search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YSR Congress"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவு மதுபான கடையில் வேலை முடிந்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
    • ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல் நாடு மாவட்டம், விணு கொண்டாவை சேர்ந்தவர் ஷேக் ரஷீத் (வயது 25). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இளைஞரணி நிர்வாகி.

    இவர் முண்டலா முரு பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    கடந்த தேர்தலுக்கு முன்பு இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தேர்தலின் போது ஷேக் ரஷீத், ஷேக் ஜிலானி வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை தீ வைத்து எரித்தார்.

    இதனால் ஷேக் ரஷீத் மீது ஜிலானிக்கு கடும் ஆத்திரம் உண்டானது.

    நேற்று இரவு மதுபான கடையில் வேலை முடிந்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

    அங்கு வந்த ஷேக் ஜிலானி தான் வைத்திருந்த கத்தியால் ரஷீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கை துண்டாகி விழுந்தது. ரஷீத் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார்.

    அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டும் பார்த்தனர். ஒருவரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜிலானி அங்கிருந்து தப்பி சென்றார்.

    அருகில் இருந்தவர்கள் ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ரஷீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் ஜிலானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஷேக் ரஷீத் வெட்டி கொல்லப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இது பார்ப்பவர்களை பதற வைக்கும் வகையில் உள்ளது.

    • அன்னமய்யா மாவட்டத்தில் ஹரிதா ரெட்டி உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • வைரலான வீடியோவில், காரின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஹரிதா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி பல கேள்விகளை கேட்கிறார்.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டுள்ளார். துணை முதல்வராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி என்பவர் அமைச்சராக உள்ளார். இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில், அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி ஹரிதா ரெட்டி, ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தன்னைக் காத்திருக்க வைத்ததற்காக ரமேஷ் என்ற சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அன்னமய்யா மாவட்டத்தில் ஹரிதா ரெட்டி உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலான வீடியோவில், காரின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஹரிதா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி பல கேள்விகளை கேட்கிறார்.

    அப்போது... "இன்னும் காலை ஆகவில்லையா? என்ன கான்பரன்ஸ்? கல்யாணத்துக்கு வந்திருக்கியா, ட்யூட்டிக்கு வந்திருக்கியா? உங்களுக்காக அரைமணிநேரம் காத்திருந்தேன். உனக்கு சம்பளம் யார் தருவது? அரசாங்கமா அல்லது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியா?" என்று கடுமையான வார்த்தைகளால் வசப்பாடியுள்ளார்.

    வீடியோவின் முடிவில், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதா ரெட்டிக்கு சல்யூட் அடித்து, அவரது வாகனத்துக்கு வழி ஏற்படுத்தி தர முன்னோக்கி செல்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் "அமைச்சரின் மனைவிக்கும் ராஜ மரியாதை வேண்டுமாம். அமைச்சர் மண்டபள்ளி ராம்பிரசாத் ரெட்டின் மனைவி ராயச்சோட காவல் நிலையத்தை சேர்ந்தவர்களை தனக்கு துணையாக வரும்படி கூறினார். போலீசாரை அடிமைபோல் எச்சரிக்கை செய்துள்ளார். பயமடைந்த போலீஸ் ஆதரவற்ற நிலையில் அவருக்கு சல்யூட் அடித்தார்'' என தெரிவித்துள்ளது.

    • ஆந்திரா முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    • போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. கடந்த 5 ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தார்.

    அப்போது அவரது தந்தை ராஜசேகர ரெட்டிக்கு ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சிலைகளை நிறுவினார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது முதல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பாப்பரட்டலா மாவட்டம் அட்டை பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் சிலை முழுவதும் எரிந்து கருகியது.

    இதனைக் கண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினர் சிலைக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    இதனால் ஆந்திரா முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை இடிக்க மீண்டும் நோட்டீஸ்
    • மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்துவிட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், தாடேபள்ளியில் அரசு அனுமதி யின்றி கட்டப்பட்டு வருவதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நேற்று அதிகாலை அதிகாரிகள் இடித்து தரை மட்டமாக்கினர்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சிறிது நேரத்தில் விசாகப்பட்டினம் அடுத்த பெண்டாடா பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதாக ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கு விசாகப்பட்டினம் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    நோட்டீசில் விசாகப்பட்டினம் மாநகராட்சி பெருநகர குழும ஆணையத்தின் அனுமதியின்றி கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி அலுவலகம் இடிக்கப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், `புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.

    மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்து விட்டது. இதற்காக உயர் சார் காங்கிரஸ் கட்சி தலை வணங்காது. எதிர்த்து போராடும் இந்த மிரட்டல் வன்முறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்த தவறான செயல்களை கண்டிக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் படகு இல்லம் இடித்து தள்ளப்பட்டது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தாடே பள்ளி அடுத்த சீதா நகரத்தில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான படகு இல்லம் உள்ளது.

    கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் படகு இல்லம் இடித்து தள்ளப்பட்டது. இடிக்கப்பட்ட படகு இல்லத்தை குறைந்த குத்தகை வாடகைக்கு எடுத்து அங்கு பிரம்மாண்ட முறையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டுமான பணிக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். கட்சி அலுவலகத்தை இடிக்க கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இருப்பினும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இடித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திரண்டு வந்தனர்.

    அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் அடைத்தனர். அதிகாலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    • தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
    • ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது.

    உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.

    மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் EVM முறைக்கு எதிராக எலான் மஸ்க்கின் கருத்தைப் பகிர்ந்தனர்.

    இந்நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி EVM விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது நிறவேற்றப்படுவதுடன் மட்டுமிடின்றி அந்த தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே ஜனநாய நாடு என்று கூறுவதை விட அங்கு ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது. நாமும் ஜனநாயகத்தைக் காப்பற்ற அந்த திசையை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  

    • மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது . மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், கூட்டணி காட்சிகளான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    ஒய்.எஸ்.ஆர் கட்சியினரே இந்த கொலையை செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கொலைக்கு கண்டம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும், கௌரிநாத் கொலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முனவித்துள்ளனர். மேலும் 'தேர்தலில் தோற்ற பிறகும் ஜெகன் ரத்த சரித்திரத்தை எழுதி வருகிறார், இந்த அரசியல் கொலைகளை ஜெகன் நிறுத்த வில்லை என்றால் விளைவு விபரீதமாக இருக்கும்' என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியினர் நாரா லோகேஷ் படத்திற்கு முன் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொல்லி துன்புறுத்தும் வீடியோவை பகிர்ந்து, தலித்துகளின் உயிருக்கு தெலுங்கு தேசம் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலைவராக பதவியேற்க உள்ளது குறிபிடித்தக்கது. 

    • ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
    • மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.

    ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.

    அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

    • ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.
    • பவன் கல்யாணை ஆதரித்வர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி 100 முதல் 120 இடங்களில் வெற்றி பெறுவார் என புரோக்கர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பந்தயம் கட்டினர்.

    இதற்கு ஒரு ரூபாய் கட்டினால் 20 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருந்தனர்.

    50 முதல் 60 இடங்களை பெறுவார் எனவும் 68 முதல் 78 இடங்கள் வருவார் என மொத்தம் ரூ. 2 ஆயிரம் கோடியை தாண்டி பந்தயம் சென்றது. ஆனால் பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி தோல்வி குறித்து யாரும் பந்தயம் கட்ட வில்லை.

    இதேபோல் பிதாபுரத்தில் பவன் கல்யாண் வெற்றி பெறுவார் எனவும் தோல்வி அடைவார் எனவும் ரூ. 200 கோடிக்கு மேல் பந்தயம் கட்டினா். பவன் கல்யாணை ஆதரித்து பணம் கட்டியவர்கள் கோடிக்கணக்கில் பணங்களை அள்ளிச் சென்றனர்.

    ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நம்பி பணம் கட்டியவர்கள் ரூ. 2 ஆயிரம் கோடி வரை பணத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    • நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
    • பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

    தேர்தல் நாள் அன்று ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேச கூட்டணியில் உள்ள ஜனசேனா, பா.ஜ.க கட்சியினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

    தேர்தல் முடிந்த பின்னரும் பல்நாடு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.

    அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதில் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வன்முறையை தடுக்க தேர்தல் ஆணையம் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.

    இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வன்முறை ஏற்படும் இடங்களில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • ஆந்திராவில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளது.
    • கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்கு பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக 81.86 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்காளர்க ளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    அதில் அனைத்து முதியோர்கள், சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள், சிறுபான்மையின சகோதரர்கள், குறிப்பாக கோடை வெயிலைத் தாங்கிக்கொண்டு பெருமளவில் வந்து வாக்களித்த இளைஞர்களுக்கு நன்றி.

    கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன்.

    இன்று வரை காணப்படும் நல்லாட்சியும் திறமையான நிர்வாகமும் மேலும் மேம்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

    ஆந்திராவில் அதிகபட்ச மாக வாக்குகள் பதிவாகியுள்ளது சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் நல்லாட்சி நிர்வாகம் மேம்படுத்தப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பது அவரது கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே கடுமயான மோதல் வெடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (மே 13) நடந்தது. வாக்குபதிவின்போது ஒரு சில இடங்களில் பிரதான கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகும் இன்று (மே 15) மதியம் திருப்பதி மாவட்டத்தில், சந்திரகிரி தோகுதி தெலுங்கு தேச கூட்டணி வேட்பாளர் புலிவர்த்தி நாணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு பத்மாவதி பலக்லைக்கழகத்தில் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டு திரும்பும்போது நாணி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் நாணி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தெலுங்குதேசம் கட்சியினர் கூறுகையில், சுமார் 150 பேர் கத்தி, மற்றும் தடிகளுடன் வந்து தங்களை சரமாரியாக தாக்கியதாக தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் ஓஎஸ் ஆர் கட்சியினர் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர்கள் விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஓஎஸ்ஆர் கொடிகளுடன் காணப்பட்ட வாகனங்களை தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து உடைத்தனர். இதனால் பத்மாவதி பல்கலைக்கழக வளாகத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    ×