என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி, முதியவர் பிணம்
- சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார். மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
- மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் நேற்று காலை சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன மூதாட்டி மற்றும் முதியவர் இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






