என் மலர்
நீங்கள் தேடியது "மீட்பு"
- உணவு, குடிநீர் தராமல் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சித்ரவதை செய்து வந்தார்.
- இளம்பெண் அறையில் வைத்து பூட்டப்பட்டு சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் போலவரத்தை சேர்ந்த இளம்பெண். இவருக்கும் ஜங்கா ரெட்டி கூடேமை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு இளம்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
இளம்பெண்ணின் கணவரின் தம்பிக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இதனால் அவரது மாமியார் மூத்த மருமகளுடன், இளையமகனுக்கு வாரிசு பெற்றெடுக்க முடிவு செய்தார். மூத்த மகனை வேலைக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்தார்.
மூத்த மகன் வெளியூர் சென்ற பிறகு இளைய மகனுடன் இணைய வேண்டும் என மருமகளிடம் தெரிவித்தார். மாமியாரின் இந்த வார்த்தையை கேட்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்து மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர் மீது மாமியாருக்கு கடுமையான கோபம் வந்தது. இளைய மகனுடன் கட்டாயம் இணைய வேண்டும் என தெரிவித்தார்.
இளம்பெண் மீண்டும் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மாமியார், மருமகளையும் அவரது குழந்தையும் அறையில் வைத்து பூட்டினார்.
அவர்களுக்கு உணவு, குடிநீர் தராமல் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சித்ரவதை செய்து வந்தார். தாயும், ஒரு வயது குழந்தையும் உணவு இல்லாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
இளம்பெண் அறையில் வைத்து பூட்டப்பட்டு சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.
இளம்பெண்ணின் பெற்றோர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தனர். மனித உரிமை ஆணையத்தை சேர்ந்தவர்கள் போலீசாருடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.
போலீசார் வருவதை அறிந்த இளம்பெண்ணின் மாமியார் மற்றும் அவரது மைத்துனர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் அறையின் கதவை உடைத்து இளம்பெண்ணையும் அவரது குழந்தையையும் மீட்டனர். உணவு, குடிநீர் இல்லாததால் இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.
தாயும், குழந்தையையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணின் மாமியார், மைத்துனரை தேடி வருகின்றனர்.
- மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காக்கை தங்க வளையலை திருடி அதன் கூட்டில் வைத்திருந்தது.
- மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காக்கையின் கூட்டில் இந்த தங்க வளையலை கண்டெடுத்தார்.
கேரளாவில் மஞ்சேரி என்ற கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காக்கை தங்க வளையலை திருடி அதன் கூட்டில் வைத்திருந்தது.
மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காக்கையின் கூட்டில் இந்த தங்க வளையலை கண்டெடுத்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் இது குறித்து உள்ளூர் நூலகத்தில் அறிவிப்பு பலகை வைத்தார். அதனை கண்ட ஹரிதா என்ற பெண் வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி வளையலை பெற்றுச் சென்றார்.
இந்த சம்பவம் ஒரு அதிசயமாகவும், ஆச்சரியமான நிகழ்வாகவும் பேசப்பட்டு வருகிறது.
- பிரகாஷ் (வயது 26). சற்று மனநலம் பாதித்த இவர், திடீரென மாயமானார்.
- சீலநாயக்கன்பட்டி ஊத்து மலையில் சுற்றித்திரிந்த அர்ஜூன் பிரகாஷை மீட்டு அவரது பெற்றோருக்கும் திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
திருப்பூர் மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவரது மகன் அர்ஜூன் பிரகாஷ் (வயது 26). சற்று மனநலம் பாதித்த இவர், திடீரென மாயமானார். இது குறித்து அர்ஜூனின் பெற்றோர் திருப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார், நேற்று இதுகுறித்து சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த அன்னதானப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன், சீலநாயக்கன்பட்டி ஊத்து மலையில் சுற்றித்திரிந்த அர்ஜூன் பிரகாஷை மீட்டு அவரது பெற்றோருக்கும் திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அர்ஜூன் பிரகாஷின் பெற்றோர் நேற்று நள்ளிரவு சேலம் வந்து பிரகாஷை மீட்டுச் சென்றனர்.
- சாமி தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர்.
- கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
திருவாரூர்:
சென்னை கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 71). இவரது மனைவி பானுமதி (67). கணேசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்களது மகன் சாமிநாதன் (37), அவரது மனைவி லெட்சுமி (35). சாமிநாதன் சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார்.
சாமிநாதன் குழந்தை லட்சுமி நாராயணன் (வயது 1) ஆகியோர் சென்னையில் இருந்து திருவாரூரில் உள்ள குலதெய்வ கோவிலிலுக்கு காரில் வந்துள்ளனர்.
தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை சாமிநாதன் ஒட்டி வந்துள்ளார். அப்போது விசலூர் என்கிற இடத்தில் கார் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கும், நன்னிலம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்த போதும் கணேசன், பானுமதி, சாமிநாதன், ஒரு வயது குழந்தையான லட்சுமிநாராயணன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
லட்சுமி மட்டும் உயிருடன் இருந்த நிலையில் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நன்னிலம் காவல் –துறையினர் உயிரிழந்த நால்வரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்–துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வெண்ணாற்றங்கரை மாணவர் விடுதி அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் தண்ணீரில் இறங்கியவாறு நின்றார்.
- தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து ரேவதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஹரிநகரை சேர்ந்தவர் ரேவதி. இவர் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் வீட்டுக்கு நடந்து வரும் போது இவரது கழுத்தில் கிடந்த செயினை மர்மநபர்கள் அறுத்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரேவதி தனது குடும்பத்தினரும் கூறியுள்ளார் .
ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த ரேவதி திடீரென வெண்ணாற்றங்கரை மாணவர் விடுதி அருகே உள்ள ஆற்றில் ஓரத்தில் தண்ணீரில் இறங்கியவாறு நின்றார். வெகு நேரமாக தண்ணீரில் நின்று கொண்டிருந்தார்.
அவரது குடும்பத்தினர் கூப்பிட்டு பார்த்துட்டு பயனில்லை. இந்த நிலையில் இன்று தஞ்சை பள்ளி அக்ரஹரத்தில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரிடம் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மேயர், ஆணையர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து ரேவதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடத்திச் சென்ற ரவுடி போக்சோ சட்டத்தில் கைது
- குமரி போலீசார் அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த அவரது தோழியான மற்றொரு மாணவியும் திடீ ரென ஒரே நாளில் மாயமானார்கள்.
இது தொடர்பாக மார்த்தாண்டம் மற்றும் திருவட்டார் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 மாணவிகளையும் தேடி வந்தனர்.
அப்போது மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்தபோது இருவரும் ஒரே எண்ணுக்கு தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது.அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்திய போது, அது திருவட்டார் குட்டக்குழி காலனி பகுதியைச் சேர்ந்த வினு (வயது 22) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான வினுவை தேடிச் சென்ற போது, அவரும் வீட்டில் இல்லை. எனவே அவர் தான் 2 மாணவிகளை கடத்திச் சென்றிருக்கலாம் என ேபாலீசார் கருதினர்.
இதையடுத்து பினுவின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்த னர். இதில் அந்த எண் சென்னை திருவான்மியூரில் இருப்பது கண்டு பிடிக்க ப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 2 மாணவி களுடன் வினு இருப்பது தெரிய வந்தது. மாணவி களை மீட்ட போலீசார், அவர்களையும் வினுவையும் குமரி மாவட்டம் அழைத்து வந்தனர். பின்னர் 2 மாணவிகளும் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2 மாணவி களையும் தனித்தனியாக சந்தித்து பேசி வினு தனது வலையில் வீழ்த்தியதும், பின்னர் 2 பேரையும் ஓன்றாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
மேலும் ரவுடி வினு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதனை மாணவிகளிடம் கூறாமல் அவர்களுடன் பழகி வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரவுடி வினுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாய்ப்பு உள்ள தாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட 2 மாணவி களும் இன்று மருத்துவ பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
- 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகை கடைகள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தவர் தீபக் (வயது 28). இவர் அந்த கடையிலிருந்து 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஊழியர் தீபக்கை இன்ஸ்பெக்டர் ஆனந்த 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது, திருடிய நகைகளை வங்கிகளில் அடகு வைத்த தீபக், அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் கிரிக்கெட் விளையாடியது தெரியவந்தது. மேலும் 44 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்ததற்கான ரசீதுகளையும் அவர் கொடுத்தார். அந்த நகைகளை நீதிமன்றம் மூலமாக மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் திருடிய நகைகளை அல்லிக்குட்டை பகுதியில் உள்ள பச்சாயி அம்மன் கோவில் பகுதியில் புதைத்து வைத்திருப்பதாகவும் தீபக் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது. அதனை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
- நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.
இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
- இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தர விட்டது.
இதையடுத்து சேலம் மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை கமிஷனர் மங்கையர்க்கரசி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜா மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டனர். இதற்கான பாதுகாப்பு பணியில் அன்ன தானப்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- வடமாநில சிறுமிகள் 3 பேர் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர்
- செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தவர்கள்
கரூர்,
சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் காணாமல் போனத தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காணாமல்போன சிறுமிகள் தமிழகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சத்தீஸ்கரிலிருந்து குழந்தை நல அலுவலர், போலீசார் அடங்கிய குழுவினர் கரூர் மாவட்டத்துக்கு வந்தனர். தொடர்ந்து கரூர் சமூக பாதுகாப்பு துறை தனித்துணை ஆட்சியர் சைபுதீன் தலைமையில் சத்தீஸ்கர் குழுவினர் கரூர் அருகே வளையல்காரன் புதூரில் உள்ள தனிார் செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சத்தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகள் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
- மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகர் காலனியை சேர்ந்தவர் முத்து ராஜ். இவருக்கு சொந்தமான 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் அவருடைய மாடு தவறி விழுந்து விட்டது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப் படைத்தனர். மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு நிலைய மீட்பு குழு வினருக்கு நன்றி தெரிவித்தனர்.
- பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகளை மீட்ட போலீசார்
- முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பாக பலர், கோவிலுக்கு வருபவர்களிடம் யாசகம் பெறுவது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு சென்ற போலீசார், அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 மூதாட்டிகளை மீட்டு, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது தங்களுக்கு பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளால் கைவிடப்பட்டு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக மூதாட்டிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.






