search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவைக்கு இன்று மாலை பிரதமர் மோடி வரும் நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி.
    • சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம்.

    கல்வியை வழங்கும் தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி ஆவார். உலகில் உள்ள பெரிய புத்தகமாக மகாபாரதத்தை தம் கைப்பட எழுதி பெருமை சேர்த்தவர். அவர் அனேக அன்பர்களுக்கு ஞானத்தை போதிக்கும் குருபிரானாக இருப்பதை காண்கிறோம். தமிழ் வேதமான திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிக்கு அவர் ஆசிரியனாக இருந்து கல்வி கற்பித்ததை அவருடைய வரலாறு கூறுகிறது. சில தலங்களில் அவருக்குப் பள்ளிக்கூட விநாயகர் என்ற பெயரும் வழங்குகிறது.

    அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் வாழ்ந்து வீடுபேறு பெற்றதால், திருச்செங்காட்டாங்குடி. அதற்கும் அதன் அருகிலுள்ள தலமான மருகலுக்கும் இடையே சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம் உள்ளது. அந்த இடத்தில் இப்போது விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அது பள்ளிக்கூட பிள்ளையார் கோவில் என வழங்குகிறது.

    ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துறை தலத்தில் பூஜித்து வந்த அந்தணர்கள், குழந்தைகளுக்கு வேத ஆகமங்களைப் பயிற்றுவிக்க நல்ல குருமாரைத் தேடி வந்த அவர்களின் பெருமைகளை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் தானே வயோதிக ஆசிரியனாகத் தோன்றினார்.

    அத்தலத்து சிறார்களுக்கு அவர் உயர்ந்த பாடங்களை நடத்தி ஞானமூட்டினார். அப்படி அவர் வீற்றிருந்து பள்ளிக்கூடம் நடத்திய இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பள்ளிக்கூடப் பிள்ளையார் என்றே பெயர் பெற்றது. இப்படி தமிழக மெங்கும் பல ஊர்களில் பள்ளிக்கூடப் பிள்ளையார் எனும் பெயரில் பல விநாயகர் ஆலயங்கள் இருந்து வந்துள்ளன.

    விநாயகரின் அகன்ற காதுகள் நிறைய விஷயங்களை விடாமல் கேட்க வேண்டும் என்பதையும் துதிக்கையால் மூடியவாய் அதிகமாகப் பேசாமல் ஞானத்தைச் சிந்திக்க வேண்டும் என்பதையும், அவரது உடைந்த கொம்பு எழுதும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு நல்ல விஷயங்களைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதையும், கையிலுள்ள மோதகம் எப்போது அறிவில் நிறைவாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாகக் கூறுவர். அவர் கையிலுள்ள பாச, அங்குசம் மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்தி அடக்கி ஒருமுக சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த மனஅடக்கம் ஒருமுக சிந்தனை எழுதும் ஆற்றல், ஆசிரியர்கள் சொல்வதை ஒன்றுவிடாமல் கேட்டுக் கொள்ளுதல், நன்கு சிந்தித்தல் எப்போது அறிவைத் தேடுவதில் கவனம் கொள்ளுதல் ஆகியவை ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் தேவையான குணங்களாகும். அவற்றை நினைவூட்டலே ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அவர் வீற்றிருந்து அவர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    • புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • 2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1982-ம் ஆண்டு 5 ஏக்கரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளியில் அந்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    முதலில் இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.

    குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் டேன்டீ தொழிலாளர்களின் இடம் பெயர்வு போன்ற காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

    இந்த பள்ளி கட்டிடம் ஓட்டுச்சாவடி மையமாக உள்ளதால் அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது 4 மற்றும் 3-ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவிகள் வீதம் 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிததாக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறி த்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பள்ளியில் 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வகுப்பறை நன்றாகவே இருந்தது. ஆனால் கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

    2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பள்ளி கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதனால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    • சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
    • இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளியிலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காய்கறி தோட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து விதைப்பு முதல் அறுவடை வரை மாணவர்களே முழுவதும் ஈடுபட்டு வேலை செய்கின்றனர்.

    மேலும் எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வேளாண் ஆசிரியர் கந்தன், கைலாஷ் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் சாகுபடி செய்திருந்த சிறுகீரை, அரைக் கீரை வகைகளை அறுவடை செய்யப்பட்டது. இந்த கீரை வகைகளை தலைமை ஆசிரியர் ரவி, மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கினர். இவ்வாறு காய்கறிகளை சாகுபடி செய்வது மாணவர்கள் செய்முறை வகுப்பிற்கும், அவர்கள் பிற்கால வாழ்வியலுக்கும், மேலும் விவசாயத்தில் மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

    • கடும் பனியால் மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது.

    புதுடெல்லி:

    வடஇந்திய பகுதிகளில் கடுமையான குளிர்கால சூழல் காணப்படுகிறது. இதனால், டெல்லி, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடும் குளிரான சூழலில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

    இதுபற்றி டெல்லி கல்வி துறை வெளியிட்ட செய்தியில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அனைவரும் இன்று (15.01.2024) முதல் அவர்களுடைய பள்ளிகளுக்கு வரவேண்டும். இதில், நர்சரி, தொடக்க பள்ளிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனினும், கடுமையான பனிபடர்ந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது. மாலை 5 மணிக்கு பின்னர் எந்த வகுப்பும் கூடாது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவு தெரிவிக்கின்றது.

    குளிரான சூழல் அதிகரித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரின் கல்வி துறை, நர்சரி முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை (16-ந்தேதி) வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது.

    சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் கீழ்வேளுர் ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன.
    • தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் இருந்து வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்துள்ளார்.

    இதைப் பார்த்த கழிவறைக்கு சென்ற மாணவிகள் கூச்சலிட்டவாறு பதட்டத்துடன் சென்று இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தபோது வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் கதவை சாத்திக் கொண்டு திறக்காமல் இருந்துள்ளார்.

    இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப் இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சின்னவர் மகன் பெரியசாமி (வயது 24)என்பது தெரியவந்தது.

    மேலும் வாலிபர் எதற்காக கழிவறைக்கு சென்றார்? வேறு குற்ற வழக்குகளில் ஏதும் தொடர்புடையவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
    • ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.

    காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

    இந்த நிலையில் இரண்டு பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.

    இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே பள்ளிகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.நா. நடத்தும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் ஆஸ்பத்திரியில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆஸ்பத்திரியின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.

    அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    • வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.

    அர்ப்பணிப்பு

    இந்நிலையில் இப்பள்ளிக்கு நியமிக் கப்பட்ட தலைமை யாசிரியர் ஸ்ரீதர், இடைநிலை ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சி, அர்ப்பணிப்பு கல்விப் பணியால், மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை இயக்குனர் கோபால்சாமி இப்பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க உதவினார். கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், தன்னார்வ லர்கள் ஒத்துழைப்பால் பள்ளி வளாகம் புதுப்பொலிவு பெற்றது.

    சிறந்த தொடக்கப் பள்ளி விருது

    இப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதருக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. இதனைத் தொடர்ந்து 2022- 2023- ம் ஆண்டிற்கான தமிழக பள்ளி கல்வித்துறை வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளி விருதுக்கு காளியம்மன் புதூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 14-ந் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்க உள்ளார். இவ்விருதை பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர், வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

    அரசு வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெறும் காளியம்மன் புதூர் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ், துணைத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரண்யா மற்றும் கிராம மக்கள், பெற்றோர்கள், தன்னார்வ லர்கள், கல்வியாளர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    பள்ளி வளாகத்தில் விஷ கதண்டுகள் அகற்றம்

    வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறம் மற்றும் பின்புறம் பல்வேறு வகையான மரங்கள் உள்ளது . அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அந்த பகுதிக்கு செல்லும் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது . இது குறித்து தலைமை ஆசிரியை வளர்மதி புகளூர் தீயணைப்பு துறை நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக் கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்.இதனால் பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    • பேச்சுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
    • முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம் நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுக்கூர் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது.

    மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம் தலைமை தாங்கி கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் மனோகரன் வரவேற்றார்.

    இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், அரசு பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் வட்டார அளவிலான மாணவிகளின் கலைநிகழ்ச்சிி நடைபெற்றது.

    இதில் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன்,கல்வியில் கலை நிகழ்ச்சிகள் என்பது மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வருவது எனவும் உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளங்குகிறது என்றும் பள்ளியின் பற்றி எடுத்து கூறினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ரங்கராஜன், மாவட்ட திட்ட கூறு ஒருங்கிணைப்பாளர் ஷீலா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் புனிதா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தங்கம் நன்றி கூறினார்.

    ×