search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mavadipannai"

    • தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கலை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்
    • கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை பொன்ராணி செய்து இருந்தார்.

    தென்திருப்பேரை:

    மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் கலைத்திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கலை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கவுன்சிலர் ஆனந்த், தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜி அனைவரையும் வரவேற்றார். கலை விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் பரிசுகளை வழங்கினார்.

    கலை நிகழ்ச்சியை முதுகலை ஆசிரியர் ஆர்ட்டர் கிங்ஸ்லி டேவிட்சன், முதுகலை ஆசிரியர் சரவண முத்துக்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை பொன்ராணி செய்து இருந்தார்.

    முதுகலை ஆசிரியை சுனந்தா நன்றி கூறினார். கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


    ×