என் மலர்

    நீங்கள் தேடியது "Government"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னருக்கு மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் மனு
    • சென்டாக் மூலம் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், மற்றும் செவிலியர் படிப்பிற்கான கலந் தாய்வு நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னருக்கு மாணவர் மற் றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரசால் சென்டாக் கலந்தாய்வு மூலம் தனியார் மருத்து வக் கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.25 லட்ச மும், பொறியியல் படிப்புக்கு ரூ.25 ஆயிரமும், செவிலியர் படிப்புக்கு ரூ.16 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முழு கட்டணமும் செலுத் தப்படுகிறது. 2023-24-ம் ஆண்டுக்கான உயர்க்கல்வி கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு சென்டாக் மூலம் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், மற்றும் செவிலியர் படிப்பிற்கான கலந் தாய்வு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் அரசு பள்ளி யில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பல் மருத்துவம், கால்நடைமருத்துவம், செவிலியர் மற் றும் பிற படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் முழுகல்வி கட் ட்ணமும் செலுத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல், புதுவை அரசால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள 10 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட் டணத்தை முழுவதுமாக அரசே செலுத்த ஆவண செய்ய வேண்டும்.

    இவ் வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடிக்கு பா.ஜனதா பாராட்டு
    • மாநில அரசும், பா.ஜனதா அமைச்சர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவி அளிக்க வேண்டுமென மாநில அரசும், பா.ஜனதா அமைச்சர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி மத்திய அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் பல் வேறு திட்டங்கள் அரியாங்குப்பம் தொகுதியில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வீராம்பட்டினம் பார்ப்பான் குளம் 3.16 லட்சம் ரூபாயிலும், காக்காய ந்தோப்பில் நீட்டு குளம் 3.57 லட்சம் ரூபாயிலும் ஆழப்படு த்தப்பட்டு உள்ள தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    மக்களுக்கும் தரமான குடிநீர் கிடைக்க வழி செய்யப் பட்டுள்ளது. அரியாங்குப்பம் மேற்கு அருந்ததிபுரம் சுடுகாடு வாய்க்கால் 2.18 லட்சம் ரூபாயில் துார்வா ரப்பட்டு உள்ளது.

    இது போல் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி யுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அரியாங்குப்பம் தொகுதி வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு, அரியாங்குப்பம் தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
    • கூட்டத்தில் தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெறுவதற்கு ஆலோசனை செய்தனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ, மாநில துணை தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுரேஷ், எழில்ராஜா, சேகர், பெஸ்ட் முருகன், வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெறுவதற்கு ஆலோசனை செய்தனர்.

    பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. அதில், அபிஷேக பாக்கத்தில் இலவச மனை பட்டா அரசு உடனடியாக வழங்க வேண்டும். டி.என். பாளையத்தில் இலவச மனைபட்டா வழங்கியவர்களுக்கு அதை பயன்படுத்தி வீடு கட்டிக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவெளி தொகுதியில் உள்ள பல சாலைகள் சேதமடைந்தும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் புதிய மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது. சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தொகுதி முக்கிய நிர்வாகிகளான ஜெயராமன், ராஜேந்திரன், தண்டபாணி, பாபு, பாலச்சந்தர், கலியபெருமாள், குமார், ஜெயலட்சுமி உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தல்
    • 1971-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பல்வேறு கோவில்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்து பத்திரங்களை, பல கோடி ரூபாய் நகைகளை இந்து சமய நிறுவனத்தில் 1971-ம் ஆண்டு சேர்க்கும் போது இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் துணையுடன் திருடியும், பொய்கண்க்குகள் எழுதியும் கோவில் சொத்துக்களை கோவில் நிர்வாகிகள் திருடி உள்ளனர்.

    அனைத்து கோவில் சொத்துக்களை மீட்டு கோவில்களுக்கு மீண்டும் வழங்க மாநில அரசு, புதுவை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சி.பி.ஐ. அமலாக்கத்துறை மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களை 1950-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சோதனை செய்து பல ஆயிரம் கோடி சொத்துக்களை மீட்டு கோவில்களுக்கு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1971-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
    • கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது

    திருப்பூர்,ஜூலை.7-

    அரசு கேபிள் டி.வி.யின் செட்டாப் பாக்ஸ் இயக்கம் துவங்கும் போதெல்லாம் திரையில் வரும் தகவல் சேனலில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பி அதன் வாயிலாக வருவாய் ஈட்ட கேபிள், டி.வி., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு கேபிள் டி.வி., அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் கேபிளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தொலைக்காட்சி, ஆன் செய்யப்படும் போதெல்லாம், லேண்டிங் சேனல் எனும் அரசு கேபிள் தகவல் சேனல் ஒளிபரப்பாகும்.

    அதில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், முதல்வரின் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு, கேபிள் டி.வி., தொடர்பான தகவல், பொது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் ஆகியவை ஒளிபரப்பாகும்.

    இந்தநிலையில் இந்த தகவல் சேனலில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதில் கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கேற்ப விளம்பரம் ஒளிபரப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

    இதன் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். முதலில் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
    • அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ‌ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 1000 பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காலி பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்ற வரும்படி 423 டாக்டர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் முடிந்த பிறகு பேராசிரியர் பணியிடங் களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை தலைவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்து, ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
    • அரசின் இந்த உத்தரவை சார்பதிவாளர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத்துறையின் கீழ் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இவற்றில் சமீப காலங்களாக ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இந்நிலையில், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை தலைவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்து, ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர ஆவணம் எழுதுபவர்கள் பத்திர பதிவு அலுவலகத்தில் நுழையக்கூடாது.

    அரசின் இந்த உத்தரவை சார்பதிவாளர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதனை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடோ, நடமாட்டமோ கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவதோடு இதனைக் கண்காணிக்க தவறும் சார்பதிவாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை ஆவணம் எழுதுபவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை சார்பதிவாளர்கள் உறுதி செய்யவேண்டும்.

    மாவட்டப்பதிவாளர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் தங்களது திடீர் ஆய்வுகளின் போது இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்திட வேண்டும்.

    இந்த சுற்றறிக்கையினை ஆவணம் எழுதுவோர் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரப் படுத்த வேண்டும்.

    இவ்வாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.
    • மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம், வடக்கு நல்லியாம் பாளையம், வெட்டுக் காட்டுப்புதூர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங் களில் மழை நீர் சுல்தான்பேட்டையில் உள்ள ஓடை புறம்போக்கு வழியாகச் சென்று ராஜா வாய்க்காலில் கலந்து விடும். மழை அதிகமாக பெய்யும் போது அப்பகுதி முழுக்க மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கும். பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.

    மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர். மழைநீர் செல்ல ஏதுவாக இருந்த அந்த பள்ளத்தை மண் கொட்டி மேடாக்கி உள்ளனர். இதனால் மழை பெய்யும் போது, தண்ணீர் சாலையில் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் சென்று பார்வை யிட்டார். பின்னர், உடனடி யாக ஆக்கிரப்பு செய்த நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்.

    அந்த நோட்டீஸில், வேலூர் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு சுல்தான் பேட்டை பகுதியில் ஓடை புறம்போக்கு இடத்தில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மண் கொட்டி உள்ள இடத்தில் கட்டிட பணி துவங்க ஏதுவாக ஏற்பாடு செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேரில் ஆய்வு செய்ததில், சாலை மட்டத்திற்கு மேல் மண் கொட்டப்பட்டு உள்ளது என தெரிய வருகிறது.

    இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 3 தினங்களுக்குள் மண் மேட்டினை அப்புறப்படுத்தி சாலையின் உயரத்துக்கு கீழ் உள்ளவாறு சீர் செய்ய வேண்டும். குறித்த காலத்துக்குள் அவ்விடத்தை சரி செய்ய தவறும் பட்சத்தில் உரிய சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
    • ரூ. 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி பேசியதாவது:-

    பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.அனைவருக்கும் வீடு, துாய்மை இந்தியா வீடுகளுக்கான கழிப்பறை, பொது கழிப்பறை, வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம், அனைவருக்கும் கியாஸ் சிலிண்டர், இலவச வங்கி கணக்கு, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி, முத்ரா கடன் திட்டம் , மலிவு விலை மக்கள் மருந்தகங்கள், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, இலவச உணவு தானியம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மட்டும் 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சத்திய நாதன், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாவட்ட பார்வையாளர் சண்முகராஜா, மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ்குமார், சுகனேசுவரி, மாவட்ட செயலாளர் கந்த சாமி, சங்கரசுப்பிரமணியன், நகர தலைவர் உதயா, மண்டல தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, லோகுமுனியாண்டி, விவசாய அணி பொது செயலாளர் சரவணன், ஓ.பி.சி., அணி செயற்குழு உறுப்பினர் நாகேசுவரன், ஒன்றிய பொது செயலாளர் பரமசிவம் உள்பட நிர்வாகி கள் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin