என் மலர்
நீங்கள் தேடியது "rowdy"
- போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
- கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் விஜயகுமார் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா.
- பிரபல ரவுடியான இவர் பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் அடிக்கடி கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், அது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சிறையில் கைதி ஒருவர் பெரிய கத்தியால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா என்ற குப்பாச்சி சீனா. பிரபல ரவுடியான இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் சிறை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போது அவருக்கு சக கைதிகள் ஆப்பிள் மாலை அணிவித்து உள்ளனர். பின்னர் குப்பாச்சி சீனா பெரிய கத்தியால் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.
இதை அங்கு இருந்த யாேரா ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறை விதிகளின் படி சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவது குற்றம் ஆகும். ஆனாலும் கைதிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வெளியானது எப்படி என்று சிறைத்துறை உயர் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.
அப்போது முதல் கட்ட விசாரணையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது தெரியவந்தது. மேலும் வீடியோவில் இருந்த சில கைதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து பரப்பன அக்ரகாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்குள் செல்போன்களை எப்படி கொண்டு சென்றனர். மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு உதவியது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
- 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை கடந்த வருடம் அக்டோபரில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவானது.
இதனை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
சோட்டா ராஜன் 4 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவருக்கு ஏன் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது? என உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தை எழுப்பியது.
சாட்சிகள் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வரவில்லை. அதனால், பல வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
- ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிகாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 60-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்.
- அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.
டெல்லியின் சீலம்பூரில் வியாழக்கிழமை மாலை பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் குணால் என்ற 17 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டெல்லி காவல்துறை, இளம் பெண் தாதா ஜிக்ராவை கைது செய்துள்ளனர்.
ஜிக்ரா தன்னுடைய உறவினரான சாஹிலுடன் சேர்ந்து, பழி வாங்கும் ஒரு பகுதியாக இந்த கொலையை செய்திருக்கிறார்.
2023-ம் ஆண்டு நவம்பரில் சாஹிலை மீது கொலை முயற்சி நடந்தது. அதில், அவர் உயிர் தப்பினார். இந்த வழக்கில் லாலா மற்றும் ஷம்பு என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் குணாலின் நெருங்கிய நண்பர்கள். சிறுவன் என்பதற்காக குணால் பெயர் எப்.ஐ.ஆர். பதிவில் இல்லை. குணாலே திட்டமிட்டு சாஹில்- ஐ கொலை செய்ய முயன்றதாக ஜிக்ரா நினைத்துள்ளார். இதனால் அவர் தற்போது சாஹில் உடன் சேர்ந்து குணாலை கொலை செய்துள்ளார்.

ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார். ஆயுதங்களுடனும், இந்த சிறுவர்களுடனும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி வந்திருக்கிறார். அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.
ஜோயா என்பவருக்கு பவுன்சராகவும் ஜிக்ரா வேலை செய்து வந்திருக்கிறார். ஜோயா தற்போது சிறையில் இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜிக்ரா, சாஹில் மற்றும் தில்ஷாத் ஆகியோருடன் 7 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
- காளீஸ்வரன் கொலை வழக்கில் வேறு யாரேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- விளாச்சேரி பகுதிக்கு போலீசார் வந்ததை பார்த்ததும் சுபாஷ் சந்திரபோஸ் காரில் ஏறி தப்பினார்.
மதுரை:
மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 40). இவர் மதுரை மாநகர தி.மு.க பிரமுகரும், முன்னாள் மண்டல தலைவருமான வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். காளீஸ்வரன் தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரில் 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை வீட்டு வெளியே சென்ற போது காளீஸ்வரனை மர்மநபர்கள் சிலர் வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சக்கிமங்கலம் கல்மேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), மதுரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அசேன் (32), சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் கார்த்திக் (28), மதுரை காமராஜர்புரம் நவீன்குமார் (22), ஜெயக்கொடி (65), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மணல்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 18 வயது சிறுவன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பாலகிருஷ்ணன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காளீஸ்வரன் கொலை வழக்கில் வேறு யாரேனும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வி.கே.குருசாமி மற்றும் வெள்ளை காளி தரப்பு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் இரு தரப்பினரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையில் 3 நாட்களுக்கு முன்பாக மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 கிலோ கஞ்சாவுடன் நின்ற ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவர்தான், கஞ்சா விற்பனை செய்ய சொன்னதாக தகவல் தெரியவந்தது. மேலும் அவர் காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
அவரை தனிப்படை போலீசார் தேடிய நிலையில் விளாச்சேரி பகுதியில் நேற்று இரவு 7 மணிக்கு சுபாஷ் சந்திரபோஸ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
விளாச்சேரி பகுதிக்கு போலீசார் வந்ததை பார்த்ததும் சுபாஷ் சந்திரபோஸ் காரில் ஏறி தப்பினார். போலீசாரும் அவரை காரில் விரட்டிச் சென்றனர். மேலும் அந்த பகுதிகளில் இருந்த சோதனைச்சாவடிகளில் இருந்த போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். ஒரு சோதனைச்சாவடியில் சுபாஷ் சந்திரபோசின் காரை போலீசார் மடக்கியபோது அவர்களிடம் இருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து ரிங்ரோடு கல்லம்பல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அவரது காரை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே காரில் இருந்து தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் சரண் அடையுமாறு கூறினர்.
ஆனால் அவர் தன்னிடமிருந்த பெரிய கத்தியை எடுத்து போலீசாரை தாக்கினார். அதில் போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தனது துப்பாக்கியை காட்டி சுபாஷ் சந்திர போசை சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டார். அதில் அந்த குண்டு கார் மீது பட்டது.
எனவே தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் பூமிநாதன் திருப்பிச் சுட்டபோது மார்பில் குண்டு பாய்ந்து சுபாஷ்சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மதுரையில் வி.கே.குருசாமி, வெள்ளை காளி தரப்பினரிடையே நடைபெற்று வரும் 22 ஆண்டு கால பகை காரணமாக 21 கொலை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் வெள்ளைக்காளி தரப்பில் 3 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மதுரை காவல் ஆணையர் கூறுகையில்,
ரவுடி சுபாஷ் சந்திர போஸ், போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதால், தற்காப்புக்காக என்கவுண்ட்டர் நடந்தது. காலில் சுட முயன்றபோது, குனிந்ததால் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என்று விளக்கம் அளித்தார்.
- அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
- போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி அமன் சாவ். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு அண்டை மாநிலமான சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அமன் சாவ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தொடர்ந்த வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக அவரை ராய்ப்பூரில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி ஜார்கண்ட் போலீசார் ராய்ப்பூர் சென்று, அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
ராஞ்சியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள பலாமு மாவட்டத்தின் செயின்பூர் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அமன் சாவின் கூட்டாளிகள் அவரை தப்ப வைப்பதற்காக போலீஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
அமன் சாவின் கூட்டாளிகள் வீசிய குண்டு போலீஸ் வாகனத்தின் முன்பு விழுந்து வெடித்தது. இதனால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.
அதை தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை பயன்படுத்தி அமன் சாவ், போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமன் சாவ் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதை தொடர்ந்து அமன் சாவின் கூட்டாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
காயம் அடைந்த போலீஸ்காரர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நேற்று காலை சண்முகா நகர் ஜங்ஷன் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது, இவரை சண்முகா நகர் ராஜகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வழிமறித்தார்.
- பின்னர் கத்தி முனையில், சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.4,300 பறித்து கொண்டார்.
சேலம்:
சேலம் லைன்மேடு வடக்கு காடு பென்ஷன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). இவர் நேற்று காலை சண்முகா நகர் ஜங்ஷன் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது, இவரை சண்முகா நகர் ராஜகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஜி (வயது 36) என்பவர் வழிமறித்தார்.
பின்னர் கத்தி முனையில், சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.4,300 பறித்து கொண்டார். இது குறித்து சீனிவாசன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த ஒருவர், பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.2150 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு, தர்மலிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் தனது வேலை விஷயமாக அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.2150 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட , மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவுடி மாதேஸ் என்கிற மாதேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செயின், பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டது.
அவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்தது.
- இதையடுத்து மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் மகன் சிபி வயது ( வயது 22 ). இவர் மீது கடந்த ஆண்டு கருமலை கூடல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்த சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 1994-ம் ஆண்டு சீட்டு பணத் தகராறில் தனது தாயின் சகோதரரை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார்.
- மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகுமார் தொடர்ந்து செல்போனில் பேசி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போரூர்:
சென்னை சாலிகிராமம், அடுத்த தசரதபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது49) ரவுடி.
இவர் கடந்த 1994-ம் ஆண்டு சீட்டு பணத் தகராறில் தனது தாயின் சகோதரரை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் சசிகுமார் உள்பட 5பேரையும் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கில் சசிகுமார் உள்பட 5 பேருக்கும் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2009-ம் ஆண்டு பரோலில் வந்த சசிகுமார் திடீரென தலைமறைவாகிவிட்டார் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை.
இந்நிலையில் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகுமார் தொடர்ந்து செல்போனில் பேசி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சசிகுமாரின் குடும்ப உறுப்பினர்களின் செல்போன் எண்ணை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது கோயமுத்தூர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரியில் படித்து வரும் மகனிடம் சசிகுமார் அடிக்கடி பேசி வருவது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சசிகுமாரை கைது செய்தனர். தலைமறைவான சசிகுமார் மேட்டுப்பாளையம் சென்று முதலில் டிராவல்ஸ் கார் ஓட்டி வந்தார். தற்போது படிப்படியாக உயர்ந்து அங்கிருந்து கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது.
சுமார் 14 ஆண்டுகள் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த சசிகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.






