search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chandrasekhara rao"

    • கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
    • 2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தெலுங்கானா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. ஐதராபாத், வாரங்கல், கம்மம் உள்ளிட்ட 14 பெரிய நகரங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன.

    2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3 கோடியே 51 லட்சத்து 93 ஆயிரத்து 978 ஆக உள்ளது. 119 சட்டமன்ற தொகுதிகள் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் பயணித்த கே.சந்திரசேகர ராவ் 2001-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை தொடங்கினார். அவரது முன்னிலையில் எடுக்கப்பட்ட போராட்டங்களால் தெலுங்கானா மாநிலம் உருவானது. இதனால் அசைக்க முடியாத தலைவராக சந்திரசேகர ராவ் உருவானார்.

    தொடர்ச்சியாக 2 முறை தேர்தலில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

    சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 39 இடங்களிலும் பா.ஜ.க-8 இடங்களிலும் வென்றது. தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 13-ந் தேதி ஒரே கட்டமாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 - ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி-9 இடங்களிலும் பாஜக- 4, காங்கிரஸ் -3, இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தெலுங்கானாவில் போட்டியில் இருந்து விலகின.

    2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.

    தென்னிந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவற்றை விட தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. கூடுதல் கவனம் செலுத்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் டார்கெட் 75 இலக்குடன் களமிறங்கிய பா.ஜ.க., இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் இலக்குடன் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளது.

    பெண்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து முதன் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

    கட்சிக்கு புதியவரான ரேவந்த் ரெட்டி பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்வதன் மூலம் கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இருந்து ஓட்டம், வேட்பாளர்கள் பின்னடைவு, ஜெயிலில் மகள் என பல்வேறு சிக்கலில் உள்ள சந்திரசேகர ராவ் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க தீவிரமாக செயல்பட்டுகிறார்.

    சந்திரசேகர ராவ் மற்றும் அவருடைய மகன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானாவில் மண்ணின் மைந்தர் என்ற கோஷத்துடன் புறப்பட்ட பி. ஆர்.எஸ்.கட்சி இந்த தேர்தலில் ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெலுங்கா னாவை பொருத்தவரை காங்கிர சுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    • பொடுகண்டி ராமு தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார்.
    • தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி உள்ளது.

    இந்த கட்சியில் மூத்த தலைவரும் கர்னூல் நகர்ப்புற தொகுதி எம்.பி.யுமான பொடுகண்டி ராமு நேற்று சந்திரசேகர ராவ் கட்சியில் இருந்து விலகினார். அவர் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார்.பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து அந்த கட்சியில் சேர்ந்தார்.

    இது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திரசேகரராவ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பது பி.ஆர்.எஸ். கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

    • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
    • சட்டசபை அலுவலகத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மல்காஜ்கிரி எம்.எல்.ஏ மைனம்பள்ளி அனுமந்த ராவ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெமுல வீரேஷம், குப்பம் அணில் குமார் ரெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இதேபோல் ஜி.எச். எம்.சி முன்னாள் மேயர் போந்து ராம் மோகன், விஹாராபாத் மாவட்ட தலைவர் சுனிதா ரெட்டி, ஸ்ரீதேவி, பி.ஆர்.எஸ் தலைவர் சந்திர சேகர் ரெட்டி, பிரபல திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் மாமனார் ஆகியோர் தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

    பின்னர் ஐதராபாத்தில் உள்ள சட்டசபை அலுவலகத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார்.
    • சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • சீலாப்பூர் கிராமத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிவிட்டு பணம் வழங்கியுள்ளனர்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    தெலுங்கானா மாநில தேர்தலையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

    விகாராபாத் மாவட்டத்தில் சீலாப்பூர் கிராமத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிவிட்டு பணம் வழங்கியுள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிரமுகர் ஒருவர் ரூ.500 நோட்டுகளை வைத்துக்கொண்டு கார் சின்னத்துக்கு சத்தியமாக ஓட்டு போடுவோம் என பெண் வாக்காளர்களை கூறவைத்து பணம் வினியோகம் செய்துள்ளார்.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
    • கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

    தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா இன்று காலை ஐதராபாத் பஞ்சாரா ஹில்சில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் வாக்களித்தார்.

    வாக்களித்து விட்டு வந்த பின்னர் பேட்டி அளித்த கவிதா பி.ஆர்.எஸ். கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

    • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
    • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

    பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

    இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

    ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

    அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

    வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    • ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது.
    • தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

    தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

    ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    • ‘தலித் பந்து’ திட்டம் கடைசி பட்டியலின மக்களுக்கு போய்ச்சேரும் வரை எங்கள் கட்சி அரசு பாடுபடும்.
    • அம்பேத்கர், பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றின் மீது மற்றொன்று கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

    சென்னுாரில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தெலுங்கானா தேர்தலில் நீங்கள் உங்கள் ஓட்டுரிமையை செலுத்துவதற்கு முன்பாக அரசியல் கட்சிகளின் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் பாருங்கள்.

    அதன்பின்னர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் நம்மை ஆள்வது என்பதை முடிவு செய்யுங்கள்.

    பிற கட்சிகள் பட்டியலின மக்களை ஓட்டு வங்கியாகத் தான் பயன்படுத்துகின்றன. 'தலித் பந்து' திட்டம் கடைசி பட்டியலின மக்களுக்கு போய்ச்சேரும் வரை எங்கள் கட்சி அரசு பாடுபடும்.

    தலித் பந்து என்பது பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். அதன்படி தகுதிவாய்ந்த பட்டியலின வகுப்பினர் தொழில் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் மானியமாக தரப்படுகிறது.

    அம்பேத்கரை தோற்கடித்தார்கள்.

    அம்பேத்கர், பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

    தேர்தலில் அவரைத் தோற்கடித்தது, காங்கிரஸ் கட்சிதான். பாராளுமன்ற தேர்தலில் அம்பேத்கரைத் தோற்கடித்தது யார்? என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் அவரைத் தோற்கடித்தது மட்டுமல்ல அவரது சித்தாந்தத்தை அமல்படுத்தியதும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
    • சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முறை கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சந்திரசேகரராவை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். எனவே சந்திரசேகரராவுக்கு எதிராக நான் காமரெட்டியில் போட்டியிட வேண்டும் என விரும்புவதில் தவறில்லை.

    எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் அல்ல என்றாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வியூக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகர ராவ் போட்டியிடும் தொகுதியில் முதிராஜ் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் நடிகை விஜயசாந்தியை களமிறக்கவதற்கான கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும்.
    • ரூ.400 விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 30-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சித் தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மீதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை மாநில அரசு செலுத்திவிடும்.

    'ஆரோக்கிய ஸ்ரீ' திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்.

    சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக அதிகரிக்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.4 ஆயிரத்து 16-ல் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்து 16 ஆக உயர்த்தப்படும்.

    விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    நிச்சயமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தனிநபர் வருமானம், மின்சார பயன்பாடு ஆகியவற்றில் தெலுங்கானா முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    • எங்கள் அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.
    • பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.

    தெலுங்கானா அரசு சார்பில் ஐதராபாத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிலேயே உயரமான 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது.

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

    இதுகுறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது:-

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி சந்திரசேகர ராவ் பேசினார்.

    ஆனால் ஒரு பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.

    எனக்கு அழைப்பிதழ் கிடைத்திருந்தால், எங்கள் மாண்புமிகு அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.

    அவர் நமது அரசியலமைப்பின் தந்தை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்காகவும், பெண்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் அவர் தனது வார்த்தைகளை முன்வைத்துள்ளார்.

    நேற்றைய தினம் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்றார்.

    ×