search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னம்பாளையம் பள்ளியில் கலை திருவிழா
    X
    கோப்புபடம்.

    தென்னம்பாளையம் பள்ளியில் கலை திருவிழா

    • அரசு நடுநிலைப்பள்ளிகளில் கலை திருவிழா நடந்து வருகிறது.
    • பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் கலை திருவிழா நடந்து வருகிறது.அவ்வகையில், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடனம், பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புதல், கதை சொல்லுதல், கட்டுரை போட்டி, தமிழ் கையெழுத்து, ஓவியம், நாடகம், களிமண் கதை வேலைப்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு 34-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உமாசாந்தி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ரேஷ்மா முன்னிலை வகித்தார். ஓவியம் வரைதலில் 8-ம்வகுப்பு மாணவர் யோகேஸ்வரன், தனிநபர் நடிப்பில் 6-ம் வகுப்பு மாணவி பிரியா, சிற்பம் செதுக்கும் போட்டியில்7-ம் வகுப்பு மாணவி செல்சியா முதலிடம் பெற்றனர்.போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×