search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corona prevention"

    • கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் முதல் வேகமாக பரவ தொடங்கி யது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே 2 இலக்கில் பதிவாகி வந்த கொரோனோ பாதிப்பு தற்போது 3 இலக்கில் பதிவாகி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்புபோல் முககவசம் அணிய வேண்டும். கை கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 வாரத்திற்கு மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவ மனைகள்,அரசு மருத்துவ மனை, நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்று ம் நர்சுகள், மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளி களை பார்க்கும் வரும் உறவினர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலுக்கு வந்தது.

    இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வா ய்க்கிழமை) கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்க வசதி உள்ளதா? ஆக்சிஜன் வசதி உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேப்போல் மருத்துவ மனைகளில் போதிய மருந்துகள் கையிருப்பு உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தை பொறுத்த வரை தினமும் 2, 3 பேர் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.

    ஒரு வாரத்திற்கு 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளையும் ஈரோடு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஈரோடு நகர நகைக்கடை உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், வியாபாரிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.
    • இதில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு முறைகளை வியாபாரிகள் கடைபிடிக்க வலியுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் நகர நகைக்கடை உரிமையா ளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், வியாபா ரிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

    கூட்டத்தில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியு ள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    குறிப்பாக பெரிய நகை கடைகள், திருமண மண்டபங்களில் நடை பெறும் விஷேசங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி விடுமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

    கடைக்கு வரும் பொது மக்கள் முககவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உண்டான பொருட்களை வழங்க வேண்டும். கடை களில் கிருமிநாசினி வைத்தி ருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்.

    இதேபோல் திருமணம் போன்ற விசேஷங்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×