search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை விழாவில் அசத்திய மாணவிகள்
    X

    கலை விழாவில் நாடக வேடத்தில் அசத்திய மாணவிகள்.

    கலை விழாவில் அசத்திய மாணவிகள்

    • ஒடுகத்தூர் அரசு பள்ளியில் போட்டி நடந்தது
    • வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலை திருவிழா கொண்டாட்டம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஆர்வத்துடன் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டனர் வெற்றிப்பெற்றனர்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் இருந்த பல்வேறு கலைகளை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிக்கொண்டு வரப்படும் எனும் நோக்கத்தில்

    ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் துர்காராணி தலைமையில் நேற்று கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியது. இதில் பள்ளி மாணவிகள் ஆர்வ முடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இதில், நடனம், நாடகம், ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கடைசியாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தற்போது இந்த கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்ப டுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×