search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் பெட்ரோல்,  டீசலின் அளவு-தரத்தை வாடிக்கையாளர்களே சோதனை செய்யும் சிறப்பு முகாம்
    X

    பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை சோதனை செய்த காட்சி


    கோவில்பட்டியில் பெட்ரோல், டீசலின் அளவு-தரத்தை வாடிக்கையாளர்களே சோதனை செய்யும் சிறப்பு முகாம்

    • பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தை சோதனை செய்வதற்கான கருவிகள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் உள்ளன.
    • கோவில்பட்டியில் உள்ள ஞான மலர் பெட்ரோல் பங்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

    கோவில்பட்டி:

    பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தை சோதனை செய்வதற்கான கருவிகள் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் உள்ளன. இந்தக் கருவிகள் மூலம் எரி பொருட்களின் தரத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களோ அல்லது பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளோ சோதனை செய்து பார்ப்பது வழக்கம்.

    ஆனால் தற்பொழுது இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கம்பெனி மூலம் வாடிக்கையாளர்களே பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, கோவில்பட்டியில் உள்ள ஞான மலர் பெட்ரோல் பங்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.

    தாசில்தார் சுசிலா முகாமை தொடங்கி வைத்தார். பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை தாசில்தார் சுசிலா வாடிக்கையாளர்கள் முன்னிலையில் சோதனை செய்து உறுதிப்படுத்தினார். வாடிக்கையாளர்களும் இந்த செய்முறையை செய்து பார்த்தார்கள்.

    அதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் அளவு சரியாக உள்ளதா என்ற சோதனையும் செய்து காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஞானமலர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மைக்கேல் அமலதாஸ் மற்றும் அமலி அமலதாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×