search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asphyxia"

    • குழந்தைக்கு மாதங்கள் அதிகரிக்கும் போது மூக்கு அல்லது தொண்டை காற்றுப்பாதையில் சில அடைப்புகள் இருக்க கூடும்.
    • குழந்தை வாய் வழியாக சுவாசிக்கும் போது அது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்க கூடும்.

    குழந்தை விழித்து கொண்டிருப்பதைவிட தூங்கும் போது தான் அம்மாக்கள் அதிகமாக கவனிப்பர்கள். எல்லா அம்மாக்களுக்கும் இது பொருந்தும். குழந்தையின் கை விரல்கள் கால் விரல்கள், கால்கள், குட்டி கண்கள், மூக்கு துவாரங்கள், சிறிய காதுகள் என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்க தோன்றும்.

    அவர்கள் தூங்கும் போது குழந்தையை உற்று நோக்கும் அம்மாக்கள் குழந்தை வாயை திறந்த நிலையில் தூங்குவதையும் கவனித்திருப்பார்கள். இது அடிக்கடி நிகழ கூடியதுதான் ஆனால் குழந்தை வாய் திறந்து தூங்கினால் அது கவனிக்க வேண்டிய விஷயம் தான்.

    பிறந்த குழந்தை 3 முதல் 4 மாதங்கள் வரை வாயால் சுவாசிக்கமாட்டார்கள். அதே நேரம் குழந்தைக்கு மாதங்கள் அதிகரிக்கும் போது மூக்கு அல்லது தொண்டை காற்றுப்பாதையில் சில அடைப்புகள் இருக்க கூடும். அதனால் தான் வாய்வழியாக சுவாசம் நடைபெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இது பொதுவானது என்றாலும் இது சிக்கலான நிலைமைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தொடரும் போது வாய் வழியாக சுவாசிப்பது குழந்தைக்கு பழக்கமாகிவிடும்.


    ஆனால் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கும் போது அது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்க கூடும். மூக்கு சுவாசம் போன்று இது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் மூக்கு வழியாக குழந்தை சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதற்கு முன்பு அதில் இருக்கும் மாசு வடிகட்டப்படுகிறது. நாசி சுவாசம் நுரையீரலில் ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை அதிகரிக்க செய்கிறது. குழந்தையின் உடலில் ஆக்ஸிஜன் அதிகரித்தால் அது குழந்தையின் உயிர் ஆற்றலை மேம்படுத்த செய்யும். மேலும் இது நுரையீரலுக்கு சுவாசம் சீராக கிடைக்கும். ஆனால் வாய் வழியாக சுவாசித்தல் நல்லதல்ல.

    குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருக்கும் போதும் இது நிகழலாம். அதனால் குழந்தை தூங்கும் போதெல்லாம் இதை கவனியுங்கள். இது குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகவும் இருக்கலாம். குழந்தை வாய் திறந்து தூங்கும் போது மூச்சுத்திணறல் மூச்சு விடுதலில் சிரமம் இருந்தாலும் இந்நிலை உண்டாகலாம்.

    குழந்தைக்கு சளி உண்டாகும் போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் அல்லது சளியால் சுவாசம் தடைபடலாம். அதனால் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கலாம். அல்லது ஏதேனும் ஒவ்வாமையால் இது உண்டாகியிருக்கலாம்.எனினும் சளி இருக்கும் போது குழந்தைக்கு உடனே சரியாக்க முடியாது என்பதால் அவர்கள் வாய் வழியாகத்தான் நிம்மதியான சுவாசத்தை பெறுவார்கள்.

    வாய் வழியே சுவாசம் என்பது குழந்தைக்கு உண்டாகும் மூச்சுத்திணறல் அறிகுறியாகவும் இருக்கலாம். குழந்தை மல்லாந்து படுத்திருக்கும் போது குழந்தையின் காற்றுப்பாதை ஏதேனும் சிறு வகையில் அடைப்புக்கு உள்ளாகியிருக்கலாம். இதற்கு டான்சில் அல்லது அடினாய்டு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.


    குழந்தைகள் குறட்டை விடுகிறார்களா என்று நினைக்காதீர்கள். அம்மாக்களுக்கு தெரியும் குழந்தையின் குறட்டை சத்தம். குழந்தை தூங்குவதில் சிரமம் இருக்கும் போது, இருமல் வரும் போது, மூச்சுத்திணறல் இருக்கும் போது உண்டாக கூடும்.

    சில குழந்தைகள் வேறு நோய் தாக்குதல் காரணங்களாலும் மூக்கு வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கலாம். அதனால் குழந்தை வாய் வழியாகவே எப்போதும் சுவாசித்தால் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் குழந்தைக்கு சுவாசப்பாதை தொற்றுடன் வேறு அறிகுறிகள் இருந்தால் அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    குழந்தை வாயை திறந்து தூங்கினாலே அது ஏதோ குறைபாடாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். சாதாரணமாக சளி பிரச்சனை இல்லாத நேரத்திலும் வாய் வழி சுவாசம் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    • பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது.
    • ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள்.

    பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது.

    கர்ப்ப காலத்தில், சிசுவின் ஆற்றல் குளுக்கோசால் பெறப்படுகிறது. தாயின் ரத்தத்தில் இருந்து, நஞ்சுக்கொடி வாயிலாக சிசுவுக்கு குளுக்கோஸ் பெறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, இவ்வாறு தாயின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் குழந்தைக்கு தடைப்படுவதால், தன் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பராமரிக்க, தன் கல்லீரல் மூலமாக குளுக்கோஸ் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

    எனினும் குறைமாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்ப்ப காலத்துக்குரிய எடையில் இருந்து மிகக் குறைவான எடையுள்ள பச்சிளங்குழந்தைகளில் குளுக்கோஸ் உற்பத்தி மற்றும் சேமிப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    நோய்வாய்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள், தாழ்வெப்பநிலை, பிறக்கும்போது மூச்சுத் திணறல், ரத்த ஓட்டக் குறைவு மற்றும் சுவாசக்கோளாறு இருக்கும் பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு குளுக்கோஸ் பயன்பாடு மற்றும் குறைந்தளவு குளுக்கோஸ் உற்பத்தி காரணமாக, ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பச்சிளங்குழந்தைகளில் ஹீமோகுளோபின் அதிகரித்து இருந்தால் அதை பாலிசைத்தீமியா என்பார்கள். பாலிசைத்தீமியா உள்ள பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு ரத்த சிவப்பணுக்களின் காரணமாக குளுக்கோஸ் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும். அதனால், ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அட்ரீனல் பற்றாக்குறை, ஹைப்போதாலமிக் குறைபாடு, பிறவி பிட்யூட்டரி குறைபாடு, குளுக்ககான் குறைபாடு, அட்ரீனலின் குறைபாடு முதலிய நாளமில்லா சுரப்பிக் கோளாறுடைய பச்சிளங் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் அதிகமாகும்.

     பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகையாகக் காணப்பட்டால் தீவிர மற்றும் தொடர் ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படலாம். இதன்மூலம் மூளையில் பாதிப்புகூட ஏற்படலாம்.

    நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் மிகை ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாகும். இக்குழந்தைகளில் 48 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இன்சுலின் மிகையாகச் சுரந்து, ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

    பிறக்கும்போது மூச்சுத்திணறல், மரபணு நோயுள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு இன்சுலின் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    ×