search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rowdy killed"

    • தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • கடந்த சில நாட்களாக தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    திருமங்கலம்:

    நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 31). இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகுமார் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தண்டனை காலம் முடிந்த பின் வெளியே வந்த கிருஷ்ணகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியில் கிருஷ்ணகுமார் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்த அவர் தனியாக தொழில் தொடங்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு கிருஷ்ணகுமார் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மதுரை திருநகரை அடுத்த கூத்தியார்குண்டு-கருவே லம்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே சென்றபோது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கிருஷ்ணகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் தொடர் விசாரணையில் கொலையாளிகள் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த மாரிராஜ் (30), மேலகுளத்தைச் சேர்ந்த நாராயணன் (29), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் (29), சாலமன் சியான் பிரபாகரன் (29) என தெரிந்தது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரிராஜ் ஒரு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கு சாட்சி சொல்லக் கூடாது என கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து டாஸ்மாக் பாரில் இருந்த மாரிராஜை, கிருஷ்ணகுமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாரிராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

    இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் கிருஷ்ணகுமாரை கொலை செய்ய மாரிராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    நேற்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது கிருஷ்ணகுமாரை, மாரிராஜ் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர்.
    • ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வடுகு தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ராமு என்கிற உண்டி ராமு (வயது 35). இவர் உண்டியலை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வம் மகன் கஜேந்திரன் (21), மூர்த்தி மகன் கணேசன் (26) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர். இதில் கைகளில் கத்தி வெட்டு காயங்களுடன் ராமு தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ராமு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தில்லைக் காளியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு வந்த ராமு, ஒரு ஓட்டலில் அமர்ந்து டிபன் சாப்பிட்டார். இதனை அறிந்து வந்த கஜேந்திரன், கணேசன் ஆகியோர் ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர். இதில் நிலை குலைந்த ராமு, பலத்த காயங்களுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கஜேந்திரன், கணேசன் ஆகியோர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, நகர போலீசார் விரைந்து சென்றனர். கோவில் அருகே கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ராமுவின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் நகர பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது,

    • நெய்வேலியில் ரவுடி வெட்டிக்கொன்ற கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    • வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

    கடலூர்:

    நெய்வேலி வட்டம் 30 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது43.). பிரபல ரவுடியான வீரமணி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. நேற்று அதிகாலை வீரமணியை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அவர் தாய் மற்றும் அவர் உறவினர்கள் வீரமணி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நெய்வேலி  போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன், நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பென்டர் லதா மற்றும் போலீசார் வீரமணி படுகொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ரவுடி வீரமணியின் கூட்டாளிகள் சேர்ந்து இந்த கொலையை செய்து உள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக நெய்வேலி டவுன் ஷிப் வட்டம் 21- ஐ சேர்ந்த குணசீலன், மகேஷ்குமார், சந்திரசேகர், பார்த்திபன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ஆலப்புழா அருகே தன்னை தாக்க வந்தவர்களை வீசி கொல்ல முயன்ற போது வெடிகுண்டு வெடித்து ரவுடி பலியானார்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது30). பிரபல ரவுடியான இவர் மீது கேரளாவில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் இவரது தலைமையில் ரவுடி கும்பல் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

    அருண்குமார் தலைமையிலான ரவுடி கும்பலுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. பல தடவை இரு கும்பல்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

    இந்த நிலையில் அருண்குமார் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர் கோஷ்டியினர் பயங்கர ஆயுதங்களுடன் அருண்குமாரின் வீட்டிற்குள் புகுந்தனர்.

    அவர்கள் நேராக அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியான அருண்குமார் என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த வெடிகுண்டுகளை எடுத்து கொண்டு வெளியில் வந்து எதிர் கோஷ்டியினர் மீது வீச முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு அருண்குமாரின் கையில் இருந்தபோதே வெடித்து விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் அலெக்ஸ் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    வெடிகுண்டு வெடித்ததால் பயந்து போன மற்றொரு ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய அலெக்சை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடிக்கு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது, என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


    வேலூர் ஆவின் அருகே ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராணுவ வீரராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

    செல்வராஜ் மீது சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில், சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் தேரை தீ வைத்து எரித்தது, ஒரு வீட்டின் மீது வெடிகுண்டு வீசியது ஆகிய 2 வழக்குகளும், வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 2 வழக்குகளும் உள்ளன.

    அதேபோன்று குடும்ப தகராறில் கே.வி.குப்பத்தில் வசித்து வந்த அவருடைய மாமனார் பெருமாள் வீட்டை தீ வைத்து எரித்தது, கடந்த 2014-ம் ஆண்டு பெருமாளை அடித்து கொலை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திலும் செல்வராஜ் மீது உள்ளது.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு ரவுடியாக வலம் வந்த செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். கடந்த 19-ந் தேதி வேலூர் ஆவின் அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து செல்வராஜை வெட்டிக்கொலை செய்தது. யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    பால்பண்ணை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதில் கொலை நடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி வீச்சு கூட்டாளிகளுக்கும், செல்வராஜிக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். வீச்சு கூட்டாளிகள் விஜயராகபுரத்தை சேர்ந்த யுவராஜ் (23), பிரபு (23), கணேசன் (21), கிரிதரன் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    யுவராஜிக்கும் கொலையுண்ட செல்வராஜிக்கும் மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். சம்பவத்தன்று யுவராஜ் அவரது கூட்டாளிகள் பிரபு, கணேசன், கிரிதரன் ஆகியோருடன் விஜயராகவபுரம் சென்றனர். அங்கு தெருவில் நின்று கொண்டிருந்த செல்வராஜை தாக்கியுள்ளனர். அவர் தப்பி ஓடினர்.

    தேசிய நெடுஞ்சாலையில் ஓடிச் சென்ற அவரை விரட்டி விரட்டி வெட்டினர். பலத்த வெட்டு காயங்களுடன் சாலையை கடந்த செல்வராஜ் ஆவின் வாசல் தரையில் சாய்ந்தார். அவரை விரட்டி வந்தவர்கள் செல்வராஜ் சுய நினைவு இழந்ததையடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ரவுடி வீச்சு கூட்டாளிகள் யுவராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தோட்டப்பாளையம் ஆட்டோ டிரைவரை கடத்தி பாலாற்றில் கொன்று புதைத்த வழக்கு உள்ளது. ரவுடிகள் மோதலால் சத்துவாச்சாரி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே ஜாமீனில் வந்த ரவுடியை பழிக்கு பழியாக தீர்த்துகட்டிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    ஓட்டேரியை சேர்ந்தவர் சத்யா என்கிற செங்குட்டுவன் (வயது 37) ரவுடி. நேற்று இரவு அவர் அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் சத்யாவை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சத்யா உரிழந்தார்.

    இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப் பழியாக சத்யா படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சின்னாவின் கூட்டாளியான ராதா படுகொலை செய்யப்பட்டார். இதில் சத்யா குற்றவாளி ஆவார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஜெயிலில் இருந்த சத்யா ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் வேப்பம்பட்டில் உள்ள 2-வது மனைவி வீட்டில் தங்கி இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சத்யாவை திட்டமிட்டு தீர்த்துகட்டி விட்டனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை அருகே ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு பொம்மன அள்ளி அருகே மங்கமனப் பான்யா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ரவுடியான இஸ்மாயில் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் இஸ்மாயில் நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது நண்பர் நஷீர் என்பவரை சந்திப்பதற்காக தனது காரில் வந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் ஒரு கும்பல் வந்துள்ளது. தேன்கனிக்கோட்டை வந்த இஸ்மாயில், நஷீரின் வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

    அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாள்களால் இஸ்மாயிலின் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினர்.

    இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, இன்ஸ் பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இஸ்மாயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக முன் விரோதத்தில் இஸ்மாயில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக் கோட்டை பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த பெங்களூரை அடுத்த பொம்மியன அள்ளி பகுதியைச் சேர்ந்த சையத் இஸ்ராத் (22), சையத் இர்பான் (27), முனவர்(27), சையத் இணையத் (22), சம்சுதீன் (30), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த நஷீர் உள்பட 6 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ரகசிய அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    அதில், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக முன்விரோதத்தால் இஸ்மாயிலை 6 பேரும் சேர்த்து 2 கார்களில் பின் தொடர்ந்து வந்து வெட்டி கொலை செய்தோம் என்றனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெங்களூரை சேர்ந்த கவுஸ் என்பவருக் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

    அவர் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள கவுசை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மன்னார்குடி பாமணி ஆற்றில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழவிழல்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அசோக்குமார் (வயது 32). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்மீது மன்னார்குடி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருந்தன. மேலும் சரவணனின் பெயர் ரவுடி பட்டியலிலும் உள்ளது.

    இந்த நிலையில் மன்னார்குடி மேல்பாலம் பாமணி ஆற்று சட்ரஸ் அருகில் ரவுடி அசோக்குமார் இன்று தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மன்னார்குடி போலீஸ் டி.எஸ்.பி. கார்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடி அசோக்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அசோக்குமார் உடலை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரவுடி அசோக்குமார் தலையில் வெட்டு காயம் இருந்ததால் மர்ம கும்பல் அவரை முன்விரோதத்தில் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். நள்ளிரவில் அசோக்குமாருக்கு மது வாங்கி கொடுத்து பாமணி ஆற்றுக்கு அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ரவுடியை கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணத்தில் ரவுடியை படுகொலை செய்து தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல் (வயது 23). ரவுடியான இவர் மீது கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் மோரி வாய்கால் அருகே உள்ள ஒரு தொட்டியில் அரிவாள் வெட்டு காயங்களுடன் சக்திவேல் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட சக்திவேல் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரவுடி சக்திவேலை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சக்திவேலுவுக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று நள்ளிரவில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் சக்திவேலை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். வாலிபரை கொலை செய்து தொட்டியில் வீசி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

    சோழவரம் ஏரியில் ரவுடியை மர்ம கும்பல் வெட்டிகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    வியாசர்பாடி, பி.வி. காலனி, கரிமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் திவாகர் (வயது 24) ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று மாலை திவாகர் நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சோழவரம் ஏரியில் திவாகர், வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்து, மார்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டன. மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏரிக்கு மீன் பிடிக்க வந்தவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திவாகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    நேற்று மாலை வாலிபர்கள் சிலர் ஏரிக்கரையில் மது அருந்திவிட்டு காற்றாடி விட்டு கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர்.

    எனவே திவாகருடன் வந்த நண்பர்கள் அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கடந்த ஆண்டு வியாசர்பாடியில் நடந்த சீனிவாசன் என்பவரது கொலையில் திவாகர் சம்பந்தப்பட்டு இருந்தார்.

    எனவே அவரால் பாதிக்கப்பட்ட யாரேனும் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த 7 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. ஏரிக்குள் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் சத்துவாச்சாரியில் தகராறில் ரவுடியை கல்லால் தாக்கி கொன்ற கள்ளக்காதலியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரம் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளியான இவர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 25 வழக்குகள் உள்ளது.

    சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவருக்கும் வள்ளலாரில் டிபன் கடை நடத்தி வரும் தண்டுமாரி (40) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

    தண்டுமாரி இந்திரா நகரில் வசித்து வந்தார். அவரது கணவர் இறந்து விட்டார். அவருக்கு போடி (20) என்பவர் உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

    தங்கராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். எப்போதும் தண்டுமாரி வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். 2 பேருக்கும் 6 ஆண்டுகளாக கள்ளக்காதல் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் தங்கராஜ் தண்டுமாரி வீட்டுக்கு வந்தார். அப்போது தண்டுமாரிக்கும், தங்கராஜ்க்கும் இடையே நள்ளிரவு 1 மணியளவில் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தண்டுமாரி, அவரது மகன் போடியுடன் சேர்ந்து தங்கராஜின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தங்கராஜ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    தங்கராஜ் இறந்ததை உறுதி செய்த தண்டுமாரி தனது மகனுடன் தலைமறைவாகி விட்டார்.

    சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராஜின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

    மதுரை சம்மட்டிபுரத்தில் ரவுடியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் செம்பருத்தி தெருவைச் சேர்ந்தவர் மோகன் மகன் முத்துக்குமார் (வயது23), கட்டுமான தொழிலாளி. இவர் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்பட 5 வழக்குகள் நிலு வையில் உள்ளன.

    இந்த நிலையில் முத்துக்குமார் நேற்றிரவு சம்மட்டி புரம் முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை 3 பேர் கும்பல் வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது முத்துக்குமாரை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில் முத்துக்குமாரை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டபிரபு, அவரது நண்பர்கள் செல்லப்பாண்டி, ஜெயபாண்டி ஆகியோர் முன்விரோதத்தில் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    ×