search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Genetic Mutation"

    • ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது.
    • உயர் ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகளுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

    25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சிகளே செய்யாதது ஆகியவையே மாரடைப்புக்கான காரணிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். அதற்கு `ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன்' (SCAD) என்று பெயர்.

    கரோனரி ஆர்ட்டரி எனப்படும் ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது. இதயத்தில் இன்டர்னெல் லேயர், மிடில் லேயர், எக்ஸ்டெர்னல் லேயர் என மூன்றுவிதமான லேயர்கள் இருக்கும். ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன் பிரச்னையில் இன்டர்னெல் லேயர் கிழியும். அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும்.

     உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இதற்கான ரிஸ்க் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். உடலின் இணைப்புத் திசுக்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி நிகழலாம். இணைப்புத்திசுக்கள் பலவீனமாக இருப்பது என்பது ரத்தக்குழாய்களில் மரபணு தொடர்பாக ஏற்படுகிற ஒரு பிரச்சினை.

    மிகவும் வயதானவர்களுக்கும், அதீத ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு. அசவுகரியத்தையோ, அறிகுறிகளையோ உணர்ந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்ததன் காரணமாக ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கா அல்லது ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்சேஷன் பாதிப்பால் ஏற்பட்டதா என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார்.

    பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ஆஞ்சியோகிராம் செய்வது முதல், மருந்து, மாத்திரைகள் பரிந்துரைப்பது வரை எந்தச் சிகிச்சை அவசியம் என்பதையும் மருத்துவர் முடிவு செய்வார். பெரும்பாலும், இந்த பிரச்சினை கருவில் உள்ள குழந்தையை பாதிக்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்து தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம்.

    • பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது.
    • ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள்.

    பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது.

    கர்ப்ப காலத்தில், சிசுவின் ஆற்றல் குளுக்கோசால் பெறப்படுகிறது. தாயின் ரத்தத்தில் இருந்து, நஞ்சுக்கொடி வாயிலாக சிசுவுக்கு குளுக்கோஸ் பெறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, இவ்வாறு தாயின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் குழந்தைக்கு தடைப்படுவதால், தன் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பராமரிக்க, தன் கல்லீரல் மூலமாக குளுக்கோஸ் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

    எனினும் குறைமாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்ப்ப காலத்துக்குரிய எடையில் இருந்து மிகக் குறைவான எடையுள்ள பச்சிளங்குழந்தைகளில் குளுக்கோஸ் உற்பத்தி மற்றும் சேமிப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள், தாழ்வெப்பநிலை, பிறக்கும்போது மூச்சுத் திணறல், ரத்த ஓட்டக் குறைவு மற்றும் சுவாசக்கோளாறு இருக்கும் பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு குளுக்கோஸ் பயன்பாடு மற்றும் குறைந்தளவு குளுக்கோஸ் உற்பத்தி காரணமாக, ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பச்சிளங்குழந்தைகளில் ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள். பாலிசைத்தீமியா உள்ள பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு ரத்த சிவப்பணுக்களின் காரணமாக குளுக்கோஸ் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும். அதனால், ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அட்ரீனல் பற்றாக்குறை, ஹைப்போதாலமிக் குறைபாடு, பிறவி பிட்யூட்டரி குறைபாடு, குளுக்ககான் குறைபாடு, அட்ரீனலின் குறைபாடு முதலிய நாளமில்லா சுரப்பிக் கோளாறுடைய பச்சிளங் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் அதிகமாகும்.

     பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகையாகக் காணப்பட்டால் தீவிர மற்றும் தொடர் ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படலாம். இதன்மூலம் மூளையில் பாதிப்புகூட ஏற்படலாம்.

    நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகை ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாகும். இக்குழந்தைகளில் 48 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இன்சுலின் மிகையாகச் சுரந்து, ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

    பிறக்கும்போது மூச்சுத்திணறல், மரபணு நோயுள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    ×