search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sholavaram lake"

    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை.

    நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம் தற்போது மொத்தம் வெறும் ஆயிரத்து 162 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது வெறும் 10 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 875 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிகளில் இருந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்தக்கொள்ளளவு 3645 மி.கனஅடி) இதே போல் சோழவரம் ஏரியில் 48 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.(மொத்த கொள்ளளவு 1081).

    எனவே வரும் வாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரியும், சோழவரம் ஏரியும் முழுவதும் வறண்டு விடும் சூழ்நிலை உருவாகி உள்ளன. பூண்டி ஏரியில் 236 மி.கன அடியும் (3231 மி.கனஅடி).செங்குன்றம் ஏரியில் 813 மி.கனஅடியும்(3300 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னையில் வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு 140 லிட்டர் என்ற அளவில் மொத்தம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த மாதம் முதலே நீர் சப்ளை குறைக்கப்பட்டுவிட்டது.

    தற்போது 450 முதல் 480 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    இது தினந்தோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரில் 60 லிட்டர் குறைப்பு ஆகும். வரும் நாட்களில் தண்ணீர் வினியோகம் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போதைய நிலையில் மீஞ்சூர், நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விவசாய கிணறுகள், கல்குவாரி நீரை மட்டுமே சென்னை மக்கள் நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டும் உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி இருப்பதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது அதிகரித்து உள்ளது. #tamilnews
    சோழவரம் ஏரியில் ரவுடியை மர்ம கும்பல் வெட்டிகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    வியாசர்பாடி, பி.வி. காலனி, கரிமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் திவாகர் (வயது 24) ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று மாலை திவாகர் நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சோழவரம் ஏரியில் திவாகர், வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்து, மார்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டன. மர்ம நபர்கள் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏரிக்கு மீன் பிடிக்க வந்தவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திவாகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    நேற்று மாலை வாலிபர்கள் சிலர் ஏரிக்கரையில் மது அருந்திவிட்டு காற்றாடி விட்டு கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர்.

    எனவே திவாகருடன் வந்த நண்பர்கள் அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கடந்த ஆண்டு வியாசர்பாடியில் நடந்த சீனிவாசன் என்பவரது கொலையில் திவாகர் சம்பந்தப்பட்டு இருந்தார்.

    எனவே அவரால் பாதிக்கப்பட்ட யாரேனும் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த 7 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. ஏரிக்குள் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    செங்குன்றம் :

    சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி, சோழவரம் ஏரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியில் 777 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.

    புழல் ஏரிக்கு, சோழவரம் ஏரியில் இருந்து 3 ராட்சத மின்மோட்டார்கள் மூலம் வினாடிக்கு 2 கன அடி நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சோழவரம் ஏரி நேற்று முற்றிலும் வறண்டது. இதனால் புழல் ஏரிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

    சோழவரம் ஏரி வறண்டதால் அங்கிருந்த மின்மோட்டார்கள் அனைத்தும் கழற்றப்பட்டன. புழல் ஏரிக்கு ஏற்கனவே நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சோழவரம் ஏரியில் இருந்து அனுப்பப்பட்டு வந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டாதல் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

    இதற்கிடையே, சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து தினமும் 84 கன அடி நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதனால் புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. புழல் ஏரியில் கடந்த மாதம் 970 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. ஒரே மாதத்தில் 193 மில்லியன் கன அடி தண்ணீர் குறைந்துள்ளது.

    சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. #Puzhallake
    சென்னை:

    சென்னை குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    இந்த ஏரிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வருவதால் அங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

    சென்னை அருகில் உள்ள சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆனால் தற்போது வெறும் ஒரு மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    எனவே சோழவரம் ஏரியில் இருந்து கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு நேரடியாக தண்ணீர் அனுப்ப முடியவில்லை. ஆகவே 3 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. தண்ணீர் மிகவும் குறைந்ததால் சோழவரம் ஏரியில் இருக்கும் நீர் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    புழல் ஏரியில் தற்போது 783 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. பூண்டியில் 14 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 486 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள்ளது. சோழவரத்தில் 1 கன அடி இருக்கிறது.

    சென்னையில் உள்ள 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி. ஆனால் தற்போது ஆயிரத்து 284 மில்லியன் கன அடி தண்ணீர்தான் உள்ளது. #Puzhallake


    ×