search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old lady"

    • கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார்.
    • ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார்.

    இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள ரோண்டா சைனான் டாப்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு 72 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார். இதை கவனிக்காமல் அந்த மூதாட்டி ஷட்டரை ஒட்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஆடை மின்சார ஷட்டரில் சிக்கிக்கொண்டது.

    இதனால் ஷட்டர் மேலே திறந்த போது, ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார். இதை அங்கு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஷட்டரில் ஆடை சிக்கி தலைகீழாக தொங்கிய மூதாட்டியை மீட்டு பத்திரமாக தரையில் இறக்கி விட்டார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. 12 வினாடிகள் கொண்ட அந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
    • விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

    ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.

    இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.
    • மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (65). பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.

    இதுகுறித்து வேலூர் போலீசில் மணிமேகலை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தகவலறிந்த நல்லறம் சேவைகள் குழு உறவுகள் குழுவினர் ஆடையின்றி சாலையோரத்தில் சுற்றி திரிந்த பெண்ணை நேற்று இரவு மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் உள்ள ஏ.மணி நகரில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக வீதியில் சுற்றித்திரிந்தார். இதனால்அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களது வீட்டில் இருந்த ஆடைகளை அவருக்கு அணிவிக்க முயன்றனர். அதை அணியாமல் நிர்வாணமாகவே மூதாட்டி சுற்றி திரிந்தார்.

    தகவலறிந்த நல்லறம் சேவைகள் குழு உறவுகள் குழுவினர் ஆடையின்றி சாலையோரத்தில் சுற்றி திரிந்த பெண்ணை நேற்று இரவு மீட்டனர். பண்ருட்டி பைத்துல் மால் இஸ்லாமிக் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் இக்னைட் டிரஸ்ட் மூலம் கடலூர் ஓயாசிஸ் காப்பகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பராட்டுகள் குவிந்து வருகிறது.

    • வெங்கடரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.
    • பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், கமலபாடுவை சேர்ந்தவர் வெங்கட ரத்தினம்மா (வயது 78).

    இவரது மகன் வெங்கடேஸ்வரலு, மகள் திருப்பத்தமா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    கணவர் இறந்து விட்டதால் வெங்கட ரத்தினம்மா மகன் வெங்கடேஸ்வரலு வீட்டில் வசித்து வருகிறார்.

    வயது முதிர்வு மற்றும் சிறுநீரக கோளாறால் வெங்கட ரத்தினம்மா அவதி அடைந்து வந்தார். வெங்கடேஸ்வரலுவின் மனைவி மாமியாருக்கு பணிவிடை செய்ய விருப்பம் இல்லாததால் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஸ்வரலு தனது மனைவியுடன் சேர்ந்து தாயை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். நல்கொண்டா அடுத்த மிரியாகுலா அருகே உள்ள வைகுந்தம் என்ற இடத்தில் தாயை இறக்கிவிட்டார்.

    அப்போது வெங்கடரத்தினமா மகனிடம் இங்கே ஏன் என்னை விட்டு செல்கிறாய் வீட்டிற்கு அழைத்துச் செல் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரலு மனைவியுடன் சேர்ந்து தாயின் 2 கைகளையும் பின்புறமாக வளைத்து கையை உடைத்தனர். பின்னர் அங்குள்ள புதரில் தள்ளிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

    அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வெங்கட ரத்தினம்மா இரவு முழுவதும் வலியால் அலறி துடித்தார். நேற்று காலை கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அந்த வழியாக வந்தனர்.

    மூதாட்டி அழும் சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கு சென்று பார்த்த போது வெங்கட ரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நல்கொண்டா கலெக்டர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கட ரத்தினம்மாவை மீட்டனர்.

    அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதையடுத்து வெங்கடேஸ்வரலு, அவரது மனைவி ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

    இதுபோல் மீண்டும் தாயை கொடுமைப்படுத்தினால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

    பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருநின்றவூர்:

    பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சுசில் பிரான்சிஸ் தெருவில் வசித்து வருபவர் மேரி குளோரி(வயது82). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை, பாபு நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே வந்த போது தெருவில் சுற்றிய நாய் ஒன்று திடீரென மூதாட்டி மேரி குளோரி மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் நிலை தடுமாறிய மேரி குளோரி கீழே விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டபடி திரண்டு வந்தனர். உடனே மேரி குளோரியை கடித்து குதறிய நாய் ஓடிவிட்டது. நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன. இதனால் விபத்துக்களும், நாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனை தடுக்க தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70).
    • படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோழிக்கட்டானூர் கணக்குப்பட்டி பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் கோவிந்தம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். இது பற்றி கோவிந்தம்மாளின் மகன் சக்திவேல் (38) கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கி உள்ளார்.
    • மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றனர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமம் அண்ணா சாலை தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி இருதாயி (வயது 70).

    இவர் கீற்று கயிறு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

    இவரது மகள், மகன்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இருதாயி தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே படுத்து உறங்கி உள்ளார்.

    நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் இருதாயி முகத்தை துணியை போட்டு மூடிவிட்டு அவரை தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர்.

    காயங்களுடன் மயங்கிய மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் தோடு உள்ளிட்ட 6½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

    காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கண்ணம்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பசுவனபுரம் கரலியம் ரோடு அருகே மது விற்பனை நடைபெறுவதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சிறப்புப் இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா மற்றும் போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி கண்ணம்மா (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலியின் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.
    • ராஜேஷ் என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணை தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி ஜெயசீலி (வயது 70). இவர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஜெயசீலி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயசீலி அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர வின்படி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி முத்தையாபு ரம் சந்தோஷ்நகரை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவர் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    உடனே தனிப்படை போலீசார் ராஜேசை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 5½ பவுன் தங்க செயின் மற்றும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
    • சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 75).

    மணி இறந்து விட்ட நிலையில் செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று இரவு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆன்ரோஅஸ்வந்த் ஆரோக்கியராஜ் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டியின் வீட்டை உடைத்து 7 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை ஊராட்சி சேண்டல்பெரியான் கிரா மத்தைச் சேர்ந்தவர் கண் ணப்பன் மனைவி கண்ணாத் தாள் (வயது 70). இவர் தேவகோட்டை தினசரி காய்கறி மார்க்கெட்டில் சாலை யோரத்தில் வியாபா ரம் செய்து வருகிறார்.

    தினமும் தனது கிரா மத்தில் உள்ள வீட்டில் இருந்து அதிகாலையில் தேவகோட்டை தினசரி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்துவிட்டு மதியம் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள் ளார். நேற்று வழக்கம்போல் காய்கறி விற்பனை செய்ய அதிகாலையில் சென்று விட்டு மதியம் சுமார் 2 மணி அளவில் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப் போது உள்ளே இருந்த இரண்டு பீரோக்களும் உடைத்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின்கள் ரொக்க பணம் ரூ.10,000 ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரட்டை கொலை செய்து வீட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தால் தேவகோட்டை மக்கள் அச்சத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் மூதாட்டி வீட்டில் நகை கொள்ளை சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

    ×