என் மலர்
நீங்கள் தேடியது "Officers"
- மானாமதுரை நகராட்சியில் குறைகளை தீர்க்க அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் கூறப்பட்டுள்ளது.
- கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், முனியசாமி ஆகியோர் பேசினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் மாரியப்பன் சென்னடி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் ரெங்கநாயகி, பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மானாமதுரை வாரச் சந்தை, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளுக்கு கட்ட ணம் வசூலிக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள மிதிவண்டி நிறுத்தத்தில் கட்டணம் வசூலிக் கும் உரிமை உள்ளிட்டவற்றுக்கு நடத்தப்பட்ட பொது ஏலத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மானாமதுரையில் குடி. நீர்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கூடுதல் பணியா ளர்களை நியமிக்க ஒப்புதல் அளிப்பது, கீழப்பசலை, மாங்குளம், சூரக்குளம் பில்லறுத்தான், கல் குறிச்சி, செய்களத்தூர், கீழமேல் குடி ஆகிய ஊராட்சிகளில் நகர் பகுதியுடன் ஒட்டியுள்ள தேர்வு செய்யப்பட்ட விரிவாக்கப் பகுதிகளை மானாமதுரை நகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து அரசுக்கு கருத்துரு அனுப்பு வது உள்ளிட்ட 33 தீர்மானங்களுக்கு உறுப் பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான கோரிக்கை களை முன் வைத்தனர். தி.மு.க . உறுப்பினர் மாரி கண்ணன் பேசுகையில், எனது வார்டில் இன்னும் புதிய தெரு விளக்குகளை பொருத்த வில்லை. நகராட்சி அலுவ லர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றார்.
கவுன்சிலர்கள் தெய் வேந்திரன், முனியசாமி ஆகியோரும் பேசினர். உறுப்பினர்களின் கேள்வி களுக்கு ஆணையர் ரெங்கநா யகி பதிலளிக்கையில், தற்போது பணிபுரியும் அலுவலர்கள் நேரடியாக புதிதாக பணிக்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை எப்படி அனுகுவது என்பது பற்றி கூறப்பட்டுள்ளது என்றார்.
மேலும் புதிய வீடு கட்ட வரைபட அனுமதி, சொத்து வரி, பெயர் மாற்றத்துக்கான பணிகளை இன்னும் ஒரு மாத்துக்குள் பணிகளை முடிக்கத் தேவையான நட வடிகைகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். தலைவர் மாரிப்பன் கென்னடி பேசுகையில், தற்போது டெங்கு பரவி வருவதால் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகளை விரைவாகசெய்ய வேண்டும் என்றார்.
- கிராம நிர்வாகி அலுவலர்களின் கிரிக்கெட் போட்டி நடந்தது.
- முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் வட்ட கிராமநிர்வாகஅலுவலர் அணிகள் தேர்வு செய்து அந்த அணிகளுக்கு கிரிகெட்போட்டி வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.
வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ராஜாமணி வரவேற்றார். மாநில தலைவர் ராஜன் சேதுபதி போட்டியை தொடக்கி வைத்தார். இதில் திருமங்கலம் அணி வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக திருமங்கலம் சர்வேயர் மணி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு திருமங்கலம் தாசில்தார் பார்த்திபன் பரிசுகள் வழங்கினார். முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
- இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வு கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா மிகவும் விமர்சை யாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹார விழா நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி மாலை 4 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது.விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்தம் குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தக்காரும், உதவி ஆணையருமான சங்கர் தலைமையில் ஆய்வு பணி நடந்தது.
இதில் பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வு கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன நிறுத்தம் செய்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிர மணியன், கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
- மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
- பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள மவுண்ட் பிளசண்ட பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமாா் ஒரு ஏக்கா் நிலம் இருந்தது. அதனை அங்கு உள்ள தனியாா் டென்னிஸ் கிளப் நிா்வாகம் ஆக்கிரமித்து விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி தலைமையில் வருவாய்த் துறையினா் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் விளையாட்டு மைதானத்துக்காக ஆக்கிரமித்து வைத்திருந்த 1 ஏக்கா் நிலத்தை மீட்டனா். அதன் தற்போதைய மதிப்பு ரூ.9 கோடியாகும்.
இந்த மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.
- ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு
- உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை முகப்பு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள், பங்க் கடைகள், டீக்கடைகள் உள்ளன. இங்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், கதிரவன், ஸ்டாலின், ராஜரத்தினம், அன்பு பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் முண்டியம்பாக்கத்தில் ஓட்டல்கள், பங்க் கடை, டீக்கடை ஆகிய வற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஓட்டல்களில் சுகாதார மற்ற முறையில், காலாவதியான உணவு பண்டங்களையும், பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்த கூடாத உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 5 ஓட்டல்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றாததால் அந்த ஓட்டல்களுக்கு மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அறிவுறு த்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தொட ரும் என ஓட்டல் உரிமையா ளர்களுக்கு எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது ஓட்டல்களில் கெட்டுப்போன வெஜ் பிரியாணி, பால் பாக்கெட், கீரிம் கேக், குளிர் பானங்கள், தேதி குறிப்பிடா மலும், காலாவதியான பிஸ்கட், உணவு பண்டங்கள் சுமார் 150 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அனைத்தையும் கீழே கொட்டி அழித்தனர்.
- சரபோஜிராஜபுரம் -வடக்குமாங்குடி சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
- பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பு பொறியாளர் கவிதா வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சக்கராப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் சிமெண்ட் சாலை பணிகள், பாய் நெசவு பணி கட்டிடம், வழுத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டம், ஆதி திராவிட நல பள்ளி கட்டிடம், சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம், காளான் வளர்ப்பு மையம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம், சரபோஜிராஜபுரம் வடக்குமாங்குடி சாலை பணிகள், கல்வெட்டு பணிகள்,
ஆதனூர் ஊராட்சியில் சோழங்கநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம், குழந்தை நேய பள்ளி கட்டிடம் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு பொறியாளர் கவிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது உடன் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
- முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.
மதுரை
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை விற்பனை குழுவின் சார்பில் இ-நாம் திட்ட வலைதளத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மற்றும் பண்ணை வர்த்தகம் மேற்கொள்வது குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை விரிவாக்க அலுவலர்க ளுக்கான தொழில்நுட்ப பயிற்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வரவேற்றார்.
கூட்டத்தில் இ-நாம் திட்டம் குறித்தும் இத் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்தும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பலன்கள் குறித்தும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இ-நாம் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கீதா ஆலோசனை வழங்கினார்.
இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.
- சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
- வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வாக்குவாதம்
கரப்பான் பூச்சியை கோழிக்கறியுடன் சேர்த்து பொறித்தது தெரிய வந்தது. இது குறித்து வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல்அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அந்த கடைக்கு சென்றனர். அப்போது அந்த சில்லி சிக்கன் கடையை பூட்டி விட்டு அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இன்று கடையை திறக்குமாறு கூறி உள்ளனர். மேலும் இன்று கடைக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தனர்.
- தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர்.
- தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாக பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.
கோவை,
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்தல் வேண்டும் என கூறப்படுகிறது. ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளுக்குள்ளாகவே அடைபட்டு கிடந்தனர். அவர்களும் படித்து நல்ல நிலையை அடைய பலர் போராடினர். போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் பலரும் படித்து பற்பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து மிக பெரும் சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள்.
தாங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும், அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரமான கோவையில் குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், குற்றம் செய்தவர்களை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக எந்தவொரு குற்ற சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.
தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, பயிற்சி ஏ.எஸ்.பி கரிஷ்மா, பொள்ளாச்சி சப்-டிவிசனில் பணியாற்றி வரும் பிருந்தா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களாகவும் பெண்கள் அதிகளவில் அந்த பதவிகளை அலங்கரிக்கின்றனர்.
அவர்கள் அந்த பதவியில் இருந்து தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பது, குற்ற சம்பவங்களை தடுப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அடிக்கடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடமும் குற்ற சம்பவங்கள் குறித்தும், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாகவே ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மேற்குமண்டலம் என்பது, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பகுதிகளுக்கு எல்லாம் ஐ.ஜி.யாக இருந்து எந்தவிதமான குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்பட பல்வேறு வேலைகளை செய்ய வேண்டியது இவரது கடமையாகும்.
இந்த உயர்ந்த பதவியில் தான் தற்போது பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு அளிப்பதே தனது முக்கிய பணி என தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மேற்கு மண்டலத்தில் எந்தவித குற்ற சம்பவங்கள் நடந்தாலும், அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.ஜி., டி.எஸ்.பி. பதவிகளை தவிர இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பிலும், நிறைய பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படி உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளிலும் கோவை மாவட்ட போலீசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையேயும், பெண்களிடையேயும் அதிகமாக வரவேற்பினை பெற்றுள்ளது. இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், தாமும் இதுபோன்று சாதித்து உயர் பதவியை அடைய ஒரு உந்துதலாகவும் இருக்கும்.
இதுதொடர்பாக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- கோவையில் போலீஸ் உயர் பதவிகளை பெண்கள் அலங்கரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வரவேற்கத்தக்கது. பெண் போலீஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள், பெண்களின் உரிமைகளையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவார்கள் என நம்புகிறோம். யாருக்கும், யாரும் சளைத்தவர்கள் அல்ல. எல்லோரும் ஒன்று என்ற வழியில் பெண்களாலும் எல்லா துறையிலும் திறம்பட பணியாற்ற முடியும் என்பதையே இது காட்டுகிறது. எனவே அனைத்து பெண்களும் தங்கள் வாழ்வில் சாதித்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றனர்.
+2
- நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்கள் பயிற்சி முகாமிற்கு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி சார்பில் மேயர், துணை மேயர் , மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்கக் கூடிய நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்ட நிலையில் திடீரென முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஆய்வு கூட்டம் தேதி குறிக்கப்பட்டதால் அங்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து மாமன்ற உறுப்பினர்களை சமரசம் செய்தனர்.
இதன் பின்னர் பள்ளி மேலாண்மை குழுவின் உரிமைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.