என் மலர்

    நீங்கள் தேடியது "Life sentence"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது.
    • இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனம் வைத்திருந்தவா் முருகன் (வயது 48). இவரிடம் விக்னேஷ் (31), அசோக்குமாா் (28) ஆகியோா் ஓட்டுநா்களாகப் பணியாற்றி வந்தனா். முருகனின் நண்பா் காட்டுராஜா (29). விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அவரை முருகன் பணியை விட்டு நீக்கியுள்ளாா். இதனிடையே, முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோா் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபா் 17 ந் தேதி இருந்துள்ளனா்.

    அப்போது அங்கு வந்த விக்னேஷ் முருகனிடம் பணமும், வேலையும் கேட்டுள்ளாா்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகன் உள்பட 3 பேரும் சோ்ந்து விக்னேஷை கீழே தள்ளி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

    இந்த வழக்கு திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

    இதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது
    • ஆசிரியர் கொலை வழக்கில்

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58). இவர் பெரம்பலூர் ஸ்ரீபுரந்தான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்ேடாபர் மாதம் 5-ந் தேதி செல்வராஜ் இருசக்கரவாகனத்தில் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    உடையார்பாளையம் சோழன்குறிச்சி பிரிவு சாலையில் வந்த போது ஜெயங்கொண்டம் காமராஜ்புரத்தை சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவர் செல்வராஜை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இன்று நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அதில் வெங்கடேசனுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜராகினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்வேலியில் சிக்கி 2 பேர் பலியான வழக்கில் தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
    • அரியலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் இறந்த வழக்கில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    விக்கிரமங்கலம் அடுத்த சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம்(95). இவரது மகன் தங்கராசு(60) ஓய்வுபெற்ற விஏஓ. இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு, கொள்ளிடம் ஆற்றுபடுகை பகுதியில் தனது விவசாய நிலத்துக்கு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்ற போது, அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன்(52) தனது வயலில், சோளப்பயிர்களை காட்டுபன்றிகள் சேதபடுத்துவதை கட்டுப்படுத்த அமைத்திருந்த மின்வேலியில் சிக்கியதில் இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தங்கராசு மகன் தமிழரசன்(33) அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விக்கிரமங்கலம் காவல் துறையினர், அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக தேவேந்திரன்(52), அவரது மகன் பிரபாகரன்(25), மின்வேலி அமைக்க உடந்தையாக இருந்ததாக அதேகிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கர்ணன், அனுமதியின்றி மின்வேலி அமைத்த தேவேந்திரன் அவரது மகன் பிரபாகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைகளும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து தேவேந்திரன், பிரபாகரன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜமுனாமரத்தூரில் நடந்த முதியவர் கொலை வழக்கில் உத்தரவு
    • திருப்பத்தூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலைமாவட் டம் போளூர் அடுத்த ஜமு னாமரத்தூர் மண்டப்பாறை கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 45), விவசாயி. இவருக்கும், இவரது சகோத ரர் பூச்சிக்கும் இடையே உள்ள இடத்தில் விவசாயம் செய்வதில் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பூச்சி, ஊர் பஞ்சாயத்தை கூட் டினார்.

    பஞ்சாயத்தில் பூச்சிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த உறவினர் குப்பன் (60) என்பவர் பேசினார். இது பொன்னுசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 2013- ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி மீண்டும் குப்பனுக்கும், பொன்னுசாமிக்கும் இடையை வாக்குவாதம் ஏற் பட்டது. அப்போது பொன்னுசாமி, விவசாயியான அவ ரது சகோதரர் ஜெயராமன் (40), உறவினர்கள் உமேஷ், வெள்ளையன் மனைவி பூச்சி ஆகிய 4 பேரும் ஒன்று சேர்ந்து குப்பனை சரமாரியாக தாக் கினர். திடீரெனஜெயராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குப்பனை வெட்டி னார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக் காக வேலூர் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார். அங்கி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஆயுள் தண்டனை இதுகுறித்து ஜமுனாமரத் தூர் போலீசார் வழக்குப்ப திவு செய்து. பொன்னுசாமி, ஜெயராமன், உமேஷ், பூச்சி ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசா ரணை நேற்று நடந்தது. இதில் நீதிபதி மீனாகுமாரி கத்தி யால் வெட்டிய ஜெயராம னுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், பொன்னுசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும், உமேஷ், பூச்சி ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.750 அபதாரதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    நீதிபதி தீர்ப்பு வாசித்து கொண்டு இருந்த போது ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட ஜெயராமன் கோர்ட் டில் இருந்து தப்பியோட முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கோர்ட்டுக்குள் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளா கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    செங்கல்பட்டு:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி ஊரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார்.

    சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பம்மல், முத்தமிழ்நகர், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மனோகர் (65). இவர்கள் இருவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது சக்திவேலுக்கும், மனோகருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 31-10-2011 அன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மீது செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனார்.

    இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் வையாபுரி ஆஜரானார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பலவன்பாடி கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் ராமன் (வயது 28).

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று வழக்கு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு கூறினார்.

    அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ராமனை போலீசார் வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
    • நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
    • பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அமிர்நிஷா (21). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தங்களது வக்கீல் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் (26) என்பவர் ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். மேலும் தடுக்க வந்த ஜமீலாபானுவுக்கும் தலை, கையில் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அங்கிருந்து ரகுமான்கான் தப்பினார்.

    இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அமிர்நிஷா சேலம் கட்டக்கல்லூரியில் படிக்க சென்றபோது, ரகுமான் கான் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான் கோபத்தில் தாய்-மகளை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ரகுமான் கானை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகுமான் கான் திருப்பூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில் அவரை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. தாய்-மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி வக்கீல் அலுவலகத்துக்குள் நுழைந்த குற்–றத்–துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பெண்களை தொல்லை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் உதவுவதற்காக பெண் வக்கீலகள் சத்யா, பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்குள் சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுபோல் கொலைமுயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அருகே கீழமுட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்தவர் எவரெஸ்ட் (வயது 23).

    இவர் அழிக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சிறுமியை எச்சரித்தனர். இதனால் அவர் எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2013 -ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற எவரெஸ்ட் அவரது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து எவரெஸ்ட் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதே மாதம் 29-ந் தேதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எவரெஸ்ட் ஜாமினில் விடுதலை ஆனார்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து எவரெஸ்ட் கோர்ட்டில் ஆஜரானார்.

    தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எவரெஸ்ட்டுக்கு கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனையும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 வருடம் ஜெயில் தண்டனையும் மற்றும்ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். எவரெஸ்ட்டிற்கு தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிட்டாய் தருகிறேன் என்று கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மேட்டுப்பாளையம் லத்துவாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 74). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி 8 வயது சிறுமி மிட்டாய் வாங்க பெட்டிக்கடைக்கு சென்றாள்.

    அப்போது மிட்டாய் தருகிறேன் என்று கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் செல்வராஜை கைது செய்தனர்.

    இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

    மேலும் ஆயுள் தண்டனை பெற்ற செல்வராஜை கோவை மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார், அவரை அழைத்துச் சென்று கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo