என் மலர்
நீங்கள் தேடியது "Diwali Festival"
அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது. பின்னர் உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபாவளி ஆஸ்தானத்தில் பெரியஜீயர், சின்னஜீயர், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவஹர்ரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில்களில் தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.
தீப ஒளித் திருநாளான தீபாவளித் திருநாள் இந்தியா மட்டுமின்றி இலங்கை, நேபாளம், மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, பிஜி, வங்கதேசம், என்று பல நாடுகளிலும் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.தீபாவளி பண்டிகையானது வடநாட்டில் ஐந்து நாட்கள் கொண்டாடப் படுகின்றது. தீபாவளியின் முதல் நாள் தண்டேராஸ்,இரண்டாவது நாள் நரக சதுர்த்தசி, மூன்றாவது நாள் லட்சுமி பூஜை, நான்காவது நாள் கோவர்த்தன பூஜை, ஐந்தாவது நாள் பாய்தூஜ் என ஐந்து நாட்களும் மிகவும் விமரிசையாக வட இந்தியர்களால் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப் படுகின்றது.
ராமர் தனது மனைவி சீதை மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் ராவணனைக் கொன்ற பிறகு அயோத்தி திரும்பிய நன்னாளே தீபாவளித் திருநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அயோத்தி மக்கள் அவர்களை வரவேற்பதற்காக வீதிகளிலும் வீடுகளிலும் களிமண் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்தனர். ராவணன் என்னும் அரக்கனைக் கொன்று வெற்றியுடன் நாடு திரும்பியதன் நினைவாக அன்று முதல் தீபாவளி மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.
*பூமித்தாய் பூதேவி மற்றும் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹா ஆகியோரின் மகனாகிய நரகாசுரன் அனைத்திலும் சக்தி வாய்ந்தவனாகவும் நீண்ட ஆயுள் பெற்றவனாகவும் இருக்க வேண்டி தந்தையிடம் வரம் பெற்றார். அந்த வரத்தின் அதிகாரத்தால் வானத்தையும் பூமியையும் வென்று தேவர்கள் மற்றும் மக்களை அதிக கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்.எனவே தேவர்கள் அனைவரும் விஷ்ணுவை அணுகி நரகாசுரன் அகங்காரத்தை அழிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.விஷ்ணு ,கிருஷ்ணஅவதாரமெடுத்து நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் மரணத்திற்கு முன் கிருஷ்ணரிடம் தனது மரணத்தை பூமியில் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றார்.கிருஷ்ணரும் அந்த வரத்தை அருளியதன் காரணமாக நரகாசுரன் இறந்த தினமே தீபாவளித் திருநாளாக கொண்டாடப் படுகின்றது.
* சமண நூல்களின் படி, தர்மத்தை போதிக்கும் ஆசிரியரான இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் பகவான் மகாவீரர் தீபாவளி நாளில் மோட்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளித் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
* ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் இருபத்தியோர் நாள் கேதார கௌரி விரதம் முடிந்தது இந்த தினத்தில்தான் என்று கூறப்படுகிறது. விரதம்முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவம் எடுத்தார். இறைவன் ஜோதி வடிவாக நம்முள் இருப்பதை வழிபடுவதற்கான சிறப்பு நாள் தீபாவளி ஆகும்.மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாக கூறுகிறது ஸ்கந்த புராணம்.
* தீர்க்கதமஸ் என்ற முனிவர் தனது மனைவி, மக்களுடன் காட்டில் வசித்து வந்தார்.இருட்டினால் மட்டுமல்ல,துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள் மற்றும் அரக்கர்களால் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அப்பொழுது அங்கு வந்த முனிவர் சனாதனரிடம் தீர்க்கதமஸ் மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைய வழி ஏதும் இல்லையா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர் தீர்த்தமாடி,புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பம் ஆகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார். மேலும், புனிதமான எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். சரஸ்வதி வாசம் செய் கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமாதேவியும், மஞ்சள் கலந்த குங்குமத்தில் கௌரி தேவியும்,புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள். ஆகவே, புனிதமான இந்நன்னாளில் எண்ணை ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி இறைவனை வழிபடுவது நன்மை பயக்கும் என்று கூறினார். அவ்வாறே தீர்க்கதமஸ் முனிவரும் விரதமிருந்து கொண்டாடப்பட்ட தீப ஒளித் திருநாள் தீபாவளி என்று புராணக் கதைகள் கூறுகின்றன.
* விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமிக்கு பூஜை செய்து தீபங்களை ஏற்றி வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
* பொற்கோவில் கட்டுமான பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
* தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூட கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.
* முகலாய மன்னர்களில் சிலர் தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளை ஆதரிப்பதாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
* தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில், ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பில் இருந்துள்ளனர். இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்கள., மூலிகைகள், யானைத் தந்தங்கள் ஏற்றுமதி செய்யப் பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றது. அந்த வர்த்தக தொடர்பின் போது இந்தியாவிலிருந்து சென்ற பல வாணிகர்கள் இடம் பெயர்ந்த நாட்டில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். ஆகவே பல நாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் படுகின்றது.
* ஒடிசாவில் தீபாவளிக்கு மறுநாள் எம தீபாவளி என்று கொண்டாடு கிறார்கள்.
* பீகாரில் தீபாவளி அன்று வீட்டுக்கு வீடு துடைப்பத்தை தீவைத்துக் கொளுத்தி வீசி எறிகிறார்கள். இப்படி செய்தால் மூதேவி ஓடிவிடும் என்ற நம்பிக்கை அந்த மக்களிடம் நிலவுகின்றது.
* குஜராத் மக்கள் தீபாவளியன்று புது கணக்கு வழக்குகளை தொடங்குகிறார்கள்.
* நேபாளத்திலும் தீபாவளிப் பண்டிகையானது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
* ஆசிய நாடுகளில் பெரும்பாலானவர்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
* அமெரிக்கா, ஹாலந்து, நியூசிலாந்து, கனடா, மொரிஷியஸ், ஜப்பான், இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு சிங்கப்பூரில் தேசிய விடுமுறையானது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு பண்டிகையும் கொண்டாடப்படுவதற்கு பல புராண சம்பவங்களும் வரலாற்று கதைகளும் இருக்கிறது.
ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையானது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மனதில் இருக்கும் கெட்ட எண்ண கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட இருளை நீக்க தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்ரீ பிலவ வருடம் ஐப்பசி மாதம் 18-ம் நாள் (4.11.2021) வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நாளை அதிகாலை 3 மணி - முதல் 6 மணிக்குள் வீட்டில் சுடு தண்ணீரில் கங்காதேவியை நினைத்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
பின்னர் வீட்டில் செய்த இனிப்பு உணவுகளை மகாலட்சுமி சமேத மகா விஷ்ணுவிற்கு வெற்றிலை பாக்கு பழத்துடன் படைக்க வேண்டும். வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றுவது சிறப்பு. புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி பூஜையில் வைக்க வேண்டும்.
பூஜை முடித்து புத்தாடை அணிய வேண்டும். அதன் பிறகு வீட்டுப் பெரியோர்களின் காலில் விழுந்து நல்லாசி பெற்ற பிறகு இஷ்ட குலதெய்வத்தை வணங்க வேண்டும். கேதார கவுரி விரதம் மற்றும் லட்சுமி குபேர பூஜை செய்யவும் உகந்த நாளாகும்.
கேதார கவுரி விரதம் கடை பிடிக்கும் வழக்கம் எல்லா குடும்பத்திற்கும் கிடையாது. பழக்கம் இல்லாதவர்கள் பார்வதி- பரமேஸ்வரரை மனதார வேண்டி இயன்றவரை அசைவ உணவை தவிர்த்து வழிபட்டால் தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு மறையும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள், விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.
பார்வதி பரமேஸ்வர வழிபாடு பிரிந்து வாழும் பல தம்பதியினரை ஒன்று சேர்க்கும். திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் 21 சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் தந்து வணங்கி ஆசி பெற சிவபார்வதி அருளால் விரைவில் திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடைபெறும்.
பொதுவாக கிழமை லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. அமாவாசை திதியும் வியாழக்கிழமையும் இணைந்த இந்த தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது மிக மிக சிறப்பானதாகும்.
வாழ்வாதாரம் பெருக லட்சுமி குபேரருக்கு பச்சை குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட சுப மங்களம் உண்டாகும். லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 5.30 - மணி முதல் 8 மணிவரை ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தீபாவளியன்று அணிய வேண்டிய ஆடையின் நிறம்
மேஷம் - சிவப்பு
ரிஷபம் - சந்தன நிறம்
மிதுனம் - பச்சை
கடகம் - பொன்னிற மஞ்சள்
சிம்மம் - பிரவுன்
கன்னி - கரும்பச்சை
துலாம் - ஆனந்தா நீலம்
விருச்சிகம் - இளஞ்சிவப்பு
தனுசு - வெளிர்மஞ்சள்
மகரம் - கருநீலம்
கும்பம் - வைலட்
இந்தாண்டு திருப்பதியையொட்டி நாளை காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து சாமிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வார் கோவில் அருகே காட்சி அளிக்கின்றன.
இதில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க சாமிக்கு பிரத்தியோக பூஜைகள் தீபாராதனை நடைபெறுகிறது.
இதையடுத்து மாலை கோவில் முழுவதும் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 32,365 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,681 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இந்த நோட்டீசுகளை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-
* பெரியவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் பட்டாசு வெடியுங்கள்.
* பட்டாசை வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்.
* பெரிய வாளியில் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.
* புஸ்வானம் கொளுத்தும்போது சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொள்ளுங்கள்.
* நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசுகளை தூரத்தில் நின்று வெடிக்க செய்யுங்கள்.
* தீ விபத்து ஏற்பட்டால் உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள். அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
* தீ புண்ணுக்கு இங்க், எண்ணெய் போன்றவற்றை உடனே போட வேண்டாம். அருகில் உள்ள டாக்டர்களிடம் சென்று காண்பியுங்கள்.
மகாலட்சுமி பூஜை
திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து வழிபடுங்கள். இதனால் திருமணம் கைகூடும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் வந்துசேரும்.
குபேர பூஜை
செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றாலும், அவற்றைப் பிரித்து வழங்கும் நிதிகள் அனைத்தும் குபேரனின் வசம் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நிதிகளுக்கு அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற தினமாக தீபாவளி இருக்கிறது. எனவே அன்றைய தினம், குபேரன் படத்தை வீட்டில் வைத்து, அதன் இரண்டு பக்கமும் குத்துவிளக்கேற்றி வைத்து, குபேரனுக்கு இனிப்பு பலகாரங்களை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இதனால் செல்வ வளம் தேடிவரும்.
கேதார கவுரி விரதம்
சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி வழிபட்டு பலன் பெற்ற தினம், தீபாவளி. அந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்பார்கள். சிவ- பார்வதி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். சிவ- பார்வதி படத்திற்கு பதிலாக, அர்த்தநாரீஸ்வரர் படத்தை வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு சேர்க்கும்.
சத்யபாமா பூஜை
நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினம் தீபாவளி. நரகாசுரனின் தாய் பூமாதேவியாவார். நரகாசுரனுக்கு அவனது தாயால்தான் மரணம் என்பது வரமாக அளிக்கப்பட்டிருந்தது. எனவே பூமாதேவியின் அம்சமாக கிருஷ்ண அவதாரத்தின் போது தோன்றியவர், சத்யபாமா. அவர்தான் கிருஷ்ணருடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தார். எனவே தீபாவளி அன்று, சத்யபாமாவை வீர லட்சுமியாக பாவித்து பூஜித்து வணங்க வேண்டும்.
முன்னோர் வழிபாடு
துலா மாதமாக சொல்லப்படும் ஐப்பசி மாத அமாவாசை தினம், முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்தில் முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.
குலதெய்வ பூஜை
வடமாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வரை தீ விபத்து தொடர்பாக 271 அழைப்புகளும், அதன்பின்னர் இன்று காலை 8 மணி வரை 74 அழைப்புகளும் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீ விபத்து குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதார் பஜார் குடிசைப்பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார். #Diwali #DelhiFireCalls
தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு ஒரு எதிர்வாதியாக இணைத்து கொண்டது. இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும்.
வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேரம் நிர்ணயம் செய்தது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பட்டாசு வெடிக்க கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் கூடுதல் நேரம் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி தமிழக அரசு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே மாசு இல்லாத சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரி, வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்து, மாசு மற்றும் ஒலி இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (6-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம்.
இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவுகளும் முடிந்து விட்டது. ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இதனால் தனியார் ‘ஆம்னி’ பஸ்களை பயணிகள் நாடி வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் திடீரென கட்டணத்தை உயர்த்திவிட்டது.
சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை - நெல்லைக்கு ஏ.சி. சிலீப்பர் பஸ் டிக்கெட் கட்டணம் ரூ. 2,250, மதுரைக்கு பஸ் கட்டணம் ரூ. 1,100 முதல் ரூ. 1,500-ம், ஏ.சி. சிலீப்பக் பஸ் கட்டணம் ரூ. 1,800 முதல் ரூ. 2000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
சென்னை - பெங்களூர், கோவை, திருச்சிக்கு ரூ. 1,500 முதல் ரூ. 1,800, கன்னியாகுமரிக்கு ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் திடீர் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு போதுமான அளவு சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட வேண்டும்.
தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு அதிகரித்து வசூலிக்கிறார்கள்.
சென்னை - நெல்லைக்கு டிக்கெட் கட்டணம் ரூ. 2,250 வசூலிப்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு ஆம்னி பஸ்களில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். முறை கேடாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Diwali