என் மலர்
நீங்கள் தேடியது "pawan kalyan"
- ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
- தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும்.
திருமலை திருப்பதியில் லட்டு பிரசாதத்தில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை அம்மாநிலத்தில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த மாதம் 13 ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராக ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சியின் மூத்த தலைவர் சுப்பாரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுப்பாரெட்டி தேவஸ்தான தலைவராக இருந்தபோது தான் இந்த கலப்பட நெய் விவகாரம் நடந்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தாவியவர் ஆவார்.
இதற்கிடையே சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டதாக கொந்தளித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் மீது பழி சுமத்தினார்.
இந்நிலையில், சனாதன தர்ம பரிபாலன வாரியம் என்ற அமைப்பை நிறுவி, திருமலை உள்ளிட்ட கோயில்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முந்தைய திருமலை தேவஸ்தான வாரியத்தின் மிகப் பெரிய நிர்வாகத் தோல்வி மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
இந்த கசப்பான நம்பிக்கை துரோகம், தற்போதைய திருமலை தேவஸ்தான வாரியத்திற்கு ஒரு ஆழமான பாடமாக அமைய வேண்டும். திருமலையின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கவும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.
திருமலை தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் மற்றும் நடத்தும் வாரியம், அதிகாரிகள், செயல் அலுவலர், இணைச் செயல் அலுவலர் முதல் ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வரை அனைவருக்கும் கிடைத்துள்ளது வெறும் பதவி அல்ல, மாறாக கோடிக்கணக்கான சனாதனிகளுக்கு தெய்வீக சேவை செய்யக் கிடைத்த ஒரு புனிதமான வாய்ப்பு.
நிதிநிலை அறிக்கைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கைகள் முதல் சொத்து மற்றும் நன்கொடைகளை நிர்வகிப்பது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு விவரத்தையும் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சனாதன தர்ம பரிபாலன வாரியத்தை நிறுவுவது எதிர்காலத்திற்கான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், தர்மத்தைக் காக்க வேண்டிய மற்றும் அதற்காக நிற்க வேண்டியது ஒவ்வொரு சனாதனியின் பொறுப்பு. மேலும், என்றாவது ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள நமது அனைத்துக் கோயில்களும் நமது சமூகத்தால், அதாவது பக்தர்களால் நிர்வகிக்கப்படும் காலம் வரும் என்பதே எனது உண்மையான நம்பிக்கை. இது நமது கடமையாகும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முந்தைய தேவஸ்தான நிர்வாகம் குறித்து விமர்சித்த பவன் கல்யாணுக்கு, முந்தைய ஆட்சியாளரான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஆந்திர முன்னாள் அமைச்சர், நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரோஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பவன் கல்யாண் காரு, நீங்கள் புனிதத்தன்மை மற்றும் தர்மத்தைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும், அது உங்கள் ஒரு தலைப்பட்சமான அக்கறையை மட்டுமே அம்பலப்படுத்துகிறது.
திருமலையில் பக்தர்கள் இறந்தபோதோ அல்லது கடுமையான தோல்விகள் அமைப்பை உலுக்கியபோதோ நீங்கள் ஒருபோதும் வாய் திறக்கவில்லை. ஆனால், சந்திரபாபுவுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படும் தருணத்தில், நீங்கள் திடீரென்று உபதேசங்களைக் கொடுக்கத் தொடங்குகிறீர்கள். அது பக்தி அல்ல. அது அப்பட்டமான அரசியல் நாடகம்.
நீங்கள் நேர்மையைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் நேர்மை என்பது அசௌகரியமாக இருந்தாலும் உண்மைக்காக நிற்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதைச் செய்ததில்லை.
நீங்கள் எளிதான இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கம் இருப்பவர்கள் தவறு செய்யும்போது மௌனமாக இருக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் பிரசங்கங்கள் வெற்றுத்தனமாக உள்ளன.
தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும். உண்மையான கேள்வி என்னவென்றால், தேவைப்படும்போது அதற்காகப் போராடும் தைரியம் யாருக்கு இருக்கிறது என்பதில் தான் உண்மையான தர்மம் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த சோதனையில் தோல்வியடைந்துள்ளீர்கள்.
ஒரு வாரியமோ அல்லது குழுவோ திருமலையைச் சரிசெய்யாது. அர்ப்பணிப்பும் நேர்மையும் மட்டுமே சரிசெய்யும், மேலும் இவை இரண்டும் உங்கள் அரசியலில் இல்லை.
மற்றவர்களுக்குப் போதிக்கும் முன், முதலில் நீங்கள் நிலையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். திருமலைக்கு நேர்மை தேவை, பொய்யான சீற்றம் அல்ல." என்று தெரிவித்துள்ளார்.
பொழுது போக்கினையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட OnceMore.io எனும் செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தளம் - பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 'They Call Him OG' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தளம் உலக அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்ட 42 மணி நேரத்தில் 60 நாடுகளிலிருந்து ஒரு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களை அடைந்தது.
இந்த சாதனை- ஏற்கனவே அறிமுகமான ChatGPT, Instagram,TikTok, Spotify போன்ற உலகளாவிய பிரபலமான தளங்களை விட.. விரைவாக ஒரு மில்லியன் பயனர்களை எட்டி புதிய சாதனையை படைத்திருக்கிறது.
அத்துடன் மக்களால் அதிகளவில் விரும்பப்பட்ட சுயாதீன தளமாகவும் OnceMore.io புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இந்த தளம் குறித்தும் , இதன் சிறப்பம்சம் குறித்தும், 'OG' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் இயக்குநர் சுஜித் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் இந்த தளத்தின் பிரத்யேகமான உள்ளடக்கத்தை வெளியிடுவதற்காக ரசிகர்களையே 'சிறப்பு விருந்தினர்'களாக அழைப்பு விடுத்தார்.
இதற்கு ரசிகர்கள் முழு உற்சாகத்தில் பதிலளித்தனர். விளையாட்டுக்கள்- ஒவ்வொரு பயனர்களுக்கும் பிரத்யேக டிஜிட்டல் அட்டைகள் - தங்களின் உற்சாகத்தின் அனுபவ பகிர்வு - என' OG' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்குள் நுழைவதை அவர்கள் விரும்பினர்.
இதன் காரணமாக சில மணி நேரங்களுக்குள் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மீம்ஸ்கள்- ரசிகர்களின் ரியாக்ஷன்- ரசிகர்களின் எடிட் செய்யப்பட்ட வீடியோ- புகைப்படங்கள் - அவர்களின் பெயர் மற்றும் பிரத்யேக எண்ணுடன் கூடிய டிஜிட்டல் அட்டைகள் - ஆகியவற்றை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பெருமிதத்துடன் வெளிப்படுத்தினர்.
இதனால் ரசிகர்களின் டிஜிட்டல் அட்டைகளால் இந்த தளம் நிரம்பி வழிந்தது. அத்துடன் தங்களுடைய பெயர் மற்றும் டிஜிட்டல் எண்ணுடன் கூடிய புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்ஸாக இடம்பெறச் செய்து அதிர வைத்தனர்.
ரசிகர்கள் கூட்டாக கலந்துகொண்டு 'OG 'திரைப்பட கொண்டாட்டத்தின் பின்னணியை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தையும் தொடங்கினர். அத்துடன் இந்த நிகழ்வை உலகளாவிய திரைப்பட ரசிகர்களின் பங்களிப்புடன் கூடிய மிகப்பெரிய கொண்டாட்டமாகவும் மாற்றினர்.
OnceMore.io - ரசிகர்கள் திரைப்படத்தை பார்ப்பதுடன் மட்டுமல்லாமல் அதற்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் , அது தொடர்பாக அவர்கள் விரும்பும் கதைகள் மற்றும் உருவாக்கத்தை உடன் இணைத்துக் கொள்ளவும் இதுவரை இல்லாத வகையிலான புதிய பொழுதுபோக்கு சகாப்தத்தை இந்த தளம் உருவாக்கியுள்ளது.
ஏஐ ( AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட OnceMore.io எனும் இந்த தளம் - ஏ ஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் புதிய வகையிலான பொழுதுபோக்கினை உருவாக்கி வருகிறது.
இந்த தளம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை வழங்குவதற்காக மற்றுமொரு பான் இந்திய அளவிலான திரைப்படத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த சாதனை இந்தியாவிற்கு பெருமிதமான தருணமாக அமைந்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த புதுமை மற்றும் ரசிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படைப்பாற்றல் இவை இரண்டும் இந்தியாவில் இருந்து தான் வர இயலும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
- பிரதமர் மோடி ஸ்ரீசைலம் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார்.
- இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா மாநிலத்திற்கு வருகை தருகிறார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனையடுத்து, பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவில் மற்றும் கோவில்களில் பூஜை செய்து வழிபட்டார். அவருடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் பிரார்த்தனை செய்தேன். என் சக இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சாமி தரிசனம் செய்தது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலம், ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் நமது மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ததில் பாக்கியம் பெற்றேன். இந்த புனித கோயில் தனித்துவமானது, ஏனெனில் இது ஒரு ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே வளாகத்தில் ஒன்றாகக் காணப்படும் நாட்டின் ஒரே ஆலயமாகும், இது உண்மையிலேயே இந்தியாவில் தனித்துவமான ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.
- பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாண் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் ஓஜிதான்.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.
வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
இந்நிலையில் 'ஓஜி' படம் வருகிற 23ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
- சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் இப்படம் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.
வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
- முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
- வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் நேற்று (செப்டம்பர் 25) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ.167 கோடியை கடந்தது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருவதாக படத்தின் கதை நகர்கிறது. வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
- வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
- பவன் கல்யாணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நடித்துள்ள 'They Call Him OG' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பினார்.
விழா மேடைக்கு வந்த பவன் கல்யாண் வாளை சுழற்றியபோது, அது அவரது பாதுகாவலரின் அருகில் சென்றது. இதில் அந்த பாதுகாவலர் சுதாரித்துக்கொண்டதால் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பவன் கல்யாணின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்து வருகின்றனர்.
பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.
அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.
அதன்படி, OG திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
- பவன் கல்யாண் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
- எண்ணற்ற மக்களின் இதயங்களிலும் பவன் கல்யாண் ஒரு முத்திரையை பதித்துள்ளார்.
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும் நடிகருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் திரை உலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். எண்ணற்ற மக்களின் இதயங்களிலும் பவன் கல்யாண் ஒரு முத்திரையை பதித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
- பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
- திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வந்ததால் ரசிகர் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் சரியில்லாமல் இருக்கிறது என்று வந்த பார்வையாளர்களின் கருத்தை கேட்டு புதிய வி.எஃப்..எக்ஸ் காட்சிகளுடன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
திரைப்படம் இதுவரை 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிக மக்கள் வந்தால் படத்தின் வசூல் 95 கோடி ரூபாயாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 31 ஆம் தேதி விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் வெளியாக இருப்பதால் ஹரிஹர வீரமல்லு திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படலாம்.
- பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
- திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வந்ததால் ரசிகர் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். ஆனால் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்று பார்க்கலாம்.
பவன் கல்யாண் புரண்டு புரண்டு நடித்து இருந்தாலும் திரைப்படம் மக்களுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் முதல் பாதி சுமார் ரகமாக செல்கிறது, படத்தின் இரண்டாம் பாதி படும் மோசம். காட்சிகள் அனைத்தும் பாதி பதியாக் ஒட்ட வைத்தது போல ஓர் உணர்வு ஏற்படுகிறது. கிராபிக் காட்சிகள் சொதப்பலோ சொதப்பல். கீரவாணியின் இசையும் பெரிதாக எடுப்படவில்லை. மொத்தத்தில் ஹரிஹர வீர மல்லு படத்தை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.
- நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.
- தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.
கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.
2015இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்.
இவரது உடலுக்கு பல தெலுங்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரா துணை முதலமைச்சரான பவன் கல்யாண், நடிகர் பிரம்மானந்தம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் அப்ப்போது அவர்கள் மிகவும் கோட்டா ஸ்ரீனிவாசனைப் பற்றி உருக்கமாக பேசினார்கள்.
நடிகர் சத்யராஜ் அவரது ஆழ்ந்த இரங்கலை விடியோவாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






