என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரத் துறை"

    • கடந்த ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.8 லட்சம் ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆகவும் இருந்தது.
    • 2023 இல் 4.41 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர் பாதிக்கப்பட்டனர்.

    தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

    அறிக்கைப்படி, 2025ஆம் ஆண்டில் தமிழகத்தில் இதுவரை நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.8 லட்சம் ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆகவும் இருந்தது.  

    2023 இல் 4.41 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

    2022 இல் 3.64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு ரேபிஸ் தொற்றுக்கு 28 பேர் இறந்துள்ளனர். 2021 இல் 3.19 லட்சம் பேர்  பாதிக்கப்பட்டு, 19 பேர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் லேசானவை அல்லது அறிகுறி இல்லாமல் உள்ளன.
    • எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெலுங்கானா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பு குறித்து வெளியான தகவல்கள் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரசை எதிர்த்துப் போராட மக்கள் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் லேசானவை அல்லது அறிகுறி இல்லாமல் உள்ளன. நீராவி உள்ளிழுத்தல் மற்றும் ஓய்வு போன்ற எளிய வீட்டு பராமரிப்பு ஒரு வாரத்திற்குள் குணமடைவதை உறுதி செய்துள்ளது.

    வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகளில் சமீபத்திய அலையைச் சமாளிக்க போதுமான படுக்கைகள், ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் சோதனை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடமிருந்தோ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்தோ இதுவரை எந்த வழிகாட்டுதல்களும் வரவில்லை.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    • பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள்
    • சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரபடுத்தி உள்ளனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜாக்கமங்கலம், நாகர்கோவில், முஞ்சிறை பகுதிகளில் தலா 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம், திருவட்டார், தக்கலையில் தலா 4 பேரும், தோவாளையில் 3 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரபடுத்தி உள்ளனர்.காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ×