search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் பிரபல நகைக்கடையில் திருடிய 27 பவுன் நகைகள் மீட்பு
    X

    சேலத்தில் பிரபல நகைக்கடையில் திருடிய 27 பவுன் நகைகள் மீட்பு

    • 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகை கடைகள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தவர் தீபக் (வயது 28). இவர் அந்த கடையிலிருந்து 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் ஊழியர் தீபக்கை இன்ஸ்பெக்டர் ஆனந்த 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது, திருடிய நகைகளை வங்கிகளில் அடகு வைத்த தீபக், அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் கிரிக்கெட் விளையாடியது தெரியவந்தது. மேலும் 44 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்ததற்கான ரசீதுகளையும் அவர் கொடுத்தார். அந்த நகைகளை நீதிமன்றம் மூலமாக மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் திருடிய நகைகளை அல்லிக்குட்டை பகுதியில் உள்ள பச்சாயி அம்மன் கோவில் பகுதியில் புதைத்து வைத்திருப்பதாகவும் தீபக் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது. அதனை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×