search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Life sentence"

    • கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர்.
    • தேர்தலில் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த பரபரப்பான தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குலசேகரன் (வயது 40). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவருடைய குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்தவரும், தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்தவருமான நக்கீரன் (48) குடும்பத்திற்கும் அரசு புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    மேலும் கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நக்கீரனும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சேகருக்கு ஆதரவாக குலசேகரன் தரப்பினர் செயல்பட்டனர். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்திலும் இரு தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் குலசேகரன் தரப்பினர் மீது நக்கீரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    அரசு புறம்போக்கு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு தடையாக இருப்பதோடு, தேர்தலிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் குலசேகரன் தரப்பினரை கொலை செய்ய நக்கீரன் தரப்பினர் திட்டம் தீட்டினர்.

    கடந்த 4.11.2005 அன்று காலை 6 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில் குலசேகரன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வீச்சரிவாள், கொடுவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்த நக்கீரன் தரப்பினர், குலசேகரனை சரமாரியாக வெட்டினர்.

    இதை தடுக்க வந்த குலசேகரனின் நண்பர் காத்தவராயன் (50) என்பவரையும் அவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் குலசேகரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பலத்த காயம் அடைந்த காத்தவராயன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே நக்கீரன் தரப்பினர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காத்தவராயனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார்.

    இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து குலசேகரனின் அண்ணன் திருநாவுக்கரசு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நக்கீரன், கோவிந்தராஜ் (70), தமிழ்மணி (27), அ.தி.மு.க. முன்னாள் கிளை பிரதிநிதி சிவபூஷணம் (64), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி (77), மணவாளன் (74), ராஜேந்திரன் (64), குமரவேல் (52), மார்க்கண்டேயன் (64), சுதாகர் (45), பழனிவேல் (38), முரளி (43), தமிழ்செல்வன் (35), அருள் (24), அ.தி.மு.க. முன்னாள் கிளை மேலவை பிரதிநிதி கனகராஜ் (74), மோகன் (46), சிவநாதன் (44), பிரபு (44), காளிபசுபதி (72), அர்ஜூனன் (76), மணி (76), பாரி (49), பார்த்திபன் (44), சபரிநாதன் (49), கண்ணன் (64), மாதவன் (49) ஆகிய 26 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.

    பின்னர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் தமிழ்மணி, பழனிவேல், தமிழ்செல்வன், அருள், அர்ஜூனன், கண்ணன் ஆகிய 6 பேரும் உடல்நலக்குறைவால் இறந்தனர்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரிழந்த 6 பேரை தவிர மற்ற அனைவருமே குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

    மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நக்கீரன், கோவிந்தராஜ், சிவபூஷணம், புகழேந்தி, மணவாளன், ராஜேந்திரன், குமரவேல், மார்க்கண்டேயன், சுதாகர், முரளி, கனகராஜ், மோகன், சிவநாதன், பிரபு, காளிபசுபதி, மணி, பாரி, பார்த்திபன், சபரிநாதன், மாதவன் ஆகிய 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜசிம்மவர்மன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும், விழுப்புரம் கோர்ட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேன்களில் ஏற்றப்பட்டு, கடலூரில் உள்ள மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்புராயலு ஆஜரானார்.

    இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் கோவிந்தராஜ் தற்போது வக்கீலாகவும், மோகன் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகவும், சபரிநாதன் பொதுப்பணித்துறையில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர்.
    • சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    காஞ்சிபுரம்:

    பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பார்வதி (வயது66). கடந்த 7.12.2018-ம் ஆண்டு திருப்புட்குழி ஏரிக்கரை அருகில் உள்ள நிலத்தில் பார்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். அதில், சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி உத்தரவு.
    • ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனையில் உள்ள கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி, விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, கடலூர் 4, கோவை 6, வேலூர் 1, புழல் 1 என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

    • திருவாடானை வட்டம் நா்த்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பி.ரகுபதி
    • கண்ணப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுபதியை குத்திக்கொலை செய்துள்ளாா்.

    திருப்பூர் : 

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் நா்த்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பி.ரகுபதி ( வயது 22). இவா் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே ஊத்துக்குளியில் டாஸ்மாக் பாா் நடத்தி வந்த சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த கே.கண்ணப்பன் (37) என்பவரிடம் வேலை செய்து வந்தாா்.

    இந்த நிலையில் பாரில் இருந்த ரூ.6 ஆயிரத்தை எடுத்தது தொடா்பான விவகாரத்தில் ரகுபதி வேலையை விட்டுச் சென்றுள்ளாா். இதன் பின்னா் அருகம்பாளையத்தில் உள்ள வேறு ஒரு பாரில் ரகுபதி வேலை செய்து வந்துள்ளாா்.

    இந்த நிலையில், கடந்த 2018 மாா்ச் 12-ந் தேதி ரகுபதி வேலைசெய்து வந்த பாருக்கு கண்ணப்பன் சென்றுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரகுபதி, கண்ணப்பனை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கண்ணப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுபதியை குத்திக்கொலை செய்துள்ளாா்.

    இதுகுறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து கண்ணப்பனைக் கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். அதில், கண்ணப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா்.

    • திருப்பூர் பெரியகடை வீதியை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம் (வயது 31).
    • கோம்பை தோட்டம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

     திருப்பூர் : 

    திருப்பூர் பெரியகடை வீதியை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம் (வயது 31). இவர் கணவரிடம் விவாகரத்து பெற்று வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் முகமது அபுதாகீர் சேட் (44). இவர் திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். பல்கீஸ் பேகம், முகமது அபுதாகீர் சேட் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி பல்கீஸ் பேகம் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

    இந்தநிலையில் கடந்த 30-6-2019 அன்று காலை பல்கீஸ் பேகம் வீட்டுக்கு முகமது அபுதாகீர் சேட் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முகமது அபுதாகீர் சேட், கத்தியால் பல்கீஸ் பேகத்தை குத்திக்கொலை செய்தார். இதுதொடர்பாக தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முகமது அபுதாகீர் சேட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பெண்ணைக்கொலை செய்த முகமது அபுதாகீர் சேட்டுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், கணேசன் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    • ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்பு
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    சென்னையை சேர்ந்தவர் தனானந்தகிரி (வயது 50). இவர் சாமியார் போன்று பல்வேறு இடங்களுக்கு செல்வார். கடந்த 2021-ம் ஆண்டு வேலூர் வந்த அவர் வேலூருக்கு வந்தார்.

    கேரளமாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு அகமது ஷேக் (50). இவரும் வேலூரில் சுற்றித்திரிந்து கிடைக்கும் வேலைகளை செய்து சாலையோரம் எங்காவது தூங்குவதை வழக்கமாக கொண்டி ருந்தார்.

    இந்தநிலையில் அவர் வழக்கமாக தூங்கும் இடத்தில் தனானந்தகிரி படுத்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5.11.2021 அன்று காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த தனானந்தகிரியை, பாபு அகமதுஷேக் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுஅகமது ஷேக்கை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் சம்பத் ஆஜராகி வாதாடினார்.

    நீதிபதி ரேவதி வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட பாபு அகமதுஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண் டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து பாபுஅகமதுஷேக்கை, போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

    • பன்னீர் செல்வம். இவருக்கு ெசாந்தமான நிலத்தை கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 20 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.
    • செல்வராஜ் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 பேரை தங்க வைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கனககிரி கிராமம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கு ெசாந்தமான நிலத்தை கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 20 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.

    தொழிலாளர்கள்

    மேலும் அந்த இடத்தில் இரும்பு தகர செட் அமைத்து அதில் செல்வராஜ் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 பேரை தங்க வைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.

    கொலை

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தகர செட்டின் முதல் அறையில் பீகார் மாநிலம் புல்வாரியா கிழக்கு பகுதியை சேர்ந்த முகமது நகரூதின் (31), பீகார் மாநிலம் நாராயணபுரம் சகோரியா பகுதியை சேர்ந்த ஜெயகுார்ஷ்தேவ், அமித்குமார் ஆகியோர் ஒன்றாக தங்கி இருந்தனர். அன்று இரவு அவர்களுக்குள் சாப்பாடு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து இரவு தூங்கும்போது முகமது நகரூதின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர்.

    இது குறித்து அப்போதைய மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகியோரை மார்ச் மாதம் 3-ந்தேதி கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    ஆயுள் தண்டனை

    இவ்வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1-ல் விசா ரணை நடைபெற்று வந்தது. சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று நீதிபதி

    ஜெகநாதன் தீர்ப்பு வழங்கினார். ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 -ம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    சூப்பிரண்டு பாராட்டு

    இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க விரைவாக செயல்பட்ட மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய தற்போதைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் பாராட்டினார்.

    • வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது28). பெண் தகராறு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு யுவராஜ் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன், தங்கராஜ், ராமச்சந்திரன், ராம மூர்த்தி, ஸ்ரீராமலு, சண்முகம், மணி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள். இதைத்தொடர்ந்து மற்ற 5 பேர் மீது வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இறந்து போன முருகன், சண்முகம் ஆகியோரை தவிர்த்து தங்கராஜ், ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ஸ்ரீராமலு, மணி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு சார்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.ஆர் லாசர் ஆஜரானார்.

    • போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 63). மறைமலை நகரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் கஜேந்திரன் புழல் சிறையில் இருந்தார்.

    இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சிறிது நேரம் கழித்து மற்ற கைதிகள் சென்ற போது கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் கஜேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தில் கஜேந்திரன் தற்கொலை செய்தாரா? அல்லது மற்ற கைதிகளுடன் மோதல் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது.
    • இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனம் வைத்திருந்தவா் முருகன் (வயது 48). இவரிடம் விக்னேஷ் (31), அசோக்குமாா் (28) ஆகியோா் ஓட்டுநா்களாகப் பணியாற்றி வந்தனா். முருகனின் நண்பா் காட்டுராஜா (29). விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அவரை முருகன் பணியை விட்டு நீக்கியுள்ளாா். இதனிடையே, முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோா் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபா் 17 ந் தேதி இருந்துள்ளனா்.

    அப்போது அங்கு வந்த விக்னேஷ் முருகனிடம் பணமும், வேலையும் கேட்டுள்ளாா்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகன் உள்பட 3 பேரும் சோ்ந்து விக்னேஷை கீழே தள்ளி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

    இந்த வழக்கு திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

    இதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா். 

    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது
    • ஆசிரியர் கொலை வழக்கில்

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58). இவர் பெரம்பலூர் ஸ்ரீபுரந்தான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்ேடாபர் மாதம் 5-ந் தேதி செல்வராஜ் இருசக்கரவாகனத்தில் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    உடையார்பாளையம் சோழன்குறிச்சி பிரிவு சாலையில் வந்த போது ஜெயங்கொண்டம் காமராஜ்புரத்தை சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவர் செல்வராஜை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இன்று நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அதில் வெங்கடேசனுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜராகினார்.

    • மின்வேலியில் சிக்கி 2 பேர் பலியான வழக்கில் தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
    • அரியலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் இறந்த வழக்கில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    விக்கிரமங்கலம் அடுத்த சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம்(95). இவரது மகன் தங்கராசு(60) ஓய்வுபெற்ற விஏஓ. இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு, கொள்ளிடம் ஆற்றுபடுகை பகுதியில் தனது விவசாய நிலத்துக்கு கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்ற போது, அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன்(52) தனது வயலில், சோளப்பயிர்களை காட்டுபன்றிகள் சேதபடுத்துவதை கட்டுப்படுத்த அமைத்திருந்த மின்வேலியில் சிக்கியதில் இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தங்கராசு மகன் தமிழரசன்(33) அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விக்கிரமங்கலம் காவல் துறையினர், அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக தேவேந்திரன்(52), அவரது மகன் பிரபாகரன்(25), மின்வேலி அமைக்க உடந்தையாக இருந்ததாக அதேகிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கர்ணன், அனுமதியின்றி மின்வேலி அமைத்த தேவேந்திரன் அவரது மகன் பிரபாகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைகளும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மகன் சுரேஷ், ஆறுமுகம் மகன் சுரேஷ் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து தேவேந்திரன், பிரபாகரன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×