search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery"

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் நகை அடகு கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல சிவசுப்பிரமணியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர் தனது செல்போனில் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டுள்ளார்.

    அதில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் எதுவும் காட்டப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த சிவசுப்பி ரமணியன், உடனடியாக கடைக்கு புறப்பட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நேற்று இரவில் அவர் கடையை பூட்டி விட்டு சென்றபின் திட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் நகை கடையை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், என மொத்தம் 1½ கிலோ வெள்ளி பொருட்களும், 8 பவுன் தங்கம், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களையும் உடைத்து சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    • கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதி.

    கோவை நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் அடையாளத்தை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதியாகியுள்ளறதாக தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
    • தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

    மதுரை:

    மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.

    நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று 7.30 மணி அளவில் கடையின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது.

    இதைப்பார்த்த கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதற்கிடையே உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45) முதல் தளத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப் போது அங்கு மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சல் போட்டார்.

    ஆனால் அதற்குள் முதல் தளத்தில் புகை மூட்டம் அதிகமானது. எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை அடைத்துக் கொண்டதால் அவரால் கீழே வர முடியவில்லை. முன்னதாக அந்த தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். கீழ் தளத்தில் இருந்தவர்கள் மோதிலாலின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அதனை எடுக்கும் நிலையில் மோதிலால் இல்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.

    இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விபத்தில் மோதிலால் சிக்கிக்கொண்ட முதல் தளத்திற்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

    இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் கடையின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது மோதிலால் ஒரு அறையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    அந்த கதவையும் உடைத்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அளவுக்கு அதிகமான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள் ளது. பின்னர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மூச்சுத்திணறி பலியான மோதிலாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் தூங்கா நகரம் என்று கூறும் அளவிற்கு 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். அதனால் வடலூர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி, அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய ராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார் பிறந்த பகுதி வடலூராகும். இங்கு அமைந்துள்ள ஞானசபை உலகளவில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த நகரின் மையப்பகுதியில் ராகவேந்திரா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு செல்வந்தர்களும், வசதி படைத்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும், வயதானவர்களும், பெண்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களது குடும்பத்தார் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணி செய்கின்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணா நகருக்கு 2 மர்நபர்கள் வந்தனர். ஆஜானு பாகுவான இளைஞர்களாகிய இருவரும் கால்சட்டை மட்டும் அணிந்திருந்தனர். தங்களின் செறுப்பினை இடிப்பில் கட்டியிருந்த கயிறில் தொங்கவிட்டிருந்தனர். மேலும், கண்களை தவிர வேறெதும் தெரியாத அளவிற்கு முகமூடி அணிந்திருந்தனர்.அண்ணாநகரில் இருந்த ஒரு வீட்டின் பின்புறம் சென்ற அவர்கள், பின்பக்க கதவினை உடைத்து உள்ளே நுழைந்தனர். அறையில் படித்திருந்த கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக் கயிறை பறித்தனர். இதனால் பதறிப்போய் எழுந்த கர்ப்பிணி, வாலிபர்களை எட்டி உதைத்து கூச்சலிட்டார்.மருமகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த மாமனார் வாலிபர்களை தாக்கினார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மர்மநபர்கள் தப்பிக்க முயன்றனர். மாமனாரும், மருமகளும் அவர்களை விரட்டியபோது, கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பக்கத்து தெருவிற்கு சென்ற மர்மநபர்கள், மற்றொரு வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டிற்குள் இருந்த மனநலம் குன்றிய பெண்ணின் காதில் இருந்த கம்மலை திருடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தாரிடம் இருந்து 2 வாலிபர்களும் தப்பி விட்டனர்.அண்ணாநகரை விட்டு வெளியேறி 2 வாலிபர்களும் அருகில் உள்ள ராகவேந்திரா நகருக்கு சென்றனர். நகரின் கடைசி வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். பின்பக்க கதவை உடைக்க முயற்சித்தனர். சுமார் ஒன்னரை மணி நேரம் போராடியும் கதவினை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து 2 வாலிபர்களும் வெளியேறினர். இது அந்த வீட்டிலிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியது.இந்த 3 குடும்பத்தாரும், நேற்று காலை வடலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரிடம் புகார் கொடுத்தனர். 3 பேரும் கூறிய அங்க அடையாளங்கள் ஒன்றாக இருந்தது. இதையடுத்து ராகவேந்திரா நகரில் இருந்த வீட்டில் பதிவாகிய சி.சி.டி.வி. கேமிரா பதிவினை மற்றவர்களுக்கு போலீசார் காட்டினர். அவர்களும் தங்களது வீட்டிற்கு வந்தவர்கள் இவர்கள் தான் என்று உறுதிபடுத்தினர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் வடலூர் நகரின் மையப்பகுதியில் மூகமூடி அணிந்த 2 வாலிபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக புகாரினை பெற்ற வடலூர் போலீசார், முகமூடி அணிந்த மர்மநபர்களை பிடித்த பிறகு வழக்கு பதிவு செய்கிறோம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டனர்.

    இந்த சம்பவம் வடலூர் நகரில் வசிப்பவர்களுக்கு மிகவும் வேகமாக பரவியது. இதனால் இரவு நேரங்களில் வடலூர் நகரில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடலூர் போலீசாரை பொறுத்தவரையில் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மட்டுமே பணி செய்கின்றனர். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, கடலூர் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் இதில் தலையிட வேண்டும். வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும். முகமூடி கொள்ளையர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும். வடலூர் மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடலூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அழகப்பா மணியின் சகோதரர் ராஜகோபால் கொடுத்த புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் சாலையில் அழகப்பா நகை மாளிகை கடை உள்ளது.அதன் உரிமையாளர் அழகப்பா மணி(வயது 60). சம்பவத்தன்று அழகப்பா மணி தனது கடையில் இருந்து வந்தார். அப்போது அழகப்பா மணியை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அழகப்பா மணியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அழகப்பா மணியின் சகோதரர் ராஜகோபால் கொடுத்த புகார் கொடுத்தார். அதில் குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில், தனது சகோதரர் அழகப்பா மணியை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர்கல்யாணி .ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் பெரியசாமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நிலையில் கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கல்யாணி யுடன் அவரது தாய் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்யாணி மற்றும் அவரது மருமகன் ஆகியோர் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் வயதான கல்யாணியின் தாய் மட்டும் இருந்துள்ளார் .அப்போது கல்யாணி வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த கல்யாணியின் தாயிடம் வீட்டில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.அதற்கு அவர் வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் வந்த பிறகு வந்து பாருங்கள் என்று சொல்லி உள்ளார் பின்னர் மூதாட்டிக்கு தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவை உடைத்து 12 ஆயிரம் பணம் மற்றும்3 பவுன் தங்க நகை உள்ளிட்ட வற்றை திருடி சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று மாலை கல்யாணியின் மருமகன் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார் .

    பின்னர் இதுகுறித்து சின்னசேலம் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .இதே போல் இந்திலியில் உள்ள பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இரு இடங்களில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை தென்றல் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா ( வயது 31). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் வீட்டின் மேல் மாடி வழியாக புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து வளையல், மோதிரம், தோடு என 10 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் காலையில் எழுந்த பிரியங்கா பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் தான் வைத்திருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர்.
    • 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள மேலசெங்கமேடு அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி.

    இவர் நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி விஜயலட்சுமி சீர்காழி கருவூலத்தில் பணியாற்றி வருகின்றார்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர்.

    இதனை கண்காணித்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளை யடித்துச் சென்றனர்.

    இந்நிலையில் பணி முடித்து வீடு திரும்பிய முத்துக்குமாரசாமி வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
    • வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அடுத்த உள்ள ஆணைக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஓசூருக்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    மற்றொரு சம்பவம்

    அதேபோன்று பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுபாஷ் (33). இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தி ருந்தார். மனைவியை பார்த்து விட்டு சுபாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×