என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பட்டாசு"

    • பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
    • சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?

    தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


    இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!

    பட்டாசு வெடிக்கும்போது...

    * பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.

    * ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.

    * வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

    * பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும். 

    * பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.

    * பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

    * பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

    * பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். 

    உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!

    * பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    * பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.

    * காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும். 

    * பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


    திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    தீப்பற்றினால்...!

    * பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.

    * தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.

    * தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    * தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

    * கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

    சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!

    * காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. 

    * பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

    * சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    * பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

    * பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.

    * சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.

    * பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.

    • ஆன்லைனில் புக் செய்வதன் மூலம் பட்டாசும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து விடுகிறது.
    • பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களின் பார்வையில் வெடித்து மகிழுங்கள்.

    தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் இனிப்பு.

    தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெற்றார் கிருஷ்ணர். இதற்கு பிறகு கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீட்டிற்கு செல்லும் போது அங்கு அவருக்கு வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது.

    இதனால் தான், தீபாவளியன்று இனிப்பு மற்றும் பட்டாசு வெடித்து உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, புது ஆடை உடுத்தி தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.


    குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வெடித்து மகிழ பட்டாசு வாங்குகிறீர்கள். ஒரு சில பேருக்கு பேன்சி வெடி பிடிக்கும். 200-க்கும் மேற்பட்ட பட்டாசுகள் ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பட்டாசுகள் ரெயில் மற்றும் பேருந்திலோ கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. ஆன்லைன் மூலம் (CRACKERSINDIA.COM) புக் செய்து கொள்ளலாம்.

    ஆன்லைனில் புக் செய்வதன் மூலம் பட்டாசும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து விடுகிறது. கிப்ட் பாஸ் கொடுப்பதன் மூலம் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடியும்.

    பாதுகாப்புடன் எப்படி வெடிப்பது ?

    பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களின் பார்வையில் வெடித்து மகிழுங்கள். ஒரு வாலி நீரை பக்கத்தில் வைத்த பின் பட்டாசு வெடிக்க தொடங்குங்கள். பிறகு வெடிக்கும் போது சற்று விலகி நின்றபடி கொளுத்துங்கள்.

    தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். பட்டாசை சட்டை பையில் வைத்திருக்க கூடாது. வெடிகளை டின் பாட்டில் வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள். நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசு வெடிக்க செய்யுங்கள்.

    சேமிப்பு

    CrackersIndia.Com - ல் 85%ஆபர் உடன் குறைந்த பட்சம்

    Rs. 2500/- வாங்கினால் போதும் இலவசமாக உங்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும். இதனால் நேரம் மற்றும் பணம் சேமிக்கப்படுகிறது.

    Last date for Booking : 12.10.25


    ORDER புக் பண்ணுங்க:

    1. www.crackersindia.com இந்த வெப்சைட் ஓபன் பண்ணுங்க

    2. பட்டாசுகளை தேர்வு செய்யுங்க........

    3. உடனே ஆர்டர் பண்ணுங்க ........

    4. 99621 22309, 93615 81928 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்தது.

    இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தீபாவளியை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் அறிவுறுத்தி உள்ளது.

    • 7 மடங்கு அதிகமான சத்தத்தை விலங்குகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

    ஒளிரும் பட்டாககளும், அவை எழுப்பும் சத்தங்களும் பண்டிகையை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாட வழிவகுக்கும். அதேநேரம் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பட்டாசுகளின் திடீர் வெளிச்சமும், அதிர வைக்கும் சத்தமும் அச்சுறுத்தலாகவே அமையும்.

    பட்டாசுகள் வெடிக்கும்போது நாம் கேட்பதை விட, 7 மடங்கு அதிகமான சத்தத்தை செல்லப் பிராணிகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய திடீர் சத்தங்கள் அவற்றின் உயிருக்கே ஆபத்தாகவும் மாற வாய்ப்பு உள்ளது. தீபாவளியின் போது பட்டாசு சத்தத்தில் இருந்து உங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க சில குறிப்புகள்.

    தீபாவளி பண்டிகை அன்று அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கும் நேரத்துக்கு முன்பாகவே, உங்கள் செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இதனால் வெடிகளின் பயத்தில் இருந்து அவை தப்பிக்க முடியும். அதேபோல பட்டாசு சத்தத்துக்கு உங்கள் செல்லப்பிராணி அதிகமாக பயப்படும் என்று நீங்கள் எண்ணினால், முன்னதாகவே கால்நடை மருத்துவரை அணுகி அதன் பதற்றத்தை குறைப்பதற்கான மருத்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

    தீபாவளி அன்று ஏற்றிவைக்கும் தீபங்கள் மற்றும் அலங்கார மெழுகுவர்த்திகளை, செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும். பட்டாசு சத்தத்துக்கு பயந்து உங்கள் செல்லப்பிராணி சோபா, கட்டில் போன்றவற்றுக்கு அடியில் ஒளிந்துகொள்ள நேரிடலாம். அத்தகைய சமயங்களில் அவற்றை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே இழுத்து வருவதைத் தவிர்க்கவும். அவை அந்த சூழ்நிலையை இயல்பாக கையாள்வதற்கு உதவி செய்யவும்.

    பலரும் மொட்டை மாடிகளில் கூண்டு அமைத்து முயல்களை வளர்க்கிறார்கள். தீபாவளி பண்டிகை சமயத்தில் மட்டும் வீட்டுக்குள்ளேயே அவற்றுக்கு பாதுகாப்பான முறையில் கூண்டுகள் அமைத்து பராமரிக்கலாம்.

    பட்டாசு சத்தத்தால் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுவதை உங்களது குழந்தைகளுக்கு தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது வருங்காலத்தில் விலங்குகளின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

    • தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான்.
    • தீபாவளியை களைகட்டச் செய்வது பட்டாசுதான்.

    பட்டாசு வெடிப்பது ஏன்?

    ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது. திதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு எம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும்.

    தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். ஆனால் அந்த பட்டாசுகள் இல்லாமலும் தீபாவளி கொண்டாடலாமா என்றால் வாய்ப்பே இல்லை என்கின்றனர் நம்ம வீட்டு குட்டீசுகள். தீபாவளி பண்டிகை வருவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பாகவே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    தீபாவளியைக் களைகட்டச் செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம்போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அப்பாக்களுக்கும் ஏன் தாத்தாக்களுக்கும் கூட ஆவல்தான். ஆனால் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்காவிட்டால் தீபாவளியின் தித்திப்பு காற்றில் கரைந்துவிடும்.

    பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்து வருகிறது என்று தெரியவருகிறது.

    `காற்று மாசு ஏற்படும்' என்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறையும் என்றாலும், அந்த குறைவான நேரத்திலும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கவனமாகக்கையாளாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும்.

    கை, கால்களில் காயம், ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புஸ்வானம், தரைச்சக்கரம் போன்றவை சிலநேரங்களில் வெடிக்கக்கூடும். அந்தத் தீப்பொறி பட்டு கண்கள் பாதிகப்படலாம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்களின் துணையுடன் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். புடவை, பட்டுப்பாவாடை போன்ற தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது.

    பருத்தி ஆடை, ஜூன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ளலாம். பட்டாசு வெடிக்கும்போது காலில் செருப்பு அணிவது அவசியம்.

    கம்பி மத்தாப்புகளைக் கொளுத்தி முடித்ததும் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுவிட வேண்டும். வெடிக்காத பட்டாசு களை கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. அதன்மீது உடனே தண்ணீர் ஊற்றிவிட வேண்டும். எந்த பட்டாசுகளையும் கைகளில் வைத்து வெடிக்கக் கூடாது.

    சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளைப் போட்டு வைத்துக் கொண்டு பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது. நீளமான ஊதுவத்தியைப் பயன்படுத்தி தூரமாக நின்று பட்டாசைக் கொளுத்த வேண்டும்.

    பட்டாசு கொளுத்திய பிறகு கிடக்கும் குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாக வைத்துக் கொளுத்தக்கூடாது.

    பட்டாசு விபத்து ஏற்பட்டால் அந்த காயத்தின்மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அதன்பிறகு காயம்பட்ட இடத்தைச் சுத்தமான பருத்தித்துணியைக் கொண்டுமூடி, காயம்பட்டவரை உடனே மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவேண்டும். எந்த காரணம் கொண்டும் காயம் ஏற்பட்ட இடத்தில் பேனா மை, எண்ணெய், பற்பசை, ஐஸ்கட்டி, மஞ்சள், மாவு போன்ற எதையும் தடவக்கூடாது.

    வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், தண்ணீர் அருகில் இல்லை என்றால், தீப்பிடித்தவர்களை ஒரு கம்பளியில் சுற்றி தரையில் உருட்டவேண்டும். கம்பளி சுற்றிய பகுதிக்குள் ஆக்சிஜன் செல்ல முடியாமல், தீ அணைந்துவிடும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். எனவே பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க முடியாது. அதே நேரத்தில் நாம் அனைவரும் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவோம்.

    • சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.
    • சிறுமியின் பெரியப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ், இவரது மனைவி அஸ்வினி. தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர்.

    நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.

    அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது.

    இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.

    போலீசார் விசாரணையின் போது மதுபோதையில் சிறுமியை ஒரு கையில் வைத்து கொண்டு, மற்றொரு கையால் பட்டாசை வெடித்த போது விபத்தில் சிறுமி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    அஜாக்கிரதையாக செயல்பட்ட சிறுமியின் பெரியப்பா மீது வாழைப்பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    நாடு முழுவதும் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பொது மக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

    தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, காலை 6- 7 மணி மற்றும் இரவு 7 - 8 மணி வரை, குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம்/ உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களு்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தீபாவளி திருநாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவு ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரம் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
    தீபாவளி திருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே, சட்டென்று ஞாபகத்திற்கு வருவது பட்டாசுதான். யாராவது பட்டாசு வெடிக்கவில்லை என்றாலும், என்னப்பா... தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருக்கிறாயே... என்று கேட்பார்கள்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், காற்று மாசு அடைதலை கருத்தில் கொண்டும் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்கள் தடைவிதித்துள்ளன. காற்று மாசுபாடு ஏற்படாத வண்ணம் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையார்களை கருத்தில் கொண்டு காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    புகை மூட்டம்

    சென்னையில் காலையிலேயே எழுந்து குழித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, சாமி தரிசனம் செய்த பின், பட்டாசு வெடிக்க கிளம்பிய நிலையில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இதனால் காலையில் மிகப்பெரிய அளவில் பட்டாசு சத்தங்கள் கேட்கவில்லை.

    ஆனால், நேரம் செல்ல செல்ல வானம் பளிச்சென்றாகியது. இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து மக்கள் பட்டாசு வெடித்தனர். இதனால் போலீசார் தரப்பில் சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மாலை நேரம் முடிந்து இரவு வந்ததும் மக்கள் உற்சாகமாகி சக்கரம், புஸ்வானம், ராக்கெட், மத்தாப்பு போன்ற வெடிகளை வெடிக்க ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம்தான் என்பதை மனதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பட்டாசு வெடிக்க ஆரம்பினர்.

    புகை மூட்டம்

    புஸ்வானம், மத்தாப்பு, சக்கரம், ராக்கெட் போன்ற வெடிகள் அதிக அளவு புகையை வெளியிடக்கூடியவை. இதனால் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் பட்டாசு புகையால் சூழ்ந்து காணப்பட்டன. ஏற்கனவே, பருவமழை காரணமாக கருமேகம் சூழ்ந்து வானம் காணப்பட்ட நிலையில், பட்டாசு புகையால் பார்க்க முடியாத அளவிற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது.

    மார்கழி மாதம் பனி சூழ்ந்து காணப்படுவதுபோல் சாலைகள் காணப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்தை பார்க்க முடியாத அளவிற்கு அவதிக்குள்ளானார்கள். நடந்து செல்பவர்களுக்கு கூட எதிரே வரும் வாகனங்கள் மிக அருகில் வந்த பின்னர்தான் தெரியும் அளவிற்கு மேக மூட்டமாக காணப்பட்டது.
    தீபாவளி பட்டாசுக் கடைகளை நடத்த தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நவம்பர் 6-ந் தேதி தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள், வெடிபொருள் சட்ட விதிகளின்படி மாவட்ட கலெக்டரிடம் தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றிட வேண்டும்.

    உரிமத்தினைப் பெறுவதற்கென கூடிய தங்களது விண்ணப்பத்தினை படிவம் ஏஇ-5 ( 5 - பிரதிகள்), தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 சதுர மீட்டர் முதல் 25 சதுர மீட்டர் வரை உள்ளடக்கிய நிலத்தைக் குறிக்கும் வரை படத்தில் சாலை வசதி, சுற்றுப் புறத்தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், உரிமம் கோரும் இடம் வாடகைக் கட்டிடம் என்றால் இடத்தின் பத்திர நகல் மற்றும் வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், உரிமக் கட்டணம் ரூ.500 மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படங்கள் - 2 ஆகிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இம்மனுக்கள் பரிசீ லனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அக்டோபர் 20-ந் தேதிக்குள் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×