என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்றத் தேர்தல்"

    • திரிணாமுல் குண்டர்களால் தொழில்முனைவோர் இங்கு வருவதில்லை.
    • வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகள் கூட பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை.

    தமிழ்நாட்டை போல மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது.

    இந்த சூழலில் பிரதமர் மோடி அங்கு பயணம் செய்துள்ளார். துர்காபூரில் அரசு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இதில் மேற்கு வங்க ஆளுநரும் பங்கேற்றார்.

    இதன்பின் துர்காபூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆளும் திரிணாமுல் அரசையே அவர் கடுமையாக சாடினார்.

    மோடி பேசியதாவது, "முர்ஷிதாபாத் (கலவரம்) போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, காவல்துறையினர் பாரபட்சம் காட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

    திரிணாமுல் குண்டர்களால் தொழில்முனைவோர் இங்கு வருவதில்லை. திரிணாமுல் அகற்றப்பட வேண்டும். சிண்டிகேட் ஆட்சியைக் கண்டு முதலீட்டாளர்கள் தப்பி ஓடுகிறார்கள். திரிணாமுல் காலத்தில் தொடக்கக் கல்வி, உயர்கல்வி அனைத்தும் படுகுழியில் சென்று கொண்டிருக்கின்றன.

    பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காளம் நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக மாறும். இது எனது நம்பிக்கை. ஆனால் திரிணாமுல், வங்காளத்தில் தொழில்மயமாக மாற்ற அனுமதிக்கவில்லை. எனவே, திரிணாமுல் வங்காளத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், "வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அப்போதும் கூட, திரிணாமுல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. அதன் பிறகு, மற்றொரு (சட்ட) கல்லூரியில் ஒரு பெண் சித்திரவதை செய்யப்பட்டார். அதில் திரிணாமுல் (பிரமுகர்கள்) ஈடுபட்டிருப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறினார்.

    மேலும்"ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளனர்.
    • அடுத்த விசாரணை ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது.

    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் பீகார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் விளைவாக, 35 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் ஆய்வின்படி, சுமார் 12.5 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்திருந்தும், அவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளன. 17.5 லட்சம் வாக்காளர்கள் பீகாரை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டனர்.

    5.5 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்துள்ளனர். நேபாளம், வங்கதேசம்மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளனர்.

    வாக்காளர்கள் தங்கள் படிவங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் ஜூலை 25 வரை கால அவகாசம் தந்துள்ளது.

    இந்தத் திருத்தப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த வாக்காளர் நீக்கம் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

    குறைந்த அளவிலான நீக்கம்கூட ஒரு தொகுதிக்கு ஆயிரக்கணக்கான வாக்காளர்களைப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    வாக்காளர் தகுதியைச் சரிபார்க்க ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அடுத்த விசாரணை ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது.

    இந்த நடவடிக்கையானது பீகாரின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது.
    • தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரெங்கசாமி பேட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் மட்டுமே மாற்று கட்சியில் இணைந்துள்ளார்.

    மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் தற்போது வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது.
    • தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

    தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

    ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்

    தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.

    இதையடுத்து வருகின்ற 3-ந் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.

    இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறியுள்ளன.

    காங்கிரஸ் கட்சி 60 முதல் 79 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    அங்கே உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் மெஜாரிட்டி பெற வெற்றி பெற வேண்டும்.

    தெலுங்கானா தேர்தல் தங்களுக்கு சாதகமாகாமல் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதி ஒன்றில் வைத்து பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    பெங்களூருவில் நவீன வசதிகள் கொண்ட சொகுசு விடுதியை தயார் செய்து வைத்துள்ளதாம்.

    தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், தெலுங்கானா பகுதியில் இருந்து வெற்றி பெறும் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திர சேகர ராவ் கட்சிக்கு தாவுவதை தடுக்கவும், குதிரை பேரத்துக்கான முயற்சிகளையும் முறியடிக்கவும் காங்கிரஸ் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 43 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
    • இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

    அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.

    சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

     அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டன.ஏற்கனவே அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

    இதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த 50 தொகுதிகளில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 10 மணி நிலவரப்படி ஓட்டுக்கள் எண்ணப்பட்ட 50 தொகுதி களில் 35 தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். மதியம் 1 மணிக்கு அவர்கள் வெற்றி முகத்துடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல மேலும் 3 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 44 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு பாரதீய ஜனதா சென்று இருக்கிறது. அதே சமயத்தில் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட வெற்றி கிடைக்கவில்லை. 19 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில் சிலர் மோசமான நிலையில் தோல்வியை தழுவினார்கள்.

    அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில் அந்த கட்சி தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். அருணாசல பிரதேசத்தின் முக்கிய சாலைகளில் இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

    முதல்-மந்திரி பெமா காண்டுவை அந்த கட்சி தொண்டர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். அவர் 3-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், 41 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26 இடங்களை வென்றுள்ளது.
    • சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

    அருணாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.

    சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

    அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்கு கள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்கு டன் வெளியிடப்பட்டன.

    சிக்கிமில் ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26 இடங்களை வென்றுள்ளது. மேலும் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இதன்மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய முதலவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலைவராகிறார். இதைத்தொடர்ந்து எஸ்.கே.எம் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடாத தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு மாநில கட்சியான சிக்கிம் ஜன்னநாயக முன்னணி கட்சி 1 இடத்தில வென்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் 1 இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது . மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், கூட்டணி காட்சிகளான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    ஒய்.எஸ்.ஆர் கட்சியினரே இந்த கொலையை செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கொலைக்கு கண்டம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும், கௌரிநாத் கொலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முனவித்துள்ளனர். மேலும் 'தேர்தலில் தோற்ற பிறகும் ஜெகன் ரத்த சரித்திரத்தை எழுதி வருகிறார், இந்த அரசியல் கொலைகளை ஜெகன் நிறுத்த வில்லை என்றால் விளைவு விபரீதமாக இருக்கும்' என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியினர் நாரா லோகேஷ் படத்திற்கு முன் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொல்லி துன்புறுத்தும் வீடியோவை பகிர்ந்து, தலித்துகளின் உயிருக்கு தெலுங்கு தேசம் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலைவராக பதவியேற்க உள்ளது குறிபிடித்தக்கது. 

    • ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.
    • சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார்.

    ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.

    விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா, தமிழக பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா,மகாராஷ்டிரா முதலவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஏனைய அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    முதலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார். பவன் கல்யாணும் அவரது அண்ணன் சிரஞ்சீவியும் மோடியை மேடைக்கு நடுவே அழைத்து வந்து கைகளைக் கோர்த்து உயர்த்திக்காட்டினர்.

    அவர்கள் இருவருடனும் மோடி குதூகலமாக உரையாடினார். அப்போது ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் மேடைக்கு வரவே சந்திரபாபு நாயுடு மோடியை அவர்களிடம் அழைத்துச்சென்றார். ரஜினிகாந்த்துடன் கை குலுக்கிய மோடி, லதா ரஜினிகாந்திடம் நலம் விசாரித்தார். பின்னர் அருகில் நின்றிருந்த பாலகிருஷ்ணா, தமிழிசை ஆகியோருக்கு உற்சாகமாக வணக்கம் வைத்தார். பிரபலங்கள் பலர் ஓரே மேடையில் நிறைந்திருந்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

    • பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
    • முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. 24 வருடமாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை பாஜகவும் 51 இடங்களை பிஜு ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர்த்து 3 சுயேட்ச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த முறை பதிவியேற்பவர்களில் 82 பேர் முதல் முறையாக எம்.எல்.ஏக்களாக பதியேற்பவர்கள் ஆவர்.

    சட்டமன்றத் தேர்தலில் கன்டாபாஞ்சி மற்றும் கின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கின்ஜிலியில் வெற்றி பெற்ற நிலையில் கன்டாபாஞ்சில் பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பக் என்பவரிடம் 16,334 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

    அதாவது, நவீன் பட்நாயக் கின்ஜிலியின் எம்.எல்.ஏ வாக மேடையில் பதிவேற்றபின் இறங்கி நடந்து வரும்போது கன்டாபாஞ்சில் அவரை தோற்கடித்து முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    உடனே பட்நாயக் ' ஓ நீங்கள் தான் என்னை தோற்கடித்தீர்கள்' என்று கூறியபடி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' படத்தில் பழம்பெரும் அரசியல்வாதியாக இருக்கும் பாரதிராஜாவும் முதல்முறையாக சட்டமன்றத்துக்கு வரும் சூர்யாவும் கிளைமாக்சில் சந்தித்து பேசும் காட்சியை தற்போது ஒடிசா சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் பிரதி செய்வதாக அமைத்துள்ளது என நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். முன்னதாக நவீன் பட்நாயக் பதியேற்க சட்டமன்றத்துக்குள் வரும்போது பாஜகவினர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
    • அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.

    அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.

     

    இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



     


    • மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது.
    • எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது

    ஜம்மு காஷீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து  ஜம்மு காஷ்மீர் பகுதிகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக கடந்த 2019 ஆம் ஆண்டு கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பிரித்தது. இதற்காக பிரத்தேயகமாக ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது.

    இந்நிலையில் வரும் செப்டெம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது  சர்ச்சையாகியுள்ளது.

     

     

    இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக உள்ள மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரங்கள்  வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலத்தின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் நீதித்துறை, காவல்துறை, அதிகாரிகளை நியமித்தல் மற்றும் இடம்மாற்றுதல் உள்ளிட்டவற்றில் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள்ளன.

    இந்த துறைகளில் அதிகாரிகளை நியமிப்பதற்கு ஆளுநரின் ஒப்புதல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அதிகாரிங்கள் ஜூலை 12 முதல் நடைப்முறைக்கு வந்துள்ளன.  

    ×