search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relatives protest"

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகேந்திரனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரன் உறவினர்கள் திண்டிவனம் -திருவண்ணா மலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் 35, இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இவர் பட்டணத்தில் இருந்து வெண்மணி ஆத்தூ ரில் உள்ள அவரது உறவி னர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாக னத்தில் மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சென்னையில் இருந்து செஞ்சி வந்த மினி லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய மினி வேனை அடித்து நொறுக்கினர்.அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகேந்திரனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரன் உறவினர்கள் திண்டிவனம் -திருவண்ணா மலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வெகு நேரம் ஆகியும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வராததால் மகேந்திரன் உடலை ரோட்டில் ஓரமாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை -திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்த வந்த ரோசனை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்சில் அனுப்பி வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.மறியல் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேலாக வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றது . இதுகுறித்து யோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மினி வேனின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக் குள்ளானது ெதரிய வந்தது.

    • மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
    • தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் மணிமேடை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா(வயது 18). இவர் நெல்லை டவுன் ரதவீதியில் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சந்தியா வேலைக்கு சென்றபோது அந்த கடையின் அருகே உள்ள கடையில் வேலை பார்த்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள தோப்பூரை சேர்ந்த 17 வயது வாலிபர் அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

    இதுதொடர்பாக டவுன் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில், அந்த வாலிபரும், சந்தியாவும் காதலித்து வந்ததும், 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதும் தெரியவந்தது. தற்போது மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் அந்த வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு, இடம் உள்ளிட்டவை கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்று பேட்டை ரெயில்வே தண்டவாளம் அருகே மெயின்ரோட்டில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆதி திராவிட நலத்துறை துணை கலெக்டர் பெனட் ஆசீர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு வேலை வழங்குவதற்கு அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதற்கட்ட நிதியை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் இன்று 3-வது நாளாக திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சந்தியாவின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
    • டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அவரை பரிசோதனைக்காக குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஸ்கேன் சென்டர் ஒன்றில் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு இரட்டை குழந்தை கருவில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு குழந்தை வளர்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் இளம்பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர். டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர். பின்னர் பரிசோதனை செய்து பார்த்தபோது மற்ற குழந்தை நலமாக இருப்பதாக கூறினார்கள்.

    இதையடுத்து அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது மற்றொரு குழந்தையும் இறந்து வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த இளம்பெண்ணை உடனடியாக மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் டாக்டரின் கவனக்குறைவால் குழந்தை இறந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் டாக்டர் தரப்பினரும் புகார் கூறியிருந்தனர். இருதரப்பு புகார் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் மூர்த்தி (வயது 47). இவர் கடந்த 20-ந் தேதி இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பெட்ரோல் வாசனை அடித்தது. வெளியில் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பெட்ரோல் திருடிக் ெகாண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் ஒருவனை பிடித்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரியநாதன் என்பவர் மகன் ராஜா என்பது தெரிந்தது.

    இது குறித்து கெடார் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த மரியநாதன், தனது மகன் ராஜாவை மூர்த்தி தாக்கிவிட்டு ஜாதியை சொல்லி திட்டியதாகவும் புகார் அளித்தார். புகாரினை பெற்ற போலீசார் மூர்த்தி மற்றும் ராஜா மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து கடும் மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா என்பவர் நேற்று இரவு அவரது ஓட்டு வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கெடார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க சூரப்பட்டு கிராமத்திற்கு வந்தனர். 

    அப்போது ராஜாவின் உறவினர்கள் ராஜா தற்கொலை செய்துகொள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் வெங்கடேசன், மூர்த்தி ஆகியோர் தான் காரணம். எனவே, அவர்களை கைது செய்ய வேண்டுமென விழுப்புரம்-திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் வந்து புகார் மனு கொடுக்க அறிவுறு த்தினார். இதையடுத்து சாலை மறியலை ராஜாவின் உறவினர்கள் கைவிட்டனர். ராஜாவின் உடலை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாயாண்டியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரண உதவி வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காலையில் 6 பேர் திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரியை சேர்ந்த தொழிலாளி மாயாண்டி என்பவர் கடந்த 10-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    13 பேர் கைது

    இதுதொடர்பாக போலீசார் 3 சிறுவர்கள் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மாயாண்டியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிவாரண உதவி வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5-வது நாளாக போராட்டம்

    இன்று 5-வது நாளாக ஊர்வலமாக சென்று பாளை லூர்துநாதன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். இதையொட்டி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இன்று காலையில் 6 பேர் திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மாயாண்டியின் உறவினர்கள் பாளை ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு லூர்துநாதன் சிலைக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய துணை கமிஷனர் சீனிவாசன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டால் வழக்குபதிவு செய்யப்படும்.

    இதனால் மாண வர்கள் எதிர்காலம் கேள்வி க்குறியாகும். எனவே குறிப்பிட்ட சிலர் மட்டும் பேச்சுவார்த்தைக்கு வருவமாறு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய மாயாண்டியின் உறவினர்கள் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுதலை செய்தால் நாங்கள் கலைந்து செல்கிறோம் என தெரிவித்தனர்.

    தொடர்ந்து முக்கிய சிலர் மட்டும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    மீண்டும் பேச்சுவார்த்தை

    மாயாண்டியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • கடந்த 26-ந்தேதி மாயமான தொழிலாளி நேற்று ஹவுசிங் போர்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலை தொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கொலை

    இவர் கடந்த 26-ந்தேதி மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாயாண்டி தச்சநல்லூர் அருகே சிதம்பரம் நகர் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    காரணம் என்ன?

    இதில் சம்பவத்தன்று மாயாண்டியுடன் கறிக்கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபர் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. அவர் மாயாண்டியுடன் சேர்ந்து மது அருந்தியதும், அப்போது குடிபோதை தகராறில் அவர் மாயாண்டியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2-வது நாளாக போராட்டம்

    இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை மாயாண்டியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது உறவினர்கள் கரையிருப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனர்.

    • ஆலங்குளம் அருகே கொலை செய்யப்பட்ட பேட்டை வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக இன்று போராட்டம் நடத்தினர்.
    • இச்சம்பவத்தில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    ஆலங்குளம்:

    நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சேதுபதி் (வயது 20).

    இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கருவந்தாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழா வில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் சேதுபதியை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

    இதனால் ஆவேமடைந்த அவரது உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதற்கிடையே, கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதில் 2 பேர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளையில் பள்ளி நிர்வாகி கார் மோதி சைக்கிளில் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதை அறிந்த உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    திசையன்விளை:

    திசையன் விளைமணலிவிளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீஜன் (வயது 13).இவர்கள் குடும்பத்துடன் வள்ளியூரில் வசித்து வருகின்றனர். ஸ்ரீஜன் வள்ளியூரில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஸ்ரீஜன் திசையன்விளையில் தனது பாட்டி வீட்டுக்கு வந்தான். மாலையில் சைக்கிளில் திசையன்விளை புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தான்.

    அப்போது, பின்னால் தனியார் பள்ளி நிர்வாகி வந்த கார் அவன் மீது மோதியது. இதில் ஸ்ரீஜன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து ஸ்ரீஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் சரண்ராஜை (25) கைது செய்தனர்.

    இதனிடையே மாணவன் ஸ்ரீஜன் காயமடைந்த நிலையில் கிடக்கும்போது அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி நிர்வாகி உதவவில்லையாம்.

    இதை அறிந்த ஸ்ரீஜனின் உறவினர்கள் இன்று காலை மணலிவிளை எம்.ஜி.ஆர். பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர்.

    தனியார் பள்ளி நிர்வாகியை கண்டித்தும், சிறுவன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு திசையன்விளை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த மறியல் காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது. பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பேரணாம்பட்டு அருகே கைது செய்யப்பட்ட சாராய வியாபாரியை விடுவிக்ககோரி உறவினர்கள் போராட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனசரகம் அத்திபட்டு மாமரத்து என்ற இடத்தில் வனசரகர் சங்கரய்யா, வனவர்கள் வேல்முருகன், அரி மற்றும் வனத்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் 3 நபர்கள் துப்பாக்கியுடன் இருப்பதை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடிக்க சென்றனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    அதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் கோட்டைசேரியை சேர்ந்த முரளி (38), என்பதும், அவருடன் வந்தவர்கள் அதே ஊரை சேர்ந்த ராமு (30), அனந்தகிரியை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கள்ள சாராயம் காய்ச்சுவது, வனவிலங்குகள் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து முரளியை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கி, பைக் மற்றும் டார்ச்லைட், கந்தக மருந்து ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் முரளியை வனத்துறையினர் வேனில் ஏற்றிகொண்டு சென்றனர். அப்போது முரளியின் உறவினர்கள் வனத்துறையின் வேனை முற்றுகையிட்டு முரளியை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முரளி துப்பாக்கியுடன் சிக்கியதால் அவரை விடுவிக்க முடியாது என கூறி கூட்டத்தை கலைத்தனர்.மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    காளையார்கோவில் அருகே உள்ள ஆண்டிச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தேவகோட்டையில் தையல் கடை வைத்து உள்ளார். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 23). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாமரைச் செல்வியை பிரசவத்திற்காக கடந்த 9-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அன்று மதியம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு தாமரைச்செல்வி திடீரென இறந்தார். இதையடுத்து டாக்டர்களின் அலட்சிய போக்கால்தான் அவர் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் தாமரைச்செல்வியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும் இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.
    சிதம்பரத்தில் காதலி இறந்ததால் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் முகத்தை எலி கடித்து குதறிய சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Chidambaramgovthospital
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் சண்டேஸ்வரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வைத்தீஸ்வரன் (வயது 22). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்தார்.

    இவருடன் கல்லூரியில் படித்த சிதம்பரம் ஏ.ஆர்.எம். நகரை சேர்ந்த ரத்தனப்பிரியா (22) என்பவரும் படித்தார்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் ரத்தனப்பிரியாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர்.

    இதனால் மனம் உடைந்த ரத்தனப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரத்தனப்பிரியா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் மிகவும் மனவேதனை அடைந்தார். அவரால் ரத்தனப்பிரியாவை மறக்க முடியவில்லை.

    இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு வைத்தீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வைத்தீஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    அவரது உடலை பார்ப்பதற்காக வைத்தீஸ்வரனின் உறவினர்கள் இன்று காலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் பிணவறை ஊழியர்கள் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க அனுமதிக்கவில்லை.

    இதனால் சிதம்பரத்தில் உள்ள வக்கீல் பிரபுவை தொடர்பு கொண்டு இது பற்றிய தகவலை தெரிவித்தனர். உடனே அவர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினார்.

    அதன்பின்னர் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிணவறையில் இருந்த வைத்தீஸ்வரனின் முகம் முழுவதும் காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டபோது எலி கடித்ததாக கூறினர்.



    இதைகேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Chidambaramgovthospital
    போலீசாரை கண்டித்து, இறந்த முதியவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
    தோகைமலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி க.புதூரை சேர்ந்தவர் முருகன்(வயது 66). இவர் கடந்த 11-ந்தேதி கடவூர் தரகம்பட்டி அருகே தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் தனது அண்ணன் சீரங்கன் இறந்ததையொட்டி, 3-ம் நாள் துக்க காரியத்திற்கு சென்றார். அங்கு துக்க காரியம் நடந்தபோது, அதே ஊரை சேர்ந்த தங்கராசு என்பவர் முருகனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தனது அண்ணன் இறந்த துக்க காரியத்தில் தகராறு செய்ய வேண்டாம் என்று முருகன், தங்கராசுவிடம் கூறினார். அங்கிருந்த முருகன் உறவினர்களும் தகராறு செய்த தங்கராசுவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த தங்கராசு தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை முருகன் உள்பட 5 பேரின் கண்களின் மீது தூவியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து முருகன் சிந்தாமணிபட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தினர்.

    மேலும் தங்கராசுவும், தன்னை முருகன் தரப்பினர் அடித்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முருகன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த உமாபதி, குமார், கணேசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மிளகாய் பொடி பட்டதில் முருகனின் கண்பார்வை குறைந்ததால், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிந்தாமணிபட்டி போலீசார், முருகன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருவது அவருக்கு தெரியவந்தது.

    இதனால் தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக தங்கராசு அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்து தன்னையும், தனது தரப்பினரையும் போலீசார் தேடிவருகிறார்களே என்று மனவேதனையில் அரசு மருத்துவமனையில் இருந்த முருகன் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். பின்னர் க.புதூர் வீட்டிற்கு நேற்று முருகன் உடலை கொண்டு வந்த உறவினர்கள், இது குறித்து சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அங்கிருந்த போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகனின் மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் போலீசாரை கண்டித்து, தோகைமலை திருச்சி-மெயின் ரோட்டில் உள்ள க.புதூர் பஸ் நிறுத்தம் முன்பு முருகன் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகனின் உறவினர்கள், தங்கராசு உள்பட அவரது தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். முருகன் அளித்த புகார் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மாலை முருகன் உடலை திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் க.புதூர் பஸ் நிறுத்தம் முன்பு சாலையில் வைத்து மீண்டும் மறியல் போராட்டம் செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து முருகனின் உடலை உறவினர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ×