் குழந்தைகளுடன் கல்லணையை சுற்றி பார்க்க வருபவர்கள் அச்சமடையும் நிலை உள்ளது.

    உடனடியாக‌ கல்லணை பாலங்களில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.
    • வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . இங்குள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர். இதனால் கடைகள் பூட்டப்பட்டதால்,பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில், கடைகள் இல்லாததால், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கவும், குடிநீர் பாட்டில் வாங்கவும் முடியவில்லை. வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது. ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் விபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது . எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்,கடந்த ஆகஸ்டு 26 ந்தேதி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் 86 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 78 கடைகளின் அரசு நிர்ணய வாடகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. மொத்தமுள்ள 86 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 2 கடைகளும், பஸ் நிலையத்தில் 4 கடைகளும், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகளும் உள்ளிட்ட 8 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. மற்ற 78 கடைகள் ஏலம் எடுக்கப்படவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் கடைகள் திறக்கப்படவில்லை. கடந்த 30 நாட்களாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டி கிடப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    ×