search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் நிப்டி-டீ கல்லூரியில் கருத்தரங்கம்
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் நிப்டி-டீ கல்லூரியில் கருத்தரங்கம்

    • வணிகவியல் துறைத் தலைவா் எஸ். கலையரசி வரவேற்றாா்.
    • நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில், வணிகவியல் துறை சாா்பில் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான டிஜிட்டல் வங்கிகளின் சுழல் அமைப்பு தொடா்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

    வணிகவியல் துறைத் தலைவா் எஸ். கலையரசி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிஎஸ்ஜி. கல்லூரியின் துணைப் பேராசிரியா் எஸ்.எஸ். ரம்யா, இந்தியாவின் டிஜிட்டல் வங்கிகளின் சூழல் அமைப்பு, வளா்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்பம், கிரிப்டோ கரென்சியின் நன்மை, தீமைகள், நிதியியல் சாா்ந்த தற்கால பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    Next Story
    ×