search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "symptoms"

    • நோயாளிகளின் சளி, உமிழ் நீர், வியர்வை மூலமாக பரவுகிறது.
    • தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும்.

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 50 பேருக்கும் மேற்பட்டோர் வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவில் பரவும் நிபா வைரஸ் பாதிப்பு எல்லையோர தமிழக பகுதிக்குள் பரவாமல் இருக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை மற்றும் நீலகிரிக்கு பஸ்கள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் எல்லையோரம் தீவிர மருத்துவ சோதனைக்கு பின்னரே இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர் ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள். வாகனங்களில் வருபவர்கள் யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி பிரச்சனை உள்ளதா என சோதித்து பார்க்கிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள்.

    அதே போல கோவை-கேரளா எல்லையில் வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நிபா வைரசின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து நீலகிரி மாவட்ட

    நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றி ஆகியவற்றின் சிறுநீர், எச்சில் மற்றும் இதர திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சளி, உமிழ் நீர் மற்றும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

    நோய் அறிகுறிகள்

    கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவிழத்தல், மனக்குழப்பம், கோமா ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி முதல் 48 மணி நேரத்துக்குள் தீவிர மயக்க நிலை, சுயநினைவிழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    தடுக்கும் முறைகள்

    1. விலங்குகள் கடித்த பழங்கள், காய்கறிகளை உபயோகப்படுத்தக் கூடாது.

    2. காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

    3. இறந்த வவ்வால்கள், பன்றிகள் இதர விலங்குகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    4. பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்த வேண்டும்.

    5. பொது இடங்களுக்கு சென்று வரும்போது சோப்பினால் கை கழுவுவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    6. வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    7. தேவையின்றி காடுகள் மற்றும் குகை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    8. காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    இதேபோல கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு உமிழ்நீர், சிறுநீர், சளி போன்றவை மூலம் நேரடியாகவும் பரவுகிறது.

    எனவே பொது இடங்களில் தும்மும் போதும், இருமும்போதும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை சார்பாக தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக்குழு நியமிக்கப்பட்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். 

    • உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது.
    • கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.

    'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:-

    1) நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது

    2) மனச்சோர்வு ஏற்படும் போது மூளையைத் தூண்டி ஒரு ஹார்மோனை சுரக்கச் செய்யும். இது பசியைக் குறைத்துவிடும்

    3)விபத்துகளில் மூளையில் பாதிப்பு, காயம் ஏற்பட்டால், உணவு மேல் நாட்டம் இருக்காது

    4) ஜலதோஷத்தின் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பசிக்காது

    5) ஒற்றைத் தலைவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு காரணமாக சாப்பிட தோன்றாது

    6) கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் மசக்கை வாந்தியினால் உணவைப் பார்த்தாலே ஓடத்தோன்றும்

    7) ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பசி குறைவாக இருக்கும்

    8) வயிற்றுப் பிரச்சினை, வாந்தி, பேதி, வயிறு உப்புசம் போன்றவை இருந்தால் பசி சரியாக இருக்காது

    9) புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி குறையும்

    10) அதிக ரத்த சர்க்கரை காரணமாக ஜீரண நரம்பு பாதிக்கப்படுவதால் பசியும் செரிமானமும் குறைந்துவிடும்

    11) ரத்தச் சோகை இருப்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் உடல் சோர்வாகி பசியும் குறைந்துவிடும்

    12) வயது ஆக ஆக உங்களது ஜீரண உறுப்புகள் வேலை செய்வதும் குறைந்துவிடும்,

    13) மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை ஜீரணத்தை மெதுவாக்கி பசியார்வத்தைக் குறைத்துவிடும்

    14) உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது

    15) கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது.

    பசி என்பது உடலில் உண்டாகும் இயற்கையான மாற்றங்களினால் ஏற்படும் ஒரு செயலாகும். பசி இல்லை என்றாலும் கூட ஓரளவாவது சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம். நீங்கள் சாப்பிடும் உணவின் மூலம் தான் உங்களது உடலுக்குத் தேவையான கலோரி சக்தி வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உப்பு, சர்க்கரை, புரதம், மாவுச்சத்து கொழுப்புச்சத்து முதலியவை கிடைக்கின்றன.

    ஒரு வேளை, இரண்டு வேளை பசி எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் பசியில்லாமல் இருந்தால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது தான் நல்லது.

    • கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
    • அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

    மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.

    உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

    அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.

    எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    கால்களில் வீக்கம்

    ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.

    மஞ்சள் காமாலை

    எப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

    வயிற்று உப்புசம் மற்றும் வலி

    கல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.

    வாந்தி, சோர்வு, காய்ச்சல்

    கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி. உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

    தலைச்சுற்றல்

    ஆல்கஹால் குடிப்பவராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.

    குமட்டல்

    கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

    அடர் நிற சிறுநீர்

    கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால், உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிவரும். எனவே இந்த நிலையை நீங்கள் சந்தித்தால், தவறாமல் மருத்துவரை சந்தியுங்கள்.

    சோர்வு

    நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.

    • நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
    • நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்மை காலங்களில் கேரளாவில் 4 பேர் மூளைக்காய்ச்சல் நோயினால் இறந்து இருக்கிறார்கள். இந்த மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து வலி, மன குழப்பம், பிரமைகள் போன்ற சிந்தனைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நோயில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் மாசுபட்ட அழுக்கு நீரீல் குளிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

    தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரமாக உள்ளதா என்று உறுதி செய்யப்பட வேண்டும்.

    பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வெளியூர் பயணம் மற்றும் சந்தேகத்திற்குரிய நோயின் அறிகுறிகளின் கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வளைவு லேசானதாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால், அது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் தலையிடாது.
    • உட்கார்ந்து அல்லது நிற்கும் போது சரியான தோரணையை பராமரிக்கவும், இது முதுகெலும்பு மேலும் சுழற்சி அல்லது வளைவைத் தடுக்கலாம்.

    ஸ்கோலியோசிஸ் என்பது முதுகுத் தண்டு பக்கவாட்டு வளைவைக் காட்டும் ஒரு உடல் கோளாறு ஆகும். இந்த நிலை பொதுவாக நீங்கள் குழந்தையாகவோ அல்லது இளைஞனாகவோ இருக்கும்போது தோன்றும். வளைவின் கோணம் சிறியது, மிதமானது அல்லது பெரியது. உங்கள் முதுகுத்தண்டின் சுழற்சி கோணம் 10 டிகிரிக்கு மேல் இருக்கும் போது மருத்துவர்கள் நிலைமையை கண்டறிகின்றனர். எலும்பியல் வளைவின் தன்மையை விவரிக்க "S" அல்லது "C" எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது.

    ஸ்கோலியோசிஸின் முதன்மை அறிகுறிகள்:

    உங்களுக்கு கோளாறு இருந்தால், நீங்கள் நிற்கும்போது கற்றுக் கொள்வீர்கள். இது போன்ற பிற அறிகுறிகள் இருக்கும்:

    • உங்கள் முதுகில் தெரியும் வளைவு

    • சீரற்ற தோள்கள்

    • சீரற்ற இடுப்பு

    • ஒரு தோள்பட்டை கத்தி மற்றொன்றை விட பார்வைக்கு அதிகமாகத் தோன்றும்.

    • விலா எலும்புக் கூண்டின் ஒரு பக்கத் திட்டம்.

    • நீங்கள் முன்னோக்கி குனியும்போது பின்புறத்தின் ஒரு பக்கத்தில் தெரியும் முக்கியத்துவம்.

    • ஒரு இடுப்பு அருகில் உள்ளதை விட அதிகமாக உள்ளது.


    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முதுகெலும்பு பக்க வளைவுடன் சேர்ந்து சுழலும் அல்லது சுழலும். சுழற்சியானது உடலின் மேற்புறத்தில் உள்ள தசைகள் மற்றும் விலா எலும்புகளை மறுபுறம் இருப்பதை விட முக்கியமாக ஒட்டிக்கொள்ளும். கூடுதலாக, காணக்கூடிய அறிகுறிகள் பின்வருமாறு:

    • முதுகெலும்பு விறைப்பு

    • கீழ்முதுகு வலி

    • தசைப்பிடிப்பு காரணமாக சோர்வு

    • கால்களில் வலி மற்றும் உணர்வின்மை

    ஸ்கோலியோசிஸின் காரணங்கள்:

    சில வகையான ஸ்கோலியோசிஸ் குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டுள்ளது. மருத்துவர்கள் இந்த வளைவுகளை இரண்டு முதன்மை வகைகளாகப் பிரிக்கிறார்கள் - கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு அல்லாதவை.

    கட்டமைப்பு இல்லாத நிலையில், முதுகெலும்பு பொதுவாக வேலை செய்யும், இருப்பினும் வளைவு தெரியும். போன்ற பல்வேறு காரணங்களால் இது நிகழலாம்

    தசைப்பிடிப்பு

    • ஒரு கால் மற்றதை விட நீளமானது

    • குடல் அழற்சி போன்ற அழற்சிகள்

    கட்டமைப்பு கோளாறில், வளைவு கடினமானது மற்றும் மீள முடியாதது. காரணங்கள்:

    • பெருமூளை வாதம் போன்ற நரம்புத்தசை நிலைகள்.

    • கடுமையான தசைநார் சிதைவு, இது தசை பலவீனத்தை விளைவிக்கும் ஒரு மரபணு கோளாறு ஆகும்.

    • முதுகெலும்பு தொற்று மற்றும் காயங்கள்

    • ஸ்பைனா பிஃபிடா போன்ற குழந்தையின் முதுகெலும்பு எலும்புகளை பாதிக்கும் பிறவி குறைபாடுகள்.

    • கட்டிகள்

    • டவுன்ஸ் சிண்ட்ரோம் அல்லது மார்பன் சிண்ட்ரோம் போன்ற மரபணு நிலைமைகள்.

    • முள்ளந்தண்டு வடம் அசாதாரணங்கள்

    பிசியோதெரபிஸ்ட்டை எப்போது பார்க்க வேண்டும்:

    உங்கள் பிள்ளையில் ஸ்கோலியோசிஸின் அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், மருத்துவரிடம் செல்வது கட்டாயமாகும், முன்னுரிமை எலும்பியல் மருத்துவர். மெதுவான வளைவுகள் உங்களுக்குத் தெரியாமல் படிப்படியாக உருவாகலாம், ஏனெனில் படிப்படியான தோற்றம் ஆரம்பத்தில் எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் குழந்தை பதின்ம வயதினராக வளரும்போது, வலியின் தோற்றம் ஏற்படலாம். குழந்தை முதுகுவலி அல்லது விறைப்பு பற்றி புகார் செய்தால் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.


    ஸ்கோலியோசிஸின் ஆபத்து காரணிகள்:

    ஸ்கோலியோசிஸின் பொதுவான வகைகளை உருவாக்க எண்ணற்ற ஆபத்து காரணிகள் உள்ளன. இவை:

    வயது: இளமை பருவத்தில் ஆரம்ப அறிகுறிகளும் அறிகுறிகளும் தொடங்குகின்றன.

    குடும்ப வரலாறு: குடும்பத்தில் நிலைமை இயங்குகிறது. ஆனால் இந்த கோளாறால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு குடும்ப வரலாறு இல்லை.

    பாலினம்: லேசான ஸ்கோலியோசிஸின் வளர்ச்சி விகிதம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளில் ஒரே மாதிரியாக இருக்கும். இருப்பினும், பெண்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் வளைவு மோசமடைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

    ஸ்கோலியோசிஸை எவ்வாறு தடுப்பது:

    நிலைமையைத் தடுப்பதற்கான வழிகள் பற்றி நிரூபிக்கப்பட்ட உண்மை எதுவும் இல்லை. இருப்பினும், காயத்தால் வளைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றலாம்.

    உங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருந்தால், கழுத்து, முதுகு மற்றும் தோள்களில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால், அதிக கனமான பைகளை எடுத்துச் செல்ல நீங்கள் அவர்களை அனுமதிக்கக்கூடாது. கண்டறியப்படாத லேசான கோளாறு இருந்தால், அழுத்தம் வலியைத் தூண்டும்.

    உட்கார்ந்து அல்லது நிற்கும் போது சரியான தோரணையை பராமரிக்கவும், இது முதுகெலும்பு மேலும் சுழற்சி அல்லது வளைவைத் தடுக்கலாம்.

    ஸ்கோலியோசிஸிற்கான சிகிச்சைகள்:

    சிகிச்சை திட்டம் பல காரணிகளைப் பொறுத்தது:

    • முதுகெலும்பு வளைவின் அளவு

    • உங்கள் வயது

    • வளைவு வகை

    • ஸ்கோலியோசிஸ் வகை

    • மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்பு

    முதன்மை சிகிச்சை விருப்பங்களில் பிரேசிங் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும்.

    சுழற்சி 25 முதல் 40 டிகிரிக்கு மேல் இருக்கும்போது வளரும் வயதில் வளைவை கட்டுப்படுத்த முடியும். முன்கூட்டியே கண்டறிதல் பிரேஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் வளைவைத் தடுக்கலாம். நீங்கள் நீண்ட காலத்திற்கு பிரேஸ்களை அணிந்தால், அது சிதைவைக் கட்டுப்படுத்தும். இரண்டு வகையான பிரேஸ்கள் உள்ளன:

    அக்குள்: பிளாஸ்டிக் மற்றும் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததை உள்ளடக்கிய நெருக்கமான பிரேஸ். இது கீழ் முதுகுத்தண்டு வளைவுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.


    மில்வாக்கி: பிரேஸ் கழுத்தில் தொடங்கி, கால்கள் மற்றும் கைகளைத் தவிர்த்து, உங்கள் முழு உடற்பகுதியையும் உள்ளடக்கியது.

    வளைவு 40 டிகிரிக்கு மேல் இருக்கும் ஸ்கோலியோசிஸுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே சிகிச்சை விருப்பம். முதுகெலும்பு இணைவு என்பது அறுவை சிகிச்சையின் நிலையான வழியாகும். மருத்துவர் இந்த அறுவை சிகிச்சையில் தண்டுகள், திருகுகள் மற்றும் எலும்பு ஒட்டுதல்களைப் பயன்படுத்தி முதுகெலும்புகளை ஒன்றிணைப்பார். எலும்பு ஒட்டுதல்கள் எலும்பு போன்ற பொருள் அல்லது உண்மையான எலும்பைக் கொண்டிருக்கும். தண்டுகள் முதுகெலும்பை நேராக வைத்திருக்கும், மேலும் திருகுகள் முதுகெலும்புகளை வைத்திருக்கும்.

    தொடர்புடைய நிபந்தனைகள்:

    வளைவு லேசானதாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால், அது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் தலையிடாது. ஆனால் நிலைமை கடுமையானதாக இருக்கும்போது, உடல் வரம்புகள் ஏற்படலாம். வளைவு வயதுக்கு ஏற்ப மோசமடையக்கூடும் என்பதால் நிலையான வலி உங்கள் துணையாக இருக்கும்.

    ஸ்கோலியோசிஸுடன் வாழ்வது சவாலானதாக இருக்கலாம் . அதிகரிக்கும் சிதைவு உங்கள் இயக்கத்தை பாதிக்கத் தொடங்கும் போது மன அழுத்தம் அடிக்கடி மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. வலியைச் சமாளித்து, சிறந்த வாழ்க்கையை வாழ உதவும் ஆதரவுக் குழுக்களைத் தேடுவது நல்லது. இதே போன்ற அல்லது மோசமான அறிகுறிகளை அனுபவிக்கும் மற்றவர்களை நீங்கள் சந்திக்கலாம். தினசரி அடிப்படையில் நிலைமையைச் சமாளிக்க இது உங்களை ஊக்குவிக்கும்.

    • UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.
    • அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தும். வயிற்றில் அல்லது உடலில் பல பிரச்னைகள் இருக்கும்போது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

    ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தை சரியாக கவனிக்காததால், பலர், குறிப்பாக பெண்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். பல நேரங்களில், தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்த பிறகும், UTI வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.

    UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இதன் காரணமாக உங்களுக்கு சிறுநீர் கழித்தல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வயிறு மற்றும் சிறுநீரகங்களுக்கும் பரவுகிறது.

    சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள்

    சிறுநீர் தொற்று ஏற்பட்டால், சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம். இது உங்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால், அது சிறுநீர் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம். இதனுடன், சிறுநீரில் ரத்தப் பிரச்சனையும் அதிகரிக்கிறது.

    எனவே, இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், அவை சிறுநீர் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் தொற்று மிகவும் சங்கடமாக இருக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சைய அளிக்கப்படாவிட்டால், அது வயிற்று தொற்றுக்கு வழிவகுக்கும். சிறுநீர் நோய்த்தொற்றை நிர்வகிப்பதில் நீர் மிகவும் முக்கியமானது. எனவே UTI ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் பாக்டீரியாவை வெளியேற்றவும் மற்றும் UTI களை தடுக்கவும் உதவுகிறது. எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

    பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று

    UTI -ன் மிகவும் பொதுவான காரணம் பாக்டீரியா ஆகும். பாக்டீரியாவால் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோயைத் தடுக்க, நீங்கள் சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அல்லது அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிப்பது முக்கியம்.

    • அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்கலாம்.
    • குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி இருக்கும்.

    பெண்கள் பெரும்பாலும் 45 நாட்கள் கர்ப்பம் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பல குழப்பத்தில் இருப்பார்கள். 45 நாட்கள் கர்ப்பம் என்பது 6 வாரங்கள் அதாவது இரண்டு மாதம் ஆகும்.

    45 நாட்களில் உங்கள் குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி இருக்கும். அதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்கலாம்.

    கண்கள் மற்றும் நாசிகள் போன்றவை சிறிதாக உருவாக தொடங்கும். அவர்களின் சிறிய வாய்க்குள், நாக்கு மற்றும் குரல் நாண்கள் உருவாகத் தொடங்கி இருக்கும்.

    கைகள் மற்றும் கால்கள் சிறிய துடுப்புகளாக வளரத் தொடங்கி, அவை நீண்டு, மூட்டுகளாக வளரும். முதுகெலும்பு ஒரு சிறிய வால் போன்று நீண்டு இருக்கும். அது சில வாரங்களில் மறைந்துவிடும்.

    அறிகுறிகள்

    * காலை நோய் என்பது நாளின் எந்த நேரத்திலும் ஏற்படும் குமட்டல் ஆகும். இது பொதுவாக கர்ப்பத்தின் 5 அல்லது 6 வது வாரத்தில் தொடங்கி முதல் மூன்று மாதங்களின் முடிவில் குறையலாம்.

    * அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில், உங்கள் உடலில் அதிக ரத்தம் பாய்வதால் உங்கள் சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீரை சமாளிக்க வேண்டிய நிலை வருகிறது.

    * கர்ப்பகால ஹார்மோன்களும் இதில் பங்கு வகிக்கின்றன. நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது நிறமற்றதாக இருந்தால், உங்கள் உடலில் நன்கு நீரேற்றமாக இருக்கும்.

    * பல கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 10 வாரங்களில் தங்கள் மனநிலை மாற்றம் அதிகரிக்கிறது. ஒரு தாயாக மாறும் உணர்வினை அவர்கள் அதிகம் உணர்வார்கள். சில நேரங்களில் எதையாவது நினைத்து திடீரென்று மனம் நோகும் நிலையில் இருப்பார்கள்.

    * கர்ப்பிணிகளை அவர்களது துணை கண்டிப்பாக நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் மேலும் மனச்சோர்வடைந்திருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் அவர் உங்களுக்கு தேவையான விஷயங்களை பரிந்துரைப்பார்.

    * மார்பக மென்மை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். அதிகரித்த ஹார்மோன் அளவுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன, இது உங்கள் மார்பகங்களில் வீக்கம், வலி, கூச்சம் அல்லது தொடுவதற்கு வழக்கத்திற்கு மாறாக மென்மையாக்கும்.

    * பல பெண்களுக்கு, சோர்வு கர்ப்பத்தின் முதல் அறிகுறிகளில் ஒன்றாகும். ஆரம்பகால கர்ப்பத்தில் சோர்வு ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் இது புரோஜெஸ்ட்டிரோனின் வியத்தகு அதிகரிப்பு போன்ற ஹார்மோன் மாற்றங்களால் இந்த சோர்வு இருக்கலாம்.

    கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜனின் அதிகரிப்பு உங்கள் வாயில் ஒரு உலோக சுவையை ஏற்படுத்தும். 1 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது, புளிப்பு அல்லது அமில உணவுகளை உண்பது அல்லது புதினா பசையை மெல்லுவதன் மூலம் இந்த சுவை உணர்வை கட்டுப்படுத்தலாம்.

    குறிப்பாக கர்ப்ப காலத்தில் தலைவலி பொதுவானது. கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதத்தை அடைந்தவுடன் தலைவலி குறையலாம். யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் இந்த தலைவலியினை குறைக்கலாம்.

    • டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
    • டைப் 2 நீரழிவுநோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும்.

    இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம்.

    உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும் அளவுக்கு இன்சுலின் சுரக்க முடியாது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

     

    டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமீப காலமாக, உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடமும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. டைப் 1 நோய் மரபணு ரீதியாக அடுத்த தலைமுறைக்கு பரவும் நிலையில் டைப் 2 வாழ்க்கை முறைகளாலும் உணவுப் பழக்கத்தாலும் ஏற்படுகிறது.

    டைப் 2 நோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும். உங்களது. உங்களது மூச்சில் பழத்த்தின் வாசனையை அடிக்கடி நேரிட்டால் அது டைப் 2 நீரழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

     

     ஆரம்பத்தில் கூறியபடி ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸை சமன் செய்ய கெடோஆசிடோசிஸ் (ketoacidosis) என்ற செயல்பாடு உடலில் நடப்பதால் மூச்சில் இந்த பழ வாசனை உருவாகிறது. இந்த டைப் 2 சர்க்கரை வியாதி இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்காது.
    • வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    சிறுநீர் பாதை தொற்று என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பச்சிளம் சிசுக்களுக்கும் கூட ஏற்படுகிறது. சிறுநீர் பாதையில் பாக்டீரியாவால் ஏற்படுகின்ற தொற்றுதான் இது.

    சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர் பாதை தொற்று சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது இந்நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது.

    இளம் குழந்தைகள் மற்றும் பச்சிளம் சிசுக்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும்போது உணர தகுந்த அறிகுறிகள் தென்படாது. தொற்றை கண்டுபிடிக்க இயலாத சூழலில், முறையான சிகிச்சை எடுக்க முடியாத நிலை ஏற்படும்.

    மலத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பிறப்பு உறுப்புக்கு அருகாமையில் உள்ள சருமத்தில் குடியிருக்கும் பாக்டீரியா ஆகியவை சிறுநீர் பாதைக்குள் நுழைவதன் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. சிறுநீர் பாதை மற்றும் சிறுநீர் பை ஆகிய பகுதிகளுக்கு இது பரவக்கூடும். மிகவும் அரிதாக சிறுநீரகம் வரையிலும் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும்.

    சரியான சமயத்தில் நோயை கண்டறிந்து ஆண்டிபயாடிக் மருந்துகள் மற்றும் இதர சிகிச்சைகளை அளிக்கும் பட்சத்தில் விளைவுகளை கட்டுப்படுத்தலாம்.

    சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, பின் இடுப்பு வலி, வயிறு வலி போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்படும்.

     

    குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்காது. குழந்தைகளின் பசி உணர்வை பரிசோதிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில சமயம் காய்ச்சலும் சேர்ந்து வரும்.

    குழந்தைகளுக்கான டயப்பர், மெத்தை போன்றவற்றை அடிக்கடி மாற்றி, சுத்தம் செய்ய வேண்டும். பிறப்புறுப்பு பகுதி, ஆசனவாய் பகுதி போன்ற இடங்களில் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து துடைக்க வேண்டும்.

    பிறப்பு உறுப்பு பகுதியில் அரிப்பு, மோசமான வாடை, மேக நிறத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும்.
    • நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது.

    கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

    கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். உணவு சமைக்கும்போதும் லேசாக வெளிப்படும் நறுமணம் கூட அதிகமாக உணர முடியும்.

    சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

    தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறி தான். பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும்.

    வழக்கத்தை விட அதிகமாக சோர்வு இருந்தால் அதற்கு காரணம் கருத்தரித்தலாக இருக்கலாம்.

    நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர மற்ற உணவுகள் சாப்பிட தோன்றும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

    வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர முடியும். இது அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர முடியும்.

    இந்த அறிகுறிகள் மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.

    இந்த அறிகுறிகளை உணரும்போது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

    • குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள்.
    • மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது.

    மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. பிறந்த குழந்தைகளுக்கு கூட வரலாம். குழந்தைகளின் அழுகை, மலம் கழிக்கும் போது அலறல் மற்றும் முக மாற்றம் போன்ற அறிகுறிகளோடு மலச்சிக்கலை பெற்றோர்கள் அறியலாம்.

    பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டும் குடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் மலம் கழித்தல் என்பது தாய்ப்பாலுக்கு பிறகு இருக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை. சில நேரங்களில் பிறந்த உடன் 5 முதல் 7 வரை இருக்கலாம். இது இயல்பானது.

    குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள் அல்லது தாமதமாகலாம். எனினும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான மலச்சிக்கலின் அறிகுறிகள் மாறுபடும். சில நாட்கள் வரை குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கலாம்.

    அறிகுறிகள்:

    * மலம் வெளியேற்றும் போது குழந்தை சிவந்த முகத்துடன் 10 நிமிடங்களுக்கு மேல் கஷ்டப்படலாம். இது மலம் கழிப்பதில் சிரமத்தை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது குழந்தை குழப்பமடையலாம். இது வலியுடன் இருப்பதை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது. வாயு வெளியேற்றம் கடினமாக இருப்பது.

    * மலம் வெளியேறாமல் ஆசனவாய் வாய்பகுதியில் நீண்ட நேரம் இருப்பது.

    * குழந்தையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியதாகவும் தொடுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.

    * கடுமையான மலச்சிக்கல் என்கோபிரெசிஸை ஏற்படுத்தலாம் இது குழந்தையின் டயபர் அல்லது உள்ளாடைக்குள் ஒரு சிறிய அளவு திரவ மலம் தன்னிச்சையாக கசிவை உண்டாக்கலாம்.

    * கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தை நகரும் போது மலத்தில் ரத்தப்போக்கு உண்டாகலாம். குழந்தை மலத்தை வெளியேற்ற சிரமப்படலாம். மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால் மலச்சிக்கல் இருக்கலாம்.

    மலச்சிக்கல் உண்டாக காரணம்:

    * குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் அரிதாக கடினமான மலத்தை கவனிக்கலாம்.

    * தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    * திட உணவில் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தை கடினப்படுத்தலாம்.

    * மலச்சிக்கல் உண்டாவது இரைப்பை குடல் நோய்த்தொற்றின் விளைவாக இருக்கலாம்.

    • மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபடலாம்.
    • திடீர் மாரடைப்பு அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல் ஏற்படுகிறது.

    மாரடைப்பில் என்ன நடக்கும்?

    உங்கள் இதயம் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜனின் காரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது. கொலஸ்ட்ரால், கொழுப்பு மற்றும் பிற பொருட்களின் கலவையான பிளேக் அடுக்கு, இதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் மூலம் பரவும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது மாரடைப்பு ஏற்படலாம்.

    என்ன அறிகுறிகள் மாரடைப்பைக் குறிக்கின்றன?

    வழக்கமாக, மாரடைப்பு அறிகுறிகள் படிப்படியாக சில மணிநேரங்கள், நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே உருவாகத் தொடங்கி சில காலம் நீடிக்கும். மேலும், மாரடைப்பின் போது இரத்த விநியோகம் தடைபட்ட பின்னரும் இதயம் துடிப்பதை நிறுத்தாது. மேலும், மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபடலாம்.

    மாரடைப்பின் போது சில குறிப்பிடத்தக்க அறிகுறிகள்:

    உங்கள் மார்பு அல்லது கைகளில் அழுத்தம், இறுக்கம், வலி, அழுத்துதல் அல்லது வலி உணர்வுகள், இது உங்கள் கழுத்து, தாடை அல்லது முதுகில் பரவக்கூடும்

    குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்

    மூச்சு விடுவதில் சிரமம், குளிர் வியர்வை, சோர்வு, திடீரென ஏற்படும் லேசான தலைச்சுற்றல்.


    மாரடைப்புக்குப் பிறகு உங்கள் இதயம் பாதிக்கப்படுகிறதா?

    இதயம் மிகவும் உறுதியான உறுப்பு. எனவே, தாக்குதலுக்கு ஆளான பிறகு, அதில் சில சேதம் அடைந்தாலும், மற்ற பாதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், உங்கள் இதயம் பலவீனமான நிலைக்கு வரலாம், அதற்குப் பிறகு அதிக கவனிப்பு தேவைப்படலாம்.

    கார்டியாக் அரெஸ்டில் என்ன நடக்கும்?

    திடீரென இதய செயலிழப்பு ஏற்படும் போது திடீர் கார்டியாக் அரெஸ்ட் (SCA) ஏற்படலாம். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (அரித்மியா) காரணமாக, பம்ப் செய்யும் செயல் தொந்தரவு செய்யப்படுகிறது, மேலும் இதயத்தால் மூளை, நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை வழங்க முடியவில்லை. சில நொடிகளில், அந்த நபர் துடிப்பு இல்லாமல் மயக்கமடைந்தார். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அத்தகைய நிலை மோசமடைந்து மரணத்திற்கு வழிவகுக்கிறது.

    இது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், இருப்பினும் இது பெரும்பாலும் வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களிடமோ அல்லது இதய நோய் உள்ளவர்களிடமோ அடிக்கடி நிகழ்கிறது. இதயத் தடுப்புக்கு மிகவும் பொதுவான காரணம் வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் ஆகும், இது மின் தூண்டுதல்கள் உங்கள் இதயத்தைத் துடிக்கச் சொல்லும்போது நிகழ்கிறது.

    கார்டியாக் அரெஸ்ட் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டும் மேலும் SCA அறிகுறிகள்:

    திடீர் இதயத் தடுப்பு அறிகுறிகள் உடனடி மற்றும் கடுமையானவை, உட்பட:


    எதிர்பாராத சரிவு, துடிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, சுவாசம் இல்லை, மயக்கம், திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு வேறு சில அறிகுறிகளும் அறிகுறிகளும் தோன்றக்கூடும். இவை அடங்கும்:

    நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் காரணமாக பலவீனம்,

    படபடப்பு என்பது வேகமாக துடிக்கும், படபடக்கும் அல்லது இதயம் துடிக்கும் அறிகுறிகளாகும். இருப்பினும், திடீர் மாரடைப்பு அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல் ஏற்படுகிறது.

    SCAக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா?

    மருத்துவ ரீதியாக, கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகியவற்றுக்கு இடையே பரந்த வேறுபாடு இருந்தாலும் , இந்த இரண்டு நிபந்தனைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. அடிப்படையில், மாரடைப்பு என்பது மாரடைப்பின் தொடக்கமாக மாறக்கூடும், ஏனெனில் SCA மாரடைப்பிற்குப் பிறகு அல்லது ஒன்றிலிருந்து மீண்டு வரும்போது ஏற்படலாம். மாரடைப்பு என்பது மாரடைப்புக்கு ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம் என்றும் நாம் கூறலாம்.

    மாரடைப்பு தவிர, தடித்த இதய தசை, அரித்மியா, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் மற்றும் நீண்ட க்யூடி சிண்ட்ரோம் ஆகியவை திடீர் கார்டியாக் அரெஸ்ட்க்கான காரணங்களாக இருக்கலாம்.

    மாரடைப்பு அல்லது மாரடைப்பின் போது நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

    கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருந்தாலும் , அவசர சிகிச்சை நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம்:


    • அருகிலுள்ள மருத்துவ அவசரநிலையை அழைக்கவும்.

    • CPR ஐ உடனடியாக தொடங்கவும்.

    • நபருக்கு அருகில் படுக்க இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • நபரின் மார்பின் நடுவில் உங்கள் கைகளை வைக்கவும்.

    • குறைந்தது 100 முறை கீழ்நோக்கிய இயக்கத்தில் கடினமாகவும் வேகமாகவும் தள்ளுங்கள்.

    • பின்னர், மற்றொரு 100 சுருக்கங்களுக்கு கடினமாகவும் வேகமாகவும் அழுத்தவும்.

    • நீங்கள் தரையில் இருந்தால், அந்த நபரின் தலையை பின்னால் சாய்க்க அவரது தோளில் உங்கள் கைகளை வைக்கவும்.

    • தொழில்முறை அவசரநிலை வரும் வரை CPR செயல்முறையைத் தொடரவும்.

    வாழ்க்கை முறை மாற்றம், உணவு மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் மூலம், நோயாளிகள் நீண்ட காலமாக ஆரோக்கியமாக வாழலாம்.

    ×