search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "symptoms"

    • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும்.
    • தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை 90 சதவீதம் தடுக்க முடியும்.

    உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000-க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்.பி.வி. தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    ஹெச்பிவி என்றால் என்ன?

    ஹெச்பிவி என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப்பெயர். இங்கு 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்.பி.வி. வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.

    இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். ஆனால் அதிக ஆபத்துள்ள ஹெச்.பி.வி. வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

    ஹெச்.பி.வி. தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?

    ஹெச்.பி.வி. தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்.பி.வி. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

    ஹெச்.பி.வி. தடுப்பூசி யாருக்கு?

    ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்.பி.வி. பாதிப்பிற்கு முன் எடுத்துக் கொண்டால் அது சிறப்பாக செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காத்துக்கொள்ள மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.

    தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும்.

    யாருக்கு ஹெச்பிவி ஏற்படும்?

    ஹெச்.பி.வி. எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்.பி.வி. பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

    இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.

    • நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம்.
    • கடைசி கட்டத்திற்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.

    பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கின்றது. கருப்பை வாய் புற்றுநோயினை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துக்கொள்வது மிகவும் கடினம். கடைசி கட்டத்திற்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.

    இருப்பினும் இது குறித்த போதிய தெளிவு இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் இருப்பதை தெரிந்துக்கொள்ள முடியும். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே கருப்பை வாய் புற்றுநோய் அதிகமாக கண்டறியப்படுகின்றது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

    கருப்பைவாய் புற்றுநோய் என்றால் என்ன?

    பெண்களின் கருப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதியைத்தான் கருப்பைவாய் என அழைக்கப்படுகின்றது. இந்த சிறிய பகுதியில் ஏற்படும் புற்றுநோய் தான் கருப்பைவாய் புற்றுநோய் எனப்படும். அதாவது தேவையற்ற வகையில் கலன்கள் பிரிந்து பெருகுவதே புற்றுநோய் எனப்படும். இந்த செல்களின் பெருக்கம் எந்த பாகத்தில் ஏற்படுகின்றது என்பதை பொருத்தே இது எந்த வகை புற்றுநோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது.

     கருப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள்

    சாதாரணமாக பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனால் அசாதாரண அளவில் அதிகமாக பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுவது இயல்பான விஷயமாக கருத முடியாது. இதுபோன்று அசாதாரணமாக திரவ வெளியேற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

    பிறப்புறுப்பில் இருந்து திவரம் வெளியேறுவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் இதுவும் முக்கியமான அறிகுறியாகும்.

    கால்கள் மற்றும் பாதங்களில் அதிக வலியை உணர்தல் அல்லது வீக்கம் ஏற்படுவதும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாக கருத முடியும்.

    மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு என்பது இயல்பானது தான். ஆனால் அசாதாரண நிலையில் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ பிறப்புறுப்பில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்துப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

    பொதுவாக சிறுநீர் பை நிரம்பும் போது சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கக்கூடும்.

    சில சமயங்களில் சிறுநீர் பை நிரம்பி சிறுநீரை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாத நிலை ஏற்படும். இது எப்போதாவது ஏற்படுவது இயல்புதான் ஆனால் அடிக்கடி இந்த நிலை ஏற்பட்டால் இது கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    அதேபோல சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் மற்றும் உடலுறவு கொண்ட பின்னர் அதிக வலியை உணர்தல் போன்றவையும் கருப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். பி.சி.ஓ.எஸ். உள்ளிட்ட பல பிரச்சினைகளின் போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஹார்மோன் சமநிலை பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டால் அது கருப்பை வாய் புற்றுநோயின் ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கப்படுகின்றது.

    கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் முதுகு வலியும் முக்கிய இடம் வகிக்கின்றது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் முதுகு வலி ஏற்படலாம். இதுவே தாங்கமுடியாத வலியாக இருந்தால் அதைனை அலட்சியப்படுத்த கூடாது.

    உடலுறவில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படும். குறிப்பாக கருப்பை வாய் பாதையில் புண்கள், கட்டிகள் குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர்களால் சாதாரணமாக உடலுறவில் ஈடுப்பட முடியாத நிலை காணப்படும் இவ்வாறாக அறிகுறிகள் கருப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். மேலும் உடலுறவில் விருப்பமற்ற தன்மை, உடலுறவின் போது பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாய் பகுதியில் வலி ஆகியவை உண்டாகலாம்.

    இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். இவ்வாறன அறிகுறிகள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

    • புளித்த ஏப்பம் என்பது அமில ரிப்லெக்சுக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
    • அதற்கான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    புளித்த ஏப்பம் என்பது அமில ரிப்லெக்சுக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். இதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சாப்பிட்ட பிறகு புளித்த ஏப்பம் வருவது நமக்கு ஒருவித அசவுகரித்தை ஏற்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு திருப்பி அனுப்பப்படும் பொழுது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படுகிறது. இதனை அலட்சியமாக கருதும் பொழுது, அது நமக்கு அசவுகரியம் மற்றும் மேலும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    நமது உடலில் ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். வயிற்றின் ஒருவித இயல்பு மாற்றம் காரணமாக ஆசிட் ரிஃப்ளக்ஸ் உருவாகிறது. நமது நெஞ்சு பகுதியையும் கீழ் வயிறு பகுதியையும் டயாபிராகம் என்ற தசை பிரித்து வைக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் மேலே நகராதவாறு பாதுகாப்பது இந்த தசை. எனினும் ஹெர்னியா காரணமாக இந்த அமிலம் உணவுக் குழாய் வரை பயணிக்கிறது.

     புளித்த ஏப்பம் வருபதற்கு காரணம்

    * அதிகப்படியாக சாப்பிடுவது உடல்பருமனாக இருப்பது அதிக உணவு சாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்வது

    * இரவு தாமதமாக உணவு உண்பது

    * சாக்லேட், புதினா, தக்காளி, பூண்டு, வெங்காயம், காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது.

    * கார்பனேற்றப்பட்ட பானங்கள், காபி அல்லது டீ குடிப்பது

    *புகையிலை பொருட்களை உட்கொள்வது

    * அதிக ரத்த அழுத்தத்திற்கு கொடுக்கப்படும் ஒரு சில மருந்துகள்

    அறிகுறிகள்:

    அடிவயிற்றில் தொடங்கிய எரிச்சல் உணவுக் குழாய், கழுத்து மற்றும் நெஞ்சு பகுதி வரை பரவும்.

    பின் வாயில் கசப்பான அல்லது புளித்த சுவை ஏற்படுதல்

    வயிற்றில் இருந்து திரவங்கள் அல்லது உணவு மீண்டும் வாய்க்கு வருதல்

    நாள்பட்ட இருமல்

    குமட்டல் அல்லது வாந்தி

    வீட்டு வைத்தியம்:

    * உணவுக்குப் பிறகு சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது செரிமானத்தை தூண்டும். சோம்பு விதைகள் பொதுவாக பாதுகாப்பானவை, எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

    * பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகிய இரண்டையும் மிதமான அளவு சாப்பிடுவது கேஸ்ட்ரிக் அமிலத்தை நடுநிலைப்படுத்த உதவும்.

    * ஒரு டீஸ்பூன் அளவு ஓமத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது நெஞ்சு எரிச்சலை போக்கும்.

    * ஒரு சிட்டிகை பெருங்காயத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பது அசிடிட்டி பிரச்சனையை தவிர்க்க உதவும்.

    * மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் புளித்த ஏப்பம் மற்றும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பதற்கு நீங்கள் ஆன்டாசிட்களை பயன்படுத்தலாம்.

    உடல் பருமன் காரணமாக ஏற்படக்கூடிய ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை தடுப்பதற்கு நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். அசிடிட்டி பிரச்சனையை சமாளிப்பதற்கு நீங்கள் அதிக அளவு உணவை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டாம். மாறாக சிறிய அளவிலான உணவை அடிக்கடி சாப்பிடலாம். உணவு சாப்பிட்ட பிறகு லேசான உடற்பயிற்சியில் ஈடுபடுவது செரிமானத்தை அதிகரிக்கும்.

    • அடி வயிற்றில் வலி அல்லது அழுத்தம் ஏற்படலாம்.
    • திடீரென சளி, இருமல் ஏற்படவும் செய்யலாம்.

    ரத்தத்தில் கலந்திருக்கும் கழிவுப்பொருட்களை வடிகட்டுவது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, சிறுநீரை உற்பத்தி செய்வது போன்ற முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீர் பாதை வழியாக பாக்டீரியாக்கள் சிறுநீரகத்திற்குள் நுழையும்போது சிறுநீரக தொற்று ஏற்படுகிறது. உலக அளவில் லட்சக்கணக்கானோர் சிறுநீரக நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக நோய்த்தொற்றை கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் சிறுநீரகங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதை தடுக்கலாம். ஒருசில அறிகுறிகள் மூலம் சிறுநீரக நோய்த்தொற்றை கண்டறிந்துவிடலாம். இடுப்புக்கு சற்று மேலேயும், அடி முதுகு பகுதியிலும் தொடர்ந்து வலியை உணர்ந்தால் அது சிறுநீரக  ஒன்றாக இருக்கலாம்.

    நிற வேறுபாடு:

    வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தாலோ, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்பட்டாலோ, சிறுநீரின் நிறம் மாறுபட்டாலோ, ஏதேனும் வாசனை வெளிப்பட்டாலோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. அது சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாகக்கூட இருக்கலாம்.

    காய்ச்சல்:

    ஒருவேளை சிறுநீரக தொற்று ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து மீள்வதற்கு சிறுநீரகங்கள் போராடும்போது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் வெளிப்படலாம். திடீரென சளி, இருமல் ஏற்படவும் செய்யலாம். அவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

    சோர்வு:

    இரவில் நன்றாக தூங்கி எழுந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. சிறுநீரகங்கள் நோய்த்தொற்றை தடுக்க அதிக நேரம் போராடுவதன் வெளிப்பாடாகவோ, அறிகுறியாகவோ அந்த சோர்வு அமையலாம்.

    சிறுநீரில் ரத்தம்:

    சிறுநீருடன் கலந்து ரத்தமும் வெளியேறினால் அது சிறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம். சிறுநீரக நோய்த்தொற்று மட்டுமின்றி வேறு ஏதேனும் கடுமையான உடல்நல பிரச்சினைக்கான அறிகுறியாக இருக்கலாம். உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

    வயிற்று வலி:

    சிறுநீரகத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடாக அடி வயிற்றில் வலி அல்லது அழுத்தம் ஏற்படலாம். ஆனால் அது வயிற்றுவலி போன்று இருக்காது. வயிற்றில் அத்தகைய வலியை உணர்ந்தால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    வலி:

    சிறுநீரக நோய்த்தொற்றுகள் நெருக்கமான தருணங்களை கூட சங்கடமானதாக மாற்றும். தாம்பத்தியத்தின்போது தொடர்ந்து வலியை அனுபவித்தால் அது சிறுநீரக நோய்த்தொற்றுக்கான அறிகுறியா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

    • உடல் அதிகமாக வியர்க்கும்.
    • ஓய்வெடுத்தாலும் வலி குறையாது.

    சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. பின்னர் வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத்திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு.

    இந்த வலியை முதன்முறையாக தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.

    பரம்பரை, அதிக உடல் உழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்ப நிலையால் திடீரென தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது (மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை) போன்ற காரணங்கள் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம்.

    புகைப்பது, மது குடிப்பது, உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத்தசை அழற்சி போன்ற நோய்களைக்கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையை கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

    'நிமோனியா' எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி நோய், கடுமையான காசநோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும். பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது. நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சு வலி வரலாம்.

    • கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
    • துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும்.

    மழைக்காலம் நெருங்கும் சமயங்களில் அதிகம் பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று மெட்ராஸ் ஐ. இது ஒரு வைரஸ் தொற்றுக்களால் ஏற்படக்கூடியது. இந்த நோய்த்தொற்று உள்ளவர்களின் கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். கண்களில் உறுத்தல், கண் எரிச்சல், நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். வைரஸ் தொற்றின் வீரியம் அதிகமாக இருந்தால் கருவிழி பாதிப்படையக்கூடும். கண்களில் வீக்கம், பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தென்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்ப்போம்.

    செய்ய வேண்டியவை:

    * மெட்ராஸ் ஐ அறிகுறிகள் வெளிப்படத்தொடங்கினால் கைகளை கண்களுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. கண்களை அழுத்துவது, மென்மையாக விரல்களால் தடவுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

    * கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதனை துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும். அதனை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

    * கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானது. அது விரைவில் நோய் தொற்றுவில் இருந்து விடுபட உதவும்.

    * வைட்டமின் ஏ, சி போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    * மெட்ராஸ் ஐ கண்கள் பார்ப்பது மூலம் பரவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களில் தங்கி இருக்கும் வைரஸ்கள் மூலமே பரவும் என்பதால் சுத்தத்தை தீவிரமாக பேண வேண்டும்.

    * நோய் பாதிப்புக்கு ஆளானவர் கருப்பு வண்ண கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.

    * குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

    செய்யக்கூடாதவை:

    குடும்ப உறுப்பினர்களை தொட்டு பேசுவது, கைகளை சுத்தம் செய்யாமல் அவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்க கூடாது.

    * சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிக்கக்கூடாது. உரிய பரிசோதனை செய்த பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * மருந்து போட்ட பின்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

    * டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு எளிதாக பரவும். அதனால் நோய்த்தொற்றுக்கு ஆளானவர் தனி அறையில் அமர்ந்து பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

    * குடும்பத்தில் மற்றவர்களுக்கு பரவினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய மருந்தை பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொருவருக்கும் வைரஸ் தொற்றின் தாக்கம் மாறுபடக்கூடும். அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் மருந்துகளையே உபயோகப்படுத்த வேண்டும்.

    • சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது.
    • சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன.

    இந்த காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் சிறுநீரக கோளாறு ஏற்படுகின்றது. சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப்பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில பல்வேறு செயல்களை செய்கிறது. சிறுநீரகங்கள் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது. ரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரை பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

    நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன. செரிமான அமைப்பில் இருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன. அதேபோல் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போல சிறுநீரக பிரச்சனைகளும் தீவிரத்தன்மை கொண்டவை.

    தண்ணீர் அவசியம்

    தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.

    உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும். வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

    சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கினால் சிறுநீரக கற்கள் ஏற்படும். எனவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.

    இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லை என்றாலும் சிறுநீரகமானது நேரடியாக பாதிக்கப்படும்.

    சிறுநீரக பாதிப்பில் அறிகுறிகள்:

    சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது.

    சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல்முறை பிரச்சினைக்கு உள்ளாகும். இதனால், அந்த கழிவுகள் ரத்தத்தில் கலந்து, வாயில் துர்நாற்றம் வீசுகிறது.

    சிறுநீரகங்கள் முற்றிலும் சேதமடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் வெகுவாக குறையும்.

    ரத்தத்தில் உள்ள கழிவுகளின் விளைவாக அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.

    சிறுநீரக செயல்பாடு குறைவது ரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து சோர்வு மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    சிறுநீரகம் அமைந்துள்ள பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும், இது சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறியாகும்.

    பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
    வைட்டமின்களும், தாது உப்புகளும் உடல் நலத்திற்கு மிக மிக அவசியமானவை இதன் குறைபாடு பலரிடம் காணப்படுவதன் காரணம் பழங்கள், காய்கறிகள் இவற்றினை நாம் இன்னமும் நன்கு பயன்படுத்த முன்வராதது தான் காரணம். பலருக்கு பொருளாதார பிரச்சினை காரணமாக முறையான உணவு முறையினை பின்பற்ற முடிவதில்லை. மிகச் சாதாரணமாக நாம் காணும் சத்து குறைபாடுகளானது இரும்பு, வைட்டமின் டி, கால்ஷியம் குறைபாடுகள் ஆகும்.

    பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். மருத்துவரே உங்கள் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

    * எப்போதும் சோர்வாக இருப்பது போல் தோன்றினால் வைட்டமின் பி12, வைட்டமின் டி, இரும்பு சத்து குறைபாடு போன்றவை இருக்கக்கூடும்.

    * ஆடு தசையில் ஏற்படும் இறுக்கப் பிடிப்பு மக்னீசயம் குறைபாட்டினைக் குறிக்கலாம்.

    * ஈறுகள் வீக்கம், சிறு காயங்கள் ஆற அதிக நேரம் பிடித்தல் போன்றவை வைட்டமின் ‘சி’ குறைபாடாக இருக்கலாம். அதிக புகை பிடிப்பவர்களுக்கு வைட்டமின் ‘சி’ குறைபாடு அதிகம் காணப்படுகின்றது.

    * இரவில் கண் பார்வை குறைதல் (அ) பொதுவாகவே கண் பார்வை குறை போன்றவற்றுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடும் முக்கிய காரணமாகும்.

    * சிலருக்கு கை, முதுகு லக்கங்களில் கூட பருக்கள் இருக்கலாம்.இதற்கு சரும மருத்துவர் மூலம் சிகிச்சை பெற வேண்டும் எனினும் லிவீஸீநீ குறைபாடு இருக்கின்றதா எனவும் மருத்துவர் மூலம் அறிந்து குறைபாட்டினை சரிசெய்து கொள்ள வேண்டும்.

    * வாயில் சிறு புண்கள், உடலில் வித்தியாசமான சரும பாதிப்புகள் இருந்தால் வைட்டமின் குறைபாடு இருக்கின்றதா என்று அறியவும்.

    * நாக்கில் வெள்ளை படிதல் இருந்தால் சில காரணங்களுடன் முக்கியமான காரணமாக வைட்டமின் ‘பி’ குறைபாடும் இருக்கலாம். இந்த வைட்டமின் உங்கள் நரம்பு மண்டலத்திற்கு அவசியம்.

    சில அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கவனிக்க வேண்டும் என்பதற்காக சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    * தொடர்ந்து சோர்வாக இருந்தால் உடனடியாக இதற்கு கவனம் செலுத்துங்கள்.

    * உங்கள் முயற்சி இல்லாமல் திடீரென எந்த காரணமும் இன்றி எடை குறைவு ஏற்பட்டால் ஏன் என மருத்துவர் மூலம் அறியுங்கள்.

    * உடலில் ஏதோ ஒரு பகுதியில் விடாது வலி இருப்பதும், சிகிச்சை பலனின்றி வலிப்பதும் அதிக மருத்துவ கவனம் தேவைப்படுவது ஆகும்.

    * உடலில் கட்டி போல் சிறு உருண்டை இருப்பின் உடனடியாக பரிசோதித்து தீர்வு பெறுங்கள்.

    * அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் பாதிப்பிற்கு கூடுதல் மருத்துவ பரிசோதனை தேவை.

    * சருமத்தில் ஏற்படும் திடீர் மச்சம் போன்றவை அல்லது அதில் ஏற்படும் மாறுதல்கள் இருந்தால் அதனை தீர மருத்துவஆய்வு செய்ய வேண்டும்.

    * இருமல் பொதுவாக சளி, காய்ச்சல் இவற்றோடு ஏற்படுவதுதான்.

    * அடிக்கடி சிறுநீர் செல்லுதல், அடிக்கடி வயிற்றுப்போக்கு பின் மலச்சிக்கல் என்ற அறிகுறிகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.

    * இருமலில் ரத்தம், மேலும் பிறப்புறுப்பு, குடல் வெளியேற்றத்தில் ரத்தம் போன்றவற்றுக்கு சிறிதும் காலம் தாழ்த்தாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * உணவு, திரவ உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் கவனித்து விட வேண்டும்.
    ×