என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " Telangana"

    • ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள்.
    • தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற திட்டம்.

    தெலுங்கானாவில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் சர்வதேச சந்தைகளை எட்டும் வகையில் அமேசான் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    அக்சய பாத்திர பவுண்டேசன் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேவந்த் ரெட்டி "தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற மாநில அரச திட்டமிட்டுள்ளது.

    ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய அமேசானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    குழந்தைகளின் கல்வி பெற்றோரின் வாழ்க்கையை மாற்றுவதால், கோடங்கல் தொகுதியில் உள்ள 312 அரசுப் பள்ளிகளில் 28,000 மாணவர்களுக்கு அக்ஷய பாத்திர அறக்கட்டளை மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது" என்றார்.

    • ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வருகிற 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ், பாரத ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் உடல்நல குறைவு காரணமாக இறந்தார். ஜூப்ளி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி,பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் கே.டி.ஆர். உள்ளிட்ட தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரசாரத்தின் போது வரம்புகளை மீறி ஒவ்வொருவரும் விமர்சனம் செய்து பேசி வருவதால் ஜூப்லி ஹில்ஸ் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    • நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.
    • தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.

    நல்ல சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் என்று தெலுங்கானா பாஜக எம்பி விஸ்வேஷ்வர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    மோசமான சாலைகள் விபத்துகளைக் குறைக்கும். நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.

    முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.

    ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்ததற்கு நல்ல சாலை கட்டமைப்பும் ஒரு காரணம்.

    மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதால் விபத்துகள் குறைகின்றன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.
    • பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் அசாருதீன் தோல்வியடைந்தார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

    தெலங்கானா அமைச்சராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

    2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் நவம்பர் 11 அன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.

    தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார்.
    • சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

    கிராமத்தில் யாராவது விமானத்தில் பயணம் செய்தால், முழு கிராமமும் அதைப் பற்றி விவாதிக்கும். தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் ஒரே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து அசத்தி உள்ளனர்.

    நாகர்கர்னூல் மாவட்டம், பிஜினேபள்ளி மண்டலம், குட்லனர்வா கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் நேற்று இரவு ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் குதூகலமாக பயணம் செய்தனர்.

    மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்நகர் நகராட்சியின் முன்னாள் மேயரான மேகலா காவ்யாவின் தந்தை மேகலா அய்யப்பா, இவர் தனது சொந்த கிராம மக்களுக்கு மறக்கமுடியாத ஒன்றைச் செய்ய விரும்பினார்.

    கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக, அவர் சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

    தனது சொந்த கிராம மக்கள் 500 பேரை 2 விமானங்களில் கோவாவுக்கு அழைத்துச் சென்றார்.

    இந்த நிகழ்வில் பேசிய காவ்யா, தனது தந்தை ஒரு எளிய விவசாயியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சிறந்த தொழிலதிபராக வளர்ந்தார்.

    அவருடைய கிராம மக்களின் கண்களில் மகிழ்ச்சியைக் காண கோவாவில் மகன் நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்தார். அனைத்து கிராம மக்களையும் விமானத்தில் அழைத்து வந்தார். கிராம மக்கள் 500 பேரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அவர்களின் மகிழ்ச்சியை தங்கள் மகிழ்ச்சியாகக் கருதி இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

    தெலுங்கானாவில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • 2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர் மெடா அடுத்த கோஹோடாவை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் ராகேஷ் ( 21) மற்றும் ஸ்ரீஜா (18).

    3 பேரும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் வைஷ்ணவிக்கு வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை வைஷ்ணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அப்போது வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வைஷ்ணவி இறந்த தகவல் ராகேஷுக்கு தெரிய வந்தது. இதனால் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு படுக்கை அறைக்கு தூங்க சென்றார். அவர் அந்த அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது. நெருங்கிய நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அதிகாலை ஸ்ரீஜாவின் தந்தை வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். படுக்கை அறைக்குச் சென்ற ஸ்ரீஜா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
    • மனுவை வாபஸ் பெற நாளை கடைசி தினமாகும்.

    தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் நவம்பர் 11-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறகிறது. பாரத ராஷ்டிர சமிதி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. கோபிநாத்தின் மனைவி சுனிதா போட்டியிடுகிறார்.

    அங்கு பிராந்திய வெளிவட்டச் சாலைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்ய குவிந்ததால் நள்ளிரவைத் தாண்டியும் மனுக்கள் பெறப்பட்டன. 211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. சிலர் இருமுறை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. 81 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 130 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுவை வாபஸ் பெற நாளை கடைசி தினமாகும்.

    • போற்றோரை புறக்கணிக்கும் ஊழியர்கள் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம்.
    • அது பெற்றோர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமனக் கடிதம் வழங்கினார்.

    பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

    பிரச்சனைகளுடன் வரும் மக்களை, கனிவுடன் அணுக வேண்டும். நாங்கள் புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள்தான் சட்டத்திற்கான வரைவை உருவாக்குவீர்கள். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க கமிட்டி உருவாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
    • காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. இந்த பந்த் நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் நடவடிக்கையால் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

    உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலுங்கானா அரசின் அரசாணைக்கு அக்டோபர் 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி 'தேவி 2', 'வீரமே வாகை சூடும்', அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பல தெலுங்கு படங்களில் நடித்து அவர் புகழ்பெற்றார்.

    இந்நிலையில், டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது அவரது வீட்டுப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், ஹயாதி மற்றும் அவரது கணவர் தன்னை துன்புறுத்தியதாகவும், நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை டிம்பிள் ஹயாதி, 2023-ல் ஐபிஎஸ் அதிகாரியின் கார் மீது செருப்பு வீசிய சர்ச்சையிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • BC-க்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
    • ஜனாதிபதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் BC-க்கு (பிற்படுத்தப்பட்டோர்) 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.

    இந்த மசோதாக்கல் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

    பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு, இது ஓபிசி-க்கு எதிரான மசோதா என குற்றம்சாட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக BC-க்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. முன்னதாக 23 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது.
    • கல்வியில் தமிழ்நாட்டின் முன்னோடிப் பாதை முழு இந்தியாவிற்கும் வழி வகுக்கும் என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி.

    தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது.

    புதுமைபென், நான் முதல்வன் மற்றும் தமிழ் புதல்வன் போன்ற எங்கள் முதன்மைத் திட்டங்களைப் பாராட்டுவதன் மூலம், கல்வியில் தமிழ்நாட்டின் முன்னோடிப் பாதை முழு இந்தியாவிற்கும் வழி வகுக்கும் என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    ×