search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirupati kudai march"

    சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மதியம் தொடங்கியது. #Tirupati #TirupatiKudai

    சென்னை:

    சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மதியம் தொடங்கியது.

    ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று மதியம் பூஜைகளுடன் புறப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோ‌ஷங்களுடன் 11 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடங்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, சுவாமி சைதன்யானந்தா மகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     


    ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு யானைக்கவுனி தாண்டுகிறது. அதன் பின்னர் சால்ட் குவாட்டர்ஸ், செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம் காசி விசுவநாதர் கோவில் சென்றடைகிறது.

    நாலை (12-ந்தேதி) ஐ.சி.எப்.. ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வில்லிவாக்கம், சென்றடைகிறது. 13-ந்தேதி பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில் செல்கிறது. 14-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் சென்றடைகிறது. 15-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்று 16-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜியர்கள் முன்னிலையில் திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் ஒப்படைக்கப்படுகிறது.

     


    இதுகுறித்து ஹிந்து தர்மர்த்த சமிதி அறக்கட்டளை அமைப்பு செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:-

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், 200 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருமலையில் திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெகு விமரிசையாக திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. 16-ந்தேதி திருக்குடைகள் திருமலையில் சமர்பணம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiKudai

    ×