என் மலர்

    நீங்கள் தேடியது "special camp"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    • முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூர் ஏவிபி., சாலை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகம், அய்யப்பன் கோவில் அருகில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் (PMSVANIDHI) மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, மூன்றாவது கடன் ரூ.50,000 பெறலாம். அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்தவேண்டும்.

    கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி.

    மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே.ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம், மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
    • இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில், மாற்றுத்திறனாளிக்கான 35 கிலோ அரிசி, வீட்டு மனைக்கான பட்டா வேண்டி மனு அளித்தனர்.

    மேலும், மத்திய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டி மனு அளித்தனர். முகாமில், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, சமூக நலத்துறை தனி தாசில்தார் ஆறுமுகம் மனுக்களை பெற்றனர்.

    மேலும், மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளின் உடல் நிலைக்கேற்ப அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் துணை தாசில்தார் அபிராமி, மண்டல துணை தாசில்தார்கள் பாலகுருநாதன், மூர்த்தி, நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியங்கா,

    கிராம நிர்வாக அலுவலர் கலா, டிசம்பர் 3 இயக்கம் மாநில துணைத்தலைவர் மோகன்ராஜ் மற்றும் எலும்பியல் மருத்துவர், நரம்பு மண்டல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கினர். இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்த சில பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
    • புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது

    செம்பட்டி:

    தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த சில பெண்களின் விண்ண ப்பங்கள் நிராகரிக்கப்ப ட்டன.

    தமிழக அரசு தகுதியான வர்கள் விடுபட்டிருந்தால் அந்தந்த தாலுகா அலுவல கத்தில் மேல்முறையீடு செய்யலாம். புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக விண்ணப்பிக்க லாம் என அறிவித்துள்ளது.

    அதன்படி ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்தனர். உரிமை த்தொகை திட்டத்தில் தாங்கள் விடுபட்டதற்கான காரணங்களை அறிந்து கொண்டு மேல்முறையீடு செய்தனர். சிலருக்கு விண்ணப்பம் பரிசீலனை யில் உள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தாலுகா அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தர விட்டுள்ளது.
    • மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், நாளை (14-ந் தேதி) காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தர விட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமுதா யத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளை உள்ளடக்கிய, மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், நாளை (14-ந் தேதி) காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, கால்ந டைத்துறை, கைத்தறித்துறை, தாட்கோ, கதர்கிராம தொழில் வாரியம், கதர் கிராம தொழில் ஆணையம் உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும், அனைத்து மானியத்துடன் இணைந்த கடன் திட்டங் களுக்கும், கடனுதவிக்கான வசதியமைப்புகள் வழங்கப்படும்.

    மேலும் கடன்தொகை விடுவிப்பு குறித்து, பயனா ளிகளுக்கு தேவையாகன ஆலோசனைகள் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் இக்கடன் திட்ட முகாமில் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

    எனவே தொழில் முனைவோர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய விரும்புவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், புதிய தாக கடனுதவி பெற விரும்புபவர்கள் தங்களது அசல் ஆவணங்கள் மற்றும் துவங்கப்படும் தொழில் குறித்த திட்ட அறிக்கைகளுடன் நேரில் வந்து முகாமில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதி வேற்றம் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

    இந்தநிலையில் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார்.

    இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அவர்கள் கூறுகையில்:-

    விநாயகர் சதுர்த்தி அன்று பலர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.

    இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அதை எளிமைப்படுத்த வேண்டும்.

    மேலும் சிலை ஊர்வல பாதைகளை சீரமைக்க வேண்டும். சிலைகளை கரைக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்றனர்.

    சிறப்பு முகாம்

    பின்னர் உதவி கலெக்டர் கவிதா கூறுகையில், சிலைகள் வைக்க அனுமதி பெற அனைத்து துறை களையும் ஒருங்கிணைந்த வேலூர் உட் கோட்டத்து க்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை சிறப்புமுகாம் நடைபெறும்.

    அதில் சிலை வைக்க விரும்புபவர்கள் கலந்து கொண்டு விண்ண ப்பங்களை அளித்து அனுமதி பெறலாம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் நடை பெறவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    பொது விநியோக த்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.) வட்ட வழங்கல் அலுவல கங்களில் நாளை(9-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் நடைபெ றவு ள்ளது.

    இந்த முகாம்களில் ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் அட்டை கோரியும், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் ஆகியவை தொடர்பாக மனு அளிக்கலாம்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு மேற்காணும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
    • ஸ்வான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது

    வெள்ளகோவில் : 

    வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு சாா்பில் ஸ்வான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.எனவே விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா், கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலம் 22-வது வார்டில் வரிவசூல் மேம்படுத்தும் விதமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
    • இம்முகாமில் அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரி யினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன் மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலம் 22-வது வார்டில் வரிவசூல் மேம்படுத்தும் விதமாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவுரையின்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரி யினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். மேலும் சொத்துவரி, குடிநீர்கட்டண வரிவிதிப்பு, பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். இச்சிறப்பு முகாம் வார்டு 22-ல் பின்தங்கியுள்ள வரிவசூலை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங் களை நிலுவை யின்றி செலுத்தி ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
    • பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம்.

    திருப்பூர்,ஆக.22-

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பூர் பார்க் ரோடு அருகில் உள்ள கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாரிபாரிகளுக்கு பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் போது இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம்.அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் போது 3-வது கடன் ரூ .50,000 பெறலாம்.அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

    கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன். மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே. ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நிரந்தரமாக செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்.
    • ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:

    தஞ்சை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடா்பாக தமிழக முதல்வா் அறிவிப்பின்படி இன்று சிறப்பு முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த முகாம் நாளை (சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

    இந்த முகாம்களில் விடுபட்ட விண்ணப்ப தாரா்கள் மற்றும் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print