என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Doctor"
- குழந்தை ஒன்று மூன்று ஆணுறுப்புகளுடன் பிறந்தது.
- வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம்.
பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும். மருத்துவ உலகில் இது 'டிரிஃபாலியா' என்று அழைக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டுஹோக்கில் டிரிஃபாலியா குறைபாட்டை மருத்துவர்கள் முதன் முதலில் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று, 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது.
பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் சடலத்தை ஆய்வு செய்தனர். முதியவர் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த நிலையில், அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. அந்த முதியவர் தன் வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
டிஃபாலியா, அல்லது இரண்டு ஆண்குறிகள் கொண்ட நிலை, டிரிபாலியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும். உலகில் ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே இது பாதிக்கிறது. இன்றுவரை சுமார் 100 பேருக்கு மட்டுமே டிஃபாலியா ஏற்பட்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டிரிஃபாலியாவின் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று தனித்தனி ஆண்குறி தண்டுகள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய பிறவி நிலை என வரையறுக்கப்படுகிறது.
- குண்டுகள் பாய்ந்த டாக்டர் அலறியபடி இருக்கையில் சரிந்தார்.
- குற்றவாளிகளை பிடிக்க டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் ஜெய்ட்பூர் பகுதியில் நிமா மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை ஆகும்.
இந்த மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 2 இளைஞர்கள் வந்தனர். அதில் ஒருவர் தனது காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அந்த இளைஞருக்கு அங்குள்ள செவிலியர்கள் கால் விரலில் உள்ள காயத்துக்கு கட்டுப்போட்டு விட்டனர். பிறகு அந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் உள்ள டாக்டரை பார்க்க வேண்டும் என்று கேட்டனர்.
என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக டாக்டரை பார்க்க விரும்புவதாக கூறினார்கள். இதையடுத்து அந்த இளைஞர்களை டாக்டர்கள் அறைக்குள் செவிலியர்கள் அனுமதித்தனர்.
அறைக்குள் சென்றதும் அந்த 2 இளைஞர்களும் டாக்டரை நெருங்கி சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் கைத்துப்பாக்கியை எடுத்து டாக்டர் தலையை குறி வைத்து சுட்டனர்.
குண்டுகள் பாய்ந்த டாக்டர் அலறியபடி இருக்கையில் சரிந்தார். அடுத்த நிமிடமே ரத்த வெள்ளத்தில் பிணமானார். அடுத்த வினாடி அந்த அறையில் இருந்து 2 இளைஞர்களும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் ஜாவித்அக்தர் என்று தெரியவந்துள்ளது. அவர் விஞ்ஞானி டாக்டர் ஆவார். அவரை குறி வைத்துதான் 2 இளைஞர்களும் திட்டமிட்டு மருத்துவமனைக்கு வந்தது தெரிய வந்தது.
அவர்களை பிடிக்க டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர்கள் மருத்துவமனைக்குள் வரும் காட்சிகளும், தப்பி செல்லும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் இடம்பெற்று உள்ளது.
அதை வைத்து 2 இளைஞர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள். அவர்கள் இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக இருக்கலாம் என்றும் டெல்லி போலீசார் தெரிவிக்கின்றனர்.
#WATCH | Delhi | A doctor named Javed Akhtar was shot dead inside Nima Hospital, Jaitpur under the Kalindi Kunj PS area. As per hospital staff, two boys had come to the hospital with an injury, after dressing they had demanded to meet the doctor and shot him dead once they… pic.twitter.com/OJTkTsl5MJ
— ANI (@ANI) October 3, 2024
- நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை தாக்கும் காட்சி சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
- மருத்துவரை தாக்கிய 3 போரையும் போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் 'அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம்' என அறிவுறுத்திய மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
தலையில் அடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரை காண வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை தாக்கும் காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மருத்துவரை தாக்கிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
India needs to introduce anger management course ??"At a private hospital in Sehore, Bhavnagar district, a doctor was attacked after asking attendants of a female patient to remove their footwear before entering the emergency ward." #Bhavnagar pic.twitter.com/bSqRLvr9v2
— Kumar Manish (@kumarmanish9) September 15, 2024
- மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.
- மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த கங்காபூரில் ஆர்பிஎஸ் ஹெல்த் கேர் சென்டர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. முஸ்ரிகராரி காவல் நிலைய வட்டத்திற்குள் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்புறவு முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தின் போது மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரை மருத்துவர் குமார், மற்றும் அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுனில் குமார் குப்தா மற்றும் அவதேஷ் குமார் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க செவிலியர் தன் கையில் கிடைத்த பிளேடு கொண்டு மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.
இதையடுத்து, மூவரிடம் இருந்து தப்பிய செவிலியர் மருத்துவமனையில் மறைந்திருந்து காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர். விசாரணையில் மருத்துவர் உள்பட மூவரும் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
"ஆபத்தான காலக்கட்டத்தில் செவிலியரின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது," என காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் பாண்டே தெரிவித்தார்.
- ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
- நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு பலர் போராடி வரும் அதே வேளையில் பீகாரில் உள்ள மருவத்துவமனையில் நர்ஸை டாக்டர் உட்பட மூவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த நர்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய நர்ஸ், டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார்.
அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த நர்ஸ், அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த போலீஸ் நர்ஸை மீட்டு டாக்டர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர். நர்ஸை பலாத்காரம் செய்ய முடுவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை டாகடர் அணைத்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் இருந்து நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
- இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த டாக்டர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.
மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் ஆஸ்பத்திரி வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆஸ்பத்திரி உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை டாக்டரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.
- புகையிலை மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றால் வாய் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.
- வாய் புற்றுநோய் ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் பாதிக்கக்கூடியது.
இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் பலருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. வாய் புற்றுநோய் ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் பாதிக்கக்கூடியது.
வாய் புற்றுநோய் குறித்து மருத்துவர் அனில் கோலி யூடியூபர் ராஜ் சாமானிக்கு நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய அவர், "மொத்த புற்றுநோய்களில் 30% வாய் புற்றுநோய் தான். உலகின் வாய் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா மாறியுள்ளது. புகையிலை மற்றும் மதுவை அதிக அளவில் எடுத்து கொள்வது, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்வது ஆகியவற்றால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
- சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
சஞ்சய் ராய் மீது நிதி முறைகேடுகள் தொடர்பாகவழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கினர்.அதன்படி, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வரான சஞ்சய் வசிஸ்ட் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்றைய தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் சந்தீப் கோசின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் சுமார் 90 நிமிடங்களாக வெளியில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் 11 மணிநேரமாக சோதனை நடத்திய அதிகாரிகள் அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதேபோல் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சந்தீப் கோஷ் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது.
- சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர் பாக போலீசில் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சஞ்சய் ராயை சிபிஐ பல கட்டங்களாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது. டெல்லி ஃபாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்தில்[CFSL] இருந்து வந்த உளவியல் நிபுணர்கள் சஞ்சய் ராயை பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர்.
சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான். சஞ்சய் ராயின் உளவியல் பரிசோதனையின் மூலமும் உயிரிழந்த பெண் மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமும் சஞ்சய் ராய் மிருகத்தை ஒத்த பாலியல் வக்கிரம் கொண்ட ஆசாமி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது.
முன்னதாக சம்பவ நடந்த அன்றைய இரவு தான் நண்பர்களுடன் கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியில் இரண்டு இடங்களுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் தனது நண்பர்கள் தன்னை மருத்துவமனையில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறினான். பின்னர் தூங்கலாம் என்று தான் ஆடிட்டோரியத்திற்கு சென்றபோது அங்கு பெண் மருத்துவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பலாத்காரம் செய்தேன் என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் சஞ்சய் ராய் ஆடிட்டோரியத்துக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது இந்த வாக்குமூலத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
- தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
- உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும்
கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் நாள் விசாரணையில் மேற்கு வங்காள அரசையும், போலீசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தாமதமாக வழக்குப் பதிந்தது ஏன்? மருத்துவமனைக்குள் கலவரக்காரர்கள் எப்படி நுழைந்தனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களிடம் அரசு தங்களின் பலத்தைக் காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் நடத்திய ரெசிடெண்ட் மருத்துவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி டி,ஒய்.சந்திரசூட் வாக்குறுதி அளித்தார். மேலும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
- குற்றவாளி சஞ்சய் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மத்திய அமைச்சர்
- மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், உச்சநீதிமன்றத்தின் தலையீடு, சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மம்தா தலைமையிலான மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசு மெத்தனப் போக்கில் செய்யப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன.
குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை முன்வைத்து மம்தா அரசை கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய் , கொல்கத்தா துணை காவல் ஆய்வாளர் அனூப் குப்தா மற்றும் தென் தின்ஜாபூர் [Dinajpur] மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் உள்ளதாக புகைப்படம் ஒன்றை மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள பாஜக தலைவருமான சுகந்தா மஜூம்தார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியைக் கடுமையாக சாடிய அவர், மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Not just a champion in running, but also in party connections!Engaged in a gathering with TMC leaders of South Dinajpur are none other than Kolkata Police's notable ASI Anup Dutta, alongside Civic Volunteer Sanjay! pic.twitter.com/xU5jkvUZ5o
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 21, 2024
- கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். போராட்டத்தில் பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி கங்குலி மெழுகுவர்த்தி ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்குலியின் மனைவி டோனா, "பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இது மேற்கு வங்கம் மட்டுமல்ல. எங்கிருந்தோ யாரோ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஒவ்வொரு நாளும் செய்தி வருகிறது, அது நல்ல செய்தி அல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பான சமூகம் தேவை" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய கங்குலியின் மகள் சனா, "போராட்டங்கள் தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்