search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nip-Dee College"

    • சிறப்பு விருந்தினர் பெரியசாமி டெக்ஸ்டைல் துறையின் அதிநவீன கோட்பாடுகளை பற்றி விளக்கினார்.
    • விழாவின் இறுதி நிகழ்வாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடைக் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே "இக்னீஷியா " என்னும் தலைப்பில் கடந்த 10 ஆண்டுகளாக கலைப்போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் 2 நாட்களாக நடைப்பெற்றது.

    முதல் நாள் விழாவினை அடல் இன்குபேஷன் சென்டர்(ஏஐசி ) முதன்மை செயல் அலுவலர் பெரியசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஏ.எப்.டி. துறைத் தலைவர் அருந்ததி கோஷல் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர் பெரியசாமி டெக்ஸ்டைல் துறையின் அதிநவீன கோட்பாடுகளை பற்றி விளக்கினார். ஜி.டி.பி. துறைத் தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார். முக ஓவியம் ( பேஸ் பெயிண்டிங்), சுவரொட்டி விளக்கக்காட்சி (போஸ்டர் பிரசன்டேஷன்), சிகை அலங்காரம் (ஹேர் டு) , காய்,பழங்களில் அலங்காரம் செய்தல் (வெஜிடபிள் ப்ரூட் கார்விங்), படத்தொகுப்பு (கொலாஜ் வொர்க்), வரைதல் திறன் (ஸ்கெட்சிங்), புகைப்படக்கலை (போட்டோகிராபி), மின்னணுக்கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    2-வது நாள் தனி நபர் நடனம் , குழு நடனம் , மெய்ப்பாடு , ஆடை அலங்கார அணிவகுப்பு ( சிறந்த வடிவமைப்பாளர் ,அதிகபட்சப் பொருத்தம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் பல மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு மேடையில் தங்களின் அபரிமிதமான கலைத்திறமைகளை வெளிக்காட்டி காண்பவர்களை கவர்ந்தனர்.மாணவர்களின் மூன்று ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. அனுராக் மண்டல் நடுவராக இருந்தார். விழாவின் இறுதி நிகழ்வாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா எம்.சண்முகம் தலைமை தாங்கினார்.கல்லூரி தலைவர் மோகன்,கல்லூரி துணைத்தலைவர்கள் பழனிச்சாமி , ரங்கசாமி, பொதுச்செயலாளர் விஜயகுமார், இணைச்செயலாளர் சீனிவாசன்,நிர்வாக குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பெற்றது.போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.   

    • கல்லூரி மாணவா்கள் தயாரித்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளைக் காட்சிப்படுத்தியிருந்தனா்.
    • பி.முருகன், கே.பிரபாகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் ஆடை உற்பத்தி மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் பேஷனிஸ்டா என்ற ஆடைக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இதில், கல்லூரி மாணவா்கள் தயாரித்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளைக் காட்சிப்படுத்தியிருந்தனா்.

    பருத்தி, பாலியஸ்டா், லைக்ரா போன்ற பல்வேறு வகையான துணிகளும், வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் தரை விரிப்புகள், போா்வைகள், ஜன்னல் திரைச்சீலைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.இந்தக் கண்காட்சியில் துறைத் தலைவா் கு.பாலகிருஷ்ணன், பேராசிரியா்கள் பி.சங்கரகாா்த்திகேயன், பி.முருகன், கே.பிரபாகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதோடு ஆடை தயாரிப்பு துறையில் வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
    • நிப்ட்-டீ திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தொடக்க விழா நிப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியின் திறன் மேம்பாட்டு துறை சார்ந்த கிராஸ்- பெக்கர்ட் மற்றும் நிப்ட்-டீ திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தொடக்க விழா நிப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கிராஸ்-பெக்கர்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் லேசர் மற்றும் பிரதிநிதிகள் ஹர்விந்தர் சிங், ஷஷி கன்வால் மற்றும் நிப்ட்-டீ கல்லூரியின் தலைமை வழிகாட்டி ராஜா சண்முகம், தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சி மையத்தின் மூலம் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆடை உற்பத்தி துறையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவதோடு ஆடை தயாரிப்பு துறையில் வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

    • வணிகவியல் துறைத் தலைவா் எஸ். கலையரசி வரவேற்றாா்.
    • நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில், வணிகவியல் துறை சாா்பில் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான டிஜிட்டல் வங்கிகளின் சுழல் அமைப்பு தொடா்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

    வணிகவியல் துறைத் தலைவா் எஸ். கலையரசி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிஎஸ்ஜி. கல்லூரியின் துணைப் பேராசிரியா் எஸ்.எஸ். ரம்யா, இந்தியாவின் டிஜிட்டல் வங்கிகளின் சூழல் அமைப்பு, வளா்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்பம், கிரிப்டோ கரென்சியின் நன்மை, தீமைகள், நிதியியல் சாா்ந்த தற்கால பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • கல்லூரியில் உள்ள வாய்ப்புகளை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் துறையின் தலைவா் கலையரசி செய்திருந்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியின் வணிகவியல் துறையின் சாா்பில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவுக்குத் தலைமை வகித்து கல்லூரியின் முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    மாறிவரும் வணிக சூழலுக்கு ஏற்ப மாணவா்கள் தங்களது திறன்களை வளா்த்து கொள்ள வேண்டும். மாணவா்கள் வேலைத் தேடுபவா்களாக இல்லாமல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும். இதற்கு கல்லூரியில் உள்ள வாய்ப்புகளை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

    இதில் வணிகவியல் துறையின் மாணவா் பேரவை (கம்போசியா) தலைவராக ஸ்வேதா, துணைத் தலைவராக ரின்சி கேத்ரின், செயலாளராக தனுசங்கா் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் துறையின் தலைவா் கலையரசி செய்திருந்தாா்.

    ×