என் மலர்
நீங்கள் தேடியது "Petrol diesel"
- அரபு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்ற நாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும்.
- இந்தியாவில் தற்போது போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.
புதுடெல்லி:
ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெ ரிக்க போர் விமானங்கள் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
பூமிக்கு அடியில் மிக அழமான இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய சுமார் 14 டன் எடை கொண்ட குண்டுகளை அமெரிக்கா முதன் முதலாக பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியது. இதனால் கடும் கோபம் அடைந்த ஈரான் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. நேற்று அடுத்தடுத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களான டெல்அவிவ், ஹய்பா, சியோனா நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.
ஈரானில் நேற்று பூமியை துளைத்து செல்லும் பங்கர் பஸ்டர் எனப்படும் சக்தி வாய்ந்த 14 குண்டுகளை அமெரிக்கா வீசியது. இதனால் ஈரானின் 3 இடங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருப்பதாக தெரிகிறது. இதற்கு பழிக்கு பழி வாங்க இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்து இருக்கிறது.
இதன் காரணமாக போர் பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈரான் மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மீது நேரடி தாக்குதலை தொடுக்காத ஈரான் அதற்கு பதில் உலகம் முழுவதும் நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.
ஈரான் கடல் பகுதியில் ஹார்முஸ் நீரிணை என்ற முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது. இது 33 கிலோ மீட்டர் மட்டுமே அகலம் கொண்டது. இந்த கடல் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. இந்த நீரிணைப்பு கடல் பகுதி பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் பகுதியாகும்.
இந்த ஹார்முஸ் நீரிணை பகுதி வழியாகதான் கத்தார், பக்ரைன், ஈராக், அரேபியா, குவைத் உள்பட அரபு நாடுகள் அனைத்தும் தங்களது கச்சா எண்ணெயை உலகின் மற்ற நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன. குறிப்பாக உலகம் முழுக்க நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தக விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை இணைப்பு பகுதியை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானால் அங்கு ஏற்படுத்தப்படும் இந்த இடையூறு பல நாடுகளின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் விதமாக மாறி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமான அளவுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்ற நாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும். முக்கியமாக அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம். இது அடுத்தடுத்து மற்ற பாதிப்புகளையும் உருவாக்கும் என்று கருதுகிறார்கள்.
கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாட்டையும் உருவாக்க ஈரான் நடவடிக்கை ஏற்படுத்தக் கூடும். கச்சா எண்ணெய் கிடைக்காதபட்சத்தில் பல நாடுகளில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரானின் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் தங்கத் தின் விலையும் மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்படுத்தப்படும் தடையை தகர்க்க அமெரிக்க படைகள் முயற்சி செய்தால் மேலும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு மறைமுகமாக அதிக இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஈரான் முடிவு செய்துள்ள ஹார்முஸ் நீரிணை தடை இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு தினமும் அந்த நீரிணை பகுதி வழியாக கணிசமான அளவுக்கு கச்சா எண்ணெய் வருகிறது. அதாவது இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் அந்த பகுதி வழியாகத்தான் வருகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் 9-வது பெரிய நாடாக இருக்கும் ஈரான் மற்ற நாடுகளின் கச்சா எண்ணெய்களையும் முடக்கும்பட்சத்தில் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். கச்சா எண்ணெயை அதிகளவு இறக்குமதி செய்யும் உலக நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது.
எனவேதான் ஈரானின் ஹார்முஸ் நீரிணை தடை நடவடிக்கை இந்தியாவில் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். குறிப்பாக பெட்ரோல்-டீசல் மற்றும் தங்கம் விலையில் அதிக பாதிப்பை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் ஈரானின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய பெட்ரோலிய மந்திரி இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவில் தற்போது போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. மேலும் ரஷியாவில் இருந்து அதிக கச்சா எண்ணெய் பெற்று வருகிறோம். எனவே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை" என்றார்.
என்றாலும் அரபி கடல் வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கும்போது ஆப்பிரிக்க நாடுகளை சுற்றிக்கொண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் வரவேண்டியது இருக்கும். இதற்கு 12 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். அதோடு கச்சா எண்ணெய் விலையிலும் 40 சதவீதத்தை அதிகரிக்க செய்து விடும் என்கிறார்கள்.
இதன் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் உடனடி பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அதற்கேற்ப ரஷியாவில் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருகிறது.
- டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
- புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
அமீரக எரிசக்தி அமைச்சகத்தின் எரிபொருள் விலைக்குழுவுக்கான கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்காக அரசு வழங்கி வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அமீரக எரிசக்தி அமைச்சகம், அமீரக எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் பேசி இந்த விலை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த மாதத்திற்கான விலை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் சூப்பர் 98 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.58 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.57 திர்ஹாமாக இருந்தது. இதில் கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது. ஸ்பெஷல் 95 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.47 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.46 திர்ஹாமாக இருந்தது. இதில் 1 பில்ஸ் விலை அதிகரித்துள்ளது.
இ-பிளஸ் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.38 திர்ஹாமில் இருந்து 2.39 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. இந்த ரக பெட்ரோலின் விலை கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது.
அதேபோல் டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலையில் 11 பில்ஸ் குறைக்கப்பட்டு நடப்பு மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.52 திர்ஹாம் ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த புதிய விலைகள் அனைத்தும் 5 சதவீத வாட் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த வரி உட்பட அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும். இந்த புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாயக்கு 139 டாலர் வரை உயர்ந்தது.
- விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தை, கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாயக்கு 139 டாலர் வரை உயர்ந்தது.
இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ஐ மத்திய அரசு குறைந்தது.
அதன்பிறகு 6 மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலர் என்ற அளவில் உள்ளது. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக இந்த விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
அதேநேரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்றதாக இருப்பதால் விலை குறைப்பு என்பது ஒரே நேரத்தில் இருக்குமா அல்லது படிப்படியாக விலை குறைக்கப்படுமா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை.
- மதுபானம், எரிபொருட்கள் மூலம் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
ஸ்ரீநகர் :
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம்.
ஆனால், மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை. இதை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்து மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
நல்ல வருவாய் கிடைக்கிறது என்றால், அதை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி கடைசியாக லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது. ஆனால், அந்த மாநில நிதிமந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உயர்த்தப்பட்டது இந்தியாவில்தான். வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வகையில், உற்பத்தி வரியை குறைத்துள்ளோம். சில அண்டை நாடுகளில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் அதிகமாக உள்ளது. ஆனால், நமக்கு கிராமப்புற பகுதிகளில் கூட தட்டுப்பாடு இல்லை. மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்து வசதிகளே இதற்கு காரணம்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. விலையை சீராக வைத்திருப்பதற்கு முயன்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், கடந்த 190 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தை சோதனை செய்வதற்கான கருவிகள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் உள்ளன.
- கோவில்பட்டியில் உள்ள ஞான மலர் பெட்ரோல் பங்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
கோவில்பட்டி:
பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தை சோதனை செய்வதற்கான கருவிகள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் உள்ளன. இந்தக் கருவிகள் மூலம் எரி பொருட்களின் தரத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களோ அல்லது பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளோ சோதனை செய்து பார்ப்பது வழக்கம்.
ஆனால் தற்பொழுது இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கம்பெனி மூலம் வாடிக்கையாளர்களே பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோவில்பட்டியில் உள்ள ஞான மலர் பெட்ரோல் பங்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.
தாசில்தார் சுசிலா முகாமை தொடங்கி வைத்தார். பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை தாசில்தார் சுசிலா வாடிக்கையாளர்கள் முன்னிலையில் சோதனை செய்து உறுதிப்படுத்தினார். வாடிக்கையாளர்களும் இந்த செய்முறையை செய்து பார்த்தார்கள்.
அதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் அளவு சரியாக உள்ளதா என்ற சோதனையும் செய்து காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஞானமலர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மைக்கேல் அமலதாஸ் மற்றும் அமலி அமலதாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை 2022-23ம் ஆண்டில் வட்டிக்கு முந்தைய லாபமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஈட்டியுள்ளன.
- இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை 2022-23ஆம் ஆண்டில் வட்டிக்கு முந்தைய லாபமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஈட்டியுள்ளன.
2021-22-ம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வட்டிக்கு முந்தைய லாபம் ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் லாபம் மூன்று மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் சந்தித்த இழப்பை ஈடு செய்து விட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்காமல் இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் இரண்டகம் ஆகும். எனவே, இனியும் தாமதிக்காமல் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு முறையே ரூ.13, ரூ.11 குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு அதிகமாக வசூலிக்கிறது.
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனை பொதுமக்களுக்கு கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. இதனால், ஏற்கனவே பணவீக்க உயர்வால் அவதிப்படும் மக்கள், மேலும் சிரமப்படுகிறார்கள்.
பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு அதிகமாக வசூலிக்கிறது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்களின் பாக்கெட் கொள்ளையடிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையின் பெயரில் இரக்கமின்றி கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. முந்தைய ஆண்டுகளில், ரூ.33 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும். ஆகவே, பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.
- சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
- அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த போதிலும் பெட்ரோல்- விலை குறைக்கப்பட வில்லை. முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விட்டது. சில நகரங்களில் ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் ஊரடங்கு,ரஷியா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டதால் பெட்ரோல்- டீசல் விலை குறையாமல் அதே விலை நீடிக்கிறது.
இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கீழ் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
- பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 16 ரூபாயும் என்ற அளவில் அந்த வரி குறைப்பு இருந்தது.
இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இருந்து தப்பின. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தவில்லை.
கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. 2023-2024-ம் ஆண்டு முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாக கிடைத்து இருக்கிறது.
இதுபற்றி தகவல்களை அடுத்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன. கடந்த நிதியாண்டிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபரி வருவாய் கிடைத்து இருக்கிறது.
இதையடுத்து தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த மாத இறுதியில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும். இதுபற்றி விவரங்கள் இந்த மாத இறுதியில் தெரிய வரும்.
பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கருதுகிறது.
- இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சி காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை.
பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யாத நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவை விட அதிகளவு வருவாய் பெற்றன.
இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கலாமா? என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்கும் கீழ் வந்துள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் இதுபற்றி ஆய்வு செய்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கலாம் என கருதின. அது போல டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கலாம் என திட்டமிட்டன.
ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 வரை குறைப்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றன. மேலும் டீசல் விலையை ரூ.6 குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அறிவிப்பை பிப்ரவரி 1-ந்தேதி வெளியிட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. எனவே பெட்ரோல்-டீசல் விலை எந்த அளவுக்கு குறையும் என்பது அடுத்த வாரம் தெரியும்.






