search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    களக்காடு அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 45)
    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி குமார் இறந்துவிட்டார். இதனால் தமிழ்செல்வி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் குமார். இவருக்கு தமிழ்செல்வி(வயது 45) என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

    தற்கொலை

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி குமார் இறந்துவிட்டார். இதனால் தமிழ்செல்வி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். கணவரை நினைத்து மிகவும் துக்கம் அடைந்த அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்செல்வி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் தீயை அணைத்துவிட்டு அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×