search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loot"

    • நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா.
    • வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது கணவர் ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இன்று காலை வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரமுத்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ. 15 ஆயிரம் பணம், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது.
    • தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஜெய் நகரில் வசித்து வருபவர் சுந்தர் ராமன் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் விட்டு சென்றிருந்தார்.

    நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ கட்டில் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடந்தது.

    இதில் அவர் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சுந்தர்ராமன் பாபநாசம் காவல் நிலைய த்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொ ண்டனர்.

    மேலும் தஞ்சாவூரிலி ருந்து சோழா என்ற மோப்பநாய் வரவழை க்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார். சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
    • இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.

    திருமண நிச்சயம்

    இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருப்பதால் மணமக்களின் வீட்டார் குடும்பம் சகிதமாக நேற்று காலை திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் எடுக்க ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

    காரில் வந்த மர்மநபர்கள்

    இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர். தெருவின் முன்பகுதியிலேயே காரை நிறுத்திவிட்டு கந்தசாமியின் வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணி (80) தோட்டத்திற்கு செல்வதற்கு தயாராக வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் மட்டும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். வீட்டு வேலைக்காக அண்ணன் வரச் சொன்னார் என மூதாட்டியிடம் தெரி வித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் துணி எடுக்க சென்றுவிட்டனர். நாளைக்கு வாருங்கள் என மூதாட்டி கூறியுள்ளார்.

    மூதாட்டியிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்த இந்த வேளையில் மற்றொரு மர்மநபர் வீட்டின் அருகே சென்று முன்புற கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனிடையே மூதாட்டி அந்த மர்ம நபரிடம் பேசிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.

    நகை, பணம் கொள்ளை

    இதையடுத்து மர்ம நபர் வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த சாவியை எடுத்து லாக்கரை திறந்து நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து திருடிக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மூதாட்டி அருக்காணி தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அருகில் உள்ள வர்களிடமும், தனது மகன் கந்தசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வந்த கந்தசாமி பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த மொத்த பணம், நகைகள் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்கள்

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு கந்தசாமி உடனடி யாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கண்காணிப்பு கேமிரா ஆய்வு

    இதையடுத்து பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பரமத்திவேலூர் முதல் குப்பிச்சிபாளையம், மோகனூர் வரை உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு நடந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள், கந்தசாமி வீட்டிற்கு சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவையும் கொள்ளை போனது.
    • கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

    இவர் கடந்த 11-ந் தேதி திருச்சியில் உள்ள அவரது மகன் சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், ராதாகிருஷ்ணன் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    பின், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின், பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் இருந்து மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை கொள்ளை.
    • போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாய்புராவில் ராஜஸ்தான் மருதாரா கிராமின் வங்கி அமைந்துள்ளது. இந்நிலையில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் வங்கிக்கு புகுந்து துப்பாக்கி முனையில் 3 வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக அழைத்து சென்று ரூ.5.66 லட்சத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மர்ம நபர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், மற்றவர் முகத்தை மப்ளரால் மூடியிருந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர்.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை 6 மணி அளவில், வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தோணியம்மாள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரிசிபாளையத்தில் நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் சையத் கபூர் தெருவை சேர்ந்தவர் பரணி என்கிற பழனி (வயது 45). இவர் தம்மண்ணன் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர்.

    இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து கிடந்தது.

    மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பழனி உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதே போல் அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளி சக்திவேல் (45) என்பார் வீட்டிலும் நேற்று மதியம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

    இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். 

    • சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியில் கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை.
    • உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ரத்தினாம்பாள் (வயது 47). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை வீடு திரும்பியபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ரத்தினாம்பாள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடித்தனர்.
    • பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தகிரி (வயது 36). இவரது மனைவி கிராந்தி (32). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டைப் பூட்டி விட்டு, அருகில் வசிக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கிராந்தி கருப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

    • மர்ம ஆசாமிகள் கடையை உடைத்து , ரூ.300 மற்றும் தின்பண்டங்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
    • மர்ம ஆசாமிகள் , வீட்டில் இருந்து லேப்-டாப் மற்றும் ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 57). இவர் மெயின் ரோட்டு பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் பின்புறமாக கடையை உடைத்து உள்ளே சென்று , ரூ.300 மற்றும் சில தின்பண்டங்களையும் திருடிச் சென்றுள்ளனர். அவர் கடையில் அதிகமான பணத்தை வைத்து செல்லாததால் பெரிய அளவில் திருட்டு சம்பவம் நடைபெறவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (52 )என்பவருடைய வீட்டில், பட்டப்பகலில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் , வீட்டில் இருந்து லேப்-டாப் மற்றும் ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதை யடுத்து கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    கடையம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே காவல் துறையினர் திருடர்களை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் ரொக்கமும், ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் கொள்ளை.
    • கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம்.

    மகாராஷ்டிரா மாநிலம் லதூரில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தில் மகாராஷ்டிரா கிராமின் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுமார் 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் கணக்கு வைத்து சேமித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வங்கிக்கு வந்த பணியாளர்கள், முகப்பு வாயில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வங்கி முழுவதும் சோதனையிட்டனர். அப்போது, வங்கியில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் ஆய்வாளர் ராமேஷ்வர் தத் கூறியதாவது:-

    வங்கியின் முகப்பு வாயில் கதவு 5 வகையான லாக்கர் கொண்டது. இந்த லாக்கரை தொழில் ரீதியாகவும், நுணுக்கமாகவும் உடைத்துள்ளனர். மேலும், வங்கி இருக்கும் கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டிட ஜன்னலில் இரும்பு கம்பி இல்லாததால் கொள்ளையார்கள் எளிதாக நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    மேலும் வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் ரொக்கமும், ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரியில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகி வரும் மணி ஆறு மற்றும் முக்தா ஆறும் இணைந்து மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம், சித்தலூர், வடபூண்டி, கொங்கராயபாளையம், உடையனாச்சி, கூத்தக்குடி ஆகிய ஊராட்சிகளில் வழியாக தண்ணீர் கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இந்த ஆற்றில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றுப்பகுதியில் மணல் வளம் செழிப்பாக காணப்பட்டது. தற்போது மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் சமூக விரோதிகள் ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் .

    இவ்வாறு தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் அருகேஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரியில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் புது உச்சிமேடு பகுதியில் சாக்குப் பையில் மணல்களை மூட்டை கட்டி மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலம் சமூகவிரோதிகள் ஆற்றில் மணல் கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×