search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water shortage"

    • நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

    பெங்களூருவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறும் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 வீடுகளிடம் இருந்து ரூ. 1.1 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.

    இதைத்தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் குடிநீர் பற்றாக்குறை நெருக்கடியை மனதில் வைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பரிந்துரைத்தது. வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

    மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்கள், ஒவ்வொரு முறையும் உத்தரவை மீறும்போது கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

    கடுமையான தண்ணீர் பற்றாக்குறை பெங்களூருவை விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. நகரவாசிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.

    • வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம்.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தொழில்நுட்ப மையமான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் டாக்டர் ஒருவர் வீடுகளில் நீர் சேமிப்பு பற்றிய 4 யோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திவ்யா சர்மா என்ற அந்த மருத்துவர் பூமியில் உள்ள நீர் சேமிப்பு அணுகுமுறை எளிமையானது மற்றும் பயனுள்ளது என்று கூறியுள்ளார். டாக்டர் சர்மா தனது பதிவில், ஒரு தோல் மருத்துவராக நான் எப்போதும் பக்கெட் குளியல் செய்வதை ஊக்குவிப்பேன். ஷவரில் குளித்தால் நிமிடத்திற்கு 13 லிட்டர் தண்ணீர் செலவாகும். ஆனால் பக்கெட் குளியலில் மொத்தமாக 20 லிட்டர் மட்டுமே ஆகும். 5 நிமிடம் ஷவரில் குளிப்பதையும், பக்கெட் குளியலையும் ஒப்பிடும் போது தோராயமாக 180 லிட்டர் தண்ணீர் சேமிப்பாகிறது. இதே போல ஆர்.ஓ.வில் இருந்து வரும் நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அதனை வீட்டை துடைப்பதற்கும், தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம். இதன் மூலமாக சுமார் 30 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

    மேலும் வாஷிங்மிஷினில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கார் துடைக்க பயன்படுத்தலாம். இதுபோன்ற சிறிய முயற்சிகள் மூலம் எங்கள் குடும்பத்தில் ஒரு நாளைக்கு 600 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பெங்களூர்:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    இதை குடிநீர் டேங்கர் லாரி வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகளவில் வசூல் செய்து வருகின்றனர். இதுவரை 12ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் ரூ.1800 முதல் ரூ.2ஆயிரம் வரை வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்சினை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.

    இதுகுறித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறும்போது, பெங்களூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யும் டேங்கர்களை மாநில அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    மேலும் பெங்களூரில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் எனது துறை மானியத்தில் இருந்து ஏற்கனவே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதுதொடர்பான சிறப்பு கூட்டம் இன்று மதியம் நடத்தப்படும் என்றார்.

    இதற்கிடையே பெங்களூர் மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களில் அனுமதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பெங்களூரு பகுதியில் 60 டேங்கர் லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ள நிலையில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இயங்கி வருவதாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அனுமதி இன்றி இயக்கப்படும் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    • 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • எல் நினோ தாக்கத்தால் கணிக்க முடியாத பருவகால நிகழ்வுகள் ஏற்படுகின்றன
    • எல் நினோவை எதிர்கொள்ள பெரு நாட்டதிபர் சர்வதேச கூட்டு முயற்சியை கோரியுள்ளார்

    அமேசான் மழைக்காடுகள் நிரம்பிய வட அமெரிக்க நாடு, பெரு. இதன் தலைநகர் லிமா.

    மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் - சில வருட கால இடைவெளிகளில் - ஒரு சமச்சீரற்ற நிலை உருவாகிறது. இதன் காரணமாக அதிக வறட்சி, அதிக மழைபொழிவு என வானியல் சூழ்நிலை மாறி மாறி திகழ்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன.

    இந்நிகழ்வை "எல் நினோ" (El Nino) என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். பல வருடங்களாகவே இந்த சிக்கலை சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வானிலை நிபுணர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெரு நாட்டில், செப்டம்பர் 13 அன்று அந்நாட்டின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம், நீர் நிலை குறித்த தனது தொழில்நுட்ப அறிக்கையில் எல் நினோ தாக்குதல் 2024 கோடை காலம் வரை இருக்கும் என எச்சரித்தது.

    இதனையடுத்து பெரு நாட்டில் நேற்று தொடங்கி 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் எல் நினோ நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் அதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க அந்நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

    இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பில் பேசிய பெரு நாட்டு அதிபர் டினா பொலுவார்டே (Dina Boluarte) எல் நினோ நிகழ்வை எதிர்கொள்ள பன்னாட்டு கூட்டு முயற்சியும் ஒப்பந்தமும் அவசியம் என வலியுறுத்தினார்.

    • நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி குழந்தைகள் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் சமையல் செய்வதற்கு குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்று மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோம்பையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களுடன் இன்றுகாலை பெண்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இறுதியாக ஒரு வழியாக பாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களை சந்தித்து ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கிறேன் என உறுதி அளித்து சமாதானப்படுத்திய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை குடிநீர் ஏரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேர்த்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி முழுவதுமாக வறண்டு விடும்போது சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று மாலை பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது நீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை, பிற நீா்த்தாவரங்கள் மற்றும் இதர கழிவுப் பொருள்களை வரும் பருவ மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும்.

    மேலும், இணைப்பு கால்வாயின் இருபுறமும் சேதம் அடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரிப்பு செய்து கால்வாயின் இரு புறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் தகவல் பலகைகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி இணைப்பு கால்வாய்களில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினாா்.

    இந்த ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    அப்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய நிர்வாக இயக்குனர் கிரிலோஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தலைமை பொறியாளர் ஜேசுதாஸ், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் இவர்கள் புதிதாக கட்டப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி நெற்குன்றம் 145-வது வார்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சாலைகளில் குடிநீர் வாரியம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதே நேரம் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவரும், 145-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சத்தியநாதன் முயற்சியால் ரூ.12 கோடியில் 150 தார் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க சென்னை குடிநீர் வாரியம் பைப் லைன் பணிகளை முடித்து, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கினால் தான் தார்சாலை அமைக்க முடியும்.

    ஆனால் 110 சாலைகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை பலமுறை மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் சந்தித்து விரைவாக குடிநீர் பணிகளை முடித்து பணி முடிப்பு சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தார்.

    ஆனாலும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

    இதனை அறிந்த சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், போலீஸ் உதவி ஆணையர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, விஜயகுமார் ஆகியோர் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதனுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் 45 நாட்களுக்குள் குடிநீர் பைப் லைன் பணிகள் முடிக்கப்பட்டு, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதம் பாதியில் முடிக்கப்பட்டது.

    • கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
    • செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது கோடை காலம் என்பதால் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. 6908 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.

    குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    மேலும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 1135 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் 135 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 708 மி.கனஅடியும், புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 2251 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2354 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 460 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி பழுது அடைந்தது. இதையடுத்து அந்த மேல் நிலை தொட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் அதே இடத்தில் ஒரு மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்) வைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். எனினும் 6 மாதம் ஆகியும் மேல் நிலை தொட்டி அமைத்து தரவில்லை என கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அந்தியூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி 2 மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அந்த பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோடு பகுதிக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இருந்த மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு 1 ஆண்டுக்கு மேல் மேல் ஆகிறது. ஆனால் இன்னும் எங்கள் பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி கட்டி தரவில்லை. எங்கள் பகுதியில் நள்ளிரவில் தான் தண்ணீர் விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம்.

    வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் உடனடியாக இந்த பகுதிக்கு மேல்நிலை தொட்டி அமைத்து தர வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேசி உறுதியாக மேல் நிலை தொட்டி அமைத்துக் கொடுக்க நாங்கள் வழிவகை செய்கின்றோம் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    எர்ணாவூர் காமராஜ் நகர், பிருந்தாவன்நகர், கன்னிலால் லேஅவுட், காந்திநகர், எர்னீஸ்வரர் நகர், பஜனை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை சீரான குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் எர்ணாவூர் முருகன் கோவில் சாலை அருகில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் எண்ணூர் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஊராட்சிகளுக்கு பெரும்பாலும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த இரண்டு வாரமாக பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பெரும்பாலும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் பொன்னேரி அடுத்த மெதூர் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நிரப்பப்படுகிறது. பின்னர் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு தெருவிற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு இணைப்புகள் மற்றும் தெருக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். குடிநீர் வழங்கப்படாததால் பொது மக்கள் 5 கிலோமீட்டர் தூரம் திருப்பாலைவனம் மற்றும் பழவேற்காடு பகுதிக்கு சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் கேன் தண்ணீரை 30 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த இரண்டு வாரமாக குடிநீர் சரியாக வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். வெயிலின் தாக்கத்தை தீர்க்க தண்ணீர் குடிக்க முடியாமல் கேன் தண்ணீரை ரூ.30 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. வீட்டு தேவைகளுக்கு சுமார் 5 கிலோமீட்டர் வெளியில் சென்று குடத்தில் தண்ணீர் பிடிக்கிறோம்.

    இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×