search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman suicide"

    • கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சூரியன்பேட்டை சேர்ந்தவர் கந்தன். (வயது 48). இவருக்கு ரமாவள்ளி (வயது 40 ) என்ற மனைவி இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை கந்தனுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இதனால் கந்தனின் மனைவி ரமாவள்ளி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடனடியாக ரமா வள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் இன்று அதிகாலை ரமாவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது39), ஓய்வுபெற்ற ராணுவவீரர்.

    இவரது 2-வது மனைவி வெண்ணிலா (28) மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4).கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார்.

    இந்நிலையில் வெண்ணிலா தனது மகள்களுடன் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.

    எர்ணாகுளம்-ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார்.

    இதில் வெண்ணிலா மற்றும் அவரது மகள்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    அங்கு விரைந்த காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவிட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷீபா ஜாய். இவர் கருவண்ணூர் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்பு அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் தனது கைப்பை மற்றும் செல்போனை வைத்துவிட்டு, பாலத்தின் மேலே இருந்து ஆற்றுக்குள் குதித்தார். ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு ஷீபா ஜாய் பிணமாக மீட்கப்பட்டார். இதே இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்தார். மேலும் அந்த இடத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    அது மட்டுமின்றி இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபரும், மாணவியும் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார்கள். ஆகவே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரது மனைவி ஆனந்தி (வயது 26). கடந்த 2014 ஆம் ஆண்டு குபேந்திரனுக்கும், ஆனந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குபேந்திரன், மனைவி ஆனந்தியை பிரிந்து சென்று விட்டார். ஆனாலும் மாமியார் இருளாயி மருமகள் ஆனந்தியுடன் மிகுந்த பாசமாக இருந்து வந்தார். அவரும் கடந்த 2023 மார்ச் மாதம் இறந்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தன் மீது பாசமாக இருந்த மாமியார் கனவிலும், நேரடியாகவும் தோன்றி அழைப்பதாக கூறி ஆனந்தி அடிக்கடி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் புலம்பி கொண்டிருந்தார். இதனால் அவரை கோவில்களுக்கு அழைத்து சென்று தண்ணீர் தெளித்தனர். மேலும் சாமியார்கள், மந்திரவாதிகளிடமும் அழைத்து சென்று மந்திரித்தும் வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி, பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு மாமியாரிடம் செல்வதாக கூறி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண் ஆனந்தியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனவேதனையடைந்த சுபாஷினி வீட்டில் ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். சென்னையை சேர்ந்தவர் சுபாஷினி (வயது23). பி.காம் பட்டதாரி. இவர்கள் இருவரும் வங்கி ஒன்றில் வேலை பார்த்தனர். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சுபாஷினி நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள வீட்டில் கணவருடன் வசித்து வந்தார். கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

    இதனால் மனவேதனையடைந்த சுபாஷினி வீட்டில் ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்த போது, சுபாஷினி தூக்கில் பிணமாக தூங்கினார்.

    இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சுபாஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட சுபாஷினியின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துநகை (33), இவர் சேலம் வீரபாண்டியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.

    இவரும் குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து சேலம் சின்னதிருப்பதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். சந்தோஷமாக மண வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் வாழ்க்கையில் 2 மாதங்களில் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முத்து நகையின் பெற்றோர் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    பின்னர் தூக்கில் தொங்கிய அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு முத்து நகை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி பிணவறையில் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    முத்துநகையின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • இதனால் விரக்தியடைந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கினார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்த வர் பாலம்மாள் (40). இவர் தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். சில வருட ங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பால ம்மாள் பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கினார். இதுகுறித்து உத்தம பாளையம் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென வேதம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த சின்ன இரும்பேடு பகுதியை சேர்ந்தவர் வேதம் (வயது60). திருமணமாகாத அவர் சகோதரர் கருணாகரன் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென வேதம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திலகா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • சகதோழியான பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவியுடன் திலகா மிகவும் நட்பாக இருந்துள்ளார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்த நாடார்பட்டி கிராமம் முருகன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொன் காமராஜ். இவரது மகள் திலகா (வயது 20). நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று திலகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் திலகா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிக்கும்போது, இவருடன் படித்த சகதோழியான பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவியுடன் மிகவும் நட்பாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அவர் இறந்ததில் இருந்து திலகா மனம் உடைந்து காணப்பட்டதாகவும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • புஷ்பவள்ளி இரவு வீட்டில் உள்ள படுக்கைஅறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னை:

    எம்.ஜி.ஆர்.நகர், ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் அருண். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது27). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த புஷ்பவள்ளி நேற்று இரவு வீட்டில் உள்ள படுக்கைஅறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .
    • முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திலகவதி (வயது 26). இவர் சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் வரைவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கும் சேலம் மணியனூரைச் சேர்ந்த வெள்ளையங்கிரி என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திலகவதியின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் .

    இதனால் மனமுடைந்த திலகவதி கடந்த 11-ந்தேதி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார்.

    அவரது உடலை பரிசோதித்த அரசு டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் உறவினர்கள் கதறினர்.

    இது குறித்த முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோமளா குளியல் அறைக்கு சென்றார்.
    • கோமளா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மேல் தெரு பி.வி.களத்தூரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் கோமளா என்ற அஸ்வினி (வயது22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது அங்கு அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×