என் மலர்

    நீங்கள் தேடியது "travel"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.
    • பஸ்கள் சரியான நேரத்தில் வராததால் மாணவர்கள் கடும் அவதி.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினத்திற்கு இடைப்பட்ட ஊர்க ளான முதல்சேரி, பள்ளிக்கொ ண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு போன்ற பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தினமும் தங்கள் அத்தியாவசிய தேவைக்கா கவும், பணி நிமித்தமாகவும் பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்ல இடைநில்லா பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மேற்கண்ட கிராமங்களில் நின்று செல்வதில்லை.

    இதனால் அந்த கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.

    அந்த பஸ்களும் சரியான நேரத்தில் வராததால் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இடைப்பட்ட ஊர்களில் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.

    சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி

    பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்.
    • கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன்.

    கும்பகோணம்:

    சென்னை வில்லிவா க்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி.

    இவர் கும்பகோணம் அருகே சாலையில் இருமுடி தலையில் வைத்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அவரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, நான் தினக்கூலி அடிப்படையில் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறேன்.

    சபரிமலை ஐயப்பன் துணையாலேயே நல்ல விதமாக எனது குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.

    17-வது வருடமாக சபரிமலை செல்லும் நான் பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக சுமார் 650 கிலோமீட்டர் வரை சைக்கிளில் செல்ல முடிவு செய்து கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன் என்றார்.

    நேற்று இரவு உணவை சோழபுரத்தில் முடித்துவிட்டு சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். இன்று காலை தஞ்சாவூர், திருச்சி, கரூர், திண்டுக்கல் வழியாக சபரிமலை செல்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
    • இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வெளி மாநி லங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ''ஹைவே பேட்ரோல்'' போலீசார் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. செக் போஸ்ட்டில் போலீசார் இல்லாதால் விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர்.

    இரவில் நடந்து செல்ப வர்கள் மீது வாகனம் மோதுவதும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை குப்புற கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும், இந்த சாலையில் தொடர்கதையாக உள்ளது. நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது.

    இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 281 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 பேர் உயிரிழந்துள்ளனர். கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப் பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர்.

    இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரசில் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து 51 பேர் புறப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மாணவிகள் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் சிக்கிரி நிறுவனத்திற்கு சென்றனர்.
    • இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் சிக்கிரி நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு வேதியியல் அரி மானம், ஆற்றல் மூல ஆதாரங்கள் மற்றும் கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்பு போன்றவற்றை விபரமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் மாணவர்கள் அருகில் உள்ள குகை கோயிலுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். திருமலாபுரம் பகுதியில் இரு மையங்கள் செயல்படுகிறது.

    மையத்திற்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பாடத்தில் கற்றுள்ள குகை கோவில் குறித்து நேரடி அனுபவத்தை ஏற்படுத்தும் வகையிலும், திருவண்ணாமலை அருகே உள்ள சிவன் குகை கோவிலுக்கு இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குகைக் கோவில் குறித்து விளக்கப்பட்டது.

    இந்த பகுதியில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ள பகுதிகளையும் மாணவர்கள் பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேவகோட்டையில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    • ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. தேவகோட்டை நகர் மற்றும் கிராமங்களை சுற்றியுள்ள மாணவ-மாணவிகள் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்கள் வாயிலாக பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தேவகோட்டை-காரைக்குடி சாலையில் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

    பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் இருந்தால் மட்டுமே ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்களை தடுக்க முடியும் என போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தெரிவித்தனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் காலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
    • காரில் பயணித்த 2 ஆண்கள், ஒரு பெண், 2 குழந்தைகள் என 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவப்பஞ்சேரி என்கிற இடத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

    அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் பயணித்த 2 ஆண்கள், ஒரு பெண், 2 குழந்தைகள் என 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வேளாங்கண்ணி புறப்பட்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து எடையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தில் மழையால் சாலை சேதமடைந்து பள்ளமாகி தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.

    அந்த பாதையில் பள்ளி மாணவர்கள் அரசு பஸ்சில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்யும் செய்தி மாலை மலரில் நேற்று வெளியானது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, பஸ் படிக்கட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தாலோ, விதி முறைகள் மீறினாலோ மாணவர்கள் மீதும், தொடர்புடைய வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது கல்வித் துறை மற்றும் காவல் துறையின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print