என் மலர்
நீங்கள் தேடியது "case"
- கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது
- ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்கிறது. இதனால் கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் போலீசார் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர் சாலையில் வாகன தணிக்கை மேற்க்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மொத்தம் ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
- ராஜேஸ்வரனை வழிமறித்து பணம்கேட்டு மிரட்டி தாக்கி தப்பி சென்று விட்டார்.
- கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை கைது செய்தனர்.
தேனாம்பேட்டை, ஆலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். ஆன்லைன் நிறுவன ஊழியர். இவர் இன்று காலை கோடம்பாக்கம் அஜீஸ் நகர் பகுதியில் வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம வாலிபர் ஒருவர், ராஜேஸ்வரனை வழிமறித்து பணம்கேட்டு மிரட்டி தாக்கி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவரை கைது செய்தனர்.
- தாய்மாமாவின் பேச்சை நம்பிய சித்ரா, கணவரின் உறவினர்கள் மேலும் 4 பேரிடம் கூறியுள்ளார்.
- பரமேஸ்வரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவரது மனைவி சுகாஷிணி ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கிள்ளியூர்:
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள நாட்டுவள்ளி பகுதியை சேர்ந்தவர் சுஜின், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சித்ரா (வயது 39). இவரது தாய் மாமா பரமேஸ்வரன் (60). திருப்பூரையடுத்த மண்ணரை பகுதியை சேர்ந்த இவர் நீலகிரி மாவட்டத்தில் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார்.
சித்ரா, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். இதனை அறிந்த அவரது மாமா பரமேசுவரன், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் பணம் வாங்கியுள்ளார். மேலும் பல வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், வேறு நபர்கள் இருந்தால் அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கலாம் என பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
தாய்மாமாவின் பேச்சை நம்பிய சித்ரா, கணவரின் உறவினர்கள் மேலும் 4 பேரிடம் கூறியுள்ளார். அவர்களிடமும் வேலைக்கு பணம் பெற்று பரமேஸ்வரனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வகையில் மொத்தம் ரூ. 29 லட்சம், பரமேஸ்வரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வருடங்களாகியும் அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதையடுத்து சித்ரா, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பரமேசுவரன் ஆத்திரம் அடைந்து சித்ராவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சித்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி பணம் வாங்கியது உறுதியானது. அதன் அடிப்படையில் பரமேஸ்வரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவரது மனைவி சுகாஷிணி ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய நபரான பரமேஸ்வரன் நாளை (31-ந்தேதி) பணி ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில் தற்போது வழக்கு பதிவாகியுள்ளது.
- அனுமதியின்றி பட்டாசு ஆலை வைத்திருந்தவர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள மல்லநாயக்கன்பட்டியில் சேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சமயன் அப்பநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தி பட்டாசுகளை கொண்ட அட்டைபெட்டிகள், மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு ஆலை நடத்த இடம் கொடுத்த சேகர், ஆலை உரிமையாளர் திருத்தங்கல் ராஜசேகர், போர்மென் ஆறுமுகசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடுகப்பட்டி- அழகாபுரி சாலையில் உள்ள மூலிகை சேமிப்பு பண்ணையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக நத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் பண்ணையில் ேசாதனை நடத்தினர். அப்ேபாது அங்குள்ள தகர ெகாட்டகையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கான வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அழகாபுரியை சேர்ந்த மணிவைரம் என்பவரை தேடி வருகின்றனர்.
- 2-வது திருமணம் செய்ததை தட்டி கேட்டதால் முதல் மனைவியை தாக்கிய கணவர்
- கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெறும் நிலையில்தொ ட்டியம் அருகே சம்பவம்
முசிறி,
தொட்டியம் அருகே உள்ள மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37)இவருக்கும் பெட்டவாய்த்தலை பழைய தபால் நிலைய பகுதியைச் சேர்ந்த சிவகாமி (34) என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடந்தது. அப்போது நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதனிடையே மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு சிவகாமியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வீட்டில் இருந்து துரத்தினர். அதைத்தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு முசிறி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரவிக்குமார் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்து தன பிரியா (31) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இது பற்றி அறிந்த முதல் மனைவி சிவகாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவரின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்றார். அப்போது ரவிக்குமார் அவரது இரண்டாவது மனைவி தன பிரியா, தாய் விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் ராஜா என்கிற ராஜசேகர், மகாலட்சுமி, சுந்தரி, சுப்பிரமணியன், அலமேலு மங்கை ஆகிய 8 பேரும் சேர்ந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிவகாமி மீண்டும் தொட்டியம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளித்தார். அதன் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரவிக்குமார் உள்ளிட்ட 8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
- போலீசார் 2 சிறுவர்களை திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சி,
திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சி மத்திய பஸ் நிலையம் டவுன் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது இவர் அருகில் வந்த திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் 2 பேர் தாமோதரன் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 300 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றனர். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் அந்த சிறுவர்களை பிடித்து திருச்சி கண்டோன்மென்ட் குற்ற பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் 2 சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
- சப்ளையரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
கரூர்:
கரூர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 50). இவர் தற்போது ஆண்டாங்கோவில் புதூரில் வசித்து வருகிறார். இவர் ரெட்டிபாளையம் டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் கவுதம், ஜீவா இருவரும் ரெட்டிபாளையம் டாஸ்மாக் பாருக்கு வந்து பாண்டியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு பாண்டி பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனையடுத்து கவுதம், ஜீவா ஆகியோர் பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பாண்டி கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் கவுதம், ஜீவா ஆகியோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர், முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
- சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன்(23). இவரை 4 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அருண்பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மித்ராவயல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(60).இவர் பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள கண்மாயில் ஏலம் எடுத்து மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- நாவப்பிள்ளை கிராம நிர்வாக அலுவலர்.
- கொலை மிரட்டல்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் நாவப்பிள்ளை (வயது 57). இவரிடம் பரமநத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த ஏழுமலை, முருகன் ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து நிலப்பட்டா வழங்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுத்த கிராம நிர்வாக அலுவலர் நாவப்பிளையை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து நாவப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, முருகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
- பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடித்து சிதறி அறைகள் தரைமட்டமானது. இதில் காளிராஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சாந்தி சம்பவ இடத்தில்ஆய்வு செய்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மென் முத்துகருப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பட்டாசு கடை அருகில் முத்தமிழ்புரம் காலனியை சேர்ந்த அருணாசலம் (32) என்பவருக்கு சொந்தமான செட்டில் பாதுகாப்பின்றி அட்டை பெட்டியில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.
- காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.
திருப்பதி:
<