என் மலர்
நீங்கள் தேடியது "tirumala"
- ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
- தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும்.
திருமலை திருப்பதியில் லட்டு பிரசாதத்தில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை அம்மாநிலத்தில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த மாதம் 13 ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராக ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சியின் மூத்த தலைவர் சுப்பாரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுப்பாரெட்டி தேவஸ்தான தலைவராக இருந்தபோது தான் இந்த கலப்பட நெய் விவகாரம் நடந்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தாவியவர் ஆவார்.
இதற்கிடையே சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டதாக கொந்தளித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் மீது பழி சுமத்தினார்.
இந்நிலையில், சனாதன தர்ம பரிபாலன வாரியம் என்ற அமைப்பை நிறுவி, திருமலை உள்ளிட்ட கோயில்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முந்தைய திருமலை தேவஸ்தான வாரியத்தின் மிகப் பெரிய நிர்வாகத் தோல்வி மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
இந்த கசப்பான நம்பிக்கை துரோகம், தற்போதைய திருமலை தேவஸ்தான வாரியத்திற்கு ஒரு ஆழமான பாடமாக அமைய வேண்டும். திருமலையின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கவும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.
திருமலை தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் மற்றும் நடத்தும் வாரியம், அதிகாரிகள், செயல் அலுவலர், இணைச் செயல் அலுவலர் முதல் ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வரை அனைவருக்கும் கிடைத்துள்ளது வெறும் பதவி அல்ல, மாறாக கோடிக்கணக்கான சனாதனிகளுக்கு தெய்வீக சேவை செய்யக் கிடைத்த ஒரு புனிதமான வாய்ப்பு.
நிதிநிலை அறிக்கைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கைகள் முதல் சொத்து மற்றும் நன்கொடைகளை நிர்வகிப்பது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு விவரத்தையும் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சனாதன தர்ம பரிபாலன வாரியத்தை நிறுவுவது எதிர்காலத்திற்கான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், தர்மத்தைக் காக்க வேண்டிய மற்றும் அதற்காக நிற்க வேண்டியது ஒவ்வொரு சனாதனியின் பொறுப்பு. மேலும், என்றாவது ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள நமது அனைத்துக் கோயில்களும் நமது சமூகத்தால், அதாவது பக்தர்களால் நிர்வகிக்கப்படும் காலம் வரும் என்பதே எனது உண்மையான நம்பிக்கை. இது நமது கடமையாகும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முந்தைய தேவஸ்தான நிர்வாகம் குறித்து விமர்சித்த பவன் கல்யாணுக்கு, முந்தைய ஆட்சியாளரான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஆந்திர முன்னாள் அமைச்சர், நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரோஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பவன் கல்யாண் காரு, நீங்கள் புனிதத்தன்மை மற்றும் தர்மத்தைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும், அது உங்கள் ஒரு தலைப்பட்சமான அக்கறையை மட்டுமே அம்பலப்படுத்துகிறது.
திருமலையில் பக்தர்கள் இறந்தபோதோ அல்லது கடுமையான தோல்விகள் அமைப்பை உலுக்கியபோதோ நீங்கள் ஒருபோதும் வாய் திறக்கவில்லை. ஆனால், சந்திரபாபுவுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படும் தருணத்தில், நீங்கள் திடீரென்று உபதேசங்களைக் கொடுக்கத் தொடங்குகிறீர்கள். அது பக்தி அல்ல. அது அப்பட்டமான அரசியல் நாடகம்.
நீங்கள் நேர்மையைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் நேர்மை என்பது அசௌகரியமாக இருந்தாலும் உண்மைக்காக நிற்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதைச் செய்ததில்லை.
நீங்கள் எளிதான இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கம் இருப்பவர்கள் தவறு செய்யும்போது மௌனமாக இருக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் பிரசங்கங்கள் வெற்றுத்தனமாக உள்ளன.
தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும். உண்மையான கேள்வி என்னவென்றால், தேவைப்படும்போது அதற்காகப் போராடும் தைரியம் யாருக்கு இருக்கிறது என்பதில் தான் உண்மையான தர்மம் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த சோதனையில் தோல்வியடைந்துள்ளீர்கள்.
ஒரு வாரியமோ அல்லது குழுவோ திருமலையைச் சரிசெய்யாது. அர்ப்பணிப்பும் நேர்மையும் மட்டுமே சரிசெய்யும், மேலும் இவை இரண்டும் உங்கள் அரசியலில் இல்லை.
மற்றவர்களுக்குப் போதிக்கும் முன், முதலில் நீங்கள் நிலையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். திருமலைக்கு நேர்மை தேவை, பொய்யான சீற்றம் அல்ல." என்று தெரிவித்துள்ளார்.
- மூலவருக்கு 4 பட்டு வஸ்திரங்கள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டது.
- தீர்த்த பிரசாதத்துக்கு பிறகு ஸ்ரீவாரி பாதங்களில் சாவி கொத்து வைக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் நடந்தது. காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க வாசல் எதிரில் உள்ள கண்டா மண்டபத்தில் சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமியை கருடாழ்வார் எதிரில் வைத்தனர். சேனாதிபதியான விஷ்வக்சேனர் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி வைக்கப்பட்டார். ஆனந்த நிலையத்தில் உள்ள மூலவர் ஏழுமலையானுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு பிரசாத நிவேதனம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, பெரிய ஜீயர் சுவாமி வெள்ளித் தட்டில் 6 பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி மங்கள வாத்தியங்கள் இசைக்க ஏழுமலையான் கோவிலுக்குள் வந்தார். அவருடன் சின்ன ஜீயர் சுவாமி மற்றும் முதன்மைச் செயல் அலுவலா், பிற உயர் அதிகாரிகள் உடன் வந்தனர்.
மூலவருக்கு 4 பட்டு வஸ்திரங்கள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டது. மீதமுள்ள 2 வஸ்திரங்களில் ஒன்றை உற்சவர் மலையப்பசாமிக்கும், மற்றொன்றை விஷ்வக்சேனருக்கும் அணிவித்து அலங்கரிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவிலின் தலைமை அர்ச்சகர் தலையில் பரிவட்டம் கட்டி, சாமியிடம் அரிசி தட்சணை பெற்று, சுவாமிக்கு 'நித்ய ஐஸ்வர்யோபவ' என உச்சரித்தார். அதன்பின் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகர்கள் பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோரின் வலது கையில் சாவிக்கொத்தை ஒப்படைத்தனர். இத்துடன் கோவிலில் நடந்த ஆனிவார ஆஸ்தான விழா முடிந்தது. அதைத்தொடர்ந்து ஆரத்தி, சந்தனம், தாம்பூலம், தீர்த்த பிரசாதத்துக்கு பிறகு ஸ்ரீவாரி பாதங்களில் சாவி கொத்து வைக்கப்பட்டது.
ஆனிவார ஆஸ்தானத்துக்கு பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்ததும் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசுகையில், கடந்த காலங்களில் ஏழுமலையான் கோவிலின் பாதுகாவலர்களான மகந்துகள் ஆண்டு அடிப்படையில் வருமானம், செலவுகள், இருப்பு கணக்குகளை வைத்திருந்தனர். திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட பிறகு, மகந்துகளிடம் இருந்து கோவிலின் வரவு-செலவு கணக்குகள் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தேவஸ்தானம் வருடாந்திர வரவு-செலவு கணக்கு பட்ஜெட்ைட மார்ச்-ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்து வருகிறது, என்றார்.
அதைத்தொடர்ந்து மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆனிவார ஆஸ்தானம் அன்று வைகானச வழக்கத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவில் நிர்வாகிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
அதையொட்டி நேற்று காலை பேடிஆஞ்சநேயர் கோவிலை அடுத்த பெரிஜீயர் மடத்தில் பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அங்கிருந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சின்ன ஜீயர்சுவாமி, திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்களை மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர். இதையடுத்து மூலவருக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், கமிஷனர் முரளிதரன், ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் சிவராம்குமார், ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் சீனிவாச ராகவ பட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்பு.
- புறப்படும் முன்பு, கோவில் யானைகளுக்கு உணவு வழங்கினார்.
திருமலை:
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்தார். மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற ஒரு மணி நேர சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருடன் ரிலையன்ஸ் நிறுவன உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
வழிபாட்டிற்குப் பிறகு, சன்னதியில் வைத்து காணிக்கையாக ஒன்றரை கோடி ரூபாய்க்கான காசோலையை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கட தர்ம ரெட்டியிடம் முகேஷ் அம்பானி வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்படும் முன்பு, கோவில் யானைகளுக்கு அவர் உணவு வழங்கியதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் சிறிசேனா 17-ந் தேதி சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக, தன் மனைவி ஜெயந்தி புஷ்பகுமரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் அவர் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வந்து சேருகிறார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் ரேணிகுண்டாவுக்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு செல்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். 17-ந் தேதி அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாத பூஜையில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், சிறிசேனா பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.
இலங்கை அதிபர் ஆன பிறகு அவர் திருப்பதி கோவிலுக்கு வருவது, இது 3-வது தடவை ஆகும். #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple
திருமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தீவிர விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை கடத்தி சென்ற பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
இதுபற்றி திருமலை போலீசார், திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண், திருமலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்த துளசி என்பது தெரியவந்தது. அவருடைய சொந்த ஊர், சித்தூர் மாவட்டம் கார்வேட்டி நகரம் ஆகும். அவரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, அது திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதியை காண்பித்தது.
திருப்பதி மங்களம் குடியிருப்பு பகுதிக்குச்சென்ற திருப்பதி போலீசார், அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரித்தனர். அங்கு, கைக்குழந்தையோடு ஒரு பெண் தங்கியிருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்த ஆண் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பிடிப்பட்ட துளசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
துளசி, போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கும் கார்வேட்டிநகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. எங்களுக்கு தலைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை திடீரென இறந்து விட்டது. 2-வதாக நான் கர்ப்பம் ஆனேன். அந்த குழந்தையும் இறந்து விட்டது. இதனால் என்னை விட்டு, கணவர் பிரிந்தார்.
எனக்கு பெற்றோர் இல்லாததால், திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள என்னுடைய பாட்டி வீட்டில் தங்கி வசித்தேன். அங்கு, எனக்கு தனிமை வாட்டவே, வேலைத்தேடி திருமலைக்கு வந்தேன். அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்தபடி, இரவில் சென்று ஏதேனும் ஒரு குழந்தையை கடத்த திட்டமிட்டேன்.
அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் திருமலையில் உள்ள எஸ்.வி.ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகில் படுத்துத்தூங்கி கொண்டிருந்த ஒரு தம்பதியரிடம் இருந்து ஆண் குழந்தையை கடத்தினேன். என் செல்போன் அழைப்பு மூலமாக 24 மணிநேரத்தில் திருப்பதி போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர்.
மேற்கண்டவாறு போலீசாரிடம் துளசி கூறினார்.
இதையடுத்து துளசியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு, அக்குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் ஒப்படைத்தார்.
அதற்கு அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். #Tirupati #BabyRescued
சென்னை:
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மதியம் தொடங்கியது.
ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று மதியம் பூஜைகளுடன் புறப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷங்களுடன் 11 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, சுவாமி சைதன்யானந்தா மகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு யானைக்கவுனி தாண்டுகிறது. அதன் பின்னர் சால்ட் குவாட்டர்ஸ், செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம் காசி விசுவநாதர் கோவில் சென்றடைகிறது.
நாலை (12-ந்தேதி) ஐ.சி.எப்.. ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வில்லிவாக்கம், சென்றடைகிறது. 13-ந்தேதி பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில் செல்கிறது. 14-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் சென்றடைகிறது. 15-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்று 16-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜியர்கள் முன்னிலையில் திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் ஒப்படைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஹிந்து தர்மர்த்த சமிதி அறக்கட்டளை அமைப்பு செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், 200 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருமலையில் திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெகு விமரிசையாக திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. 16-ந்தேதி திருக்குடைகள் திருமலையில் சமர்பணம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiKudai






