search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol diesel"

    • இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.
    • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    கடந்த 2021-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்ததால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 112 ரூபாய் வரை எட்டியது. அதுபோல டீசல் விலையும் 103 ரூபாய் என்ற அளவுக்கு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 காசும் குறைக்க முடிந்தது.

    கடந்த 620 நாட்களாக இந்த விலை குறைப்பு அமலில் உள்ளது. கடந்த 620 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை எந்தவிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.

    இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வந்தன.

    பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.10-ம், டீசல் விலையில் ரூ.7-ம் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. நாளை (பிப்ரவரி 1) முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரலாம் என்று கூறப்பட்டது. எனவே இது தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
    • டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது.

    இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை.

    பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யாத நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவை விட அதிகளவு வருவாய் பெற்றன.

    இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கலாமா? என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்கும் கீழ் வந்துள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

    இந்த மாத தொடக்கத்தில் இதுபற்றி ஆய்வு செய்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கலாம் என கருதின. அது போல டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கலாம் என திட்டமிட்டன.

    ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 வரை குறைப்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றன. மேலும் டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அறிவிப்பை பிப்ரவரி 1-ந்தேதி வெளியிட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. எனவே பெட்ரோல்-டீசல் விலை எந்த அளவுக்கு குறையும் என்பது அடுத்த வாரம் தெரியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
    • பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளன.

    கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 16 ரூபாயும் என்ற அளவில் அந்த வரி குறைப்பு இருந்தது.

    இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இருந்து தப்பின. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தவில்லை.

    கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

    இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. 2023-2024-ம் ஆண்டு முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாக கிடைத்து இருக்கிறது.

    இதுபற்றி தகவல்களை அடுத்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன. கடந்த நிதியாண்டிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபரி வருவாய் கிடைத்து இருக்கிறது.

    இதையடுத்து தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த மாத இறுதியில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும். இதுபற்றி விவரங்கள் இந்த மாத இறுதியில் தெரிய வரும்.

    பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கருதுகிறது.

    • சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    • அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த போதிலும் பெட்ரோல்- விலை குறைக்கப்பட வில்லை. முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விட்டது. சில நகரங்களில் ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் ஊரடங்கு,ரஷியா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டதால் பெட்ரோல்- டீசல் விலை குறையாமல் அதே விலை நீடிக்கிறது.

    இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கீழ் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

    • பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு அதிகமாக வசூலிக்கிறது.
    • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனை பொதுமக்களுக்கு கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. இதனால், ஏற்கனவே பணவீக்க உயர்வால் அவதிப்படும் மக்கள், மேலும் சிரமப்படுகிறார்கள்.

    பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு அதிகமாக வசூலிக்கிறது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்களின் பாக்கெட் கொள்ளையடிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையின் பெயரில் இரக்கமின்றி கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது.

    நடப்பு நிதி ஆண்டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. முந்தைய ஆண்டுகளில், ரூ.33 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும். ஆகவே, பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை 2022-23ம் ஆண்டில் வட்டிக்கு முந்தைய லாபமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஈட்டியுள்ளன.
    • இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை 2022-23ஆம் ஆண்டில் வட்டிக்கு முந்தைய லாபமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஈட்டியுள்ளன.

    2021-22-ம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வட்டிக்கு முந்தைய லாபம் ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் லாபம் மூன்று மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் சந்தித்த இழப்பை ஈடு செய்து விட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்காமல் இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் இரண்டகம் ஆகும். எனவே, இனியும் தாமதிக்காமல் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு முறையே ரூ.13, ரூ.11 குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தை சோதனை செய்வதற்கான கருவிகள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் உள்ளன.
    • கோவில்பட்டியில் உள்ள ஞான மலர் பெட்ரோல் பங்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

    கோவில்பட்டி:

    பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தை சோதனை செய்வதற்கான கருவிகள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் உள்ளன. இந்தக் கருவிகள் மூலம் எரி பொருட்களின் தரத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களோ அல்லது பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளோ சோதனை செய்து பார்ப்பது வழக்கம்.

    ஆனால் தற்பொழுது இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கம்பெனி மூலம் வாடிக்கையாளர்களே பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, கோவில்பட்டியில் உள்ள ஞான மலர் பெட்ரோல் பங்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.

    தாசில்தார் சுசிலா முகாமை தொடங்கி வைத்தார். பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை தாசில்தார் சுசிலா வாடிக்கையாளர்கள் முன்னிலையில் சோதனை செய்து உறுதிப்படுத்தினார். வாடிக்கையாளர்களும் இந்த செய்முறையை செய்து பார்த்தார்கள்.

    அதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் அளவு சரியாக உள்ளதா என்ற சோதனையும் செய்து காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஞானமலர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மைக்கேல் அமலதாஸ் மற்றும் அமலி அமலதாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
    • சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    அந்த வகையில், கடந்த 190 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

    இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.
    • தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு எரிபொருள் உற்பத்தி உள்ளதாக மத்திய அரசு தகவல்

    புதுடெல்லி:

    எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாகவும் செய்தி வெளியானது. 

    இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவைக்கு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    பெட்ரோலிய அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில தினங்களாக நாட்டின் சில பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்ததால், தாமதத்திற்கு வழிவகுத்தது. மேலும், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் அதிகமானது. இது, எண்ணெய் நிறுவனங்களின் விநியோக கட்டுப்பாடுகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்தது.

    எனினும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதிய அளவில் உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தேவை அதிகரித்திருப்பதால், உள்ளூர் மட்டத்தில் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

    எண்ணெய் விநியோக நிறுவனங்கள் இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை உறுதி செய்கின்றன. அத்துடன் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளன.

    சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசலின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். இந்த மாதத்தின் முதல் பாதியில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாநிலங்கள், தனியார் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் அதிக அளவில் சப்ளை செய்யப்படும் மாநிலங்கள் ஆகும். அதாவது, டெர்மினல்கள் மற்றும் டெப்போக்களிலிருந்து அதிக தூரத்தில் இந்த மாநிலங்கள் உள்ளன.

    இவ்வாறு பெட்ரோலிய அமைச்சகம் கூறி உள்ளது.

    • நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்
    • சில்லறை விற்பனையாளர்கள் முன்பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்க முடியாத சூழல்

    சென்னை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.

    பணம் கொடுத்தால் மட்டுமே விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சில்லறை விற்பனையாளர்கள் முன்பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    பெரும் நசிவைச் சந்தித்து வரும் தொழிற்துறைக்கு மத்திய அரசு இதன் மூலம் பெரும் நன்மை அளித்துள்ளது.

    திருப்பூர்:

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோலுக்கான கலால் வரியை ரூ.9.50ம், டீசலுக்கு ரூ.7-ம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் பெட்ரோல்-டீசல் விலை குறைந்துள்ளதால் திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தற்போது மத்திய நிதி அமைச்சர் இவற்றின் மீதான வரியை குறைத்து அறிவித்துள்ளார். இதனால் இவற்றின் விற்பனை விலை குறைந்துள்ளது.அதே போல் இரும்பு பொருள் இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஏற்றுமதிக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் உள்நாட்டு வர்த்தகம் சீராக இருக்கும்.

    இந்த நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைப்பு நடவடிக்கை தொழில்துறையினரின்போக்கு வரத்து செலவுகளை குறைக்கும். இது போல் மத்திய அரசு பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்தும்வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், இந்த அறிவிப்புக்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதன் மூலம் விலைவாசி குறையும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு போல் மாநில அரசும் தனது வரியை பாதியாக குறைத்தால் மேலும் தொழில் துறைக்கு நன்மை தருவதாக இருக்கும்.

    சாய ஆலை உரிமையாளர் சங்கசெயலாளர் முருகசாமி:- பெரும் நசிவைச் சந்தித்து வரும் தொழிற்துறைக்கு மத்திய அரசு இதன் மூலம் பெரும் நன்மை அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறோம். மீண்டும் விலை உயர்வு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க பொருளாளர் தேவராஜ் கூறுகையில், அனைத்து பகுதியிலும் பல்வேறு தொழில்கள் பல காரணங்களால் தொய்வடைந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான மத்திய அரசு வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு குறையும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மாநில அரசும் தனது வரியை குறைத்தால் இந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றார்.

    ×