என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Art Festival"

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ‘கலைக்களம்-2022’ என்ற தலைப்பில் கலைவிழா நடந்தது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடந்தது.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 'கலைக்களம்-2022' என்ற தலைப்பில் கலைவிழா நடந்தது.

    3-ம் நாள் விழாவை பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ராமநாதன் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களுக்கு சிலம்பம், குழு நடனம், ஊமை நாடகம், பேச்சு போட்டி போன்ற கலை போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். சிவன் வரவேற்று பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலாளர் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். கல்லூரி சங்க பொருளாளர் செல்வராஜ் நாடார், கல்லூரி குழு உறுப்பினர்கள் காமராஜ் நாடார், ஜோசப் பெல்சி, டாக்டர் ஆனந்த், பண்ணை கே.செல்வகுமார், ரகுநாதன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுந்தரராஜ் நாடார், தொழில் அதிபர் கோபால், கண்ணநல்லூர் ெஜயகிருஷ்ணன் ஆகியோர் கலைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் புஷ்பராஜ், ஹரிபிரகாஷ் மற்றும் முருகவேல், அலுவலக கண்காணிப்பாளர் பாலசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிறப்பு விருந்தினர் பெரியசாமி டெக்ஸ்டைல் துறையின் அதிநவீன கோட்பாடுகளை பற்றி விளக்கினார்.
    • விழாவின் இறுதி நிகழ்வாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடைக் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே "இக்னீஷியா " என்னும் தலைப்பில் கடந்த 10 ஆண்டுகளாக கலைப்போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் 2 நாட்களாக நடைப்பெற்றது.

    முதல் நாள் விழாவினை அடல் இன்குபேஷன் சென்டர்(ஏஐசி ) முதன்மை செயல் அலுவலர் பெரியசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஏ.எப்.டி. துறைத் தலைவர் அருந்ததி கோஷல் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர் பெரியசாமி டெக்ஸ்டைல் துறையின் அதிநவீன கோட்பாடுகளை பற்றி விளக்கினார். ஜி.டி.பி. துறைத் தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார். முக ஓவியம் ( பேஸ் பெயிண்டிங்), சுவரொட்டி விளக்கக்காட்சி (போஸ்டர் பிரசன்டேஷன்), சிகை அலங்காரம் (ஹேர் டு) , காய்,பழங்களில் அலங்காரம் செய்தல் (வெஜிடபிள் ப்ரூட் கார்விங்), படத்தொகுப்பு (கொலாஜ் வொர்க்), வரைதல் திறன் (ஸ்கெட்சிங்), புகைப்படக்கலை (போட்டோகிராபி), மின்னணுக்கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    2-வது நாள் தனி நபர் நடனம் , குழு நடனம் , மெய்ப்பாடு , ஆடை அலங்கார அணிவகுப்பு ( சிறந்த வடிவமைப்பாளர் ,அதிகபட்சப் பொருத்தம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் பல மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு மேடையில் தங்களின் அபரிமிதமான கலைத்திறமைகளை வெளிக்காட்டி காண்பவர்களை கவர்ந்தனர்.மாணவர்களின் மூன்று ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. அனுராக் மண்டல் நடுவராக இருந்தார். விழாவின் இறுதி நிகழ்வாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா எம்.சண்முகம் தலைமை தாங்கினார்.கல்லூரி தலைவர் மோகன்,கல்லூரி துணைத்தலைவர்கள் பழனிச்சாமி , ரங்கசாமி, பொதுச்செயலாளர் விஜயகுமார், இணைச்செயலாளர் சீனிவாசன்,நிர்வாக குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பெற்றது.போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.   

    • வட்டார அளவில் 29ந்தேதி முதல், மாவட்ட அளவில் டிசம்பா் 6ந் தேதி முதல், மாநில அளவில் ஜனவரி 1ந் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.
    • மாநில அளவில் வெற்றி பெற்று தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

    திருப்பூர்:

    அரசுப் பள்ளி மாணவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தி அவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலைப் பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

    இந்த திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலை சாா்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

    போட்டிகளில் 6 முதல் 9, 9 முதல் 10, 11 முதல் 12ம் வகுப்பு வரை என 3 பிரிவுகளாக நுண்கலை, கவின் கலை, நடனம், நாடகம், வாய்பாட்டிசை, கருவி இசை, மொழித்திறன், இசை சங்கமம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    பள்ளி அளவில் போட்டிகள் தொடங்கி உள்ளது.வட்டார அளவில் 29ந்தேதி முதல், மாவட்ட அளவில் டிசம்பா் 6ந் தேதி முதல், மாநில அளவில் ஜனவரி 1ந் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.

    இதில் வெற்றி பெறும் மாணவா்கள் அடுத்தகட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவாா்கள். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பரிசு, சான்றிதழ் மற்றும் கலையரசன் மற்றும் கலையரசி ஆகிய விருதுகள் வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெற்று தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். இந்த போட்டிகள் திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒடுகத்தூர் அரசு பள்ளியில் போட்டி நடந்தது
    • வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலை திருவிழா கொண்டாட்டம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஆர்வத்துடன் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டனர் வெற்றிப்பெற்றனர்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் இருந்த பல்வேறு கலைகளை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிக்கொண்டு வரப்படும் எனும் நோக்கத்தில்

    ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் துர்காராணி தலைமையில் நேற்று கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியது. இதில் பள்ளி மாணவிகள் ஆர்வ முடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இதில், நடனம், நாடகம், ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கடைசியாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தற்போது இந்த கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்ப டுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது.
    • 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது. சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் வரவேற்றார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல், மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் குமார், மேலாண்மை குழு கல்வியாளர் பால கிருஷ்ணன் மற்றும் உறுப்பி னர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் தனித்தி றனை ஊக்குவித்தனர்.

    மாணவர்கள் கிராமிய பாடல்கள், ஓவியம், நாடகம், நாட்டியம், பறையடித்தல், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.

    • 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 36 வகை போட்டிகள் நடைபெற்றது.
    • கட்டுரை, ஓவியம், கதைகூறுதல், பேச்சு, நடனம், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    கோவை,

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கலைத்திருவிழா நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவை கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா நடைபெற்றது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 36 வகை போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலைத்திறன், கட்டுரை, ஓவியம், கதைகூறுதல், பேச்சு, நடனம், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    இந்த பள்ளியில் நடந்த கலைத்திருவிழாவை கோவை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) புனிதா அந்தோணியம்மாள், பேரூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீகலா ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கலைத்திருவிழாவில் பங்கேற்கும் வகையில் தயார்படுத்தி இருந்தனர். பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் அடுத்து வட்டார அளவிலும், பின்பு மாவட்ட அளவிலும் பங்கேற்பார்கள். மாநில அளவில் வெற்றி பெறுவோர் பள்ளிக்கல்வித்துறை மூலம் துபாய் அழைத்து செல்லப்படுவர்.

    முழுைமயான வளர்ச்சி என்பது மாணவர்கள் தன்னைத்தானே ஆராய்ந்து தன்னம்பிக்கையுடன் கலைநிகழ்வுகளில் பங்கேற்க விழைதல் ஆகும். கல்வி என்பது புத்தகம் மட்டும் சார்ந்தது அல்லாமல் கலைகள், விளையாட்டுத்திறன்கள் ஆகியவற்றையும் உள்ளடங்கி வளர்ப்பதாக இருத்தல் வேண்டும். கலைத்திருவிழா தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு ஆகும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • மேலச் செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.

    செங்கோட்டை:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் மேலச் செங்கோட்டை, அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தலைமையாசிரியர் ராஜன், ஆசிரியர் பிரதிநிதிகள் ஜெஸிகலா, வேலம்மாள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இசக்கித்துரைபாண்டியன், சந்திரா ஆகியோர் உள்ளடக்கிய விழாக்குழு அமைக்கப்பட்டு பல்வேறு போட்டிகளுக்கான நடுவர்களும் நியமிக்கப்பட்டு பள்ளி அளவில் போட்டிகள் கடந்த 23-ந் தேதி முதல் 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. பள்ளி அளவில் இறுதி போட்டி 28-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் முதலிடம் பெறுபவர்கள் வட்டார அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். வட்டார அளவில் வெற்றிபெற்றவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொள்வார்கள்.மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். மாநில அளவில் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்ப டவுள்ளது. தரவரிசையில் முதல் 20 பேர் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

    • அரசு நடுநிலைப்பள்ளிகளில் கலை திருவிழா நடந்து வருகிறது.
    • பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் கலை திருவிழா நடந்து வருகிறது.அவ்வகையில், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடனம், பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புதல், கதை சொல்லுதல், கட்டுரை போட்டி, தமிழ் கையெழுத்து, ஓவியம், நாடகம், களிமண் கதை வேலைப்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு 34-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உமாசாந்தி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ரேஷ்மா முன்னிலை வகித்தார். ஓவியம் வரைதலில் 8-ம்வகுப்பு மாணவர் யோகேஸ்வரன், தனிநபர் நடிப்பில் 6-ம் வகுப்பு மாணவி பிரியா, சிற்பம் செதுக்கும் போட்டியில்7-ம் வகுப்பு மாணவி செல்சியா முதலிடம் பெற்றனர்.போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    நாட்டறம்பள்ளி பேரூராட் சிக்கு உட்பட்ட அதிபெரமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் நேற்று கலைத் திருவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளிகல்விக் குழு தலைவர் ஜெயக்கொடி ஜெயக்குமார் தலைமை தாங் கினார். பள்ளி தலைமை ஆசி ரியை தேன்மொழி வரவேற்றார். வார்டு கவுன்சிலர் லட்சுமி தேவராஜ் முன்னிலை வகித்தார்.

    விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் நாடகம், நட னம், பாட்டு போட்டி உள் ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றது. பா.ஜ.க. கவுன்சிலர் குருசேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை திருவிழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கலை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்
    • கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை பொன்ராணி செய்து இருந்தார்.

    தென்திருப்பேரை:

    மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் கலைத்திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கலை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கவுன்சிலர் ஆனந்த், தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜி அனைவரையும் வரவேற்றார். கலை விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் பரிசுகளை வழங்கினார்.

    கலை நிகழ்ச்சியை முதுகலை ஆசிரியர் ஆர்ட்டர் கிங்ஸ்லி டேவிட்சன், முதுகலை ஆசிரியர் சரவண முத்துக்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை பொன்ராணி செய்து இருந்தார்.

    முதுகலை ஆசிரியை சுனந்தா நன்றி கூறினார். கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


    • பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இதில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதலாவதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    விழாற்கு கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கவிதா அனைவரையும் வரவேற்றார்.

    இதில் சிறப்பு விருந்தி–னர்களாக பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே. பி. ரவி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கலைத் திருவிழாவில் கபிலர்மலை வட்டாரத்தைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட–னர். நிகழ்ச்சி–களுக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    • வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாபோட்டியில் பங்கேற்க உள்ளனர்.
    • பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் கடந்த வாரம் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    கலைத்திருவிழாவை தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலர் (உயர்நிலை) பக்தவச்சலம் துவக்கி வைத்தார். இந்த கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி, பாட்டு, கட்டுரை, ஓவியம், தனி நடனம், குழு நடனம், களிமண் வேலைப்பாடுகள் ஆகியவற்றை மாணவ மாணவிகள் செய்து காண்பித்தனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாபோட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கலைத்திருவிழாவானது வட்டார அளவில் 29 ந்தேதி 9, 10 ம்வகுப்பு மாணவ மாணவிகளுக்கும், 30 ந்தேதி 6, 7,8 மாணவ மாணவிகளுக்கும் இன்று 1 ந்தேதி 11, 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் நடைபெற்றன. இந்த போட்டிகளில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இந்த கலைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வெள்ளகோவில் வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனாட்சி, வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    ×