என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescued"

    • சுமார் 75 சதவீதத்திற்கு மேல் இந்த புதிய சுரங்கம் அமைக்கும் பணி முடிவு அடைந்தது.
    • இந்த திட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள்.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூமிக்கு அடியில் 18 மீட்டர் அகலத்தில் கழிவுநீர் வெளியேற்றுவதற்காக ரூ.60 ஆயிரம் கோடியில் புதிதாக சுரங்கம் அமைத்து பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள். சுமார் 75 சதவீதத்திற்கு மேல் இந்த புதிய சுரங்கம் அமைக்கும் பணி முடிவு அடைந்தது.

    இந்தநிலையில் சுரங்கம் தோண்டுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவு அடைந்ததால் கூடுதலாக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு மும்முரமாக பணி நடந்து வந்தது. அப்போது அந்த சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 31 தொழிலாளர்கள் சிக்கியிருப்பது தெரிந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்தில் சிக்கிய 31 தொழிலாளர்களும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    • கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
    • மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டிருந்த ஆடு தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சங்கரம்பாளையத்தில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டிருந்த ஆடு ஒன்று தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது.

    இது குறித்து கரூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு தீயணைப்பு படை வீரர் வந்தனர்.

    சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி நீரில் உயிருக்கு போராடி தத்தளித்துக்கொண்டிருந்த ஆட்டினை லாவகமாக மீட்டனர். பின்னர் ஆட்டின் உரிமையாளரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.

    • தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்
    • கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் குன்னம் ஆய்வாளர் சுசிலா, கீழப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • பொதுமக்கள் தகவல் அளித்தின் பேரில் வனத்துறையினர் மீட்பு
    • சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் ரெங்கசமுத்திரம் ஏரி அருகே மான் ஒன்று காயங்களுடன் துடித்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதனை தொடர்ந்து வனக்காப்பாளர்முத்துராஜ் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது மர்ம விலங்கு கடித்து மானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மான் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவரால் அந்த ஆண் மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. துள்ளி குதித்து ஓடும் அளவிற்கு மானின் உடல் நிலை தேறிய பின்னர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

    • சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்து படிப்பை நிறுத்தினர்.
    • சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    பொள்ளாச்சி,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர்.

    கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி சிறுமியை அவரது தாய், தனது தங்கை வீடான பொள்ளாச்சியில் கொண்டு வந்து விட்டார். 1 மாதத்திற்கும் மேலாக அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தனது வீட்டிற்கு சென்றார்.

    சம்பவத்தன்று, சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சிறுமி மட்டும் இருந்தார். சிறுமியின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது சிறுமி மாயமாகி இருந்தார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தனர்.

    போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி, தனது காதலனுடன் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் திருப்பூர் விரைந்து சென்று சிறுவனுடன் இருந்த சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    மேலும் சிறுவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • திருப்பூரில் இருந்து கோவை வடவள்ளிக்கு வந்த சிறுவன் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார்.
    • சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஹரிஹரன் (வயது 15). இவர் வத்தலகுண்டில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் -ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஹரிஹரன் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியேறி தேனியில் இருந்து திருப்பூருக்கு சென்றார்.

    பின்னர் திருப்பூரில் இருந்து கோவை வடவள்ளிக்கு வந்த அவர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார். இதனை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    பின்னர் இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • தூதரக அதிகாரிகள் லாவோஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஒரு குழுவை அந்த மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
    • மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வியன்டியான்:

    கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை அங்குள்ள ரவுடி கும்பல் கடத்திச்செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.

    அந்தவகையில் லாவோசின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த இந்தியர்கள் 67 பேர் மோசடி கும்பலால் கடத்தப்பட்டு போகியோ மாகாணத்தில் உள்ள சைபர் மோசடி மையங்களில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    அந்த ரவுடி கும்பலால் பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்த இந்தியர்கள், தங்களை மீட்குமாறு தலைநகர் வியான்டியானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் லாவோஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஒரு குழுவை அந்த மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அதிரடியாக செயல்பட்டு 67 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் வியான்டியானுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள அவர்களை இந்திய தூதர் பிரசாந்த் அகர்வால் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களது அனுபவங்களை கேட்டறிந்த அவர், இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஏஜென்டுகள் மீது புகார் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் லாவோசில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது மீட்கப்பட்டுள்ள 67 பேரையும் சேர்த்து மொத்தம் 924 இந்தியர்கள் இதுவரை ரவுடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 857 பேர் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

    அதேநேரம் தாய்லாந்துக்கு பணிக்கு அனுப்பி வைப்பதாக வெளியாகும் தகவல்களை குறித்தும், இந்த ஏஜென்டுகளை குறித்தும் கவனமாக இருக்குமாறு இந்தியர்களை லாவோசில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

    • கட்டிட இடிபாடுகளில் மொத்தம் 21 பேர் சிக்கியிருந்தனர்.
    • 5 பேர் இறந்தனர் மற்றும் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி புராரி பகுதியில் கவுசிக் என்கிளேவ் பகுதியில் 200 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் கடந்த திங்கட்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.

    கட்டிடம் இடிந்துவிழுந்த சத்தம் கேட்டு அங்கிருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் இறந்தனர். உடனடியாக 12 பேர் மீட்கப்பட்டனர்.

    இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால் தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் 36 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ராஜேஷ் (வயது 30), அவரது மனைவி கங்கோத்ரி(26), அவர்களது குழந்தைகள் இளவரசன் (6), ரித்திக் (3) ஆகிய 4 பேரும் கட்டிட இடிபாடுக்குள் சிக்கியிருந்தனர்.

    கியாஸ் சிலிண்டர் மீது ஒரு சன்னல் விழுந்ததில் இடைவெளி இருந்தது. அந்த பகுதியில் 4 பேரும் சிக்கி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேடுதல் வேட்டையின் போது இவர்கள் 4 பேரும் கட்டிடத்தின் அடியில் சிக்கியிருந்ததை பார்த்த மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

    36 மணி நேரத்திற்கு 3 தக்காளி பழங்களை மட்டுமே சாப்பிட்டு பசியை போக்கியுள்ளனர்.

    நான் எனது குடும்பத்திற்கு இரவு உணவு தயாரிக்கும் முன் மாலை 6.30 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. எங்கள் மேலே விழுந்த கட்டிட துகள்களை அகற்ற நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை இதனால் நான் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன்.

    இந்த 36 மணி நேரத்தில் வீட்டில் வைத்திருந்ததில் சிதறி கிடந்த 3 தக்காளி பழங்களை மட்டுமே சாப்பிட்டேன். அந்த தக்காளியே எங்கள் பசியை தீர்த்தது.

    கடவுளின் கருணையால் நாங்கள் 4 பேரும் காப்பாற்ற பட்டுள்ளோம். கடவுளுக்கு நன்றி என்றார்.

    மீட்கப்பட்ட அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் மொத்தம் 21 பேர் சிக்கியிருந்தனர். அதில் 5 பேர் இறந்தனர் மற்றும் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    • 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
    • மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சக்கரை ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இரண்டு வயதுள்ள மான் ஒன்று தவறி விழுந்தது. 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு நிலைய குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மானை கயிறு மூலம் கட்டி உயிருடன் மீட்டனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா மானை வாசுதேவநல்லூர் ரேஞ்சர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.

    • ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.
    • மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அவரது மகன் செல்வராஜ் (வயது30) 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கினார்.

    மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார். உடனே பக்கத்தில் இருக்கிறவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உடனே வந்து கிணற்றுக்குள் இறங்கி செல்வராஜ்யை கயிறுகட்டிஉயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
    • 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.

    இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

    • மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார்.
    • திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரின் முக்கிய சாலையாக குமரன் ரோடு விளங்கி வருகிறது. எப்போதும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படும் இந்த சாலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் கந்தலான ஆடையோடு சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார். சாலையின் நடுவில் நடக்க முடியாமல் தவித்த அந்த மூதாட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை.அப்போது அந்த வழியாக திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார். சாலையின் நடுவில் திக்குதெரியாமல் போராடிய அந்த மூதாட்டியை பார்த்ததும் உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், அந்த மூதாட்டியிடம் விசாரித்தார். ஆதரவற்ற நிலையில் வீதிவீதியாக சுற்றித்திரிவதாக தெரிவித்தார். குளிரால் நடுங்கிய அவருக்கு உடனடியாக டீ வாங்கிக்கொடுத்து அங்கிருந்து உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

    கந்தலான ஆடையுடன் இருப்பதை பார்த்து புதிய ஆடையை வாங்கி அணிய வைத்ததுடன், சால்வையால் உடலை போர்த்தி பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை அனுப்பி வைத்தார். அத்துடன் இருந்துவிடாமல் உதவி கமிஷனர் அனில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மூதாட்டிக்கு அளிக்கும் சிகிச்சையை கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் செயல்படும், ஆதரவற்றவர்களை கவனிக்கும் சிறப்பு பிரிவில் அந்த மூதாட்டியை சேர்க்க பரிந்துரை செய்தார். அங்கு அந்த மூதாட்டியை பராமரித்து வருகிறார்கள். போலீஸ் அதிகாரியின் கருணை மிகுந்த, மனிதாபிமான செயலை பார்த்து பொதுமக்கள் பாராட்டினார்கள். 

    ×