search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidates"

    • மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்
    • சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் இவிஎம் மின்னணு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களை ஒழித்து வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது.

    இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடப்பது நிரூபிக்கப்படாததால் இந்த மனுவை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அதற்கு பதிலாக தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியைத் தழுவும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் பணம் செலுத்தி விண்ணப்பித்து இவிஎம் இயந்திரங்களை சோதனையிடலாம் என்று தெரிவித்திருந்தது.

    அதன்படி நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு காட்சிகளை சேர்ந்த மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட எந்த இவிஎம் இயந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். எந்த இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்ற வேட்பளர்களின் முடிவில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது.

    தேர்தெடுக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி அதிகபட்சமாக 1400 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அவை சரியாக இயங்குகிறதா என்று என்று சோதிக்கலாம். அதிகப்பாடசாமாக வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும்.

    இவிஎம் இயந்திரமானது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் [விவிபேட்] யூனிட்டை உள்ளடிக்கியது. இந்த யூனிட்களை வெவ்வேறு இயந்திரங்களில் இடைமாற்றியும் [ஒரு இவிஎம் இயந்திரத்தில் உள்ள பேலட் யூனிட்டையும் மற்றொரு இயந்திரத்தில் உள்ள விவிபேட் யூனிட்டையும்] இணைத்து சோதித்து பார்க்கலாம்.

    ஆனால் ஒரு தொகுதியில் மொத்தம் 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இவிஎம் இயந்திரத்தை மட்டுமே சோதிக்க முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி  விரைவில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி இவிஎம் இயந்திரங்கள் சோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
    • வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம..க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணி தலைவர்களும் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.

    கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று மாலை அய்யூர்அகரம், தென்னமாதேவி, திருவாமாத்தூர், சோழகனூர், கொசப்பாளையம், சங்கீதமங்கலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

    இன்று தும்பூர், நேமூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாலை விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் பிரசாரத்தை முடித்தார்.

    இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.

    தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

    • இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை பெறவும், தே.மு.க.தி.வினரின் ஓட்டுக்களை பெறவும், பா.ம.க.வும், நாம் தமிழர் கட்சியும் முயற்சித்து வருகின்றன.

    மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

    அதேபோல பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகள் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    • இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
    • வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடி வடைந்தது.

    இத்தேர்தலில் போட்டி யிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா. பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    இவர்கள் அனைவரும் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்துப் பட்டியல் விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விவரம் வருமாறு:-

    தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதாகடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரி லோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும். அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதா கவும். இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    பா.ம.க.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு ரூ.II லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக வும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் நிறுவனங்களில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும், வங்கி, நிதி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட் சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகைக் கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    • உத்தரபிரதேசத்தில் 130 வேட்பாளர்களும், மராட்டியத்தில் 298 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 74 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
    • இன்னும் 163 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    2-ம் கட்டமாக கேரளா உள்பட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடந்தது. 3-ம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடந்தது.

    இதுவரை நடந்து முடிந்து உள்ள 3 கட்ட தேர்தல்களிலும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால், அந்த இடத்தை தவிர மற்ற 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.

    இந்த நிலையில் 4-ம் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 9 மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளுக்கு நாளை 4-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகள், தெலுங்கானா வில் உள்ள 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகள், மராட்டியத்தில் உள்ள 11 தொகுதிகள், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகு திகள், பீகாரில் 5 தொகுதிகள், ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் தலா 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகிய தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடத்தப்படு கிறது.

    நாளை தேர்தலை சந்திப்பவர்களில் முக்கிய வேட்பா ளர்களாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியிலும், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா தொகுதி யிலும், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ் வரி ராஜ மகேந்திரவரம் தொகுதியிலும், மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுச ராய் தொகுதியிலும், மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி தொகுதியிலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்காள மாநிலம் பஹரம்பூர் தொகுதி யிலும், நடிகர் சத்ருகன் சின்கா மேற்கு வங்காள மாநி லம் அசன்சோல் தொகுதியிலும், நடிகை மாதவி லதா ஐதராபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் 170 பெண்கள் உள்பட மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் 130 வேட்பாளர்களும், மராட்டியத்தில் 298 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 74 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

    நாளை 4-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. 96 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    குஜராத் மாநிலம் சூரத் தொகுதியை தவிர தேர்தல் நடக்கும் 542 தொகுதிகளிலும் 4 கட்ட தேர்தல்களையும் சேர்த்து மொத்தம் 379 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

    இன்னும் 163 தொகுதி களில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. 5-ம் கட்டமாக மே 20-ந்தேதி 49 தொகுதிகளுக்கும், 6-ம் கட்டமாக மே 25-ந்தேதி 57 தொகுதிகளுக்கும், 7-ம் கட்டமாக ஜூன் 1-ந்தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    • ஒரு வேட்பாளா் சார்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.
    • முகவா்களின் பெயா், கையொப்பம், இரண்டு புகைப்படங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    தோ்தலில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை பணிக்காக அதிகாரிகள், அலுவலா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் வேட்பாளா்கள் சார்பில் இருக்க வேண்டிய முகவா்களின் எண்ணிக்கை குறித்து தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனா்.

    பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முகவா்களை நியமிக்க வேண்டும். ஒரு தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தால் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் 14 முகவா்களையும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.

    அத்துடன், தபால் வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் ஆறு மேஜைக்கு ஆறு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

    தபால் வாக்குச் சீட்டு எண்ணுமிடத்தில் ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா் இருப்பார். அவருடன் ஒரு முகவரையும், தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.

    ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்ட மன்ற தொகுதிகள் இருந்தால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 நபா்கள் வீதம் 90 முகவா்களை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும். தபால் வாக்கு எண்ணும் மேஜைகள் மற்றும் தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறை ஆகிய இடங்களில் எட்டு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

    மொத்தமாக ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு வேட்பாளா் சார்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.

    வேட்பாளா்களின் சார்பில் நியமிக்கப்படும் முகவா்கள் ஒவ்வொருவரும் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கென வரையறுக்கப்பட்ட படிவம் 18-ல் முகவா்களின் பெயா்கள், கையொப்பத்துடன் இரண்டு புகைப்படங்களையும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    அதேபோல, முகவா்களாக யாரை நியமிக்கக் கூடாது என்ற வரையறைகளையும் தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது.

    அதன்படி, மத்திய மற்றும் மாநில அமைச்சா்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா், துணை மேயா், நகா்மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறு வனங்களின் தலைவா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து நிறு வனங்களின் பகுதி நேர உறுப்பினா்கள், நியாய விலைக் கடை, சத்துணவு, அங்கன்வாடி, சுகாதார மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்கள் ஆகியோரை முகவா்களாக நியமிக்கக் கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    • வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி முடிவடைந்தது.

    மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 10 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருவனந்தபுரம் தொகுதியில் 12 பேர், அட்டிங்கல் தொகுதியில் 7பேர், கொல்லம் தொகுதியில் 12 பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 8 பேர், மாவேலிக்கரை தொகுதி யில் 9 பேர், ஆலப்புழா தொகுதியில் 11 பேர், கோட்டயம் தொகுதியில் 14 பேர், இடுக்கி தொகுதியில் 7 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 10 பேர், திருச்சூர் தொகுதியில் 9பேர், சாலக்குடி தொகுதி யில் 11பேர், ஆலத்தூர் தொகுதியில் 5 பேர், பாலக்காடு தொகுதியில் 11 பேர், பொன்னானி மற்றும் மலப்புரம் தொகுதியில் 8பேர், கோழிக்கோடு தொகுதியில் 13 பேர், வயநாடு தொகுதியில் 9பேர், வடகரா தொகுதியில் 10 பேர், கண்ணூர் தொகுதியில் 12 பேர், காசர்கோடு தொகுதியில் 9 பேர் என 20 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர். வடகரா தொகுதியில் 4 பெண்கள் போட்டியிடுகின்றனர். பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 6 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோசியலிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

    இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா 16 தொகுதிகளிலும், பி.டி.ஜே.எஸ். 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.


    அனைத்து தொகுதிகளிலுமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதனால் கேரளாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் குதித்தனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை ஆதரித்து கேரள மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்கள் மற்றும் பிற மாநில தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களின் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. இந்த நிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், ஓட்டுப் பதிவு வருகிற 26-ந்தேதி நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்காக 25 ஆயிரத்து 177 வாக்குச்சாவடிகளும், 181 கூடுதல் வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 27 ஆயிரத்து 045பேரும், முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 34 ஆயிரத்து 394 பேரும் உள்ளனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் 89 ஆயிரத்து 839 பேர்.

    கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இவர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறியுள்ளன. இதனால் வயநாடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய 3 தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியை ஆசிரியர்களுக்கு கடந்த 7-ந் தேதி நடந்த 2-ம் கட்ட பயிற்சியின் போது தபால் வாக்குப்பதிவு நடந்தது. இதில் அவர்கள் தங்களது வாக்கினை தபால் மூலமாக ஓட்டு பெட்டியில் போட்டனர்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

    பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடும் 2,050 போலீசாருக்கு ஏற்கனவே தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தொகுதிக்கான வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதில் போலீசார்களுக்கான தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள போலீசார் தங்களது தபால் வாக்கினை செலுத்த உள்ளனர். தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தால் முறைப்படி அனைத்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்படும். இது தவிர பிற தொகுதிகளில் வாக்குரிமை உடைய போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தபால் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
    • காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 4 முனைப் போட்டி நிலவுகிறது.

    இவர்களுடன் கணிசமான அளவுக்கு வழக்கம் போல சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளனர். இந்த வேட்பாளர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவ்வளவு எளிதில் வாக்காளர்களால் கண்டுபிடித்து விட முடியாது.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக சீர்திருத்தக் கழகம் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களை மிக நுட்பமாக ஆய்வு செய்துள்ளது. மொத்தம் களத்தில் உள்ள 950 வேட்பாளர்களில் 945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாக உள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதை அந்த வேட்பாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை அவர்கள் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர்.

    இந்த 15 சதவீத குற்றவாளிகளில் 81 பேர் மிக கடுமையான குற்றவாளிகள். அதாவது இவர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இது மொத்த வேட்பாளர்களில் 8 சதவீதம் ஆகும்.

    இந்த கடுமையான குற்றவாளிகள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். கட்சி வாரியாக குற்றவாளி வேட்பாளர்களை ஆய்வு செய்த போது பல ருசிகர தகவல்கள் கிடைத்தன.

    அந்த வகையில், நாம் தமிழர் கட்சியில் 28 சதவீதம் குற்ற வழக்குகள், 15 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும், அ.தி.மு.க. சார்பில் 35 சதவீதம் குற்ற வழக்குகள், 18 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும் களத்தில் உள்ளனர்.

    பா.ஜ.க. சார்பில் 70 சதவீதம் குற்ற வழக்குகள், 39 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், தி.மு.க. சார்பில் 59 சதவீதம் குற்ற வழக்குகள், 27 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், பா.ம.க. சார்பில் 60 சதவீதம் குற்ற வழக்குகள், 40 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

    அ.தி.மு.க.வின் 34 வேட்பாளர்களில் 33 பேரும், பா.ஜ.க.வின் 23 வேட்பாளர்களில் 22 பேரும், தி.மு.க.வின் 22 வேட்பாளர்களில் 21 பேரும், நாம் தமிழர் கட்சியின் 39 வேட்பாளர்களில் 15 பேரும், காங்கிரஸ் கட்சியின் 9 பேரில் 8 பேரும், தே.மு.தி.க.வின் 5 பேரில் 3 பேரும், சுயேச்சைகள் 606 பேரில் 62 பேரும் கோடீஸ்வரர்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். இவர்களில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் ரூ.662.47 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ரூ.304.92 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். வேலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ரூ.152.77 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    சுயேட்சை வேட்பாளர்கள் 606 பேரில் 62 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். வடசென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் ரூ.13.15 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

    சுயேட்சைகளில் 10 வேட்பாளர்கள் தங்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே சொத்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு எந்த சொத்தும் இல்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர். குறைவான சொத்து உள்ளதாக 3 சுயேச்சைகள் தெரிவித்து உள்ளனர்.

    42 சதவீத வேட்பாளர்கள் 5 முதல்12-ம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 48 சதவீதம் பட்டதாரிகளாகவும் உள்ளனர். மேலும், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் 325 பேர், அதா வது 34 சதவீதமும், 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 487 பேர், அதாவது 52 சதவீதமும் உள்ளனர். 130 பேர் 61 முதல் 80 வயதுக்குள் உள்ளனர். 945 வேட்பாளர்களில் 8 சதவீதம் அதாவது 77 பேர் பெண் வேட்பாளர்கள்.

    • மக்களவை தேர்தலை முன்னிட்டு 9 பேர் கொண்ட 10-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
    • இதில் பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகரும் அடங்குவார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் 10-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 8 புதிய வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேற்கு வங்காளத்தின் அசன்சால் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிடுகிறார்.

    சண்டிகர் தொகுதியில் சஞ்சய் சிங் போட்டியிடுகிறார்.

    உத்தர பிரதேசம் காஜிபூர் தொகுதியில் பரஸ்நாத் ராய், மெய்ன்புரி தொகுதியில் ஜெய்வீர் சிங், கவுஷம்பி தொகுதியில் வினோத் சோன்கர், பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகர் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.

    நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் சட்டமன்ற தொகுதியில் மூத்த தலைவரான பிரபாகர் சவுத்ரிக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த மர சாமான்கள் பிளக்ஸ் பேனர்கள் துண்டு பிரசுரங்களை ரோட்டில் எடுத்து வந்து கொட்டி தீயிட்டு எரித்தனர். மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    படேறு தொகுதியில் சீட் கிடைக்காததால் பிரசாத் என்பவர் அவரது வீட்டில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் போட்டோக்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை சாலையில் போட்டு எரித்தார்.

    விஜயநகரம் மாவட்டம் நெல்லிமரலா பங்கர்ராஜுக்கு சீட்டு வழங்காததால் அவர் சுயேசையாக போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

    இதேபோல் 8 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் செய்தனர்.

    தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    ×