search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government"

    • முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
    • மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் அடங்கும்.

    இந்தியாவில் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்வதற்காக முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.

    அந்த வரிசையில், தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் போன்களின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15-இல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    இதில் மொபைல் போன்களின் பேட்டரி கவர், முன்புற கவர், மிடில் கவர், மெயின் லென்ஸ், பேக் கவர், ஜி.எஸ்.எம். ஆன்டெனா, பி.யு. கேஸ், சீலிங் கேஸ்கெட், சிம் சாக்கெட், ஸ்கிரீயூ மற்றும் பிளாஸ்டிக், மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் என அனைத்தும் அடங்கும்.

    இறக்குமதி வரியை குறைக்க மொபைல் போன் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    • பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.
    • ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தைப்பூசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ் ஜோதியை தரிசிக்க தன்னெழுச்சியாகக் கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதைக் கண்டு, வள்ளலாரின் பொதுமை நோக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்ட வடலூர் பார்வதி புரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்த நிலம்தான் 100 ஏக்கர் வடலூர் பெரு வெளியாகும்.

    இவ்வளவு பெரிய நிலம் இருப்பதால்தான் தைப்பூசத் தன்று வடலூரில் கூடும் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.

    தைப்பூசத் திருநாளில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் ஜோதி வழிபாட்டிற்காக கூடுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அடுத்த நாள் அதிகாலை, 6-வது 'ஜோதி வழிபாட்டின்' போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். அதற்கு அடுத்த நாள் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் 'திரு அறைக் காட்சி நாள்' என்பதால், மேலும் பல லட்சம் பக்தர்கள் 'திரு அறை தரிசனம்' காண கூடுவார்கள்.

    இப்படி வருடத்தில் 4 முக்கிய நாட்களும் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டு மல்லாது, பிற மாவட்டங்கள், வெளி மாநிலம், வெளிநாடு என்று சன்மார்க்க அன்பர்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடும் இடமாக வடலூர் பெருவெளி உள்ளது. இப்படி, விழாக் காலங்களில் கூடும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இப்படி லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' கட்டுவதற்கு தி.மு.க. அரசு முனைந்துள்ளதை அறிந்து இப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெரு வெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.

    இப்படி, இப்பெருவெளி நிலத்தை கையகப்படுத்தினால் 'மாத பூச வழிபாடும், தைப்பூச சிறப்பு வழிபாடும்' தடைபடும். தைப்பூசத் திரு நாளன்று பக்தர்கள் எந்த வித சிரமுமின்றி அருட்பெரும் ஜோதியை தரிசிக்க அப்பகுதி கிராம மக்கள் மனமுவந்து அளித்த நிலத்தை தி.மு.க. அரசு வேறொரு பணிக்காக கையகப்படுத்த நினைப்பது, நிலத்தை தானம் செய்த மக்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான பக்தர்களின் மனதையும் வேதனைப்படுத்தி உள்ளது.

    தி.மு.க. அரசு வடலூர் பெருவெளியில் 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டுவதை விடுத்து, வேறொரு இடத்தைத் தேர்வு செய்து இம்மையத்தைக் கட்ட இந்த அரசுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தும், அவர்களது வேண்டுகோளை தி.மு.க. அரசு புறக்கணித்து, வடலூர் பெருவெளியிலேயே சர்வதேச மையம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரி உள்ளதாகத் தெரிகிறது.

    'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார், தைப்பூசத் திரு நாளில் அருட்பெருஞ் ஜோதியைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி காத்திருப்பதற்கு பொது வெளியை ஏற்படுத்தினார். அந்த பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
    • மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசு உறுதி மொழிக் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், எம்.கே.மோகன், ராமலிங்கம் ஆகியோருடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்விற்குப் பின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்காடு அரசு மருத்துவ மனையில் இருந்த உடல் மறுகூராய்வு செய்கின்ற இடம் பழுதடைந்த நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பிரேதப் பரிசோதனை அறை கட்டித் தரரப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையில் உள்ளது.

    இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது

    மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது தற்போது முற்றிலும் நிறைவுபெற்று உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இக்கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

    இதனைத் தொடர்ந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிற்பகல் 3 மணிக்கு மேல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு இணைச் செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் பெருமிதம்
    • உலக மீனவர் தின வாழ்த்து

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள உலக மீனவர் தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வாழ் மீனவ சகோதார, சகோதரிகள் அனைவருக்கும் எனது சார்பிலும், புதுவை அரசின் மீன்வளத்துறை சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மக்கள் முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மீனவ சமுதாயத்திற்கு நலத்திட்ட உதவிகள் வந்து சேர்வதை அனைவரும் அறிவர். ஓய்வூதியத்தொகை உயர்த்தப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம், டீசல் மானியம் உயர்வு, தடைக்கால மழைக்கால நிதி யுதவிகள் காலம்தாழ்த்தாமல் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி திட்டத்தின் கீழ் காலாப்பட்டு, நல்லவாடு, தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக விரிவாக்கம் என ரூ.100 கோடியில் திட்டம் நிறைவேற்றப்பட்டு டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யும் நிலையில் உள்ளது.

    டிசம்பர் இறுதிக்குள் உள்கட்டமைப்பு வசதிகக்கான வேலைகள் தொடங்கப்படும். தூண்டில் முள் வளைவு அமைக்கும் திட்ட அறிக்கையும் இறுதிவடிவம் பெற்றுள்ளது.

    விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. காலாப்பட்டு கடற்கரையோர கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க கடற்கரைகளில் கல் கொட்டும் பணி ரூ.18 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.6 கோடி வேலை நடந்து வருகிறது.

    மீனவ சமுதாய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் நாட்டில் முன் மாதிரியாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்த நல்லாட்சியில் மீனவ சமுதாய மக்கள் அனைவருக்கும் சமூக நீதியிலும், பொருளாதார ரீதியிலும் உயர அனை வருக்கும் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் தலைவர் வலியுறுத்தல்
    • சங்கத்தில் பல்வேறு பிரச்சினை இருக்கும் வரை சங்க அலுவலகத்தை திறக்க கூடாது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் வீரர்கள் லீக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பொருளாளர் இல்லாம லேயே நடத்தப்பட்டுள்ளது. வருடாந்திர சங்க கணக்கை பொதுச்செயலாளரை கொண்டு வாசித்துள்ளனர்.

    சங்கத்தில் பல்வேறு பிரச்சினை இருக்கும் வரை சங்க அலுவலகத்தை திறக்க கூடாது. சங்கத்தின் வங்கி கணக்கை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் வரை அரசு முடக்கி வைக்க வேண்டும்.

    ெடல்லி தலைமை சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ள படி தற்போது புதுவை சங்க தலைவர் மீதான விசாரணை முடிந்த பின்னரே சங்கத்து க்கு தேர்தல் முறையாக நடைபெற்று புதிய நிர்வா கிகள் தேர்தெடு க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கவர்னருக்கு மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் மனு
    • சென்டாக் மூலம் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், மற்றும் செவிலியர் படிப்பிற்கான கலந் தாய்வு நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னருக்கு மாணவர் மற் றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரசால் சென்டாக் கலந்தாய்வு மூலம் தனியார் மருத்து வக் கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.25 லட்ச மும், பொறியியல் படிப்புக்கு ரூ.25 ஆயிரமும், செவிலியர் படிப்புக்கு ரூ.16 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முழு கட்டணமும் செலுத் தப்படுகிறது. 2023-24-ம் ஆண்டுக்கான உயர்க்கல்வி கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு சென்டாக் மூலம் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், மற்றும் செவிலியர் படிப்பிற்கான கலந் தாய்வு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் அரசு பள்ளி யில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பல் மருத்துவம், கால்நடைமருத்துவம், செவிலியர் மற் றும் பிற படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் முழுகல்வி கட் ட்ணமும் செலுத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல், புதுவை அரசால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள 10 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட் டணத்தை முழுவதுமாக அரசே செலுத்த ஆவண செய்ய வேண்டும்.

    இவ் வாறு அதில் கூறியுள்ளார்.

    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    • பிரதமர் மோடிக்கு பா.ஜனதா பாராட்டு
    • மாநில அரசும், பா.ஜனதா அமைச்சர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவி அளிக்க வேண்டுமென மாநில அரசும், பா.ஜனதா அமைச்சர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி மத்திய அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் பல் வேறு திட்டங்கள் அரியாங்குப்பம் தொகுதியில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வீராம்பட்டினம் பார்ப்பான் குளம் 3.16 லட்சம் ரூபாயிலும், காக்காய ந்தோப்பில் நீட்டு குளம் 3.57 லட்சம் ரூபாயிலும் ஆழப்படு த்தப்பட்டு உள்ள தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    மக்களுக்கும் தரமான குடிநீர் கிடைக்க வழி செய்யப் பட்டுள்ளது. அரியாங்குப்பம் மேற்கு அருந்ததிபுரம் சுடுகாடு வாய்க்கால் 2.18 லட்சம் ரூபாயில் துார்வா ரப்பட்டு உள்ளது.

    இது போல் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி யுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அரியாங்குப்பம் தொகுதி வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு, அரியாங்குப்பம் தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
    • கூட்டத்தில் தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெறுவதற்கு ஆலோசனை செய்தனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ, மாநில துணை தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுரேஷ், எழில்ராஜா, சேகர், பெஸ்ட் முருகன், வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெறுவதற்கு ஆலோசனை செய்தனர்.

    பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. அதில், அபிஷேக பாக்கத்தில் இலவச மனை பட்டா அரசு உடனடியாக வழங்க வேண்டும். டி.என். பாளையத்தில் இலவச மனைபட்டா வழங்கியவர்களுக்கு அதை பயன்படுத்தி வீடு கட்டிக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவெளி தொகுதியில் உள்ள பல சாலைகள் சேதமடைந்தும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் புதிய மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது. சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தொகுதி முக்கிய நிர்வாகிகளான ஜெயராமன், ராஜேந்திரன், தண்டபாணி, பாபு, பாலச்சந்தர், கலியபெருமாள், குமார், ஜெயலட்சுமி உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.

    • திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தல்
    • 1971-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பல்வேறு கோவில்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்து பத்திரங்களை, பல கோடி ரூபாய் நகைகளை இந்து சமய நிறுவனத்தில் 1971-ம் ஆண்டு சேர்க்கும் போது இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் துணையுடன் திருடியும், பொய்கண்க்குகள் எழுதியும் கோவில் சொத்துக்களை கோவில் நிர்வாகிகள் திருடி உள்ளனர்.

    அனைத்து கோவில் சொத்துக்களை மீட்டு கோவில்களுக்கு மீண்டும் வழங்க மாநில அரசு, புதுவை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சி.பி.ஐ. அமலாக்கத்துறை மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களை 1950-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சோதனை செய்து பல ஆயிரம் கோடி சொத்துக்களை மீட்டு கோவில்களுக்கு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1971-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
    • கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது

    திருப்பூர்,ஜூலை.7-

    அரசு கேபிள் டி.வி.யின் செட்டாப் பாக்ஸ் இயக்கம் துவங்கும் போதெல்லாம் திரையில் வரும் தகவல் சேனலில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பி அதன் வாயிலாக வருவாய் ஈட்ட கேபிள், டி.வி., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு கேபிள் டி.வி., அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் கேபிளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தொலைக்காட்சி, ஆன் செய்யப்படும் போதெல்லாம், லேண்டிங் சேனல் எனும் அரசு கேபிள் தகவல் சேனல் ஒளிபரப்பாகும்.

    அதில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், முதல்வரின் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு, கேபிள் டி.வி., தொடர்பான தகவல், பொது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் ஆகியவை ஒளிபரப்பாகும்.

    இந்தநிலையில் இந்த தகவல் சேனலில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதில் கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கேற்ப விளம்பரம் ஒளிபரப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

    இதன் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். முதலில் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×