என் மலர்
நீங்கள் தேடியது "Art Festival"
- குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
- கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியத்தில் பவர் டில்லர் எந்திரத்தினையும் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் 2022-23-ல் நடைபெற்ற பேச்சு போட்டிகள், கட்டுரை போட்டிகள், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயங்களையும் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன் பொறுப்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்
- தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திர கலைவிழா தொடங்கியது
- மாணவர்கள் தாங்கள் சாதிக்க நினைப்பதை துணிச்சலோடு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் நட்சத்திரா கலைவிழா நேற்று துவங்கியது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-பாடசாலைக் கல்வியானது வகுப்பறைக் கல்வியுடன் நின்று விடக்கூடாது. அது சிந்தனைத்திறன், மொழித்திறன், ஆக்கத்திறன், நடனக் கலைத்திறன் போன்ற திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி சாதனையாளர்களாக சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தினைப் பெற வேண்டும்.மாணவர்கள் தாங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தைரியமாகவும், துணிச்சலோடும் செய்யவேண்டும். கலை என்ற சொல் உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் என்றார்.செயலாளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி, இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர், நிவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நடிகர் மிர்ச்சி சிவா கலந்துகொண்டு பேசுகையில், நமக்கான மதிப்பு ஒருவருக்கு புரியவில்லை என்றால் அவர்களை நாம் மதிக்ககூடாது.யாருக்கு பின்னாலும் நாம் செல்லக்கூடாது, சிலர் நம்ம கூட வரவில்லை என்றால் அதற்கான கொடுப்பனை அவர்களுக்கு இல்லை என நினைத்து கொள்ள வேண்டும். எனவே நேரத்தை வீணாடிக்கால் படித்து வாழ்க்கையில் சாதித்து காட்டவேண்டும் என்றார்.
விழாவில் சினிமா நடிகை இவானா, காமெடியன்கள் மதுரை முத்து, அன்னபாரதி, ஜி.பி.முத்து, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் குழுவினர்கள், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அஞ்சனா, தீபக் ஆகியோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.2 ம் நாளான இன்று (24-ந்தேதி, வெள்ளிக்கிழமை) நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, வேளாண் விஞ்ஞானி எசனை பெருமாள் (எ) சுருளிராஜன் மற்றும் சமூக ஆர்வலர் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
மேலும் நடிகை ஐஸ்வர்யாலெட்சுமி, திரைப்பட பின்னணி பாடகர்கள் மானசி, ஸ்டீபன் செக்காரியா, பிரியங்கா மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆதவன், சவுண்டு சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த நட்சத்திர கலை விழாவினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தொடங்கி வைத்து பேசிய காட்சி. அருகில் செயலாளர் நீல்ராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
- வட்டார அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
- அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.
கீழக்கரை
திருப்புல்லாணி வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-வது முதல் 8-வது வகுப்பு மாணவர்கள், 9-வது முதல் 10-வது வகுப்பு மாணவர்கள், 11-வது முதல் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு என தனி பிரிவாக ஓவியம், பேச்சுப்போட்டி, மொழித்தி றன், இசைக்கருவி, நடனம், பாட்டு, நாடகம், பட்டி மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தொகுத்து வழங்கினார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திருப்புல்லா ணி ஒன்றியத்தில் 20 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தலைமயாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ் ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலா ஆகியோர் வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.
வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டி யராசு, செந்தில்கு மார், ரமேஷ், செல்வகுமார், சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தார்.
- கறம்பக்குடியில் பொங்கல் கலைத்திருவிழா நடைபெற்றது
- விழாவில் மாணவ, மாணவியர்கள் பொங்கலிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்பக்குடி அனுமார் கோவில் பள்ளி மற்றும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் மருத்துவ தெருவில் பொங்கல் கலைத்திருவிழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவியர்கள் பொங்கலிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பேரூராட்சி தலைவர் முருகேசன் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதுகலை வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா முத்து, செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் அனுசுயா மற்றும் ஷாலினி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
- பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் கலைத் திருவிழாவில் இடம் பெற்றன.
- குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த கலைத் திருவிழாவில் 34 வகையான தனிநபர் போட்டிகளும், 4 வகையான குழு போட்டிகளும் நடைபெற்றன.
பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் இந்த கலைத் திருவிழாவில் இடம் பெற்றன. மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடையேயான போட்டிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரம், குன்றத்தூர் ஆகிய 2 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. 34 தனிநபர் போட்டிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் வீதம் தலா 38 பேர் பங்கேற்றனர்.
குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி நடை பெறும் பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.
- கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது
- நடிகர் மனோபாலா பங்கேற்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் 21 ஆம் ஆண்டு கலை விழா மற்றும் மாநாடு, கலைஞர்களின் ஊர்வலம், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு சங்க காப்பாளரும் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து நடிகர் சங்க கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியை அடைந்தனர். முன்னதாக ஊர்வலத்தை திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா, குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கே.எம். பூபதி, அமெரிக்க தமிழ் சங்கத்தின் ஆலோசனை குழு தலைவர் மெய்யர்தன், தமிழ்நாடு நாடக மன்ற நாட்டுப்புற கலைஞர்களின் மாநில சங்கத்தின் மாநில தலைவர் தங்கவேல், கௌரவ தலைவர் சிங்காரவேலன், மாநில துணைத்தலைவர் சின்னசாமி, ஒருங்கிணைப்பாளர் கும்பகோணம் ஆனந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நாடகக் கலைஞர்கள், திரைப்பட நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், சாதனை புரிந்த மாணவர்கள், சான்றோர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சங்க பொதுச் செயலாளர் ஜெ. சிவகுமார், சங்கத் தலைவர் புலவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் மு. ஜெய்பிரகாஷ் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மாநாட்டில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குடியாத்தம் நகரில் கலையரங்கம் அமைத்து தர வேண்டும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை ஆண் கலைஞர்களுக்கு 55 வயதாகவும், பெண் கலைஞர்களுக்கு 50 வயதாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும். கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு, வீட்டு மனை பட்டா, பஸ்பாஸ் ஆகிவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்க வேண்டும்.
தமிழக அரசு வழங்கும் கலைஞர்களுக்கான உயர்ந்தவிருதான கலைமாமணி விருதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலா இரண்டு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு வழங்கும் இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணக்கான நிதி உதவி அனைத்து தகுதி வாய்ந்த கலைஞர்களுக்கும் பயன்பெறும் வகையில் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்ட அளவிலான கலைத்தி ருவிழா போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிறைவு விழாவிற்கு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார்.
வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர், சுஜாதா ஆனந்தகுமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.திருநாவுக்கரசு ஆசிரியர் தமிழ்திருமால், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியர்கள் எ.ஜெயதேவரெட்டி, சண்முகம், எஸ்.எஸ்.சிவவடிவு, கோ.பழனி, எம்.மகேந்திரன், எஸ்.சுரேஷ், கே.கார்த்திகேயன், எம்.சினேகலதா, பேபி, லதா சங்கர், சித்தார்த்தன், உதவித்தலைமையாசிரியர் குமரன், தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் க.ராஜா, பாரத சாரண சாரணீய மாவட்ட செயலாளர் எ.சிவக்குமார் பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆ.மணிவாசகம், ஷைனி வட்டார மேற்பார்வையாளர்கள், தலைமையாரியர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்டம் முழுவதும் இருந்து வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
- கடைசி நாளான இன்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான போட்டி
முதற்கட்டமாக பள்ளி அளவிலும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று முன்தினம் பாளை தனியார் பள்ளியில் தொடங்கியது.
முதல் நாளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 2-ம் நாளான நேற்று 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
2 ஆயிரம் பேர்
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு குழு நடனம், இசைகருவிகள் இசைத்தல், காய்கறிகளில் கலைபொருட்கள், மணல்சிற்பம், தனிநடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
70 பள்ளிகள்
இந்நிலையில் கடைசி நாளான இன்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 70 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பேச்சுப்போட்டி, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட 59 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
மாநில அளவிலான போட்டி
இதில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கலை இலக்கிய திருவிழா போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.
- மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு குழு நடனம் ஆடினர்.
- தனிநபர் நடிப்பில் முதல் பரிசும்,பாட்டு போட்டி,நகைச்சுவை மற்றும் குழுநடன போட்டிகளில் 2ம் பரிசும் பெற்றுள்ளனர்.
உடுமலை :
உடுலை வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலைத்திருவிழாவில் மானுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தனிநபர் நடிப்பில் முதல் பரிசும்,பாட்டு போட்டி,நகைச்சுவை மற்றும் குழுநடன போட்டிகளில் 2ம் பரிசும் பெற்றுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக திருப்பூரில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு குழு நடனம் ஆடினர்.
- சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
- இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவி லான கலைத்திருவிழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதலமைச்சரால் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு வரும் திட்டங்களின் அடிப்படையில், கல்வி பயில்வதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாணவர்களின் திறனை வெளிக்கொணருவ தற்கென தற்போது பள்ளிக்கல்வி துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டார அளவில் பங்கு பெற்றுள்ளனர்.
இந்த கல்வித்திரு விழாவில் ஒவ்வொரு வகுப்புகளின் பிரிவின் அடிப்படையில் தனிப்போட்டிகளும், குழுப்போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
இதில் முதலிடம் பெறவுள்ள மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள்.
அதில் வெற்றி பெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கல்வி சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புக்களையும் பெற உள்ளனர். இதுதவிர, மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு எனது சார்பிலும், ஊக்கத்தொகையாக முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கி, எதிர்கால இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பை அளித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.