என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் ஆடை கண்காட்சி
- கல்லூரி மாணவா்கள் தயாரித்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளைக் காட்சிப்படுத்தியிருந்தனா்.
- பி.முருகன், கே.பிரபாகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருப்பூர்:
திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் ஆடை உற்பத்தி மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் பேஷனிஸ்டா என்ற ஆடைக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இதில், கல்லூரி மாணவா்கள் தயாரித்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளைக் காட்சிப்படுத்தியிருந்தனா்.
பருத்தி, பாலியஸ்டா், லைக்ரா போன்ற பல்வேறு வகையான துணிகளும், வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் தரை விரிப்புகள், போா்வைகள், ஜன்னல் திரைச்சீலைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.இந்தக் கண்காட்சியில் துறைத் தலைவா் கு.பாலகிருஷ்ணன், பேராசிரியா்கள் பி.சங்கரகாா்த்திகேயன், பி.முருகன், கே.பிரபாகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Next Story