search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Medicine"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.
    • விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது.

    உடல் மற்றும் மனம் என இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள்.

    உடல் எடை அதிகமாக இருந்தால். எடையைக் குறைத்தாலே பாதி பிரச்சினைகள் சரியாகும்.

    தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாகக் குறையும். ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.

    குறிப்பாக யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை பயன்தரும். காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்துவதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். அவற்றைக் குறைத்துக்கொண்டு நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.

    எதிர்மறையான சிந்தனையையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். சிறு விஷயங்களுக்கு கூட பதற்றப்பட்டு, பின்னர் அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடும். பிறகு பல நேரம் நம்மை அறியாமலேயே பதற்றம் வந்துவிடும்.

    'ஒரு விஷயம் நடந்துவிடுமோ' என்று நாம் கற்பனை செய்வதால், எதுவும் நடக்கப்போவதில்லை. ஏன் பதற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது. இந்த வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவற்றைச் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது, சூட்சுமம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
    • அதிமதுரம் ஒரு `நிதானமான’ மலமிளக்கி.

    * அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

    * புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

    * அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் ரத்தம் நிற்கும்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

    * அதிமதுர வேர் பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்துவர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

    * குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை `அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்' எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

    * அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத்தொடங்கியிருக்கின்றன.

    * சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.

    * சைனஸ் பிரச்சினை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தை சிறிதளவு சேர்க்கலாம்.

    * அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது.

    * பொதுவாக அதிமதுரம் ஒரு `நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும்.  ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.

    * அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

    * அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

    * வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறு கோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருமலும், சளியும் ஜலதோஷத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளே.
    • நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் பாதிப்படையலாம்.

    பொதுவாக அடிக்கடி ஏற்படும் தும்மலும், இருமலும், சளியும், ஒவ்வாமை மற்றும் ஜலதோஷத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளே.

    அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சில வைரஸ் கிருமிகள், உங்களுடைய மூக்கின் உள்பகுதியிலோ அல்லது தொண்டையின் உள்பகுதியிலோ வந்து உட்கார்ந்து கொண்டு கொடுக்கும் தாங்கமுடியாத குடைச்சலினால் ஏற்படுவதே தும்மல், இருமல் மற்றும் சளி ஆகும்.

     தும்மல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதற்காரணம் அலர்ஜி. ஒத்துக்கொள்ளாத, பிடிக்காத வாசனைகள், செல்லப்பிராணிகளின் வளர்ப்பினால் வரும் ஒவ்வாமை, பிடிக்காத ரசாயனப் பொருட்களின் வாசனைகள், பிடிக்காத பொருட்களின் நெடிகள், சமையலறை நெடி, புகை, வாசனைத் திரவியங்களின் நெடிகள், காற்றில் மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கண்ணுக்குத் தெரியாத தூசித்துகள்கள், தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் மாற்றம் போன்றவைகள் உடனடியாக தும்மலை ஏற்படுத்திவிடும்.

    அதிக வேகத்தில் தும்மினால் காது சவ்வு, மிகச்சிறிய ரத்தக் குழாய்கள் பாதிக்கும் ஆபத்து உள்ளது. நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் பாதிப்படையலாம். வேகமாகத் தும்மும்போது மூக்குக்கும், வாய்க்கும் நேராக கர்சீப் அல்லது துண்டை வைத்துக் கொண்டு தும்முங்கள். ஏனெனில் தும்மல், சுமார் 27 அடி தூரம் வரை பரவக் கூடும்.

     அதிக தடவை தும்மினாலோ, தொண்டையில் பிரச்சினை இருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ, மூக்கில் நீர் தொடர்ச்சியாக வடிந்து கொண்டிருந்தாலோ, நீங்கள் உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தியுங்கள். நான்கைந்து தும்மலுக்கெல்லாம் சிகிச்சை தேவையில்லை. விட்டு விடுங்கள். தானாகவே சரியாகிவிடும்.

    அடிக்கடி கையைக் கழுவுங்கள். வீட்டில் இருப்பவர்களுடன் நெருக்கமாக சேர்ந்து இருக்காதீர்கள். அலர்ஜியை உண்டாக்கக் கூடிய பொருட்களை உபயோகப்படுத்தாதீர்கள். அதன் அருகிலும் செல்லாதீர்கள். முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். புகை, நெடி, தூசி, மாசு அதிகமுள்ள இடங்களைத் தவிருங்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எலும்பு தேய்மானம் பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகிறது.
    • அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான சேதமாகும்.

    பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

    எலும்பு தேய்மானம் பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகிறது. இது அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான சேதமாகும். ஒவ்வொருவரின் உடலமைப்பின் தனித்தன்மையின் படியும், மூட்டுகளை பயன்படுத்தும் முறைகளை பொறுத்தும் மாறுபடும்.

    உதாரணத்திற்கு மூட்டு எலும்பின் அடர்த்தி மற்றும் கனிமச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கும் உடற்பருமன், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் கரடுமுரடான பாதைகளில் அதிகமாக நடப்பவர்களுக்கும் மூட்டு தேய்வு அதிகமாக ஏற்படுகிறது.

    தடுக்கும் முறைகள்:

    1) உடற்பருமனை குறைக்க வேண்டும்.

    2) புரதச்சத்து மற்றும் கனிமச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 3) கரடுமுரடான பாதைகளில் நடப்பதையும், படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

    4) உபநோய்கள் (அதிக உடற்பருமன் மற்றும் சர்க்கரை நோய்) இருப்பவர்கள் அதற்கான சிகிச்சையை முறையாக எடுக்க வேண்டும்.

    5) அன்றாட பழக்க வழக்கங்களில் மூட்டுகளை மடக்கி உட்காராமல் நாற்காலியில் உட்கார வேண்டும். மேற்கத்திய கழிவறை முறையை உபயோகிக்க வேண்டும்.

     பொதுவாக, 13 வயதில் ஒரு பெண் குழந்தை, பூப்பெய்தும் பருவத்தில், சிகப்பரிசி, கேழ்வரகு புட்டு , எள் உருண்டை, கருப்பட்டி, நல்லெண்ணெய், உளுந்தங்களி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவற்றை கொடுக்கத் தொடங்க வேண்டும். இதை தினமும் கொடுக்க முடியவில்லை என்றாலும், மாதவிடாய் நேரத்திலாவது, நான்கு நாள்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருவது நல்லது.

    இதே வயதில்தான், ஆண்பிள்ளைகளும் அடுத்தக்கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைய தொடங்குகிறார்கள். எனவே, அந்த வயதிலிருந்தே அவர்களுக்கும் இந்த உணவுளை எல்லாம் கொடுக்கத் தொடங்கினால், அவர்களும் உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள், மூட்டுவலி என்றதுமே வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள தொடங்குகிறார்கள்.

    அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன், இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்த நீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது காலை டீ குடித்தால், மாலை வேளையில் காய்களுடன் இஞ்சி, சீரகம், மிளகு எல்லாம் சேர்த்து ஒரு சூப் மாதிரி செய்து குடித்து வரலாம். அடுத்து கேழ்வரகு சார்ந்த உணவுகள், களியாகவோ, முருங்கைக்கீரை சேர்த்து அடையாகவோ, புட்டாகவோ, கஞ்சியாகவோ, தோசையாகவோ செய்து காலை வேளையில் சாப்பிட்டு வரலாம்.

     தோசைக்கு மாவு அரைக்கும்போது, சிகப்பரிசியும் சேர்த்து தோசை மாவு தயாரித்து அதில், இட்லியாகவோ, தோசையாகவோ செய்து சாப்பிட்டு வரலாம். சிகப்பரிசி அவல் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். அதுபோன்று எள்ளு சேர்த்த உணவுகள், கொள்ளு வேக வைத்து சுண்டலாக செய்து சாப்பிடுவது, அல்லது எள்ளு, கொள்ளு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு பொடியாக திரித்து வைத்துக் கொண்டு, சாதத்தில் போட்டு சாப்பிடுவது, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடுவது போன்றவற்றை செய்யலாம்.

    பச்சைபயறை முளைக்கட்டியோ, வேக வைத்தோ, கூட்டு வைத்தோ செய்து சாப்பிட்டு வரலாம். வெந்தயம், சீரகம், தனியா வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, சாம்பார், கோதுமை தோசை, ராகி அடை செய்யும்போது சிறிது தூவி சாப்பிட்டு வரலாம்.

    மிளகு அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். சாமை, வரகு, தினை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். பாதாம் ஊற வைத்து தோல் நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. பால் சார்ந்த உணவுகளான மோர், தயிர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    கால்சியம் மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ரத்தக்குழாய் திக்காவது அல்லது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது அல்லது குதிகாலில் கூடுதலாக எலும்பு வளர்வது போன்றவை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே, முடிந்தளவு மாத்திரைகளை தவிர்த்துவிட்டு, உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

    அதேபோன்று கால்சியம் சத்துடன் கண்டிப்பாக, வைட்டமின் டி சத்தும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிகளவு இருக்கிறது. அது கிடைக்க, காலை 9 மணிக்குள் அல்லது மாலை 3-5- க்குள் சிறிதுநேரம் வெயில்படும்படி 20 நிமிடம் நிற்பது நல்லது. இப்படி வெயிலில் நிற்பதற்கு முன்பு, சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு போய் நிற்பது மேலும் சிறந்தது.

     பச்சை காய்கறிகள், பிரண்டை, முடக்கற்றான் இவையெல்லாம் வாரத்திற்கு 2 நாள்கள் சேர்த்து வருவது மிகவும் நல்லது. இது இரண்டும் முடக்குவாதத்திற்கு நல்ல நிவாரணம் தரும். முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றையும் அதிகம் சாப்பிட்டு வரலாம். இதைத் தொடர்ந்து எடுத்து வரும்போது, மேற்கொண்டு எலும்பு தேய்மானம் ஆவது தடுக்கப்படும். மூட்டுகளுக்கும் பலம் கிடைத்து வலி குறையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது.
    • நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    ஒவ்வொரு அரிசியிலும் யார் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ இல்லையோ, நமது உடல் திசுக்கள் ஒவ்வொன்றிலும் நாம் பாரம்பரியமாக உண்டு வந்த தானியங்களின் மூலக்கூறுகள் பதியப்பட்டிருக்கும். நமது நிலத்தில் விளையும் கிழங்கு, காய், கனி, தானியங்கள், இதில் உலவும் விலங்குகளின் பால், ஊண் ஆகியவற்றை ஏற்கும் விதத்திலேயே நமது செல்கள் வடிவமைந்திருக்கும்.

    சந்தை தாராளமயமாதலுக்கு முன்னர்வரை நாம் உண்டுவந்த உணவுப் பொருட்கள் நமது சுற்றுவட்டாரத்தில் மட்டுமே விளைந்தவை.

    இன்றைக்கு நம் கண்ணெதிரில் விளையாத கோதுமை, ஓட்ஸ், சோயா போன்ற பலவும் நம் உணவுப்பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டு விட்டன. இவற்றை உண்பதா, வேண்டாமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். காலங்காலமாக உண்டுவந்த தானிய வகைகளை ஏன் திடுமென நாம் கைவிட்டோம்?

    ஆற்றுப்பாசனம் அல்லாத மானாவாரிப் பயிர்கள் விளையும் தமிழக நிலப்பகுதிகளில் விவசாயிகள் சிறிதளவே நெல்லை விளைவித்தார்கள். பெரும்பாலான நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற தானியங்களையே விளைவித்து வந்தார்கள். நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    'பசுமை புரட்சி' என்ற பெயரில் அன்றாட பயன்பாட்டு விளைபொருளுக்கு மாறாக பணப்பயிர் விளைச்சலுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்தன. பணப்பயிர் உற்பத்தி தொடங்கியதும் மக்களுக்கும், மண்ணுக்கும் இடையில் இருந்த உயிர்ப்புமிக்க பிணைப்பு அறுபட்டு விட்டது.

    குறுகிய காலப்பயிர் வகைகளை விவசாயிகள் விளைவிக்க தொடங்கினார்கள். இதன் விளைவாக இந்த மண்ணில் நெல் ஏகபோகமானது போலவே, நமது உணவிலும் அரிசி ஏகபோகமானது. பல தானிய, பலவகை உணவு என்றிருந்த நமது உணவுக்கலாசாரம் சிதைந்து போனது.

    இன்றைய அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது. இன்றைய வேலை முறையில் உடலுழைப்பு குறைந்துவிட்டது என்றாலும், பல்திறன் தேவைப்படும் காலம் இது. பல்திறனை ஈடுசெய்யும் வகையில் குறைந்த அளவில் அதிக ஆற்றலை வழங்கும் உணவே நம்முடைய தேவை. அதற்கு பொருத்தமானவை சிறுதானியங்களே. அதேபோல் சிறுதானிய சமையலும் சட்டென்று முடிந்துவிடக்கூடியது.

    அரிசியும், உளுந்தும் ஊறவைத்து, அரை மணி நேரம் ஆட்டி, எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தட்டிலோ, தோசைக் கல்லிலோ வார்த்து, துணையாக சட்னியோ சாம்பாரோ செய்ய ஏக தடபுடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரிசி, உளுந்து போட்டு மாவாட்டி ஒரு வாரத்துக்கு பிரிஜ்ஜில் வைக்கிறார்கள். ஆனால் இந்த மாவு, அரைத்த மறுநாளே தன் உயிராற்றலை இழந்துவிடுகிறது.

    இதை பலர் உணர்வதில்லை. சிறுதானியங்கள் நெருப்புச்சத்து கொண்டவை என்பதால், உடலுக்கு பல நன்மை அளிப்பவை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும்.
    • தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது.

    நாம் பயன்படுத்தும் கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும். எண்ணெயில் கடுகை இட்டுத் தாளிக்கும்போது, கடுகு சூடேறி அதற்குள் இருக்கும் நீர் ஆவியாகும்.

    கடுகின் தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது. நமக்கு கேட்கும் `பட்... பட்...' என்கிற சத்தமும்கூட, ஆவியாகி வெளியே வரும் நீர், எண்ணெயில் படுவதால்தான் உருவாகிறது. சூடான எண்ணெயில் நீர்த்துளிகள் படும்போது சத்தம் வரும் அல்லவா, அதுபோலத்தான்.

    ஆனால், எல்லா கடுகும் பாத்திரத்தைவிட்டு வெளிநடப்பு செய்வதில்லை. ஒன்றிரண்டு கடுகுகள் வெடித்தாலும், அவை பாதியாக பிய்ந்து போவதில்லை. உருண்டையாகத்தான் இருக்கின்றன. ஆக, கடுகுக்குள் இருந்த நீராவி வெளியே வரும்போது, கடுகை மொத்தமாகச் சிதைத்து விடுவதில்லை. ஒரு சிறு துவாரத்தை இட்டுக்கொண்டு நீராவி வெளியேறுகிறது.

    எனவே, எந்த கடுகு எவ்வளவு பெரிய துவாரம் இட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே கடுகு வெளியேறித் தப்பிக்குமா, இல்லை நம் உணவுத் தட்டுக்கு வருமா? என்பது முடிவாகிறது.

    கடுகில் ஏற்படும் துவாரம் சற்றுப் பெரிதாக இருந்தால், விரைவில் நீராவி வெளியேறிவிடும், கடுகால் பறக்க முடியாது. ஆனால், நுண்ணிய துவாரமாக இருந்தால், நீராவி சிறிது சிறிதாக வெளியேறும். அப்படி வெளியேறும் நீராவியால் தனக்கு கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னேறி கடுகு மேலே பறக்கும். கடுகுக்குள் இருக்கும் நீராவி முழுவதும் வெளியேறிவிட்டால், கடுகுக்கு மேற்கொண்டு உந்துவிசை கிடைக்காது. அப்போது கடுகு கீழே விழுந்துவிடும். இவ்வளவு சாகசம் செய்யும் ஒரு கடுகின் எடை மிக மிக குறைவானதுதான்.

    சின்னச்சிறு கடுகுக்கும், வானைத் தொடும் ஏவுகணைக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஓர் ஏவுகணை மேலே செல்ல வேண்டுமென்றால், எரிபொருள் தேவை. ஏவுகணை ஏவப்படும்போது எரிபொருள் எரிக்கப்படும். அப்போது வெளியாகும் வாயுக்களால் அழுத்தம் உண்டாகி, அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையை பயன்படுத்தி ஏவுகணை முன்னேறிப் போகிறது.

    ஆக, சூடான எண்ணெயில் பட்டதும் வெடித்துப் பறக்கும் கடுகும், ஏவுகணையும் ஒரே வகையைச் சேர்ந்தவைதாம். இதுதான் கடுகுக்குள் உள்ளே இருக்கும் ரகசியம். இன்னும் சொல்வதென்றால் குட்டிக் குட்டி உருண்டை வடிவ ஏவுகணைகளைத்தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், என்று கடுகை நினைத்து பெருமிதமும் கொள்ளலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பருவங்களில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
    • புதிய விளை பொருட்களை சாப்பிடும் வாய்ப்பை தவறவிடக்கூடாது.

    அந்தந்த பருவ காலங்களில் அதிகம் விளையும் பொருட்களை அவசியம் உட்கொள்ள வேண்டும். அவை அந்த பருவங்களில் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும், அல்லது நோயின் தீவிரத்தை குறைக்கும். உணவு பிரியராக இருப்பவர்கள் அந்தந்த சீசனில் கிடைக்கும் புதிய விளை பொருட்களை சாப்பிடும் வாய்ப்பை தவறவிடக்கூடாது.

    கம்பு

    தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

    உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்த உதவும். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    இதயம்சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.

    முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும். வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த நோய்களை தடுக்க உதவும்.

    சாப்பிடும் முறை:

    அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக இந்த உணவை சேர்க்கலாம். கோதுமை மாவுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

    மழை, குளிர் கால சீசனின் போது கம்பை கட்டாயம் உட்கொள்ள வேண்டும். அது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.

    எள்

    தாமிரம், மாங்கனீசு, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம் போன்றவை நிரம்ப பெற்றது.

    கல்லீரலை பாதுகாக்க உதவும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    எள்ளில் சீசமின் மற்றும் செசமோலின் ஆகிய இரண்டு தனித்துவமான பொருட்கள் உள்ளன. அவை உடலில் கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டவை.

    சாப்பிடும் முறை:

    மாவு ரொட்டிகள், சட்னிகள், சாலடுகள் மீது தூவி சாப்பிடலாம்.

    மக்காச்சோளம்

    பெருலிக் அமிலம், கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவை நிரம்ப பெற்றது.

    இது சிறந்த புரோபயாடிக் பண்புகளை கொண்அது. செரிமானத்துக்கு உதவும். வளர்ச்சிதை மாற்றத்தை எளிதாக்கும். உடல் எடை குறைப்புக்கு வித்திடும்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கவும் உதவும்.

    ரத்த சோகையை தடுக்க உதவும். உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட்டுகளையும் உள்ளடக்கியது.

    சாப்பிடும் முறை:

    வேகவைத்த சோளத்தை சாலட்டுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.

    கோதுமை மாவுக்கு பதிலாக சோளமாவை பயன்படுத்தலாம்.

    செரிமானத்திற்கு உதவுவதில் இருந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது வரை மக்காச்சோளம் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

    பீட்டா கரோட்டின் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் கொண்டது.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.

    இரும்பு, கால்சியம், செலினியம், உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன.

    சாப்பிடும் முறை:

    உடலுக்கு நன்மை பயக்கும் பீட்டா கரோட்டின் உறிஞ்சுதலை அதிகரிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்ப்பது சிறந்தது.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு பருவக்காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவுப்பொருள். இது சுவையுடன் ஆரோக்கியமான நன்மைகளையும் வழங்கக்கூடியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லா உடல் உறுப்புகளுக்கும் இதயத்தின் ஆரோக்கியம் முக்கியமானது.
    • இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது உடல் நலனுக்கு அவசியமானது.

    ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் இதயத்தின் ஆரோக்கியம் முக்கியமானது. ஏனென்றால் ரத்தத்தை `பம்ப்' செய்து உடல் முழுவதும் கடத்துவது, உடலின் அனைத்து உறுப்புகள் மற்றும் செல்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குவது போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்கிறது. இதயம் சரியாக செயல்படாதபோது இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் அவசியமானது. இதயம் நலமுடன் இருந்தால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஊட்டச்சத்துமிக்க உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் இதய ஆரோக்கியத்தை சுமூகமாக பராமரிக்கலாம். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். பெண்களை காட்டிலும் ஆண்கள்தான் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஆண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் 9 அறிகுறிகள் உங்கள் கவனத்திற்கு...

    மார்பு வலி

    இதய நோய்க்கான பொதுவான அறி குறிகளில் இதுவும் ஒன்றாகும். மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது மார்பு முழுவதும் சில நிமிடங்கள் வலி நீடிக்கும். அடிக்கடி இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

    மூச்சு திணறல்

    படிக்கட்டுகளில் ஏறுவது, நடப்பது, மளிகைப் பொருட்களை தூக்கி செல்வது போன்ற அன்றாட நடவடிக்கைகளின் போது மூச்சுத்திணறலை உணரலாம்.

    ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

    ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது பட படப்பு இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் படபடப்பது அல்லது துடிப்பதை தவிர்ப்பது போல் உணரலாம்.

    சோர்வு

    போதுமான ஓய்வு எடுத்தாலும் கூட எப்போதும் சோர்வாக இருப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    வீக்கம்

    இதய நோய் அறி குறியை வெளிப்படுத்தும் மற்றொரு காரணி வீக்கம். கால்கள், கணுக்கால் அல்லது பாதங்களில் வீக்கம் ஏற்படக்கூடும்.

    அசவுகரியம்

    உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு சார்ந்த கடினமான வேலைகளில் ஈடுபடும்போது மார்பில் அசவுகரியம் உண்டாவது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    அஜீரணம், நெஞ்செரிச்சல்

    குமட்டல், அஜீரணம் அல்லது நெஞ் செரிச்சல் உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்சினைகள் கூட இதய நோய்க்கான அறிகுறிகளாக அமையக்கூடும்.

    தலைச்சுற்றல்

    தூக்கத்தில் இருந்து எழும்போதோ, அமர்ந் திருந்த இடத்தில் இருந்து எழுந்து நிற்கும்போதோ, வேலை பார்க்கும்போதோ தலைச்சுற்றல் உணர்வை அனுபவிப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    முதுகு வலி

    கழுத்து, தாடை அல்லது முதுகில் வலி ஏற்படுவதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக மார்பு வலி அல்லது மூச்சுத்திணறல் போன்ற பிற அறிகுறிகளும் சேர்ந்து வெளிப்படுவது இதய நோய்க்கு வித்திடலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்யக்கூடியது.
    • குளிர்காலத்திலும் அதனை சாப்பிடலாமா?

    வெள்ளரிக்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்டது. கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்யக்கூடியது. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் அனைத்து தரப்பினராலும் விரும்பி ருசிக்கப்படுகிறது. குளிர்காலத்திலும் அதனை சாப்பிடலாமா? என்ற குழப்பம் பலருக்கும் எழுவதுண்டு.

    உண்மையில் வெள்ளரிக்காய், கோடையில் மட்டுமல்ல குளிர்காலத்திலும் சாப்பிட ஏற்றது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வெள்ளரிக்காயில் ஏராளம் இருக்கிறது. கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் குளிர்கால `சூப்பர் புட்' வரிசையில் வெள்ளரிக்காயும் இடம் பிடித்துள்ளது. அதனை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    நீர்ச்சத்து:

    குளிர் காலத்தில் வீசும் உலர்ந்த காற்று சருமத்தை சேதப்படுத்தி, மந்தமாக்கி விடும். வெள்ளரிக்காயில் நீர் அதிகம் உள்ளடங்கி இருப்பதால் அது இயற்கையாகவே நீர்ச்சத்து கொண்ட சிறந்த பொருளாக விளங்குகிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. உடல் எடை இழப்புக்கு உடலில் போதுமான அளவுக்கு நீரேற்றம் இருப்பது முக்கியமானது. அதன் தேவையை வெள்ளரிக்காய் பூர்த்தி செய்துவிடும். அத்துடன் பசியை கட்டுப்படுத்தவும் உதவும்.

    கலோரி:

    உடல் எடையை குறைப்பதற்காக போராடுபவர்களுக்கு வெள்ளரிக்காய் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். ஆனால் அதிக நார்ச்சத்தை கொண்டிருக்கும். அதனால் அதிக கலோரிகளை சேர்க்காமலேயே உடல் எடையை குறைப்பதற்கு ஒத்துழைக்கும்.

    சருமம்:

    வைட்டமின்கள் ஏ, சி போன்றவை சருமம் விரும்பும் ஊட்டச்சத்துக்களாகும். இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும். சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மைக்கு வித்திடும். சரும செல்களை சேதப்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி, விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை குறைக்கும். சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் மாற்றும்.

    நச்சுக்கள்:

    வெள்ளரிக்காய் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவும். இத்தகைய நச்சு நீக்கும் செயல்முறை செரிமான அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு எடை இழப்புக்குக்கும், பொலிவான சருமத்திற்கும் வித்திடும்.

    வளர்சிதை மாற்றம்:

    வெள்ளரிக்காயில் மாங்கனீசு மற்றும் வைட்டமின் கே உள்ளன. இவை இரண்டும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எடை இழப்பையும் விரைவாக்குகின்றன. குளிர்காலத்தில் சரும நலன் காக்கவும் துணை புரிகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அளவுக்கு அதிகமாக ருசிக்கும்போதும் கூட சிலருக்கு விக்கல் வரலாம்.
    • சுவாசக் காற்றில் தடை ஏற்படும்போது விக்கல் உண்டாகும்.

    விக்கல் வருவது உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடாகும். யாரோ நம்மை நினைப்பதால் தான் விக்கல் வருகிறது என்ற கருத்து பலரிடம் உள்ளது. உணர்ச்சி மிகுந்த சூழ்நிலையில் இருக்கும் போதும், ஒரு குறிப்பிட்ட சுவையை அளவுக்கு அதிகமாக ருசிக்கும்போதும் கூட சிலருக்கு விக்கல் வரலாம்.

    நம்முடைய சுவாச செயல்பாட்டில், காற்றை உள் இழுக்கும்போது மார்புத் தசைகள் விரிவடையும். அப்போது மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள 'உதரவிதானம்' என்ற சவ்வு பகுதியும் சேர்ந்து விரியும். இதன்மூலம் தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறந்து, நுரையீரலுக்குள் உள்ள காற்றின் அழுத்தம் குறையும். இதன் காரணமாக நுரையீரலுக்குள் அதிக காற்று சென்று சுவாசம் சீராக நடைபெறும்.

    சில நேரங்களில் மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள், உதரவிதானத்தை உரசும்போதோ அல்லது உதரவிதான பகுதியில் எரிச்சல் ஏற்படும்போதோ, மூளையின் இயல்பான கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக சீரற்று செயல்பட ஆரம்பிக்கும். அப்போது குரல்நாண்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு நாம் சுவாசிக்கும் காற்று குறுகிய இடைவெளி வழியாக நுரையீரலுக்குள் சென்று திரும்பும் சூழல் உண்டாகும். இவ்வாறு சுவாசக் காற்றில் தடை ஏற்படும்போது விக்கல் உண்டாகும். இவ்வாறு அடிக்கடி விக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

    நாம் வேகமாக உணவு சாப்பிடும்போதும், சூடான பானத்தை குடிக்கும்போதும், உடலுக்குத் தேவையான தண்ணீரின் அளவு குறையும்போதும், சுவாச செயல்பாடு சீரற்ற நிலையில் இருக்கும். அத்தகைய சமயங்களில் இயல்பாக விக்கல் உண்டாகும்.

    * தொடர்ந்து அல்லது அடிக்கடி விக்கல் ஏற்படுவது நோயின் அறிகுறியாக வும் இருக்கலாம். உதாரணமாக, இரைப்பை புண் கள் (அல்சர்), குடல் அடைப்பு, சிறுநீரகக் கோளாறு அல்லது ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும் போதும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று உண்டாகும் போதும், கல்லீரல் கோளாறு, நுரையீரல் அழற்சி, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி போன்றவற்றின் அறிகுறியாகவும் தொடர் விக்கல் வரும் உணர்வு உண்டாகும்.

    * மன அழுத்தம், திடீரென ஏற்படும் வெப்ப நிலை மாற்றத்தால் நம் உடலில் ஏற்படும் வறட்சி காரணமாகவும் விக்கல் உண்டாகும்.

    * உட்கார்ந்த நிலையில் முழங்கால்களை உடலுடன் சேர்த்து அணைத்தவாறு பிடிப்பதன் மூல மாக விக்கலை நிறுத்த முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print