என் மலர்
நீங்கள் தேடியது "Pawan Kalyan"
- உலகளாவிய கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டு இருக்கிறது.
- இந்தப் படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் வெளியானது. கி.பி 16 ஆம் நூற்றாண்டின் முகலாயர்கள் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட உணர்வுப்பூரமான இந்த தத்துவப்பாடல் அனைத்து வயதினரும் ஏற்றுக்கொள்ளூம்படி உலகளாவிய கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டு இருக்கிறது.
மெகா சூர்யா புரொடக்ஷன் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளனர். இந்தப் படம், முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதை.
தமிழில் இந்தப் பாடலை பாடலாசிரியர் பா.விஜய் எழுதியுள்ளார். பாடலின் தீம் மற்றும் அது சொல்ல வரும் கருத்தினால் வெகுவாக ஈர்க்கப்பட்ட நடிகர் பவன் கல்யாண், தனது சொந்தக்குரலிலேயே தெலுங்கு பதிப்பில் பாடியுள்ளார். மேலும் மற்ற மொழிகளிலும் கூட இவரது குரலே, மேம்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பவன் கல்யாணின் குரலில் உள்ள தனித்தன்மையானது, உலகளாவிய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் இசையால் இந்தப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது. இந்தப் பாடல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.-இன் தத்துவப்பாடல்களை நினைவூட்டும்.
இந்தப் படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.
தெலுங்கு திரையிலகின் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். சினிமாவிலிருந்து அரசியலில் களம் கண்ட பவன் கல்யாண் தற்போது ஆந்திர மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
துணை முதல்வராக இருந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் பவன் கல்யாண் நடித்து வருகிறார். அவ்வகையில் ஹரி ஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் க்ரிஷ் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , மலையாளம் என ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான கேட்கணும் குருவே பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது. வரும் 17 ஆம் தேதி முழு பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலின் தமிழ் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார்.
Beginning the Musical Storm ??#HariHaraVeeraMallu 1st Single Promo Out Now ?#MaataVinaali (Telugu) - https://t.co/5NxrZP2tJtSung by the one and only, POWERSTAR ? @PawanKalyan garu ??A @mmkeeravaani Musical ?Lyrics by ? #PenchalDasFull song out on 17th Jan at… pic.twitter.com/cQSf7VAsAz
— AM Rathnam (@AMRathnamOfl) January 14, 2025
- இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
- அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "துபாய் 24H பந்தயத்தில் 991 பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து GT4 பிரிவில் "ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்" விருதை வென்ற திரு. அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.!"
"பெரிய உறுதியுடன் சவால்களை சமாளித்து உலக அரங்கில் பாரத கொடியை உயரப் பறக்கவிட்டது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் இன்னும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்! ஜெய்ஹிந்த்," என குறிப்பிட்டுள்ளார்.
Heartfelt Congratulations to Thiru Ajith Kumar Avl, and the Ajith Kumar Racing Team @Akracingoffl , for securing 3rd place in the 991 category and winning the "Spirit of the Race" award in the GT4 category at the Dubai 24H race! Overcoming the challenges with such great… pic.twitter.com/3eJBLQ42RD
— Deputy CMO, Andhra Pradesh (@APDeputyCMO) January 13, 2025
- துணை முதல்வர் பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்டு.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, தலைமை பாதுகாப்பு விஜிலென்ஸ் அதிகாரி ஸ்ரீதர், ஜே.இ.ஓ கவுதமி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் 6 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தற்காலிக வேலை வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
மேலும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர், " சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதன் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகோளாக விடுக்கிறேன்" என்றார்.
- இந்த விவாகரத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.
- லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா?
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் நேற்று விநியோகம் செய்யப்பட்டது.
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வருவாய்த்துறை மந்திரி அங்கனி சத்ய பிரசாத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, "புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்த விவாகரத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து பவன் கல்யாண் ராஜினாமா செய்வாரா?
பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
సనాతన యోధుడు ఎక్కడ ఉన్నాడు. నువ్వు నిజమైన సనాతన యోధుడివి అయితే తప్పు చేసిన వారిని శిక్షించు. - రోజా pic.twitter.com/FLtdJ4J0qq
— ?????? ??? ????? (@YSJ2024) January 9, 2025
- இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.
- பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று நடந்த விழாவில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது " நான் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது மிகவும் குறைவு. நான் சென்னையில் இருக்கும்பொழுது நான் ஷங்கர் இயக்கத்தில் வெளியன ஜென்டில் மேன் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் வாங்கி பார்த்தேன். காதலன் திரைப்படத்தை என்னுடைய பாட்டியுடன் சென்று பார்த்தேன்." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
- ஜனவரி 10 ஆம் தேதி கேம் சேஞ்சர் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் 4வது சிங்கிளான 'தொப் {Dhop}' கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ரசிகர்கள் ராம் சரணுக்கு 256 அடிக்கு கட் அவுட் வைத்தனர்.
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சில நாட்களில் நடைப்பெறவுள்ள நிலையில் தயாரிப்பாளரான தில்ராஜு ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாணை நேரில் சந்தித்து இந்நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள்.
- ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை.
"புஷ்பா 2" படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜுன் தியேட்டரில் சென்று பார்க்கும்போது கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த நிலையில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்தார்.
வெளியில் வந்த அவர் பல பிரபலங்ககள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை யாரும் சென்று பார்க்கவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை யாரும் சென்று பார்க்கவில்லை. ஆனால் தெலுங்கானா திரையுலகம் அல்லு அர்ஜுன் பக்கம் நிற்கிறது என தெலுங்கான மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில்தான் அல்லு அர்ஜூன் விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பவன் கல்யாண் பதில் கூறியதாவது:-
சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள். எனினும், தியேட்டர் ஊழியர்கள் அங்கிருந்த சூழ்நிலை குறித்து முன்னதாகவே அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் இருக்கையில் அமர்ந்ததும், நெரிசலை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை முன்னதாகவே அல்லு அர்ஜுன் சந்தித்திருக்க வேண்டும். அப்படி சந்தித்திருந்தால் டென்சன் எளிதாகியிருக்கும்.
ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை. அவர் சிறப்பு காட்சிகளை அனுமதித்ததுடன், டிக்கெட் விலையையும் ஏற்றினார். இருப்பினும் இந்த விஷயத்தில், அல்லு அர்ஜுன் விசயத்தில் திரைக்கு முன்னோ அல்லது பின்னோ என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது.
ஒரு முதல்வராக என்னுடைய பொறுப்பு சட்டத்தை நிலை நாட்டுவதுதான். எனக்கு எந்த தனிப்பட்ட விருப்பங்களும் இல்லை.
எனது சகோதரர் சிரஞ்சீவி படம் பார்க்க செல்லும்போது இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு மாஸ்க் அணிந்து செல்வார்.
இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.
- திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்தார் .
- ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க, மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்த நெய்யை பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.
லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதனிடையே திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பரிதாபங்கள் யூட்யூப் சேனலில் வெளியான காணொளிக்கு இந்துத்துவா ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வீடியோ பரிதாபங்கள் யூட்யூப் சானலில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த வீடியோ யூட்யூபில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி அறிவித்தார். பின்னர் பரிதாபங்கள் குழுவினர் பாஜகவிடம் மன்னிப்பு கேட்டபிறகு இந்த விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வந்தது.
அதே போல் மெய்யழகன் திரைப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது 'லட்டு என்பது சென்சிட்டிவான விஷயம்' என்று கார்த்தி பேசிய வீடியோ வைரலானது. இதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக கார்த்தி இந்த விவகாரம் தொடர்பான மன்னிப்பு கோரினார்.
திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திராவை தாண்டி தமிழ்நாட்டிலும் அந்த சமயத்தில் பல பரபரப்புகளை ஏற்படுத்தியது.
இதனிடையே திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதி மலைக்கு நடந்து சென்றார்.
பின்னர் குடும்பத்தினருடன் சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்து லட்டு பரிகார விரதத்தை பவன் கல்யாண் நிறைவு செய்தார்.
இதனை தொடர்ந்து லட்டுக்கு பரிகார பூஜைகளை செய்தார். அன்னதான கூடத்திற்கு சென்று அன்னதானம் தரமான பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
திருப்பதி பாதயாத்திரையின்போது படியேற முடியாமல் களைப்பில் பவன் கல்யாண் ஓய்வெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், திருப்பதி லட்டுவில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும்வகையில் ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இதனையடுத்து பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர்.
லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி சென்றனர்.
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்ததாக எழுந்த விவகாரம் அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளானாலும் மக்களிடையே பெரிதாய் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் அப்போதும் திருப்பதி லட்டுவை கடவுளின் பிரசாதம் என்று நினைத்தே வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் 2024 கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
- புரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் ஆகியவை அதிகம் தேடப்பட்டுள்ளன
ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த ஆண்டு டாப் 10 கூகுள் தேடல்கள் என்னென்ன என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2024 கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஐபிஎல், டி20 உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் 2024 ஆகியவற்றை விட 2024 ஆம் ஆண்டிற்கான ட்ரெண்டிங் தேடல்களாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில் , புரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் துலீப் டிராபி போன்ற உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்டுள்ளன.
கோபா அமெரிக்கா - யுஇஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவை இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட மற்ற விளையாட்டு நிகழ்வுகள் ஆகும்.
அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல், பல மாநிலத் தேர்தல்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற சொற்கள் அதிகம் தேடப்பட்டள்ளன.
2024-ல் அதிகம் தேடப்பட்ட நபர்களில், வினேஷ் போகத் , பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போன்ற அரசியல்வாதிகள் முன்னணியில் உள்ளனர்.
2024 இல் Google இல் அதிகம் தேடப்பட்ட முதல் 10:
1) இந்தியன் பிரீமியர் லீக்
2) டி20 உலகக் கோப்பை
3) பாரதிய ஜனதா கட்சி
4) தேர்தல் முடிவுகள் 2024
5) ஒலிம்பிக் 2024
6) அதிக வெப்பம்
7) ரத்தன் டாடா
8) இந்திய தேசிய காங்கிரஸ்
9) புரோ கபடி லீக்
10) இந்தியன் சூப்பர் லீக்
- பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார்.
- கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொலைபேசியில் பேசிய மர்ம நபர், பவன் கல்யாணை அவதூறாக பேசியும், எச்சரித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பவன் கல்யாண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக மல்லிகார்ஜுன ராவ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் அவ்வாறு பேசியதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
- ஜனசனா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
- ஆந்திர அமைச்சரவையில் ஒரு மந்திரி பதவி இடம் காலியாக உள்ளது.
திருப்பதி:
ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரா துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் சகோதரர் நாகு பாபு. இவர் ஜனசனா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
தனது சகோதரரை ஆந்திர அமைச்சரவையில் மந்திரியாக்க வேண்டும் என பவன் கல்யாண் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே ஆந்திர அமைச்சரவையில் ஒரு மந்திரி பதவி இடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள பதவியில் நாக பாபுவை மந்திரியாக்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.