என் மலர்
நீங்கள் தேடியது "அதிகாரிகள்"
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் லேசானவை அல்லது அறிகுறி இல்லாமல் உள்ளன.
- எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெலுங்கானா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு குறித்து வெளியான தகவல்கள் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரசை எதிர்த்துப் போராட மக்கள் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் லேசானவை அல்லது அறிகுறி இல்லாமல் உள்ளன. நீராவி உள்ளிழுத்தல் மற்றும் ஓய்வு போன்ற எளிய வீட்டு பராமரிப்பு ஒரு வாரத்திற்குள் குணமடைவதை உறுதி செய்துள்ளது.
வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சமீபத்திய அலையைச் சமாளிக்க போதுமான படுக்கைகள், ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் சோதனை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடமிருந்தோ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்தோ இதுவரை எந்த வழிகாட்டுதல்களும் வரவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனில் குமார் சிங்கும் ஜம்மு-காஷ்மீருக்கு மாற்றப்பட்டார்.
- காஷ்மீரில் டிவிஷனல் கமிஷனராகப் பணியாற்றிய 2005 பேட்ச் அதிகாரியான விஜய் குமார் பிதுரி டெல்லிக்கு மாற்றப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் AGMUT பணிப் பிரிவில் செய்யப்பட்ட பெரிய மறுசீரமைப்பில், இரண்டு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஒரு முதன்மைச் செயலாளர் உட்பட டெல்லி அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர்.
டெல்லி அரசின் நிதி மற்றும் வருவாய் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச (AGMUT) கேடரைச் சேர்ந்த 1994 ஆம் ஆண்டு தொகுதி IAS அதிகாரியான ஆஷிஷ் சந்திர வர்மா, ஜம்மு-காஷ்மீருக்கு மாற்றப்பட்டார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனில் குமார் சிங்கும் ஜம்மு-காஷ்மீருக்கு மாற்றப்பட்டார். அதே நேரத்தில் கண்காணிப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் சுதிர் குமார் மிசோரமுக்கு மாற்றப்பட்டார். காஷ்மீரில் டிவிஷனல் கமிஷனராகப் பணியாற்றிய 2005 பேட்ச் அதிகாரியான விஜய் குமார் பிதுரி டெல்லிக்கு மாற்றப்பட்டார்.
அதிகாரிகளின் இந்த பணியிட மாற்றத்தின் படி, டெல்லி அரசு 42 மூத்த AGMUT மற்றும் DANICS கேடர் அதிகாரிகளின் துறைகளுக்கு இடையேயான இடமாற்றங்கள் மற்றும் பணி நியமனத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை.
- நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.
மதுரை:
மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.
15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.
முளைத்த நெல்லுடன் மாவட்ட ஆட்சியரிடம், நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.
- போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.
- மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார்.
சென்னை:
மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முககவசம், கையுறை போன்ற மருத்துவப் பொருட்கள், அலுவலக கவர்கள், எழுதுபொருட்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், நீதின்றங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை ரூ.1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார். தற்போது அவர், புதுக்கோட்டை மத்திய சிறையில் சூப்பிரண்டாக உள்ளார். அதேபோல், மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றிய வசந்த கண்ணன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் கூடுதல் சூப்பிரண்டாகவும், மதுரை மத்திய சிறையில் நிர்வாக அதிகாரியாக இருந்த தியாகராஜன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாகவும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
- ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார். தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாசாவில் வானிலை மாறுபாடு என்றும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
- சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று ஒரு மாத காலமே ஆகிறது.
- தார் சாலையை கடப்பாறையால் குத்தியும், கிளறியும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சோதியக்குடி செல்லும் சாலையில் வள்ளுவர்தெரு உள்ளது.
இந்த கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 400 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றது.
இந்த சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று ஒரு மாத காலமே ஆகிறது.
இந்த சாலை தரமாக உள்ளதா, முறைப்படி மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று திடீரென சம்பவ இடத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் நேரில் சென்று புதியதாக போடப்பட்ட தார் சாலையை கடப்பாறையால் குத்தியும், கிளறியும் தார் மற்றும் கருங்கல் ஜல்லிகளை வெளியே எடுத்து, தரமாக போடப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்தனர்.
- புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து மறியல்.
- கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சி, கண்ணன்மேடு கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து பாமணி இ.சி.ஆர். சாலையில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோதி பாஸ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, கொக்கலாடி ஊராட்சி மன்ற தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கோபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.பி சுந்தர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மறியில் ஈடுப்பட்டோர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காமராஜ் எம்.எல்.ஏ. சந்திப்பு
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார். இதில் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் டி.சி. சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும்.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது. கலெக்டர் வினீத முன்னிலை வகித்தார்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது திருப்பூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதவை, தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், ஆகிய திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். தமிழக அரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்றார்.
தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் வைப்புத்தொகை பத்திரத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த கண்டக்டர் அதை எடுத்து பார்த்தார்.அப்போது அதில் ரூ.10,600 இருந்தது.
- கடன் வாங்கி கொண்டு வந்த பணம் தவறிவிட்டது என கவலையில் இருந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை
நாகர்கோவில் :
திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த கண்டக்டர் அதை எடுத்து பார்த்தார்.அப்போது அதில் ரூ.10,600 இருந்தது. உடனே கண்டக்டர் அந்த பர்சை போக்குவரத்து கழக அதிகாரியிடம் ஒப்படைத்தார். பின்னர் அதிகாரிகள் அந்த பர்சை வைத்திருந்தனர்.
அந்த பர்சிற்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை. இந்த நிலையில் பர்சை ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பர்சில் இருந்த கார்டை ஸ்கேன் செய்து பார்த்தபோது அது வள்ளியூர் அருகே ஆனைகுளம் பகுதியைச் சேர்ந்த சுகன்யா ஜெயக்கொடி என்பவரது பர்ஸ் என தெரிய வந்தது.
உடனே அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது சரண்யா ஜெயக்கொடி தனது பர்சை தவற விட்டு விட்டு பல இடங்களில் தேடி வருவதாக கூறினார். உடனே போக்குவரத்து கழக அதிகாரிகள் அவரை நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அவரிடம் பர்சிற்கான அடையாளங்களை கேட்டு அறிந்தனர்.
பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு பர்சை சுகன்யா ஜெயக்கொடியிடம் போக்குவரத்து கழக அதிகாரி ஜெரோலின் ஒப்படைத்தார்.பர்சை பெற்றுக் கொண்ட சரண்யா ஜெயக்கொடி போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். சரண்யா ஜெயக்கொடி கூறுகையில் கடன் வாங்கி கொண்டு வந்த பணம் தவறிவிட்டது என கவலையில் இருந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்தேன். தற்பொழுது அதிகாரிகள் இந்த பணத்தை எடுத்து என்னிடம் ஒப்படைத்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- தாமரைக்குளத்தில், தற்போது நடைபெற்று வரும் மராமத்து பராமரிப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
- குளத்தின் அளவீடுகள், தாமரை குளத்திற்கான நீர்வழிப்பாதைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆய்வு மேற்கொண்டனர்.
அவிநாசி:
அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தாமரைக்குளத்தில், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.இதில் குளத்தின் கரைகள் உறுதித் தன்மை, குளத்தின் அளவீடுகள், தாமரை குளத்திற்கான நீர்வழிப்பாதைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் தாமரைக்குளத்தில், தற்போது நடைபெற்று வரும் மராமத்து பராமரிப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். தாமரைக்குளத்தின் மதகு பகுதியில் இருந்துஉபரிநீர் வெளியேறும் ராஜவாய்க்காலை தூர்வாரி அதன் நீர் வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.விரைவில் இதற்கான சர்வே நடத்தப்படும் என்று உதவி பொறியாளர் கூறினார்.
- 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
- 11 கடைகளுக்கு அபராதம்
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலாத்த லமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனையொட்டி ஆங்காங்கே நடைபாதைகளில் ஏராள மான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கன்னியாகு மரியில் நேற்று குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன், தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின்ரகு ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரு குழுவாகவும் மேல்புறம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வின்சென்ட்கிளாட்சன், குளச்சல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, திருவட்டார்வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்னொரு குழுவாகவும் தனித்தனியாக சென்று 50-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி கடற்கரை சாலை, மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த கடைகளில் இருந்து 18 கிலோ 750 கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 3 கோவில்களில் 8 ஏக்கர் 84 செண்ட் நிலம் மீட்கப்பட்டது.
- ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலின், குழுக் கோவிலான பழைய பேரா–வூரணி பிரசன்ன வெங்கடேச–பெருமாள், செங்கமங்கலம் தெய்வாங்கப் பெருமாள், மார்க்கண்டேஸ்வரர் ஆகிய மூன்று கோவில்களுக்கும் சொந்த மான ஆக்கிரமிப்பு நிலம் மீட்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தஞ்சாவூர் இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் நாகையா, இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் சங்கர், நில அளவையர் ரெங்கராஜன், பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னி–லையில், நீலகண்ட பிள்ளையார் கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் தீர்வு காணப்பட்டு, ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து கோயில் நிலம் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டு, அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
மொத்தம் 3 கோவில்களில் 8 ஏக்கர் 84 செண்ட் நிலம் மீட்கப்பட்டது. அதாவது ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். ஆக்கிர–மிப்பு மீட்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.






