என் மலர்
நீங்கள் தேடியது "Lorries strike"
- மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
- ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது.
சென்னை:
சென்னையில் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுமார் 450 இயங்குகின்றன. இந்த லாரிகள் 6 ஆயிரம், 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவை கொண்டவை. மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
அவ்வாறு இயக்கப்படக் கூடிய லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். ஆனால் அந்த ஒப்பந்தம், கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதிலும், அதனை இறுதி செய்வதிலும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தாமதம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதத்துக்குள் ஒப்பந்தம் போடப்படும் என சொன்னதை நம்பி, லாரி உரிமையாளர்கள் பலர் புதிய லாரிகளை வாங்கியுள்ளனர். ஆனால் நவம்பரில் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுவரை அது இறுதி செய்யப்படவில்லை.
இதையடுத்து ஒப்பந்தத்தை இறுதி செய்து பணி ஆணைகளை வழங்கக் கோரி மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகளை சந்திக்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை.
இதனால் வாரியத்துக்கு முன்பு வெகு நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இதுதொடர்பாக மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் கேசவராவ் கூறுகையில், 'ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டணத் தொகை செலுத்துவதற்கான நாட்களே வந்துவிட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் இறுதியாகவில்லை.
உரிமையாளர்களில் சிலர் மனவேதனையில் உயிரிழந்தும் போயுள்ளனர். மேலும் பலர் லாரிக்கான மாத தவணை செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.
இதற்காக நாளை முதல் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எனவே இதில் வாரியம் உடனடியாக முடிவெடுத்து, ஒப்பந்தத்தை இறுதி செய்து ஆணைகளை வழங்க வேண்டும்' என்றனர். வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 8-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இதன் காரணமாக சாத்தூர், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவர முடியவில்லை. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்கள் இல்லாததால் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டன. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை இழந்து உள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று புதுடெல்லியில் அதன் தலைவர் மிட்டல் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் தினசரி ஏற்றம் கண்டு வரும் டீசல் விலையை குறைக்க வேண்டும், வாகனங்களுக்கு 3-ம் நபர் காப்பீட்டு தொகைக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும், சுங்க கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-
ஏற்கனவே லாரி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தினசரி டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால், கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறோம். எனவே லாரி உரிமையாளர்களின் முக்கியமான 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுமையாக பங்கேற்கும். அவ்வாறு லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது.
இவ்வாறு அவர் கூறினார்.






